பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, August 11, 2011

விவாகரத்து வேண்டுமா?

இந்தியாவில் திருமணம் செய்வதற்குமுன் இளைஞர்கள் தெரிந்துள்ள வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக இந்தியத் திருமணச் சட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஆகஸ்ட் 11,2011 தினமலர்

புதுடில்லி : மனைவியை விட்டு, 25 ஆண்டுகள் பிரிந்திருந்த கணவருக்கு, விவாகரத்து வழங்க, டில்லி ஐகோர்ட் மறுத்து விட்டது. டில்லியைச் சேர்ந்தவர் அமர்லாலா அரோரா; இவரது மனைவி சசிபாலா. இருவருக்கும், 1987ல் திருமணம் நடந்தது. 88ல் பெண் குழந்தை பிறந்தது. கணவரின் முரட்டு குணத்தாலும், மாமியார் மற்றும் நாத்தனார்களின் இம்சையாலும், சசிபாலா தன் தாய் வீட்டுக்கு சென்றார். "அதன் பின், தான் சென்று அழைத்தும் சசிபாலா வர மறுத்து விட்டதாகவும், தன்னை அவர் புறக்கணித்து விட்டதால், கோர்ட் விவாகரத்து அளிக்க வேண்டும்' என, அரோரா, டில்லி கோர்ட்டில் மனு செய்திருந்தார். கீழ் கோர்ட் இவருக்கு விவாகரத்து அளிக்க மறுத்து விட்டதால், ஐகோர்ட்டில் அரோரா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி கைலாஷ் காம்பிர் விசாரித்தார்.

"பட்டு கூட்டிலிருந்து வெளியே வரும் புழுவை போல, பெண்ணானவள் தன் பிறந்தகத்தை விட்டு கணவன் வீட்டுக்கு வரும் போது அவளுக்கு அந்த வீடு புதிய சூழலாக உள்ளது. அப்படிப்பட்ட புதிய சூழலை, பழக்கப்படுத்தி கொள்வதற்கு ஏற்ப கணவன் வீட்டார் அவளை அன்பாகவும், சிநேகமாகவும் நடத்த வேண்டும். அதை விட்டு வேற்று மனிதராக அந்த பெண்ணை பார்க்கும் போது பிரச்னைகள் ஏற்படுகின்றன' எனக்கூறி, அரோராவின் மனுவை நீதிபதி நிராகரித்து விட்டார்.

Monday, August 1, 2011

நிரந்தரமற்ற நீதியின் தரம்

இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடைக்குள் சென்ற பல இளைஞர்கள் பொய் வரதட்சணை வழக்கு என்ற தீயினால் சுடப்படுகிறார்கள். தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க அப்பாவிகள் பல ஆண்டுகளாக போராடவேண்டிய இடம்தான் நீதிமன்றங்கள். ஆனால் அந்த நீதிமன்றங்களின் தரம் நிரந்தரம் இல்லாமல் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக பல செய்திகள் வந்தவாறு இருக்கின்றன. அதுபோல ஒரு செய்திதான் இன்றும் செய்தித்தாளில் வந்திருக்கிறது.

கடலூர் மகிளா கோர்ட் நீதிபதி ஓய்வு பெறும் நாளில் "சஸ்பெண்ட்'
ஆகஸ்ட் 01,2011 தினமலர்

கடலூர் : கடலூர் மகிளா கோர்ட் நீதிபதி அசோகன், பணி ஓய்வு பெறும் நாளான நேற்று, திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடலூர் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர் அசோகன். இவர், நேற்று மாலையுடன் பணி ஓய்வு பெற இருந்தார். அதையொட்டி, கடந்த 29ம் தேதி, கோர்ட் ஊழியர்கள் சார்பில், அவருக்குப் பாராட்டு விழா நடந்தது. பார் கவுன்சில் சார்பில் நேற்று, பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதி அசோகனை, "சஸ்பெண்ட்' செய்து சென்னை ஐகோர்ட் பதிவாளரின் உத்தரவு, நேற்று அதிகாலை கடலூர் மாவட்ட நீதிபதி ருத்ராபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த,"சஸ்பெண்ட்' உத்தரவை நேற்று காலை நீதிபதி அசோகனிடம், அவரது வீட்டில் கோர்ட் ஊழியர்கள் வழங்கினர். இவர் சென்னையில் பணிபுரிந்த போது, பதவியை தவறாகப் பயன்படுத்தி ஆதாயம் பெற்றதாக வந்த புகாரின்படி,"சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சென்னை பூந்தமல்லி, கடலூர் விரைவு கோர்ட் மற்றும் மகிளா கோர்ட்டுகளில், பல்வேறு வழக்குகளில் அதிரடி தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி அசோகன், பணி ஓய்வுபெறும் நாளில் திடீரென,"சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருப்பது, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

===

இதனை ஒரு செய்தியாக மட்டும் பார்க்காதீர்கள். பல அப்பாவிகளின் தலையெழுத்தை தங்களின் தீர்ப்பு மூலம் நிர்ணயிக்கும் ஒரு பொறுப்பான பணியில் இருப்பவரின் தரம் சரியாக இல்லையென்றால் அவரது பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட நீதியின் தரம் எப்படி இருந்திருக்கும்? என்று எண்ணிப்பாருங்கள்.

இதுபோன்ற நீதிமன்றங்களில்தான் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டிருக்கும் பல அப்பாவிக் குடும்பங்களின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

அதனால் இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்து பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி பிறகு தர நிரந்தரம் இல்லாத நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடுவது என்பது உலகமகா முட்டாள்தனம். இந்தியத் திருமணத்தின் மூலம் உங்கள் வாழ்வை நீதிமன்றத்தில் தொலைத்துக்கொண்டால் அதற்கு நீங்கள்தான் முழுப்பேற்கவேண்டும்!

தரத்திற்கு மற்றொரு சிறு உதாரணம்: சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவியிலிருந்து தினகரன் ராஜினாமா ஜூலை 31,2011 தினமலர்

புதுடில்லி : சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் தினகரன். இவருக்கு எதிராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது, அதிகாரத்தை பயன்படுத்தி, நிலம் ஆக்கிரமித்தது உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டன. ராஜ்யசபாவில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரும் வகையில், இந்த பிரச்னை எழுப்பப்பட்டதை அடுத்து, மூன்று பேர் கொண்டநீதிபதிகள் குழுவை அமைத்து, தினகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும்படி, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரி உத்தரவிட்டார். இந்த விசாரணைக்குழு, தினகரனுக்கு எதிராக, வேறு சில குற்றச்சாட்டுகளையும் சுமத்தியது. இதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.