பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, October 22, 2010

இந்தியாவில் நடக்கும் விசித்திரமான திருமணங்கள்

முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள். பிறகு பின்வரும் செய்தியைப் படியுங்கள். எல்லாமே இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் அவலங்கள்தான்.





காதலித்ததோ 3 மாசம்; காதலியோ 6 மாசம்
தினகரன் அக்டோபர் 02, 2010

கோவை: கோவை சுந்தராபுரம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் கணேசன்(22). லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி. பிள்ளையார்புரத்தை சேர்ந்த 19 வயது பெண்ணை காதலித்தார். இதற்கிடையே, அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். திருமணம் செய்யுமாறு, கணேசனிடம் வற்புறுத்தினார். கணேசன் மறுத்தார். பிரச்னை போத்தனூர் காவல்நிலையம் வரை சென்றது. நேற்றுமுன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் திருமேனி முன்னிலையில், இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 6 மணிக்கு கணேசன், சுந்தராபுரம் மதுக்கரை மெயின் ரோட்டில் உள்ள 80 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி நின்று, கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். ‘பெண் 6 மாத கர்ப்பமாக உள்ளார். அவரை காதலித்தே 3 மாதம்தான் ஆகிறது. கர்ப்பத்துக்கு நான் காரணமல்ல’ என்று அவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் திருமேனி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். கணேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கணேசனின் பாட்டி, கீழே இறங்கிவருமாறு வேண்டுகோள் விடுத்தார். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் கீழே இறங்கினார். பொது அமைதியை கெடுத்து, தற்கொலை மிரட்டல் விடுத்ததற்காக அவர் மீது வழக்கு பதிவுசெய்து, போலீசார் அவரை கைது செய்தனர்.



இளைஞர்களே, இதுபோன்ற ஆபத்தான திருமண உறவை இந்தியாவில் ஏற்படுத்திக்கொண்டு தகனமேடைக்குள் தலையை நுழைத்துக்கொள்ளாதீர்கள். பெண் என்றால் ஊரே திரண்டு வந்து ஆதரவு கொடுக்கும். அதுவே ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணால் ஆபத்து என்றால் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். சட்டங்கள் கூட பெண்ணுக்குமட்டும்தான் ஆதரவாக செயல்படும். உங்களைக் காப்பாற்ற யாரும் முன்வரமாட்டார்கள். அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்து கொண்டு தவறான இந்திய சட்டங்கள் கொடுக்கும் இன்னல்களிலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.




Tuesday, October 19, 2010

திருமணத்தின் மூலம் எமனுக்குத் தூதுவிடும் இந்திய ஆண்கள்

இந்தியாவில் திருமணம் செய்பவர்களுக்கு தகனமேடை உறுதி என்பதை பின்வரும் செய்தி தெளிவாக்குகிறது. ஒன்று மனைவி கொடுக்கும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி குடும்பத்தோடு சிறைக்குச் சென்று சீரழியவேண்டும். அல்லது மனைவியும் அவளது கள்ளக்காதலனும் பக்குவமாக செய்யும் கொலையில் சிக்கி உயிரை விடவேண்டும். கணவன்களுக்கு இந்த இரண்டு வழிகளும் தயராக இருக்கிறது.

இளைஞர்களே இந்தியாவில் திருமணம் செய்து நீங்களாகவே எமனுக்குத் அழைப்பு விடுத்து அற்ப ஆயுளில் உயிரை விட்டுவிடாதீர்கள்.

Spouse-killing on the rise
Oct 18, 2010

BANGALORE: In 2008, when Manoj, a techie, allegedly murdered his wife Lakshmi, also a techie, he made it appear it was a murder for gain.

Though it was a high-profile case, it was dismissed as a stray incident. Two years down the line, police statistics reveal that spouse killing spouse is on the rise in Bangalore.

Sample this: From January to October 2010, of the 142 murders registered in the city, spouses were behind the murder in over 45 cases. Alarmed by the development, police commissioner Shankar Bidari made public appeals: "If people cannot live together, get legally separated. Don't kill each other. Police will not spare you. In such cases, police can hardly do anything but arrest the culprits. There are no preventive ways as conspiracy to murder takes place within the four walls."

"`By mid-October, the number of such murders has crossed 60. Though many of them are from lower middle class, it is surfacing among the middle class too. Desires of individuals are becoming stronger and they do not think about consequences," says Joint Commissioner of Police (Crime) Alok Kumar.

"Society has changed and social values have collapsed. From joint family, we came down to nuclear family then to childless couples. People have become too self-centric and materialistic too," he says.

It is not just husbands getting wives murdered - women have not lagged behind. Honey Mary, who was married for three months, was charged of getting her husband Umesh Krishnan murdered with the help of her old lover. Ditto with Shubha of Byappanahalli who allegedly not only got her husband murdered by her paramour, but later got her paramour also murdered with help from another person, say police.

"Some plan well and make it look like a murder for gain. Wherever there is sexual jealousy, they leave a clue behind," says Alok Kumar.

PSYCHIATRISTS WORRIED

The trend has alarmed psychiatrists too. "There has been a psychological disorder of infidelity and this trend is a new social challenge. There is no proper study conducted on the issue. But with available information, we are analyzing the trend and it is alarming," says Dr A Jagadish of Abhaya Hospital.

The new economic independence of youngsters is one of the reasons. This empowers youngsters to make impulsive decisions, breaking social norms. Lack of parental supervision leads to such disasters. "As we have seen, no such cases have taken place after parental interference and supervision to counsel the children. More than 95 % of cases have taken place where there was no scope for supervision," says Dr Jagadish.

"Worse, youngsters seem to be confident of wriggling out after committing murder, even if they are caught. This problem has to be addressed at four levels. First, at an individual level, secondly, family level, next, society level and lastly legal level. If youngsters are aware of the legal consequences, then they will think twice before indulging in such acts," he says.

Read more: Spouse-killing on the rise - The Times of India http://timesofindia.indiatimes.com/city/bangalore/Spouse-killing-on-the-rise/articleshow/6765942.cms#ixzz12gSwb5r7

வழக்கறிஞரின் வாழ்வில் ஒரு மூன்றாம் விதி

நியூட்டனின் மூன்றாவது விதி இப்போது நன்றாக நிரூபிக்கப்பட்டுவிட்டது! தொழில் தர்மம் என்ற பெயரில் பொய் வரதட்சணை வழக்குப் போட உதவும் வழக்கறிஞர்களுக்கு இந்த செய்தி ஒரு நல்ல பாடம்.

Bar Council debars lawyer for misconduct
Times of India Oct 8, 2010

Kanpur: The Bar Council of Uttar Pradesh has debarred lawyer Sarfaraz Khan advocate from practising for ten years anywhere in India on the complaint of his wife Shahina Bano.

Shahina had alleged that Sarfaraz used to torture her for dowry and on March 2, 2009 he thrashed her brutally and kicked her out of his house. She lodged an FIR against him with Rail Bazaar police.

Sarfaraz was creating hindrances in the investigations and adopting all sorts of tactics to stop Shahina from pursuing the case.

The committee issued notices to Sarfaraz but he failed to appearance. The committee sent notices on January 10, 2010 and February 28, 2010 through chief metropolitan magistrate. Despite the two notices, Sarfaraz neither appeared before the committee nor filed written statement. The committee thereafter heard the arguments and decided the case ex parte.

An FIR was registered under section 498A/323/504/506 IPC and under Section 3/4 Dowry Prohibition Act. The complainant alleged that Sarfaraz was taking undue advantage of being a lawyer. He was regularly threatening her and her family members for dire consequences and creating hindrance in the `pairavi' of the case which was pending in the court.

The committee in its order dated July 24, 2010 which was communicated to the parties in the first week of this month, observed that as per profession ethics and rules, creating hindrance in a court case by a lawyer for personal gains amounts to professional misconduct. Hence, Sarfaraz Khan was debarred for ten years.

Read more: Bar Council debars lawyer for misconduct - The Times of India http://timesofindia.indiatimes.com/city/kanpur/Bar-Council-debars-lawyer-for-misconduct/articleshow/6714452.cms#ixzz12gz2OUMZ




Saturday, October 9, 2010

பொம்பளை செத்தா உயிரு ஆம்பிளை செத்தா.....

பின்வரும் இரண்டு செய்திகளிலும் தற்கொலை முயற்சி நடந்திருக்கிறது. முதல் செய்தியில் தற்கொலைக்கு முயன்ற பெண் மீது எந்த வழக்கும் கிடையாது. இரண்டாவது செய்தியில் தற்கொலைக்கு முயன்ற ஆண் மீது வழக்கு என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முதல் செய்தியில் காதலனை சேர்த்துவைக்கவேண்டும் என்று காதலி விஷம் அருந்தியிருக்கிறார். இரண்டாவது செய்தியில் பிரிந்த மனைவியை சேர்த்துவைக்கவேண்டும் என்று கணவர் விஷம் அருந்தியிருக்கிறார்.

இரண்டு செய்திகளிலும் நோக்கம் ஒன்றுதான் ஆனால் ஆண் பெண் என்ற பாரபட்சம் காட்டி இந்திய சட்டங்கள் மட்டும் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றன. ஏன் இந்த பாரபட்சம் என்று புரியவில்லை.



திருச்சி: காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள, எம்.பி.ஏ., பட்டதாரி பெண் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி சாலை ரோட்டைச் சேர்ந்த மாரிமுத்து மகள் ராஜேஸ்வரி (23); எம்.பி.ஏ., பட்டதாரி. மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர். காதலில் விரிசல் ஏற்பட்டது.திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ராஜேஸ்வரி வந்தார். கலெக்டர் கார் நிற்கும் இடத்துக்கு சென்று, கையில் வைத்திருந்த மனுவை தூக்கிப் பிடித்தார், இன்னொரு கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை, "மள மள'வென குடிக்கத் துவங்கினார்.அருகிலிருந்தவர்கள் சத்தம் போட்டவுடன், மகளிர் போலீசார், உடனே அவரைப் பிடித்து, விஷத்தை வெளியே எடுக்க வைத்தனர். ராஜேஸ்வரியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ராஜேஸ்வரி இரண்டு கடிதங்கள் எழுதி இருந்தார். காதலன் குணசேகரனுக்காக எழுதிய கடிதத்தில், "குணா, நான் உன்னை ஒரு சதவீதம் கூட சந்தேகப்படவில்லை உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன். நீ முத்தமிட்ட உதடுகளை வேறு யாரும் முத்தமிடக் கூடாது. உன் கைப்பட்ட என் உடலில், வேறு யார் கையும் படக் கூடாது' என, உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

கலெக்டருக்கு எழுதிய கடிதத்தில், "என் பெயர் ராஜேஸ்வரி. நானும், குணசேகரும் காதலித்து வந்தோம். திடீரென என்னுடன் பேசுவதை குணசேகர் குறைத்துக் கொண்டார்; பழகுவதை நிறுத்தி விட்டார். காரணம் கேட்டபோது, "அப்போது பிடித்தது பழகினேன்; இப்போது பிடிக்கவில்லை' என்கிறார். நம்பிக்கை துரோகத்துக்கு ஆளாகிய நான், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். இது என்னைப் போல் படித்து, ஏமாறும் பெண்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். நான் இறந்தால், என் காதலனிடமிருந்து மூன்று லட்ச ரூபாய் வாங்கி, என் பெற்றோருக்கு கொடுக்க வேண்டும்' என, எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவத்தால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

அருகிலிருந்த மகளிர் போலீஸார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கலெக்டர் சவுண்டையா தலையிட்டதால், "காதலன் குணசேகரன் மீது இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும்' கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மதுரை:மதுரையில் குடும்ப பிரச்னையால், போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்தவர் திடீரென மயக்கம் அடைந்தார். விசாரணையில், அவர், விஷம் குடித்தது தெரியவந்தது.சமயநல்லூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(28). கொத்தனராக உள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக, இவரது மனைவி, குழந்தைகள் பெங்களூருவில் வசிக்கின்றனர். பலமுறை சேர்ந்து வாழ மனைவியை அழைத்தும் அவர் வரவில்லை. தன்னுடன் சேர்ந்து வாழும்படி கூறுமாறு மாமனார் குடும்பத்தினரையும் சிவக்குமார் வற்புறுத்தினார். இதுதொடர்பாக நேற்று காலை 11 மணிக்கு சமயநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். நடந்த சம்பவத்தை புகாராக எழுதி தரும்படி போலீசார் கூறினர்.

புகார் எழுதிக் கொண்டிருக்கும்போதே, சிவக்குமார் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை எழுப்ப முயன்று, பலன் அளிக்காததால் "டென்ஷன்' ஆயினர். "108' ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்தபோது, விஷம் குடித்திருந்தது தெரியவந்தது. ஸ்டேஷனிற்கு வரும்முன்பே தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் சிவக்குமார் விஷம் குடித்து வந்துள்ளார். அவர் மீது சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.





நவராத்திரியில் பொம்மையாக்கப்பட்ட பொதுமக்கள்

தமிழக உ ள்துறை அமைச்சகத்தின் 2010 - 2011 ஆண்டு அறிக்கைப்படி தமிழக நீதிமன்றங்களில் 01-01-2009 முதல் 31-12-2009 வரையிலான காலமுடிவில் விசாரணைக்காக காத்திருக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 15,26,287 (தகுந்த புள்ளிவிவரம் செய்தியின் கடைசியில் உள்ளது). இதில் 01/01/2010 முதல் குவிந்த வழக்குகள் இன்னும் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.

இதுபோல பல லட்சம் வழக்குகள் தேங்கியிருக்கும் நிலையில் நீதிமன்றங்களுக்கு வழக்கமாக வரும் விடுமுறைகள் அல்லாமல் மிகப்பெரிய அளவில் விடப்படும் விடுமுறைகள் கோடைகாலத்தில் 1 மாதம், நவராத்திரிக்காக 1 வாரம், புதுவருடத்திற்காக 1 வாரம் என்று நீண்ட விடுமுறைகளும் இருக்கின்றன.

Summer Vacation:
Saturday, the 1st day of May 2010 to Sunday, the 6th day of June 2010 (both days inclusive)

Dasara Holidays: Saturday, the 9th day of October 2010 to Sunday, the 17th day of October 2010 (both days inclusive)

Christmas Holidays: Friday, the 24th day of December 2010 to Friday, the 31st day of December 2010 (both days inclusive)


சிறு பிள்ளைகளுக்கு பள்ளிகளில் விடப்படும் இதுபோன்ற நீண்டநாள் விடுமுறைகள் நீதிமன்றங்களுக்குத் தேவையா? இதைப்பற்றி நவம்பர் 9, 2008 அன்று தினமலர்-வாரமலரில் ஒரு கட்டுரையும் வந்திருக்கிறது. அதை இங்கே சென்று படித்துப்பாருங்கள்.


தினகரன் 9/10/10

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இன்று முதல் 17ம் தேதி வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் 12ம் தேதி மனுக்களை தாக்கல் செய்யலாம். 13ம் தேதி மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பெண் வக்கீல்கள் சங்க தலைவி பிரசன்னா தலைமையில் பெண் வக்கீல்கள் நேற்று தலைமை நீதிபதி இக்பாலை சந்தித்தனர். உயர் நீதிமன்றத்துக்கு தசரா விடுமுறை விடுவதுபோல் குடும்ப நல நீதிமன்றத்துக்கும் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். வெளியே வந்த பெண் வக்கீல்கள் கூறுகையில், ‘‘நாங்கள் கொடுத்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்துக்கு வரும் 11ம் தேதி முதல் 17வரை விடுமுறை அறிவிப்பதாக தெரிவித்தார்’’ என்றனர்.

=====

சமீபத்தில்தான் குடும்பநல நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் பல குடும்பங்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சனி, ஞாயிறு நாட்களிலும் இந்த நீதிமன்றங்கள் இயங்குவதற்கான மாற்றங்களை கொண்டுவந்தார்கள். இதுபோன்ற சமயத்தில் தசரா விடுமுறை என்பது மிகவும் அவசியமா?

இதுபோன்ற பண்டிகைக்கால நீண்ட விடுமுறைகளில் கேளிக்கைப் பொருளாக மாற்றப்படுவது பொய்வழக்கில் சிக்கி நீதிமன்றத்தில் வழக்குக் குவியலில் சிக்கும் உங்களைப் போன்ற அப்பாவிகள்தான். இந்த நவராத்திரி விடுமுறையில் சிக்கி வழக்கு முடியாமல் பொம்மையான அப்பாவிகள் எத்தனை நபர்களோ! இந்தப் பிரச்சனையிலிருந்து எப்படி விடுபடுவது என்று நீங்கள் யோசித்தால்
National Litigant Bench என்ற
அமைப்பைத் தொடர்பு கொண்டு அதற்கு வழி காணலாம்.

தமிழக நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை கீழே காணுங்கள்.

ADMINISTRATION OF JUSTICE

HOME DEPARTMENT 2010-2011

Pendency of cases

For the first time in several years, the number of cases pending as on 31.12.2009 in the Principal seat of Madras High Court is less than the number of cases pending as on 31.12.2008 by 26962 cases in the civil side and 4293 cases in the criminal side. However the pendency of cases in the Subordinate Courts continues to be a cause for serious concern. The details of pending of cases are at Annexure – VI(a), VI(b) and VI(c).


படத்தின் மீது “கிளிக்” செய்து பெரிதாக்கி தமிழகத்தில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை பார்த்து நீங்கள் மயங்கி விழலாம்!



இளைஞர்களே, இந்தியாவில் திருமணம் செய்வதால் உங்கள் மீது போடப்படும் பொய் வரதட்சணை வழக்கு இதுபோன்ற குவியலில்தான் காவல்துறையால் குற்றப்பத்திரிக்கை என்ற வடிவில் குப்பையாக நீதிமன்றத்தில் கொட்டப்படும். பிறகு உங்களுக்கு நீதி எப்போது கிடைக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அதனால் புத்திசாலித்தனமாக வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவியுங்கள்.