பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, November 19, 2010

இந்திய ஆண்களுக்கு ஆபத்து

இந்தியாவில் திருமணம் செய்வதன் மூலம் ஆண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றிய செய்தி வந்திருக்கிறது.

ஆண்களுக்கு என்ன பிரச்னை? இன்று சர்வதேச ஆண்கள் தினம்
தினமலர் நவம்பர் 19, 2010 செய்தியின் ஒரு பகுதி


என் சோகக் கதையை கேளு தாய்குலமே! பறப்பன, ஊர்வன, நடப்பன என எல்லா உயிர்களுக்கும்(?) ஒவ்வொரு தினம் கொண்டாடப்படும் காலம் இது. அந்த வரிசையில் இன்று ஆண்கள் தினம். எல்லா விஷயத்திலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கருத்து நிலவும் இக்காலக்கட்டத்தில், போலீசில் அதிகம் சிக்குபவர்களும் "பாவப்பட்ட' ஆண்கள்தான். மதுரை நகரின் மூன்று மகளிர் ஸ்டேஷன்களில் மாதம் 150 புகார்கள் ஆண்கள் மீது கொடுக்கப்படுகின்றன. விசாரணைக்குபின் 15 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பொதுவாக, பெண்கள் சிந்தும் கண்ணீரை நம்பி, சரியாக விசாரிக்காமல் ஆண்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்கிறது.

"இது உண்மைதானா' என மதுரை வரதட்சணை ஒழிப்பு பிரிவு பெண் உதவி கமிஷனர் ராஜாமணி கூறியதாவது : இருதரப்பையும் அழைத்து, எங்கள் முன் பேச செய்வோம். அப்போது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் சொல்லும்போது, யார் மீது தவறு என்பது தெளிவாகிவிடும். குடும்ப பிரச்னையை தீர்க்கவே எங்களை தேடி வருவதால், முடிந்தளவிற்கு "கவுன்சிலிங்' செய்து சமரசம் செய்து அனுப்பி வைக்கிறோம். ஆண்மை குறைவு, கள்ளத்தொடர்பு, வரதட்சணை போன்ற பிரச்னைகளில் சமரசம் ஆகமாட்டார்கள். இதை தொடர்ந்தே ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறோம். பெரும்பாலும் ஆண்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தான் புகார்கள் வருகின்றன. வரதட்சணை கேட்டு மிரட்டும் புகார்கள் குறைவு என்றார்.

ஆண்களுக்கு சிறை - பெண்களின் தந்திரம்:

ஆண்களுக்கு எதிராக வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்கீழ்தான் அதிகளவில் பொய்யாக வழக்குகள் புனையப்படுகின்றன. உண்மையில் பாதிக்கப்படுவோர் ஒருபுறமிருக்க, கணவன், மனைவிக்கிடையே உள்ள சிறிய பிரச்னைக்கும் இச்சட்டத்தை சில பெண்கள் பயன்படுத்துகின்றனர்.
இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளை வக்கீல் பி.தனசேகரன் கூறியது: சில வீடுகளில் மாமியார், மருமகள் பிரச்னையில் கணவன் மீதும், உறவினர் மீதும் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இது விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இது ஒரு சமுதாயப் பிரச்னைக்கு வழிஏற்படுத்துகிறது. தாங்கள் நினைத்தால் கணவரை சிறைவைக்க முடியும் என கருதும் வலிமையான பின்னணியுள்ள பெண்கள் இதுபோன்று செயல்படுவதால், ஆண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வரதட்சணை வழக்குகளில் உறவினர்களை தேவையின்றி சேர்க்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபரம் தற்போது அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

அக்கறை இல்லையா ஆண்களுக்கு? பல்வேறு அம்சங்களுக்காக தேசிய, சர்வதேச தினங்கள் கடைபிடிக்கும் நிலையில் ஆண்களுக்காக தினம் கொண்டாட அவசியம் ஏன்? ஆண்களுக்கு என்ன பிரச்னை? தற்போது ஆண்கள் தங்களது உரிமை பற்றி பேசுவதற்கு தயக்கம் உள்ளது. ஆண்கள் உரிமைக்காக அகில இந்திய ஆண்கள் நல சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேர் உறுப்பினரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆயிரத்து 200 பேர்.

இந்த அமைப்பை சேர்ந்த சுரேஷ்ராம் கூறியதாவது:

ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைதாகின்றனர். இதில் 85 சதவீத கைதுகள் தேவையில்லாதவை என தேசிய போலீஸ் கமிஷன் கருத்து தெரிவிக்கிறது. கைதாகும் நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டும் தண்டனைக்குள்ளாகின்றனர்.

பெண்களுக்காக பல்வேறு மருத்துவ திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்கள் விஷயத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. வரிசெலுத்துவோரில் 82 சதவீதம் பேர் ஆண்கள். அரசு வருமானத்தில் பெரும்பகுதி மதுவிற்பனையால் கிடைக்கிறது. குடிபழக்கத்தால் ஆண்கள் இறப்பு அதிகம். ஆண்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தினால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மது விற்பதை அரசு நிறுத்துமா? விலங்குகளுக்கு கூட தனி வாரியம் அமைக்கும் அரசு, ஆண்களுக்கு நல வாரியம் அமைத்து, அவர்களது பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும், என்றார்.

அய்யோ...ஆண்கள்! தேசிய ஆண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் கணக்கெடுப்பின் படி,

* கடந்த 12 ஆண்டுகளில் வீட்டில் நடந்த கொடுமைகளால் 1.7 லட்சம் மணமான ஆண்கள் தற்கொலை செய்துள்ளனர்.

* 2001 - 2005க்கு இடையே 13 லட்சம் ஆண்கள், வேலையை இழந்து உள்ளனர்.

* மணமான மூன்று ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள், சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.

ஆண்கள் தற்கொலை அதிகம் ஏன்? இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆண்கள் 57 ஆயிரம் பேரும், பெண்கள் 30 ஆயிரம் பேரும் தங்கள் முடிவை தேடிக் கொள்கின்றனர்.


==========

இளைஞர்களே,

நீங்கள் உயிரோடு இருக்கவேண்டுமானால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் ஒரே வழி. இந்தியாவில் திருமணம் செய்தால் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி வேலை போய்விடும், மானம் மரியாதை போய்விடும், ஆயுள் முழுதும் நீதிமன்றத்தில் குடும்பத்தோடு வயதான பெற்றோர், சகோதர சகோதரிகளுடன் அலைய வேண்டும், வயதான பிறகுதான் உங்களுக்கு நீதி கிடைக்கும். அப்போதுதான் நீங்கள் நிரபராதி என்று நீதிமன்றத்தில் வழக்கு முடிவடையும். இதுபோன்ற வாழ்க்கைதான் இந்தியத்திருமணத்தில் கிடைக்கும் என்பது தெள்ளத் தெளிவான உண்மை.

நீங்கள் கற்ற கல்வியும், திறமையும் வீணாகாமல் உழைத்து வாழ்வில் உன்னத நிலையை அடைய வேறு நாடுகளில் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

வாழும்போதே நரகத்தைக் காணவேண்டுமென்றால் இந்தியாவில் திருமணம் செய்து அந்தத் துன்பத்தை உங்கள் குடும்பத்தோடு அனுபவியுங்கள்.

இது உண்மைதானா என்று தெரிந்துகொள்ள கீழ்கண்ட இணைப்பில் வரும் ஒவ்வொரு வலைத்தளத்தையும் சென்று பாருங்கள்.
வாழும் நரகம்

இவற்றை உறுதிப்படுத்தும்விதமாக சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு அப்பாவிக் கணவனுக்கெதிராக மனைவி கொடுத்த பொய் வரதட்சணை வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில் இந்தியாவில் திருமணம் செய்யும் ஆண்களின் அவலநிலையைப் பற்றி கூறியுள்ள அப்பட்டமான உண்மையை நீங்களே படித்து இந்தியத் திருமணத்தில் இருக்கும் ஆபத்தை உணர்ந்துகொள்ளுங்கள்.

IN THE SUPREME COURT OF INDIA

CRIMINAL APPELLATE JURISDICTION

CRIMINAL APPEAL NO. 1512 OF 2010

(Arising out of SLP (Crl.) No.4684 of 2009)

J U D G M E N T

August 13, 2010


The learned members of the Bar have enormous social responsibility and obligation to ensure that the social fiber of family life is not ruined or demolished. They must ensure that exaggerated versions of small incidents should not be reflected in the criminal complaints. Majority of the complaints are filed either on their advice or with their concurrence. The learned members of the Bar who belong to a noble profession must maintain its noble traditions and should treat every complaint under section 498-A as a basic human problem and must make serious endeavour to help the parties in arriving at an amicable resolution of that human problem. They must discharge their duties to the best of their abilities to ensure that social fiber, peace and tranquility of the society remains intact. The members of the Bar should also ensure that one complaint should not lead to multiple cases.

35. The criminal trials lead to immense sufferings for all concerned. Even ultimate acquittal in the trial may also not be able to wipe out the deep scars of suffering of ignominy. Unfortunately a large number of these complaints have not only flooded the courts but also have led to enormous social unrest affecting peace, harmony and happiness of the society. It is high time that the legislature must take into consideration the pragmatic realities and make suitable changes in the existing law. It is imperative for the legislature to take into consideration the informed public opinion and the pragmatic realities in consideration and make necessary changes in the relevant provisions of law. We direct the Registry to send a copy of this judgment to the Law Commission and to the Union Law Secretary, Government of India who may place it before the Hon’ble Minister for Law & Justice to take appropriate steps in the larger interest of the society.

இந்தியத் திருமணத்தில் இருக்கும் இதுபோன்ற இன்னல்களைப் பற்றித் தெரியாமல் இந்தியாவில்திருமணம் செய்து தினம் தினம் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் ஆண்கள் கீழுள்ள இணைய தளத்தில் ஆறுதல் பெறலாம்.
அகில இந்திய ஆண்கள் நலச் சங்கம்




Tuesday, November 16, 2010

இந்தியக் கணவன் என்பவன்...



இந்தியக் கணவன் என்பவன்.....

எந்தச் சூழ்நிலையிலும் தன்குடும்பத்தை சுமப்பவன் எவனோ.......

(தினமலர் படம்)


மனைவியின் கட்டளைக்கு அடிபணியாமல் போனதால் மனைவியும் அவளது குடும்பத்தாரும் போடும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி காவல்நிலையம், நீதிமன்றம் என்று வாழ்நாள் முழுதும் அலைந்து வாழ்க்கையைத் தொலைத்து அவதிப்படுபவன் எவனோ........





மனைவியின் கள்ளக்காதலுக்குத் தடையாக இருப்பதால் மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து போடும் கொலைத்திட்டத்தில் கூலிப்படையால் கொல்லப்படுபவன் எவனோ.................


அவன்தான் இந்தியக் கணவன்.


இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்து இதுபோன்ற இந்தியக் கணவனாக உங்களை மாற்றிக்கொள்ள உங்களுக்கு விருப்பமா? சிந்தித்து செயல்படுங்கள்.




Monday, November 15, 2010

இந்திய 498A - மனைவியரின் உச்சகட்டம்

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்ய நீங்கள் முடிவு செய்திருந்தால் அதற்கு முன் பின்வரும் செய்தியை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள். இந்தியாவில் வரதட்சணை சட்டங்களை மருமகள்களும், காவல்துறையும், நீதித்துறையும் எந்த அளவிற்கு பயன்படுத்திவருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த செய்தியைப் படித்த பிறகும் நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்ய நினைத்தால் உங்களைக் கடவுளாலும் காப்பாற்ற இயலாது.

  • மனைவிக்குக் கள்ளக்காதல் இருக்கலாம்,
  • மனைவியின் பெற்றோருக்கு பெரிய அளவில் பணம் தேவைப்படலாம்,
  • உங்களது பெற்றோரின் சொத்துக்களை பிடுங்கிவிட்டு அவர்களை வீட்டை விரட்ட மனைவி நினைக்கலாம்,
  • உங்களது உடன் பிறந்தோரை உங்களிடமிருந்து பிரிக்க நினைக்கலாம்,
  • உங்களை மனைவியின் அடிமையாக நடத்த விரும்பலாம்,
  • இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.

எல்லாவற்றிற்கும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த ஆயுதம்தான் பொய் வரதட்சணை வழக்குகள். இது இந்திய மனைவி, காவல்துறை, நீதித்துறை இவர்களின் கூட்டமைப்பில் உருவான ஒரு அற்புதமான உள்நாட்டுத் தயாரிப்பு. இந்த ஆயுதம் கணவனுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு கொடிய ஆயுதமாகும்.

இந்தியாவில் திருமணம் செய்தால் இந்த தாக்குதலில் இருந்து நீங்கள் தப்பிப்பிழைப்பது என்பது மிகவும் சந்தேகமான விஷயம்தான். என்றாவது ஒருநாள் ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்படும். இந்த சட்ட ஆயுத தாக்குதலில் இருந்து நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடவேண்டும். அங்கும் நீதி கிடைக்குமா என்பது சற்று சந்தேகத்துக்குரிய விஷயம்தான்.

IPC498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் எந்த அளவிற்குக் கொடுமையாக அப்பாவிகள் மீது ஏவிவிடப்படுகிறது என்பதை உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.


SC raps Bombay HC for wrongly convicting man
Press Trust Of India
New Delhi, November 13, 2010

Noting that his wife had committed suicide after her illicit relationship was exposed, the Supreme Court has set aside the conviction imposed on a doctor and his parents by the Bombay High Court, saying it was a clear-cut case of gross abuse of dowry laws. The apex court expressed displeasure at the manner in which the Bombay High Court had convicted Dr Sunil Kumar Sambhudayal Gupta by erroneously reversing the acquittal order passed by the sessions court. "The high court dealt with the case very casually, adopting a very superficial approach to the whole matter and brushed aside the allegation of an illicit relationship for which there had been documentary evidence on record," a bench of Justice P Sathasivam and Justice BS Chauhan said.

The apex court said the manner in which the doctor and his parents were framed by the in-laws revealed the extent to which the anti-dowry laws were being abused in the country.

"It is a clear-cut case of gross abuse of dowry laws. The high court did not make any attempt to appreciate the evidence with accuracy and reversed the findings of the trial court which were based on the evidence on record and for which detailed reasons had been assigned," the apex court said.

The court ruling came on an appeal by the doctor, a Mumbai-resident, and his parents. Married in December 1978, Gupta's wife committed suicide in September 1985.

Her brother Rajesh lodged a complaint with the police accusing the husband of ill-treating his sister for dowry culminating in the suicide. The trial court acquitted the three as the prosecution failed to prove the charges against them.

Referring to her going into depression after the exposure of her illicit relationship with a neighbour, the trial court concluded that Gupta's wife "had been suffering from epilepsy, psychosis and depression and had been getting regular treatment for the same."

"Therefore, it was not a case of dowry demand or treating her with cruelty," the trial court had held. But the high court had convicted them, saying the defence had not been able to prove its version. Concurring with the trial court's view, the apex court said, "The high court committed an error in shifting the burden of proof to the defence."


இந்த செய்தி தொடர்பான அந்தத் தீர்ப்பை இங்கே சென்று முழுவதுமாக படித்து உங்களது திருமணத்தைப் பற்றி ஒரு நல்ல முடிவு செய்யுங்கள். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தியத் திருமணம் என்பது பாம்பிற்கு பால் வார்ப்பது போன்றது. என்றாவது ஒருநாள் அது பொய் வரதட்சணை வழக்கு என்று நஞ்சை கொட்டாமல் விடாது...


IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION

CRIMINAL APPEAL NO. 891 of 2004
(Click and Download PDF file)

Dr. Sunil Kumar Sambhudayal Gupta & Ors. ...Appellants

Versus

State of Maharashtra ...Respondent

JUDGMENT

Dr. B.S. CHAUHAN, J.


35. It is a clear cut case of gross abuse of the dowry laws. We find it difficult to sustain the conviction of the appellants on the aforesaid counts based upon the inconsistent, embellished and improved statements of the witnesses, which materially contradict their respective statements recorded earlier. The High Court did not dislodge the reasons given by the Trial Court for acquittal. The High Court did not make any reference to the deposition of Dr. Daulatram
Nekumal Gurubani (PW.10) in the cross-examination and dealt with the case very casually, adopting a very superficial approach to the whole matter and brushed aside the allegation of an illicit relationship for which there had been documentary evidence on record without recording any cogent reasons for the same. The High Court did not make any attempt to appreciate the evidence with accuracy and reversed the findings of the trial court which were based on the evidence on record and for which detailed reasons had been assigned.


36. In view of the above, the appeal succeeds and is allowed. The judgment and order of the High Court of Bombay, dated 29.4.2004, passed in Criminal Appeal No. 865 of 1987 is set aside. The judgment and order of the Trial court in Sessions Case No. 25/1986 dated 21.5.1987 is hereby restored. The appellants are on bail. Their bail bonds stand discharged.





Saturday, November 13, 2010

மருமகனே ஜாக்கிரதை - கூலிப்படை வருகிறது

இந்தியாவில் நடக்கும் திருமண வாழ்க்கை முறையில் இப்போது பெரும்பாலும் நடந்துவரும் நடைமுறை (modern trend) என்னவென்றால் பெண் யாரையாவது காதலித்து திருமணம் செய்துகொள்வாள். அந்தக் காதலன் தவறான ஆளாக இருந்தாலும் தங்களது மகளுக்கு பெற்றோர்கள் அறிவுரை கூறி திருத்தமாட்டார்கள். மாறாக மகளின் போக்கிற்கு விட்டுவிட்டு பிறகு திருமணமான பிறகு தங்களது வேலையை பெண்ணின் பெற்றோர்கள் ஆரம்பித்து விடுகிறார்கள்.

தங்களுக்குப் பிடிக்காதவன், அல்லது நடத்தை சரியில்லாதவன் என்று திருமணத்திற்கு முன்பே தெரிந்திருந்தாலும் பெற்றோர்கள் தங்களது மகளுக்கு அறிவுரை கூறிஅந்தத் திருமணத்தை தடுத்துநிறுத்தலாம். ஆனால் அப்படி செய்யாமல் திருமணத்திற்குப் பிறகு தங்களது இயலாமையை வெளிப்படுத்த அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான் பொய் வரதட்சணை வழக்குகள் மற்றும் செய்திகளில் வரும் கூலிப்படை வைத்து மாப்பிள்ளையை கொலை செய்யும் சம்பவங்களும்.

இளைஞர்களே,

ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் திருமணம் செய்துவிட்டால் பெண்ணின் பெற்றோர்களுக்கு அவர்களின் மகள்கள் செய்யும் செயல்கள் மட்டுமே சரியானது. பெண்ணின் கணவன்தான் பெண்ணுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் போலிஸை ஏவிவிடுவார்கள். அல்லது கூலிப்படையை ஏவிவிட்டு கொலை செய்துவிடுவார்கள்.

அதிகம் இல்லை. ரூ. 5000 கொடுத்தால் பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து உங்களை கொல்லாமலே உங்கள் வாழ்க்கையை சிதைக்க பல நிலையங்கள் இருக்கின்றன. அதேபோல ரூ. 1.5 லட்சம் கொடுத்தால் போதும் உங்கள் கதையையே முடிக்க ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று பின்வரும் செய்தியிலிருந்து தெரிகிறது.

இந்தியாவில் திருமணம் செய்து மானத்தையும், உயிரையும் விட்டுவிடாதீர்கள்!


தினமலர் நவம்பர் 12, 2010

மதுரை : மதுரையில் நேற்று முன் தினம் கூலிப்படையை ஏவி, மருமகனை கொலை செய்த வழக்கில், மாமனார், மாமியார், கூலிப்படையினர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை செய்ய கூலியாக கொடுக்கப்பட்ட ரூ.1.50 லட்சத்தில் ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை பழங்காநத்தம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(48). இவரது மகள் கார்த்திகாதேவி, அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணனை காதலித்து திருமணம் செய்தார். ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் மகளை, தொடர்ந்து லட்சுமணன் அடித்து துன்புறுத்தியதால், ஆத்திரமடைந்த முருகேசன், கூலிப்படையை ஏவி, நேற்று முன் தினம் அவரை கொலை செய்தார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. முருகேசனின் இரண்டாவது மனைவி மகாலட்சுமியின் மகள் கார்த்திகாதேவி. தேனியில் பி.டெக் இரண்டாமாண்டு படிக்கும்போது, பழங்காநத்தத்தை சேர்ந்த லட்சுமணனை காதலித்தார். "அவர் வேறு சமூகம், எட்டாம் வகுப்பு படித்தவர், வேலைக்கு செல்லவில்லை' என்பதால் மகள் காதலை முருகேசன் குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். ஆனால் கார்த்திகாதேவி பிடிவாதமாக இருந்ததால், ஏற்றுக் கொண்டனர். திருமணம் ஆன நாள் முதல் லட்சுமணன் வேலைக்கு செல்லாமல், குடிபோதையில் கார்த்திகாதேவியை அடித்து துன்புறுத்தினார். ஆரப்பாளையம், கூடல்புதூர், கல்மேட்டில் தனிக்குடித்தனம் வைத்தும் திருந்தவில்லை.

கூலிப்படையாக மாறிய நண்பர்கள்: கூடல்புதூரில் லட்சுமணன் குடியிருந்தபோது, அவரை கொலை செய்ய முருகேசன் திட்டமிட்டார். பழங்காநத்தத்தைச் சேர்ந்த நண்பர்கள் ராமர்(25), அவரது தம்பி லட்சுமணன்(24), மணி(24), தினேஷ்(24) ஆகியோரை அணுகி, "கொலை செய்தால் 3 லட்சம் ரூபாய் தருகிறேன்; வழக்கு செலவையும் ஏற்றுக்கொள்கிறேன்' என்றார். இதைதொடர்ந்து, லட்சுமணனை கொலை செய்ய வீட்டிற்கு சென்றபோது, அவர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். பின், ஒரு மாதத்திற்கு முன், தனது வீட்டு மாடியில் மகளையும், மருமகனையும் குடித்தனம் வைத்த முருகேசன் ஆம்னி வேனும் வாங்கி கொடுத்தார். தவிர, 10 ஆயிரம் ரூபாய், 25 பவுன் நகையும் கொடுத்தார். ஆனாலும் லட்சுமணன் வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில், மேலூர் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த லட்சுமணன், 15 நாட்களுக்கு முன் ஜாமீனில் வந்தார். இதன்பிறகும் மகளை அடித்து துன்புறுத்தியதால், சூரசம்ஹார தினமான நேற்று முன் தினம் எப்படியும் லட்சுமணனை கொலை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் முருகேசன்.

கொலையை உறுதி செய்த மாமனார்: நேற்று முன் தினம் காலை மேலூர் கோர்ட்டிற்கு கையெழுத்திட, ஆம்னி காரில் செல்ல லட்சுமணன் திட்டமிட்டிருந்தார். "அவர் நடந்து சென்றால்தான் கொலை செய்வது எளிது' என்று கருதிய முருகேசன், ஆம்னி வேன் டயர்களை பஞ்சராக்கினார். இதனால் அவர் எதிர்பார்த்தபடியே, லட்சுமணன் காலை 9 மணிக்கு மாடக்குளம் ரோட்டில் நடக்க ஆரம்பித்தார். ராமர், மணி உட்பட 4 பேர், அவரை ஓட ஓட விரட்டி, ஓட்டலுக்குள் வெட்டி கொலை செய்தனர். பின், வீட்டில் இருந்த முருகேசனுக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்து உறுதி செய்த முருகேசன், கூலிப்படையினரை பைகாரா மலைப்பகுதிக்கு வரச்சொல்லி, அட்வான்சாக ரூ.1.50 லட்சம் கொடுத்தார்.

மாமியார் கைது: இவை அனைத்தும் முருகேசன் மனைவி மகாலட்சுமிக்கும்(40) தெரியும் என்பதால், அவரும் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த மணி, ராமர், லட்சுமணன், தினேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கொலை செய்ய கூலியாக பெற்ற ரூ.1.50 லட்சத்தில் ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்பு உடைய ராஜாராம் என்பவரை திலகர் திடல் உதவி கமிஷனர் கணேசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் தர்மர் மற்றும் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

கொலைக்கு வழிவகுத்த போலீஸ் அணுகுமுறை: நவ.,9 இரவு 1.30 மணிக்கு மகள் கார்த்திகாதேவியை அடித்து துன்புறுத்துவதாக லட்சுமணன் மீது சுப்பிரமணியபுரம் போலீசில் மாமியார் மகாலட்சுமி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்யாமல், மனு ரசீது மட்டும் கொடுத்துவிட்டு, லட்சுமணனை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். அன்றே வழக்குப்பதிவு செய்து, முறைப்படி "கவனித்திருந்தால்' லட்சுமணன் பயந்து ஓரளவிற்காவது திருந்தி இருப்பார். அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை பார்த்து, முருகேசனும் மனம் மாறியிருப்பார். இப்போது கணவரையும் இழந்து, பெற்றோரையும் பிரிந்த ஆறு மாத கர்ப்பிணியின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

தடயத்தை அழித்த ஓட்டல் உரிமையாளர் கைது: கொலை நடந்த லோகேஷ் ஓட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருபவர் சரவணன். கேன்களில் டீ சப்ளை செய்பவர். லட்சுமணனை கொலை செய்து விட்டு, கொலையாளிகள் வெளியே சென்ற பின், பயந்து போன சரவணன் தரப்பினர், சுவற்றில் படிந்த ரத்தக்கறைகளை தண்ணீரைக் கொண்டு கழுவி உள்ளனர். மேலும், லட்சுமணன் உடலை ஓட்டலுக்கு வெளியே வீசிவிட்டு, கதவை மூடியுள்ளனர். தடயத்தை அழித்ததால் சரவணனை போலீசார் கைது செய்தனர்.



Thursday, November 11, 2010

மாப்பிள்ளைக்கு மாமனார் கொடுத்த பரிசு



செஞ்சி : செஞ்சி அருகே மருமகன் மீது ஆசிட் ஊற்றிய பாசக்கார மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குணசேகரன் (33). இவருக்கும் இதே ஊரை சேர்ந்த தங்கராசு மகள் கல்பனாவுக்கும் (30), ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தீபாவளியன்று குணசேகரனுக்கும், கல்பனாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.இதில் கோபித்துக்கொண்டு கல்பனா தாய் வீடு சென்றார். இது குறித்து முறையிட குணசேகரன், கடந்த 8ம் தேதி கல்பனாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு நடந்த தகராறில் கல்பனாவின் தந்தை தங்கராசு, குணசேகரன் மீது ஆசிட் ஊற்றினார். இதில் குணசேகரனின் முகம், கை, கால், கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.இவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து, தங்கராசுவை தேடி வருகின்றனர்.

===========

இந்தியாவில் திருமணம் செய்பவர்களுக்கு பொய் வரதட்சணை வழக்குகள் கண்டிப்பாக பரிசாகக் கொடுக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த ஆண்டு தீபாவளி முதல் “ஆசிட் வீச்சும்” உண்டு என்பது வருங்காலத்தில் இந்தியாவில் திருமணம் செய்வதற்காக காத்திருக்கும் பல அப்பாவி இளைஞர்களுக்கு ஒரு போனஸ் செய்தி.