பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, April 28, 2011

இளைஞர்களே உங்களது பெற்றோரை காப்பாற்றுங்கள்

இளைஞர்களே,

வேறு நாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் உங்களது பெற்றோரைக் காப்பாற்ற ஒரே வழி.

Senior citizen dies on return from police detention
The Hindu, 27-4-2011

Bangalore: Dastagir Sherriff (70), accused in a dowry harassment case, died at his residence on Tuesday morning soon after returning from the Yelahanka New Town police station where he was questioned by the police. His relatives alleged police torture though no complaint was filed.

Sources in the police station said his daughter-in-law Zarina had returned to her mother's house complaining of torture by her husband Mehboob and Sherriff. She had filed a case of dowry harassment against the accused and the police had questioned Sherriff at the station.

The police picked up Sherriff on Sunday and released him on Tuesday, a relative told presspersons. The police denied the relative's allegation.

கண்ணீர் அஞ்சலி

சிங்கப்பூரில் வளமாக வாழ்ந்த இளைஞர் இந்தியாவில் திருமணம் செய்ததால் இந்திய சட்டதீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை வழக்கு மூலம் மனிதத்தன்மையில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு தனது 33ம் வயதிலேயே கொல்லப்பட்ட தோழர் மணிகண்டனின் ஆத்மா அமைதி அடைய இறைவனை வேண்டுவோம்.



I am compelled to observe that Section 498A IPC in the recent years has become consummate embodiment of gross human rights violation, extortion and corruption and even the Apex Court of our country had acknowledged this abuse and termed it as Legal Terrorism. - (Dr. KAMINI LAU: ADDL. SESSIONS JUDGE-II (NORTH-WEST): ROHINI COURTS: DELHI. 25.2.2011)


Tuesday, April 26, 2011

ஆண்பால் காதலும் பெண்பால் காதலும்

அனைத்து உயிரினங்களையும் ஆண்பால், பெண்பால் என்று இலக்கணத்தில் பாலினப்பாகுபாடு (Gender) செய்து வைத்திருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

ஆனால் எந்த நாட்டிலும் இல்லாத
இந்தியாவில் மட்டுமே இருக்கின்ற காதல் பாலினப் பாகுபாடு பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்தியக் காதலில் மட்டும்தான் ஆண்பால் காதல், பெண்பால் காதல் என்று இரண்டு வகை இருக்கிறது.

இந்த இரண்டுவகை காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ள பின்வரும் செய்தியையும் அதனூடே வரும் வீடியோக்களையும் பாருங்கள். உங்களுக்கே தானாகப் புரியும்.

திருமணத்துக்கு மறுத்த இன்ஜினியருக்கு சிறை
தினகரன் 26 ஏப்ரல் 2011

பூந்தமல்லி : காதலித்து ஏமாற்றி விட்டதாக காதலன் மீது காதலி புகார் செய்தார். இதையடுத்து, காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




போரூர் அடுத்த முகலிவாக்கம் ராஜசேகரன் நகர், 1வது தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (25). பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரபு (25). இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.

கல்லூரியில் ஒன்றாக படித்த போதிருந்தே இருவரும் காதலர்கள். கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிருஷ்ணபிரபுவிடம் கூறியுள்ளார். ஆனால் கிருஷ்ண பிரபு, நாட்களை கடத்தி வந்தார். மேலும் கடந்த 3 மாதங்களாக விஜயலட்சுமியை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.

இதுகுறித்து விஜயலட்சுமி, கிருஷ்ணபிரபுவின் அலுவலகத்துக்கு சென்று, கேட்டபோது, ‘உன்னை திருமணம் செய்தால் எனது பெற்றோர் இறந்துவிடுவதாக கூறுகின்றனர். எனவே, உன்னை திருமணம் செய்ய முடியாது’ என்று கூறியுள்ளார்.




இதனால் மனவேதனை அடைந்த விஜயலட்சுமி, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராணி, கிருஷ்ணபிரபுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கிருஷ்ணபிரபு, விஜயலட்சுமியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். எனவே, போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணபிரபுவை கைது செய்தனர். பிறகு, பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



ஆரல்வாய்மொழி : நாகர்கோவில் அருகே திருமணத்துக்கு முதல்நாள் இரவில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் பாலநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுப்பிரமணியன் (24). செங்கல் சூளை தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மகள் அழகுமதிக்கும் (23) கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்தை நேற்று (12&ம்தேதி) பணகுடியில் உள்ள மணமகள் இல்லத்தில் நடத்தி ஆரல்வாய்மொழியில் உள்ள மண்டபத்தில் மாலையில் மணமக்கள் வரவேற்பு வைத்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

நேற்று முன் தினம் இரவு இரு வீட்டு சார்பில் ஊர் அழைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமண ஏற்பட்டால் மணமக்களின் வீடு களை கட்டியது. நேற்று (12&ம்தேதி) காலையில் மணமகன் அழைப்புக்கு முன், சுப்பிரமணியன் வீட்டில் இருந்து மணப்பெண்ணுக்கு பூ கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆரல்வாய்மொழியில் இருந்து மணமகனின் உறவினர்கள் நேற்று காலை காரில் பணகுடி சென்றனர். பூக்களை கொடுத்து விட்டு மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும்படி கூறி விட்டு வந்து விட்டனர். காலை 8 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி ஆரல்வாய்மொழியில் தொடங்கியது. சுப்பிரமணியன் பட்டு, வேட்டியுடன் மாப்பிள்ளை தோரணைக்கு வந்தார்.

மணமகனின் கார் புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வீட்டில் இருந்து போன் வந்தது. அதில் மாப்பிள்ளை இங்கு கிளம்பி வர வேண்டாம். மணப்பெண்ணை காணவில்லை. திருமணத்தை நிறுத்தி விடுவோம் என கூறி விட்டு போனை துண்டித்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக பணகுடிக்கு விரைந்தனர். அப்போது தான் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் ஊர் அழைப்புக்கு சென்ற போது, மணமகள் மாயமாகி விட்டார் என்பது தெரிய வந்தது. இதனால் திருமண வீடே சோகமயமானது.

மணமக்களின் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊர் பெரியவர்கள் கூடி பேசி பணகுடி காவல் நிலையத்துக்கு விவகாரம் சென்றது. மணப்பெண்ணின் தந்தை தர்மலிங்கம், மகளை காணவில்லை என புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போது மணப்பெண் அழகுமதி, தனது அத்தை மகனை காதலித்து வந்ததும், அவருடன் தற்போது தலைமறைவாகி விட்டதும் தெரிய வந்தது. எனவே இரு தரப்பினரும் பேசி இனி உறவை முறித்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Monday, April 25, 2011

இந்தியத் திருமண பலன்

திருமணம் நடந்து 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால் இந்திய சட்டப்படி (IPC304B) அது வரதட்சணைக்காக கணவன் செய்த வரதட்சணைக் கொலை என்று கருதப்படும். அதற்காக கணவனும் அவனது குடும்பமும் எந்தவித கேள்வியுமின்றி உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இது விளையாட்டிற்காக எழுதப்பட்ட செய்தியல்ல. இந்தியக் கணவர்களே திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் உங்களது மனைவி இறக்காமல் பார்த்துக்கொண்டேயிருங்கள் (அதாவது வெறிநாய்க் கடித்துவிட்டால் நாய் இறக்காமல் இருக்கிறதா என்று பார்க்கச்சொல்வார்களே அதுபோல - இந்தியாவில் நடக்கும் உங்களது திருமணமும் ஒருவகையில் உங்களுக்கு ஏற்படும் வெறிநாய்க்கடி போன்றதுதான்!). இல்லாவிட்டால் உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து களிதான் திண்ணவேண்டும்.

ஆனால் திருமணமாகி சில நாட்களில் மனைவியின் கொடுமையால் கணவன் தற்கொலை செய்துகொண்டாலும் யாரும் ஏன் என்றுகூட கேட்கமாட்டார்கள். இதுதான் இந்தியாவில் திருமணம் செய்வதால் ஆண்களுக்குக் கிடைக்கும் பலன்.

பெட்ரோல் ஊற்றி கணவர் தற்கொலை
ஏப்ரல் 25,2011 தினமலர்

உசிலம்பட்டி:உசிலம்பட்டி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

பெரியகுளம் தண்டுகுளத்தைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம்(52). சவூதியில் வேலை பார்த்து வந்த இவருக்கு மனைவி சுலைமா பேகம்(48), மகன்கள் சித்திக்(34), ரியாத்(29) உள்ளனர்.

சமீபத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அடிக்கடி தகராறு எழுந்தது. மனமுடைந்த அப்துல்ரஹீம் நேற்று காலை 5 மணிக்கு உசிலம்பட்டி கணவாய் அருகில் சேர்வைபட்டி விலக்கிற்கு பஸ்சில் வந்தார். பயணியர் நிழற்குடை அருகே தான் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இறந்தவரின் அருகில், "சாவுக்கு யாரும் காரணமில்லை. என்னுடைய பிரேதத்தை மனைவியிடம் கொடுக்க வேண்டாம். நல்ல மனதுடையவர்கள் அடக்கம் செய்யுங்கள். உங்களுக்கு அல்லா மோட்சம் தருவார்,' என, எழுதப்பட்ட கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

Wednesday, April 20, 2011

திருமணமே விபச்சாரமா?

திருமணம் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் பல திருமணங்கள் விபச்சாரம்போல்தான் மாறிவிட்டிருக்கிறது.

நன்றாக வசதியான ஆளை பிடித்து திருமணம் செய்து பிறகு சில மாதங்களிலேயே பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து காவல்நிலையம், நீதிமன்றம் என்று அலையவைத்துப் பிறகு இடைத்தரகர்கள் மூலம் பேரம்பேசி பணம் சம்பாதிக்கும் எளிய வழிமுறை இப்போது இந்தியாவில் திருமணம் என்ற பெயரில் நடந்துவருகிறது என்று பல இளைஞர்களுக்குத் தெரிவதில்லை.

இந்த விஷயம் எப்போதோ இந்திய நீதிமன்றத் தீர்ப்பில் சொல்லப்பட்டுவிட்டது. அது இப்போது வெளிப்படையான வியாபாரமாகவே செய்தித்தாளில் வந்துவிட்டது. இரண்டையுமே படித்து இப்போதாவது தெளிவு பெறுங்கள்.

Delhi High Court

Crl.Appeal No. 696/2004 Date: 01.11.2007


Every marriage that fails does not fail due to dowry demand or cruelties. The marriages do fail for several other reasons including the reason of incompatibility of the persons. A failed marriage is not a crime however, the provisions of Section 498A are being used to convert failed marriages into a crime and the people are using this as tool to extract as much monetary benefit as possible. In many cases, where FIRs are filed under Section 498A IPC, petitions are being filed under Section 482 Cr.P.C. for quashing of FIRs after settlements between the parties and the allegations made of cruelties etc. are withdrawn the moment a lump sum payment is received. Involving each of the family members of the husband is another arm in the armory of the complainants of failed marriages. Not only close relatives but distant relatives and even neighbours are being implicated under Section 498A and other provisions of IPC in cases of failed marriages.



திருமணம் என்ற பெயரில் நாகரிக விபசாரம் திருச்சி அருகே பிடிபட்டது மோசடி கும்பல்
தினமலர் 20-4-2011


துறையூர் : திருமணம் என்ற பெயரில், நவீன விபசாரம் செய்து பிடிபட்ட கும்பலிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், துறையூர் கடைவீதியைச் சேர்ந்தவர் குமார் (35). இவரது தந்தை பகதூர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், துறையூரில் பேன்சி வியாபாரம் செய்து வருகின்றனர்.

குமாருக்கு திருமணம் செய்ய, சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள சுகம்லால் பதிசந்த் என்ற புரோக்கரை, பகதூர் அணுகியுள்ளார். புரோக்கரும், ராஜஸ்தான், பிகானீர் பகுதியைச் சேர்ந்த பூஜாகுமாரி (24) என்ற பெண்ணை, தன் வீட்டில் வைத்தே காட்டினார். அப்போது, பூஜாகுமாரியின் தந்தை ராஜேஷ்குமார் ஜீ ஜெயின் ரன்கா, தாய் ரேகாபாய், மாமா விஜயராஜ் ஆகியோர் உடனிருந்தனர். பூஜாகுமாரி குடும்பம் சென்னையில் தொழில் செய்வதாக, புரோக்கர் கூறினார். திருமணத்தை உடனடியாக வைத்துக்கொள்ளுமாறு, குமார் குடும்பத்தினரை புரோக்கர் வற்புறுத்தியதால், 2010 ஏப்ரலில், சென்னையில் குமார் - பூஜாகுமாரி திருமணம், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ஆடம்பரமின்றி நடந்தது.

திருமணம் நடக்கவிருந்த சில நாட்களுக்கு முன், பூஜாகுமாரியின் தந்தைக்கு ஏற்பட்ட தொழில் நஷ்டத்தை சரிசெய்யவும், திருமண செலவுக்காகவும், குமார் குடும்பத்தினர் புரோக்கர் மூலம், 10 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு, ஏப்., 12ம் தேதி, துறையூரில் குமாருக்கும், பூஜாகுமாரிக்கும் திருமண வரவேற்பு நடந்தது. இதிலும், பூஜாகுமாரி தரப்பில் சிலர் மட்டுமே பங்கேற்றனர்.

திருமணம் முடிந்து, பூஜாகுமாரி, 10 நாள் மட்டுமே குமாருடன் குடும்பம் நடத்தினார். அதன்பின், "ராஜஸ்தானில் என் அக்காவுக்கு குழந்தை பிறந்துள்ளது; பார்த்து விட்டு வருகிறேன்' என்று கூறிச் சென்ற பூஜாகுமாரி, பல நாளாகியும் வீடு திரும்பவில்லை; அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. குமாரும், அவரது குடும்பத்தினரும் பலவகைகளில் தொடர்பு கொண்டும், அவர்களை பிடிக்க முடியவில்லை.

பெண்ணின் மாமா விஜயராஜை தொடர்பு கொண்டபோது, அவரும் சரியான பதில் தரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குமார், ராஜஸ்தானுக்கே சென்று பார்த்த போது, அங்கு பூஜாகுமாரி கொடுத்த முகவரியில் அப்படி ஒருவர் கூட இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து குமார், புரோக்கர் சுகம்லால் பதிசந்தை அணுகி, பூஜாகுமாரி மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவரோ, "திருமணம் செய்து வைத்ததோடு என் வேலை முடிந்து விட்டது' எனக் கூறி கழன்று கொண்டார்.

இதுகுறித்து குமார், முசிறி போலீசில் அப்போது, புகார் செய்தார். ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. இந்நிலையில், 10 நாட்களுக்கு முன், குமாரின் உறவினர் ஒருவர், பெங்களுரில் பூஜாகுமாரியையும், அவரது குடும்பத்தாரையும் பார்த்து, குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களை பிடித்து வைக்குமாறு கூறிய குமார், பெங்களுரு புறப்பட்டுச் சென்றார்.

போலீசார் உதவியுடன் பிடித்து வைத்திருந்த பூஜாகுமாரி மற்றும் அவரது தந்தை என்றழைக்கப்பட்ட ராஜேஸ்குமார் ஜீ ஜெயின் ரன்காவையும் அழைத்துக் கொண்டு, திருச்சி வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பெங்களுரில் பணக்கார சேட் ஒருவருக்கு, பூஜாகுமாரியை திருமணம் செய்து வைக்க முயற்சித்தது தெரியவந்தது.

மீண்டும், முசிறி டி.எஸ்.பி.,யிடம் குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பூஜாகுமாரியையும், அவரது தந்தையையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். பூஜாகுமாரியின் அழகை பயன்படுத்தி, ஒவ்வொரு ஊராக சென்று, பணக்காரர்களை திருமணம் செய்து, பணம் பறிக்கும் கும்பல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குமாரை திருமணம் செய்தபோதே, பூஜாகுமாரியின் மொபைல் போனில், வேறு ஒருவருடன் இருக்கும் போட்டோ இருந்துள்ளது. அது, இப்போது போலீஸ் கையில் சிக்கியுள்ளதால், வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் என்ற பெயரில் சிலருடன், சில நாள் குடும்பம் நடத்தி விட்டு, பணம் பறிக்கும் நவீன விபசார கும்பல் பிடிபட்டுள்ளது, துறையூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, April 9, 2011

கணவனை “டார்ச்சர்” செய்யும் இந்திய மனைவிகள் - திரைப்படம்

நாட்டு நடப்புத் தெரியாமல் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பல ஆண்கள் “இந்தியத் திருமணம்” என்ற இரும்புப் பெட்டிக்குள் அடைபட்டு ஒருதலைபட்சமான மனைவியர் பாதுகாப்பு சட்டங்கள், பொய் வரதட்சணை வழக்குகள் என்ற சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை இந்தியத் திருமணத்திற்குள் நுழைவதும் தகனமேடைக்குள் நுழைவதும் ஒன்றுதான். இரண்டுமே ஒருவழிப்பாதைபோன்றது. உள்ளே சென்றபிறகு மீண்டுவரவே முடியாது. இதுபோன்ற சிக்கல்களில் சிக்கிக்கொண்டால் எப்படி அவதிப்படநேரிடும் என்று பின்வரும் செய்தியைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


ஈரோடு: "மனைவியின், "டார்ச்சர்' தாங்க முடியவில்லை' என, கூறி, கலெக்டர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சவுண்டையா தலைமையில் நடந்தது. மதியம் 12.45 மணிக்கு, பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (40), கலெக்டர் அலுவலகம் வந்தார். பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் கூச்சலிட்டனர். போலீசார் ஓடிவந்து, செல்வராஜிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். அவரது தலையில் தண்ணீர் ஊற்றி, கைது செய்தனர்.

நிருபர்களிடம் அவர் அழுதுகொண்டே கூறியதாவது: பவானியில் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்க்கிறேன். 1995ல் எனக்கும், பொம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கும் திருமணம் நடந்தது. எங்களது ஒரே பெண் குழந்தை ஆறாவது படிக்கிறாள். திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை; மற்றொருவருடன் தொடர்பு வைத்திருந்தார். இது தொடர்பாக கேட்டால், என்னை, "டார்ச்சர்' செய்வார்.

சமீபகாலமாக, என் மனைவியும், மகளும் என்னுடன் இல்லை. என்னிடம் ஜீவனாம்சம் கேட்டு, என் மனைவி ஸ்ரீதேவி துன்புறுத்துகிறார். ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். என்னை விசாரித்த போலீசார், சரமாரியாக தாக்கினர். ஜீவனாம்சம் தருவதற்கு என்னிடம் ஏதுமில்லை; எதற்காக என்னை பல ஆண்டுகளாக, "டார்ச்சர்' செய்கின்றனர் என்றே தெரியவில்லை. அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என, அலைகிறேன். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக தெரியவில்லை. இதனால்தான் மன உளைச்சல் அடைந்தேன்; கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ளலாம் என வந்தேன். அதற்குள் போலீசார் பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

====

இளைஞர்களே,

மேலுள்ள செய்தியிலிருப்பதுபோல உங்கள் வாழ்வு திசைதெரியாமல் தொலைந்து போகாமலிருக்கவேண்டுமானால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். இந்தியத் திருமணச் சட்டங்கள் ஒருபோதும் ஆண்களை ஒரு உயிரியாகவே பொருட்படுத்தியதில்லை.

மனைவி தவறிழைத்தாலும் அவளுக்குச் சாதகமாக கணவனை தண்டிக்கும் விதத்தில் பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் மனைவி கணவனுக்கெதிராக குற்றம் இழைத்தால் தவறிழைக்கும் மனைவியை தண்டிப்பதற்கோ அல்லது குறைந்தபட்சம் கணவனை பாதுகாப்பதற்கோ இதுவரை எந்த சட்டமும் இந்தியாவில் இயற்றப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொண்டால் இந்தியத் திருமணம் எவ்வளவு ஆபத்தானது என்று புரியும்.




இதுபோன்ற இந்தியத் திருமணம் என்ற தகனமேடையில் சிக்கி மனதிற்குள்ளேயே அழுதுகொண்டிருக்கும் பல அப்பாவி இளைஞர்களின் மனக்குமுறல்களை வெளியுலகத்திற்குக் காட்டுவதற்காக திரைப்படத்துறை முன்வந்திருக்கிறது. இந்திய சட்டங்கள் இதுவரை அப்பாவி ஆண்களை கண்டுகொள்ளவில்லை. இந்த திரைப்படத்திற்குப் பிறகாவது விழிப்புணர்ச்சி ஏற்படுகிறதா என்று பார்ப்போம். எது நடந்தாலும் நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்யலாம் என்ற தவறான எண்ணத்தை மட்டும் வளர்த்துக்கொள்ளாதீர்கள்!


Shooting begins for '498A - The Misuse'

The Times of India


Sameer Sinha will begin shooting his bilingual, '498A — The Misuse' , with Romit Raj, Kanchana Moitra, Moubani Sorcar and Sania Chaudhury

In recent times, some online forums had debated the need of a film that speaks about the misuse of IPC-498 A. The latest news is that a bilingual film on this subject is being made out of Kolkata. Titled "498A — The Misuse", the film will highlight the way some women in urban India are taking refuge in the law to harass men. The film will be made in Hindi and English and will be shot in Kolkata and Pune. Starring Romit Raj in the lead, the film also marks the non-Bengali language film debut of Kanchana Moitra and Moubani Sorcar.

Incidentally, the Supreme Court, reacting to a writ filed in 2005 (Sushilkumar Sharma v/s Union of India), had termed misuse of 498A as legal terrorism. It is this menace that director Sameer Sinha wants to highlight through the film.

While the laws were formulated to actually help oppressed women of rural India, today there is a large section of men who are harassed by the misuse of the laws by women in urban India. What does a man do if he is falsely implicated by 498A? What happens to a man if he is trapped in a bad marriage? While doing the research, I found that there are thousands of victims who have never been addressed. It's an academic subject and has hardly been addressed by anyone. Our film is about what a man or his family ought to do if he finds himself in such a situation," Sameer says.

Incidentally, the story is about a young couple (Romit and Sania Chaudhury) who fall in love. But once the marriage turns bitter, Romit wants to come out of the marriage . But Sania misuses 498A to trap Romit. The film is about how Romit tries to come out of the mess. "I wanted someone who is fresh but has worked in the industry. In this film, Moubani is playing Romit's saviour. While I had auditioned a lot of girls in Kolkata, it was only Moubani who fit the bill at the screen test. Sania, who is from Kolkata and is now working in Telugu film industry, plays Romit's wife. I liked Kanchana's work in "Bye Bye Bangkok" and, hence, cast her. Through the film, I want to tell the youth that it's good to know the person well before taking the plunge. Otherwise, the legal system is such that it might unnecessarily make one pay a heavy price for it." Says Kanchana, who plays a psychopath in the film, "Some of my friends from the film industry have been victims of the misuse of this law. I have seen how they've suffered silently. Since this film will convey a very serious message, I was more than eager to be a part of this venture. In the movie, I play a loner, who has a negative influence on her sister and helps her to legally plot against her brother-in-law. I am comfortable speaking Hindi and with a language coach on board, I see no problems doing this bilingual movie."

Shooting for the film will begin in Kolkata on April 17.




Saturday, April 2, 2011

தேர்தலை கலக்குவதற்கு புறப்பட்டிருக்கும் இந்திய ஆண்கள் படை

“பெண்கள் ஓட்டு வங்கி” என்ற கற்பனையான மாய வலையில் சிக்கியிருக்கும் அரசியல் தலைவர்களால் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டு தவறான ஒருதலைபட்சமான கண்மூடித்தனமான பெண் ஆதரவு சட்டங்கள் மூலம் சீரழிக்கப்பட்டுவரும் அப்பாவி இந்திய ஆண்களின் உதவியற்ற நிலையை அரசியல்வாதிகளுக்கு உணர்த்தி இந்திய ஆண்களின் உயிரையும், மானத்தையும் பாதுகாத்து அவர்களின் நிலையை உயர்த்துவதற்காக இந்திய ஆண்கள் நலச்சங்கம் சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை ஆட்சிபுரிந்த பலகட்சி அரசாங்கத்தாலும், “பெண்கள் ஓட்டு வங்கி” என்ற கற்பனையான மாயையில் மூழ்கி அந்த கட்சிகள் இயற்றியுள்ள பல ஒருதலைபட்சமான சட்டங்களாலும் இந்திய ஆண்கள் எப்படி பலகாலமாக புறக்கணிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இந்த வீடியோக்களில் இருக்கிறது.







அகில இந்திய ஆண்கள் நலசங்கத்துடன் இணைந்து நாட்டின் நலனிற்காக நடக்கும் நற்காரியங்களில் பங்குகொள்ள இந்த இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்: http://aimwa.in/about

இளைஞர்களே,

இலவசங்கள் என்ற மாய சூன்யத்தில் புத்தியை இழந்து சோரம்போகாமல் ஓட்டுப்போடப் போவதற்குமுன் இந்த அறிக்கையை ஒருமுறை படித்துவிட்டு சிந்தித்துவிட்டுச் செல்லுங்கள்.

நீங்கள் எடுக்கும் நல்ல முடிவு உங்களை மட்டும் அல்ல ஆண், பெண் என்ற பாகுபாடின்றி உங்களது வருங்கால சந்ததிகளையும் பாதுகாக்கும்.
பக்கம் -1
(Click and Read)பக்கம்-2
(Click and Read)