பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, April 19, 2010

இந்தியாவில் ஆண்களுக்கு சட்டப்பாதுகாப்பு இருக்கிறதா?

Seeking to counter certain "exaggerated" claims made by some women's organisations and in a bid to draw the attention of the government to the plight of men victimised by lop-sided laws drafted on the basis of such claims, men's organisations in the city have now embarked upon the task of conducting a massive domestic violence survey.

The results of the nationwide survey, widely believed to be the first of its kind for men in the country, will be used to find out if whether Indian men too are victims of domestic violence, the percentage of Indian men subjected to such violence and the kind of violence they are subjected to.
The need for the survey has been triggered, it seems, by the controversial Domestic Violence Act - 2005, which seems to have been drafted on the assumption that only women suffer domestic violence. Says Suresh Ram, member of the All India Men's Welfare Association (AIMWA), an NGO working for the rights of men and boys, "Certain women's organisations have been stereotyping the issue of domestic violence.

They have presented a picture that conveys the impression that only women are victims of domestic violence while we have with us global surveys and over 250 scholarly studies that show that women are at least as likely as men to engage in partner
aggression and that partner violence is often mutual. This fact is established if one goes through the Domestic Violence Study conducted by a well known global organisation that has done the survey in over 32 countries including India. However, the Domestic Violence Act in India offers protection to only women and not men." He further adds, "So, to set things right, we men's organisations have joined hands to ensure that a credible and transparent survey on the issue is done. Eight men's organisations are involved in this effort which is being led by the AIMWA.



We have begun negotiations with survey agencies to conduct the survey in certain cities of the country including Chennai, Delhi, Kolkata, Bangalore and Hyderabad. We intend to publish the results on Nov 19, the International Men's Day." So, what do they intend to achieve by conducting such a survey? Says Suresh, "We intend to create an awareness in society about the problems faced by men.

We wish to present to them the real situation in society. We will also seek to draw the government's attention to issues concerning men and reiterate our demand for setting up a National Commission for Men and a Men's Welfare Ministry." Men in the city are delighted with the move by the men's organisations. Welcoming such a survey, Shankar, a graphics designer, says, "I certainly welcome the move. It is high time that facts were presented on this issue." Women too seem to be for such a survey. Says Dakshayini Sampath, a media professional, "While I think that more number of women suffer domestic violence, it's also possible that men are victims. I think the law should hold good for both genders and if this survey is going to help bring about a uniform law, then I'm all for it."




Friday, April 16, 2010

கலியுக காத(வ)ல் கோட்டை


காவல் நிலையம்தான் அவர்களுக்கு “எல்லாவற்றிற்குமே” பாதுகாப்பான இடம் என்பதை தொழில்பக்தியோடு நிருபித்துவிட்டார்கள் போலிருக்கிறது!


========================================================

பெண் எஸ்.ஐ., மீது செக்ஸ் புகார்?
தினமலர் ஏப்ரல் 16,2010

சென்னை:தலைமைக் காவலர்களுடன், 'தொடர்பு' கொள்வதில் ஏற்பட்ட தகராறில் பெண் எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் சொர்ண களஞ்சியம்(50); எழும்பூர், அருங்காட்சியக போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

இதே போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் ரங்கநாதன் (42). மனைவியை இழந்த இவர், அமெரிக்காவில் இருக்கும் தனது மகன் அனுப்பும் பணத்தில், 'செழிப்பாக' வாழ்ந்து வருகிறார்.ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியதால் பெண் எஸ்.ஐ.,க்கும், மனைவியை இழந்த ரங்கநாதனுக்கும் இடையில் நெருக்கம் அதிகமானது. போலீஸ் நிலையத்தில், பகல் நேரத்தில் கதவை பூட்டிக் கொண்டு இருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு தலைமைக் காவலரான சிகாமணி(40) என்பவருடனும் இந்த பெண் எஸ்.ஐ., தொடர்பு வைத்துள்ளார்.

இந்த விவகாரம் ரங்கநாதனுக்கு தெரியவந்துள்ளது.ஆத்திரமடைந்த ரங்கநாதன், சொர்ண களஞ்சியத்தை கண்டித்ததுடன், அடித்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து நுண்ணறிவு பிரிவினர் போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர்.கமிஷனர் உத்தரவின்படி எஸ்.ஐ., சொர்ண களஞ்சியம், எழும்பூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப் பட்டார்.போலீஸ் நிலையத்திலேயே பெண் எஸ்.ஐ.,யும், தலைமைக் காவலரும் சல்லாபித்தது குறித்து எழும்பூர் உதவி கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார்.

======================================================

தகுந்த வயதை அடைந்த இருவர் ஒன்றாக வாழ்வதை எப்படி குற்றமாக கருத முடியும்? ராதையும், கிருஷ்ணனும் ஒன்றாகவே வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் ஒன்றாக வாழ்வதையோ தவறு என எந்த சட்டமும் கூறவில்லை. - திருமணத்துக்கு முன் செக்ஸ் தவறு இல்லை: சுப்ரீம் கோர்ட்
உச்சநீதிமன்ற நெறிமுறையை இதுபோன்ற விஷயங்களில் தவறாமல் பின்பற்றுகிறார்கள். ஆனால் பொய் வரதட்சணை கேசுகளில் கண்மூடித்தனமாக அப்பாவிகளைக் கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பல முறை சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளமாட்டார்கள் இந்த கடமைதவறா க(ன்னி)யவான்கள்.

இளைஞர்களே இதுபோன்ற காவல்நிலையங்கள்தான் உங்கள் மீது பொய் வரதட்சணை வழக்குகளை பதிவு செய்து உங்களது வாழ்வை சின்னாபின்னமாக்கும் இடங்கள்.
இவர்களுக்குத் துணைபோவது கோழைத்தனமான கோமாளிகள் இயற்றியுள்ள தவறான சட்டங்கள். தவறான சட்டங்களை திருத்தக்கூட திராணியற்ற கூட்டம் தான் இங்கு வாழ்கிறது. உள்துறை அமைச்சகத்தின் இயலாமையைக் காட்டும் சுற்றறிக்கையைப் படித்துப்பாருங்கள்.

இதுபோன்ற கள்ளக்காதல் காமவெறித் தகராறு போன்ற “உள்துறை கட்டப்பஞ்சாயத்துக்கள்” செய்யவே இவர்களுக்கு நேரம் இருக்காது. இதுபோன்ற இடங்களில் உங்களைப்போன்ற அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் அநீதியைப்பற்றி கவலைப்பட யாருக்காவது நேரமிருக்குமா? இந்தக்கூட்டத்திலிருந்து தப்பவேண்டுமென்றால் இந்தியாவில் திருமணம் செய்யாமல் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். அதுதான் உங்களது எதிர்கால நல்வாழ்விற்கு நன்மையளிக்கும்.



Saturday, April 10, 2010

ஈமக்கிரியையும் இந்தியத் திருமணமும்

LUCKNOW: Former state government employee and a resident of the Old City, Pandit Ram Shankar performed a shraadh ceremony on Friday that was 'different'. Shankar performed the ceremony for the 'departed soul' of Akhil Dubey, a Lucknow-based pharma executive. But here's the catch. Dubey, alive and kicking, was part of the ceremony. As for why he felt the need for performing the 'shraadh' — Dubey was commemorating his 'death' as a common man, on the same day, exactly one year ago.

Here's what prompted such extreme action. After tying the knot on November 2008, Dubey alleges that he discovered that his wife was already married and also had a child. Shocked on making the discovery, he attempted to "resolve" the issue but met with little success.

"Two months later, when I moved divorce proceedings against her, she slapped a case of dowry harassment against me under section 498 A of the Indian Penal Code," says Dubey. Under this section, on April 9, 2009, an FIR was registered against Dubey. "That day marked my death as a common man. In the eyes of the world, I became branded as a criminal," adds Dubey.

And to commemorate his 'criminal status' one year on, the 'shraadh' ceremony respectfully remembered Dubey for the 'decent and common man' that he used to be.

As for the sanctity of such religious rites, Shankar defends the act saying the Indian scriptures allow a living person to perform his 'shraadh'. "The 'Garud Puran' allows people to do their own 'pind daan' while they are alive. Especially those who do not have children and cannot perform the rites after their death. Similarly, the ceremonies for the 10th and 13th day can also be performed in advance," says Pandit Ram Shankar.

The unique event was organised by a Lucknow-based NGO, Pati Parivar Kalyan Samiti (PPKS), a group of "afflicted" husbands who have been protesting the misuse of section 498 A of the IPC by women.

According to this section of the IPC, if the husband or his relative subjects a woman to cruelty, he shall be punished with imprisonment for a term which may extend to three years and is also liable to pay a fine. The offence is cognizable, non-compoundable and non-bailable. Interestingly, the protest against the misuse of the law by women has been gaining ground across the country. Seeking to be absolved from the status of 'criminals' and to voice their protest, over 2,000 members of PPKS Lucknow, routinely, bail out other aggrieved husbands and also instruct them on how to get out of the procedural tangles involved in the issue.

=============
இளைஞர்களே இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு உங்கள் தலையில் நீங்களே கொள்ளி வைத்துக்கொள்ளாதீர்கள். இந்தக்கால இந்து திருமண சடங்குகளில் எரியும் அக்கினி நீங்களே உங்கள் தலையில் அள்ளிப்போட்டுக்கொள்ளும் நெருப்பிற்கு சமம். அது தான் இன்றைய திருமண, வரதட்சணை தடுப்புச்சட்டங்கள் சொல்லும் புதிய அர்த்தம்! இந்த அர்த்தங்களைப் புரிந்துகொண்டால் தப்பிக்கலாம்.

இந்திய தகனமேடையிலிருந்து தப்பித்த தமிழக இளைஞர்


இந்தியத் திருமணம் என்ற தகனமேடையிலிருந்து தப்பித்த இந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள்.

யாரும் யாரோடுவேண்டுமானாலும் கூடி வாழலாம், திருமணம் என்பது அவசியமில்லை என்று சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் சொல்லிய கருத்திற்கு நெத்தியடி கொடுப்பது போல இந்த செர்பிய நாட்டுப் பெண் கூறியுள்ள இந்த அர்த்தமுள்ள கருத்தை பொய் வழக்குப்போடும் மனைவிமார்களும் அவர்களுக்குப் பின்னால் குடைபிடிக்கும் கூட்டங்களும் படித்து புத்தியில் ஏற்றிக்கொள்ளவேண்டும்.
''தாலி என்பது கயிறாக இருந்தாலும், அதை கழுத்தில் போட்ட பிறகு, அந்த கணவரை நினைத்து கடைசி வரை வாழும் முறை, என்னை மிகவும் கவர்ந்தது. ஒற்றுமையின் அடையாளம் சொல்லும் தாலியை கட்டி தான், எனது திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வந்தோம். இந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது,'' என்றார்.

ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் 'தாலி' : தமிழரை மணந்த 'செர்பிய' பெண் பெருமிதம்

தினமலர் ஏப்ரல் 10, 2010
Tamilnadu special news update

ராமநாதபுரம்: ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும், 'தாலி' கட்டும் முறைக்காக தமிழரை மணப்பதாக, 'செர்பிய' நாட்டு பெண் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், மன்னார்குடி, மேல நத்தத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (24). கேட்டரிங் டெக்னாலஜி முடித்த இவர், கோவா ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். லண்டனில் எம்.பி.ஏ., படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. லண்டன் சென்ற அவருக்கு, வகுப்பு தோழியாக 'செர்பிய' நாட்டை சேர்ந்த மெரியா அர்ஜினா (22) என்பவர் அறிமுகமானார். இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. சந்திக்கும் போதெல்லாம், தமிழகத்தின் திருமண முறை பற்றியும், சடங்குகள் குறித்தும், மெரியா அர்ஜினாவுக்கு பிரபாகரன் விளக்கியுள்ளார். இதை கேட்டு வியப்படைந்த அர்ஜினா, தங்கள் திருமணமும் இந்து முறைப்படி நடக்க வேண்டும் என, விருப்பம் தெரிவித்தார்.

இதன்படி, பிரபாகரன் 20 நாட்கள் விடுமுறையில், அவரை அழைத்து கொண்டு தமிழகம் வந்தார். பெற்றோரிடம் தனது திருமணம் குறித்து தெரிவித்தார். மூத்த சகோதரருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இவர்களது திருமணத்தை ஏற்க மறுத்தனர். '20 நாட்களுக்கு மட்டுமே விசா இருப்பதால், மற்றொரு முறை வர வாய்ப்பில்லை' என, பிரபாகரன் மன்றாடினார். வேறு இடம் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு, பெற்றோர் தெரிவித்தனர்.

கோவாவில் பழகிய, ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரை தொடர்பு கொண்டு விபரங்களை கூறினார். அவரது ஏற்பாட்டில், ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் நேற்று இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.

மணப்பெண் மெரியா அர்ஜினா கூறுகையில், ''தாலி என்பது கயிறாக இருந்தாலும், அதை கழுத்தில் போட்ட பிறகு, அந்த கணவரை நினைத்து கடைசி வரை வாழும் முறை, என்னை மிகவும் கவர்ந்தது. ஒற்றுமையின் அடையாளம் சொல்லும் தாலியை கட்டி தான், எனது திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் வந்தோம். இந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது,'' என்றார்.




Monday, April 5, 2010

தானாக வந்தார் தகனமேடையில் வீழ்ந்தார்

இந்தியாவில் இருக்கும் திருமண தகனமேடையின் அருமை தெரியாமல் இந்த வெளிநாட்டு இளைஞர் வந்தார். இப்போது IPC498A என்ற தகனமேடையில் வீழ்ந்தார். இனி யார் இவரைக் காப்பாற்றப்போகிறார்களோ?

இந்தியாவில் மட்டும் தான் இந்த உலக அதிசயம் நடக்கும். வெளிநாட்டில் வாழும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற பெண்களும் இந்தியாவில் இருக்கும் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி இந்தியரை துன்புறுத்தலாம். இந்தியாவில் இருக்கும் பெண்களும் வெளிநாட்டு பிரஜை மீது இந்த சட்டத்தைப் பயன்படுத்தலாம்.


இந்த அரிய நிகழ்ச்சி நடைபெற இளம் பெண், போலிஸ், நீதிமன்றம் என்ற இந்த கூட்டணி இருந்தால் போதும். நீதி, தர்மம், உண்மை என்ற விஷயங்கள் தேவையில்லை.


========================================

Monday, 05 April 2010

இப்படியும் நடக்குமா ? மாலிக் சொல்லும் ஆயிஷா கதை.
ஹைதராபாதைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்குடன் நடந்த திருமணம் செல்லாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் தெரிவித்தார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸôவுக்கும், ஷோயப் மாலிக்குக்கும் வரும் 15-ம் தேதி ஹைதராபாதில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஆயிஷா சித்திக் என்பவர், ஷோயப் தன்னை ஏற்கெனவே திருமணம் செய்துகொண்டு விட்டார் என்றும் அதற்கான சான்றிதழையும் அவர் வெளியிட்டார். இதனால் ஷோயப்-சானியா திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஷோயப் தன்னை விவாகரத்து செய்தால் போதும் என்றும் இல்லாவிட்டால் ஷோயப் மீது வழக்குத் தொடருவேன் என்றும் ஆயிஷா கூறி வருகிறார்.

இதனிடையே சனிக்கிழமை ஹைதராபாதுக்கு ஷோயப் மாலிக் வந்தார். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள சானியா வீட்டில் நிருபர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் பேட்டி அளித்தார். முன்னதாக அவர் 2 பக்க அறிக்கையையும் வெளியிட்டார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது,

ஆயிஷாவுடன் எனக்குத் நடந்த திருமணம் செல்லுபடியாகாது. ஆயிஷா குடும்பத்தார் என்னை ஏமாற்றுவதற்காக ஆயிஷாவை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினர். ஆயிஷாவை நான் இதுவரை சந்தித்ததே இல்லை.

2001-ல் நான் துபையில் இருந்தபோது போனில் ஒரு பெண், தன்னை என்னுடைய ரசிகை என்றும் ஹைதராபாதைச் சேர்ந்தவள் என்றும் செüதி அரேபியாவில் வசித்துவருவதாகவும் கூறிக் கொண்டு அறிமுகமானார். அவரது பெயர் ஆயிஷா. அடிக்கடி நாங்கள் போனில் பேசிக் கொண்டோம். நான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று கூறும்போது எனக்கு மெயிலில் புகைப்படங்களை அனுப்புவார். நான் போனில் பேசிய பெண்ணின் புகைப்படம் தான் அது என்று நம்பினேன்.

அவரைச் சந்திப்பதற்காக 2002-ல் நான் ஹைதராபாத் வந்தேன். அப்போது போனில் என்னுடன் பேசிய ஆயிஷா, தான் அவசரமாக செüதி அரேபியா செல்வதாகவும், தன்னுடைய சகோதரிகள் ரீமா, மஹாபா ஆகியோர் ஹைதராபாத் நகரை எனக்கு சுற்றிக் காண்பிப்பார்கள் என்றார்.

அவரைச் சந்திக்க மட்டுமே நான் வந்தேன். 5 நாட்கள் தங்கியிருந்தும் அவரைப் பார்க்க முடியவில்லை. பின்னர் ஆயிஷாவின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவள் தற்போது மிகவும் குண்டாகிவிட்டாள். அதனால் தான் உங்களைப் பார்க்க மறுக்கிறாள் என்று தெரிவித்தனர். எனக்கு அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்தபோது அவள் குண்டாக இல்லையே என்று நான் கூறியபோது அந்த புகைப்படங்கள் பழையவை என்று கூறினர்.

இதைத் தொடர்ந்து நான் பாகிஸ்தான் சென்றுவிட்டேன். சில மாதம் கழித்து எனக்கு ஆயிஷா போன் செய்தார். ஹைதராபாத் நகரம் முழுவதும் நம்முடைய காதல் பற்றிய பேச்சாக இருக்கிறது. நான் பாதுகாப்பற்றவளாக உணர்கிறேன். இதனால் என்னுடைய பெற்றோர் முன்பு தலைகுனிந்து நிற்கிறேன். திருமணம் தான் இதற்கு ஒரே வழி என்று ஆயிஷா போனில் தெரிவித்தார்.

இதனால் நாம் தொலைபேசி வழியாக திருமணம் செய்துகொள்வோம் என்று கூறினார். இதைத் தொடர்ந்தே நான் தொலைபேசி திருமணத்துக்கு ஒப்புக் கொண்டேன். 2002-ல் ஹைதராபாதுக்கு வந்து என்னுடைய நண்பரின் கடையிலிருந்து தொலைபேசியில் ஆயிஷாவை அழைத்தேன். ÷அப்போது இ-மெயிலில் பார்த்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக எண்ணி திருமணச் சான்றிதழில் கையெழுத்திட்டேன்.

இவ்வாறு செய்ய எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. இதுதொடர்பாக எனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. உணர்ச்சிகரமான விஷயத்தால் நான் இதைச் செய்யுமாறு ஆயிஷாவால் வற்புறுத்தப்பட்டேன்.

மொத்தத்தில் ஆயிஷாவால் ஏமாற்றப்பட்டேன். ஆனால் எனக்கு இ-மெயில் அனுப்பப்பட்ட புகைப்படத்தில் இருந்த பெண்ணை நான் பார்த்ததே இல்லை. ஆனால் இப்போது ஆயிஷா என்று கூறிக் கொள்ளும் பெண்ணை பல முறை சந்தித்துள்ளேன். அவர் அப்போது என்னிடம் நான் ஆயிஷாவின் மூத்த சகோதரி மஹாபா என்று தன்னை அறிமுகம்செய்து கொண்டார்.

ஆனால் தற்செயலாகத்தான் எனக்கு ஆயிஷாவும், மஹாபாவும் ஒரே பெண்தான் என்பது தெரியவந்தது. இவ்வளவு தூரம் ஒரு பெண்ணின் குடும்பத்தாரால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையின் மோசமான காலங்கள் அவை. ஒருவர் தான் முட்டாளாக்கப்படுவதை எப்போதும் விரும்புவதில்லை.

இத்தனை ஆண்டு காலமாக என்னை முட்டாளாக்கிய மஹாபாவைச் சந்தித்து என்னுடைய கோபத்தைத் தெரிவித்தேன். அதன்பிறகு அவரைச் சந்திக்கவே நான் விரும்பவில்லை. அந்த நேரத்தில் யாரையும் நம்பக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பத்திரிகைகளிலும், டி.வி.களிலும் வந்துள்ள தவறான செய்திகளுக்கு விளக்கமளிக்கவே பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன்.

என்னை ஏமாற்றித் திருமணம் செய்தவர்கள் இப்போது விவாகரத்து கேட்கின்றனர். மோசடி செய்யும் எண்ணத்தில்தான் திருமணத்துக்கு என்னை வற்புறுத்தினர். இஸ்லாம் சட்டப்படி திருமணம் உண்மையானதாக இருந்தால்தான், விவாகரத்து செய்ய முடியும். திருமணமே உண்மையானதாக இல்லாதபோது நான் விவாகரத்து செய்யமாட்டேன்.

என்னுடைய நிலையை நான் விளக்கமாகச் சொல்லிவிட்டேன். விரைவில் சானியாவைத் திருமணம் செய்துகொள்வேன். இந்த உண்மைகள் அனைத்தும் சானியாவுக்குத் தெரியும். அவர் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்.

நான் இங்கு சானியாவைத் திருமணம் செய்யவே வந்துள்ளேன். ஆயிஷா விவகாரத்தில் சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை என்னுடைய வழக்கறிஞர் பார்த்துக் கொள்வார்.

எனக்கு இ-மெயில் வந்த பெண்ணின் புகைப்படங்களை வெளியிடலாம் என நினைத்தேன். ஆனால் அதைச் செய்யவில்லை.

இந்த மோசடித் திருமணம் தொடர்பாக 2008-ம் ஆண்டில் ஆயிஷா சித்திக்கின் தந்தைக்கு எனது வழக்கறிஞர் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதன் பின்னர் என்மீதான குற்றச்சாட்டுகளை ஆயிஷா நிறுத்தினார். சானியாவுடன் எனக்குத் திருமணம் என்றதும் மீண்டும் பிரச்னையை எழுப்பியிருக்கிறார்.

திருமணத்துக்குப் பின்னர் சானியா விளையாட விரும்பினால் விளையாடட்டும். இதுவரை அவர் இந்தியாவுக்காக விளையாடி வந்தார். இனியும் இந்தியாவுக்காக விளையாடுவார் என்றார் அவர்.

இதனிடையே மாலிக்-ஆயிஷா சித்திக் இடையேயான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் வெங்கண்ணா சாமுண்டேஸ்வரநாத் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சானியா வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சாமுண்டேஸ்வரநாத், ஷோயபுடன் பேசிவிட்டுச் சென்றுள்ளார். அவர் ஆயிஷாவின் குடும்பத்தாரைச் சந்தித்துப் பேசி பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு ஷோயப் செல்லவுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லாத ஒருவரை திருமணம் செய்யவேண்டுமானால் தூதரகத்திலிருந்து இஜாஜத்நாமா என்ற சான்றிதழைப் பெறவேண்டும்.

இந்த சான்றிதழைப் பெறுவதற்காக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாகித் மாலிக்கை, ஷோயப் சந்திக்கவுள்ளார்.

========================================

மேலுள்ள செய்தி இப்படியிருக்க நம்ம ஊர் போலிஸ் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வழக்குப் பதிவு செய்துவிட்டார்கள். அதுதான் 498A கேசுகளின் சிறப்பம்சம்.


இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை: 498A வழக்குகளைப் பொறுத்தவரை குற்றவாளியோ, ஆதாரங்களோ தேவையில்லை. புகார் கொடுக்க ஒரு இளம் பெண்ணும் அதைப் பதிவு செய்ய ஒரு போலிஸூம், குற்றம் சாட்டப்பட ஒரு அப்பாவியும் போதும். பொய் குற்றச்சாட்டை சுமப்பதற்காகத்தான் இன்றைய இந்திய இளைஞர்கள் திருமணம் என்ற தகனமேடைக்குச் செல்கிறார்கள். இந்த உண்மையை புரிந்துகொண்டால் இந்த சட்ட தீவிரவாதத்திற்கு பலியாகமல் தப்பிக்கலாம்.

========================================