பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, June 28, 2012

முதலிரவில் சொல்லவேண்டிய காதல் கதை

இளைஞர்களே இந்தியாவில் இருக்கும் வினோதமான சட்ட நடைமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.


ராமநாதபுரம் : முதலிரவில் கணவரிடம், காதலித்து கர்ப்பமாக இருப்பதை கூறிய மனைவி, ராமநாதபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காதலனை கைப்பிடித்தார்.

ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டையை சேர்ந்த பாண்டி மகள் உமா மகேஷ்வரி, 22. ராமநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பட்டதாரி கார்த்திக் ராஜா,27. இருவரும் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்தனர். இதில், உமா மகேஷ்வரி மூன்று மாதம் கர்ப்பமானார். இதையறியாத உமா மகேஷ்வரியின் பெற்றோர், சாயல்குடி முனியசாமி என்பவருக்கு, கடந்த மாதம் 23ம் தேதி திருமணம் செய்து வைத்தனர்.

முதலிரவில், "தான் ஏற்கனவே ஒருவரை காதலித்து கர்ப்பமாக உள்ளதாக' கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து முனியசாமி, ஊர் பெரியவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உமாமகேஷ்வரியை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

இதன்பின், ராமநாதபுரம் மகளிர் போலீசில் உமா மகேஷ்வரி புகாரின்படி, காதலன் கார்த்திக் ராஜா மற்றும் அவரது பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்மதம் பெற்றார். போலீஸ் ஸ்டேஷன் வாசலில் உள்ள பிள்ளையார் கோவிலில், இன்ஸ்பெக்டர் மீனாம்பாள் தலைமையில், உமா மகேஷ்வரிக்கும், கார்த்திக் ராஜாவுக்கும், நேற்று முன்தினம் இரவு திருமணம் நடந்தது.

=======

  • காதல் புரிந்து கர்பவதியான மகளை ஒரு அப்பாவி இளைஞனை ஏமாற்றி திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் பெண்ணை பெற்றவர்கள். முதலிரவில் பெண் உண்மையை சொன்னதும் காவல்நிலையத்தில் பெண்ணை காதலனுடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

  • மணமகனை ஏமாற்றிய பெண்ணின் பெற்றோருக்கு தண்டனை இல்லை. மணமகனின் பெற்றோர் பெண்ணின் குடும்பத்தை ஏமாற்றி திருமணம் செய்தால் மட்டும்தான் தண்டனையா? பெண்ணை பெற்றவர்கள் ஏமாற்றினால் தண்டனை கிடையாதா?

  • சட்டப்படி “மேஜரான” பெண்ணின் விருப்பத்திற்கெதிராக அதுவும் ஒரு கர்பவதியை கட்டாயப்படுத்தி வேறு ஒரு ஆணுக்கு திருமணம் செய்த பெண்ணின் பெற்றோர் குற்றவாளி கிடையாதா? பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எங்கே போனது?

  • முறைப்படி நடந்த திருமணத்தை சட்டப்படியாக ரத்து செய்யாமல் காவல் நிலையத்தில் திருமணத்தை ரத்து செய்து வேறு ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இந்திய திருமண சட்டங்கள் வெறும் வெற்றுச் சட்டங்களா? நீதிமன்றங்கள் வெட்டி மன்றங்களா?

  • இவையெல்லாம் அப்படியே தலைகீழாக நடந்து ஏதோ ஒரு காரணத்தால் மணமகன் திருமணத்தை நிறுத்தியிருந்தால் உடனடியாக மணமகனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் மீதும் பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்திருப்பார்கள்.

  • காவல் நிலைய தெய்வங்கள் கண்ணை மூடிக்கொண்டு மணமகனின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கைது செய்திருப்பார்கள்.

  • நீதிமன்றம் பெண்ணுக்கு நீதி வழங்காமல் ஓய மாட்டோம் என்று வரதட்சணை சட்டங்களை பக்கம் பக்கமாக புரட்டிக்கொண்டிருக்கும்.

இதுதான் இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்கள். இந்தியத் திருமணம் என்ற தகனமேடையில் சிக்கினால் அப்பாவி இளைஞர்களின் வாழ்வு நாசமாவது உறுதி.

Monday, June 18, 2012

ஐயோ பாவம் எத்தனை பேர் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கப் போகிறார்களோ!

தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக 1006 ஜோடிகளுக்கு நடந்த திருமணத்தில் எத்தனை அப்பாவி ஆண்கள் பொய் வரதட்சணை வழக்கில் (IPC498A) சிக்கப்போகிறார்களோ! நல்லா வாழப்போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள். வழக்கில் சிக்கப் போகிறவர்களுக்கு அனுதாபங்கள்.

வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி சீர்வரிசை பொருட்களை பட்டியலிட்டு மணமகன், மணமகள் இரு தரப்பினரும் கையொப்பமிட்டு பாதுகாக்க வேண்டும். திருமண பதிவு விண்ணப்பத்தில் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ இல்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் இந்த திருமணத்தில் நடக்குமா?

இவையெல்லாம் இருந்தாலும் மருமகள் தொடுக்கும் பொய் வரதட்சணை வழக்கை யாராலும் தடுக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் திருமணம் செய்யும் ஆணுக்கு என்றாவது ஒருநாள் சிறைவாசம் கண்டிப்பாக உண்டு என்பது எழுதப்படாத சட்டம்.

சென்னை: சென்னை திருவேற்காட்டில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார். இன்று காலை கோலாகலமாக நடக்கவிருக்கும் திருமண ஏற்பாட்டை அறநிலையத்துறை செய்துள்ளது. இலவச திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த ‌ஜோடிகள் வந்துள்ளனர். திருமணத்தையொட்டி ரூ. 4.5 ‌கோடி செலவில் சீர்வரிசை பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக கோயில் முன்பு ஹோமம் வளர்த்து திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Friday, June 15, 2012

திருவண்ணாமலை இளைஞர் உக்ரேனிய நாட்டில் சாதனை

இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்களின் வாழ்வு சிறைச்சாலையில்தான் சென்று முடியும் என்ற ஆபத்தான நிலை இருக்கும் இந்த கால கட்டத்தில் பல தமிழக இளைஞர்கள் புத்திசாலித்தனமாக வேறு நாட்டு பெண்களை மணந்து நல்வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.

இந்தியாவில் திருமணம் செய்யும் பல இளைஞர்களை பொய் வரதட்சணை வழக்கு மூலம் அரசாங்கம் தண்டித்து வருகிறது என்பது உலகறிந்த உண்மை. இந்த உண்மையை அறிந்துகொண்ட இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த 2010ல் பொய் வரதட்சணை வழக்கு மூலம் அப்பாவிகளின் வாழ்வை நாசமாக்குவதை அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அறிக்கை அனுப்பியது.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPEAL NO. 1512 OF 2010
(Arising out of SLP (Crl.) No.4684 of 2009)
Preeti Gupta & Another …Appellants
Versus

State of Jharkhand & Another ….Respondents
J U D G M E N T
Dalveer Bhandari, J.


34. Before parting with this case, we would like to observe that a serious relook of the entire provision is warranted by the legislation. It is also a matter of common knowledge that exaggerated versions of the incident are reflected in a large number of complaints. The tendency of over implication is also reflected in a very large number of cases.

35. The criminal trials lead to immense sufferings for all concerned. Even ultimate acquittal in the trial may also not
be able to wipe out the deep scars of suffering of ignominy. Unfortunately a large number of these complaints have not only flooded the courts but also have led to enormous social unrest affecting peace, harmony and happiness of the society. It is high time that the legislature must take into consideration the pragmatic realities and make suitable changes in the existing law. It is imperative for the legislature to take into consideration the informed public opinion and the pragmatic realities in consideration and make necessary changes in the relevant provisions of law. We direct the Registry to send a copy of this judgment to the Law Commission and to the Union Law Secretary, Government of India who may place it before the Hon’ble Minister for Law & Justice to take appropriate steps in the larger interest of the society.


வழக்கம் போல இந்த அறிக்கையை வாங்கி குப்பையில் போட்டுவிட்டு விவாகரத்து கோரும் பெண்ணுக்கு கணவனின் சொத்தில் பாதி பங்கு கொடுக்க வேண்டும் என்றும், மனைவி விவாகரத்து கோரினால் கணவனால் அதை எதிர்க்க முடியாத வகையில் புதிய சட்டத்தை அவசர அவசரமாக இயற்றி மேலும் பல பொய் வழக்குகள் உருவாக உதவி செய்திருக்கிறது.

இதுபோன்ற சமயத்தில் ஆபத்தான இந்திய திருமண புதைகுழியில் சிக்காமல் புத்திசாலித்தனமாக உக்ரேனிய நாட்டுப் பெண்ணை மணந்து இந்தியாவில் வரவிருந்த பொய் வரதட்சணை வழக்கிலிருந்து தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றியிருக்கிறார் இந்த இளைஞர். அவருக்கு வாழ்த்துக்கள்!!!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பெண்ணை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி, இந்து முறைப்படி, திருமணம் செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை சேர்ந்தவர் சம்பத். இவர் மகன், இன்ஜினியரிங் பட்டதாரி, தினேஷ். இவர், கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைன் நாட்டில், வங்கியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திர சாப்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இதே வங்கியில், உக்ரைனை சேர்ந்த ஸ்வெட்லானா இசெங்கோ பணிபுரிந்து வருகிறார். இவரை, தினேஷ் காதலித்து வந்தார்.

இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன், ரஷ்ய தூதரகம் மற்றும் இந்திய தூதரகத்தின் அனுமதி பெற்று, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, அனுமதி பெற்றனர்.

இருவரும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மேல், தீவிர பக்தி கொண்டதில், திருவண்ணாமலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று காலை, கிரிவலப் பாதையில் உள்ள ஓட்டலில், இந்து முறைப்படி, வேத மந்திரம் முழங்க, ஸ்வெட்லானா இசெங்கோ கழுத்தில், தினேஷ் தாலி கட்டினார். இருவரையும், இரு வீட்டு உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்தினர். மணமக்கள், அருணாசலேஸ்வரர் கோவிலிலில் சாமி தரிசனம் செய்தனர்.