பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, December 29, 2011

ஒருதலைபட்சமான இந்திய குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்திற்கு மாற்று வழி கண்டுபிடித்த கணவர்

இந்திய குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்-2005ல் வரையறை செய்துள்ளபடி மனைவி மட்டுமே கணவனின் வன்முறைக்குள்ளாகும் அப்பாவி என்றும் மனைவி மட்டுமே இந்த சட்டத்தின் மூலம் கணவன் மீது புகார் கொடுக்க முடியும் என்றும் பக்குவமாக எழுதியிருக்கிறார்கள்.

தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »சொல்கிறார்கள் >> அக்டோபர் 24,2011


குடும்ப வன்முறையிலிருந்து மீள வழி கூறும் வழக்கறிஞர் அஜிதா:

"குடும்பம் வேண்டும்; வன்முறை வேண்டாம்' என்று சொல்லும் பெண்களுக்காக, இது ஒரு சிவில் சட்டமாக போடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தில் ஒருவர் மீது புகார் கொடுத்தால், அவர்களைக் கைது செய்வதோ, சிறையில் அடைப்பதோ இல்லை. மாறாக, பாதுகாப்பு அதிகாரி என்ற ஒருவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிப்பர். இவர்களிடம் நேரடியாக புகார் தரலாம்.புகார் தரும் போது, பாதிக்கப்பட்ட பெண் என்றில்லை, அவர் சார்பாக, வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் தரலாம். ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.

ஒரு வீட்டில் வன்முறைக்கு யார் காரணமோ, அந்த ஆணுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, அதன் பின் அவரை யாராவது தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண் மீதும் புகார் தரலாம். புகாரைப் பெற்றுக் கொண்டவுடன், சம்பந்தப்பட்டவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி, பேசச் சொல்வார்கள். அதனடிப்படையில், கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

எதற்குமே கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு எதிராகத் தான் இந்தச் சட்டம். புகார் மீதான ஆரம்பக் கட்ட நடவடிக்கையின் போதே, சிலர் "பிரச்னை செய்ய மாட்டேன்' என்று சொல்லி வீட்டிற்கு வருவர். வந்த பின், பழையபடி பிரச்னையை ஆரம்பிக்கலாம் என்பதால், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொள்வர். இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
=====

ஆனால் மனைவியின் வன்முறைக்கு பலியாகும் கணவன்களுக்கு பாதுகாப்பு அளிக்க எந்தவித சட்டங்களும் இல்லை. மனைவியின் வன்முறையை தாளமுடியாத கணவன்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தால் ஏளனப் பேச்சுக்களும், அலைக்கழிப்புகளும் மட்டுமே மிஞ்சும். இதுதான் பல ஆண்டுகளாக இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் நடைமுறை. இதனை “உன்னைப் போல் ஒருவன்” திரைப்படத்தில் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனாலும் இந்த அவலமான சூழ்நிலை பற்றி எந்த ஒரு இந்திய ஆணும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.



அதனால் இந்தியாவில் கணவனை பழிவாங்கவும், பணம் பறிக்கவும் நினைக்கும் மனைவியர் குடும்பவன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்றவற்றை பக்குவமாகப் பயன்படுத்தி காவல் மற்றும் நீதித்துறைகளின் உதவியோடு தன் இஷ்டம்போல பொய்யான புகார்களை பதிவு செய்து கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையே சீரழித்து வருகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

இதுபோன்று மனைவியின் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட கணவர் காவல்துறையின் உதவியை நாடி அவமானப்பட்டு மனம் நொந்து வேறு வழியை நாடியிருக்கிறார். அந்த செய்தியை பின்வரும் இணைப்பில் காணலாம்.

மேலுள்ள வீடியோவை பார்த்துவிட்டு, இந்திய குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை ஒரு முறை படித்துவிட்டு பிறகு பின்வரும் செய்தியையும் படித்துப் பாருங்கள். யார் குற்றவாளி என்று புரியும்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு குண்டு மிரட்டல்: கண் பார்வையற்றவர் சென்னையில் "கைது'

டிசம்பர் 29,2011 தினமலர்

தஞ்சாவூர்: தன்னை அலையவிட்ட போலீசாரை அலைக்கழிக்க, தஞ்சை பெரிய கோவிலுக்கு, நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, சென்னையைச் சேர்ந்த கண் பார்வையற்ற சங்கர் என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்துக்கு, நேற்று முன்தினம் இரவு, 11.30 மணிக்கு பேசிய மர்ம நபர், "தஞ்சாவூர் பெரிய கோவிலில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் குண்டு வெடிக்கும். முடிந்தால் வெடிகுண்டை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்' என்று கூறி, இணைப்பை துண்டித்து விட்டார். உடனடியாக, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து, தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தஞ்சாவூர் டவுன் டி.எஸ்.பி., ஜோஸ் தங்கையா தலைமையில் போலீசார், பெரிய கோவிலில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீசார், அங்குலம் அங்குலமாக, கோவிலில் சோதனை செய்தனர். திருவாரூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. சென்னை போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் மொபைல் எண்ணை வைத்து, அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சென்னை, வியாசர்பாடியில் அவர் இருக்கிறார் என்றும், அவர் பெயர் சங்கர் என்பதையும் அறிந்த போலீசார், நள்ளிரவு, 2.30 மணிக்கு, அவரை கண்டறிந்து, கைது செய்தனர்.

சங்கரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது:

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த பாபு மகன், சங்கர், 36; கண் பார்வையற்றவர். இவருக்கும், இவர் மனைவிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும். சில நாட்களுக்கு முன், மனைவி தன்னை தாக்கியதாக, வியாசர்பாடி போலீசாரிடம் சங்கர் புகார் கொடுத்ததாகவும், அதை ஏற்க மறுத்த போலீசார், அவரை அடிக்கடி அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சங்கர், தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, போலீசாரை அலைக்கழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்தச் செயலில் ஈடுபட்டார். இவ்வாறு விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நடவடிக்கை என்ன? சங்கர் பார்வையற்றவர்; கைது செய்யும் பணியை மேற்கொள்ள முடியாது என்பதால், கொடுங்கையூர் காவல் நிலையத்தில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.




Monday, November 14, 2011

சிவப்புக் கம்பள வரவேற்பில் தலைவர்களுக்கு கிடைப்பது என்ன?

புதுடில்லி:பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை மீண்டும் அவமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தில், [...]
=====

மேலுள்ள செய்திக்கு தொடர்புடைய முந்தைய பதிவு... .... .... ...

இந்தியாவில் திருமணம் செய்வது மூலம் தங்கள் சொந்த நாட்டிலேயே எவ்வளவு துன்பங்கள் காத்திருக்கின்றன என்ற போதிய விழிப்புணர்ச்சி இல்லாமல் பல இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகள் இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து தங்களின் குடிமக்களை இந்திய திருமண அபாயத்திலிருந்து பாதுகாப்பதை தலையாய கடமையாக செய்கின்றன.

உதாரணத்திற்கு கனடா நாட்டு அரசாங்கம் தங்களுடைய இணைய தளத்தில் இந்தியாவிற்கு சுற்றுலா செல்ல நினைக்கும் அல்லது திருமணம் செய்யவிரும்பும் தங்களது நாட்டு குடிமக்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பல அரிய உண்மைகள் சொல்லப்பட்டிருக்கிறது இந்த இணைய தளத்தில். அதில் இளைஞர்களுக்குத்தேவையான பகுதியை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன். படித்துப்பாருங்கள்.

=============================================================
Foreign Affairs and International Trade Canada

Travel Report
India


8. LAWS AND CUSTOMS

Growing numbers of Canadian citizens have been caught up in marital fraud and dowry abuse in India. Most cases involve misuse of India’s Dowry Prohibition Act. This law, which was enacted to protect women and makes demanding a dowry a crime, is sometimes used to blackmail men through false allegations of dowry extortion. Individuals facing charges may be forced to remain in India until their cases have been settled or pay off their spouses in exchange for the dismissal of charges. To avoid such problems, you are advised to register your marriage in India along with a joint declaration of gifts exchanged, as well as consider a prenuptial agreement.

============================================================

இந்த நாடு மட்டுமல்ல நம்ம நாட்டுத் தலைவர்களும், நீதிபதிகளும் சுற்றுப்பயணம் என்ற பெயரில் பலமுறை சென்று சிவப்புக் கம்பளத்தில் மரியாதை பெற்றுக்கொள்ளும் நாடான அமெரிக்கா ஒருபடி மேலே சென்று இந்தியாவில் பொய் கேசுகளுக்காக போலிஸ் யாரைவேண்டுமானாலும் கைதுசெய்வார்கள் என்று அருமை பெருமைகளைச் சொல்லி இந்தியா செல்ல விரும்பும் தங்கள் நாட்டுக் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அறிவுரை சொல்லியிருக்கிறது.

அந்த இணைய தளத்தில் உள்ள அந்த அறிவிப்பின் ஒரு பகுதியை இங்கே காணுங்கள்.

============================================================
U.S. Department of State
International Travel Information

India
Country Specific Information

CRIMINAL PENALTIES:

Furthermore, since the police may arrest anyone who is accused of committing a crime (even if the allegation is frivolous in nature) , the Indian criminal justice system is often used to escalate personal disagreements into criminal charges. This practice has been increasingly exploited by dissatisfied business partners, contractors, estranged spouses, or other persons with whom the U.S. citizen has a disagreement, occasionally resulting in the jailing of U.S. citizens pending resolution of their disputes. At the very least, such circumstances can delay the U.S. citizen's timely departure from India, and may result in an unintended long-term stay in the country. Corruption in India, especially at local levels, is a concern, as evidenced by Transparency International’s Corruption Perception Index of 2008, ranking India in 85th place among the world’s 180 countries.
===============================================================


இதற்குப் பெயர் தான் சிவப்புக்கம்பளத்தில் உட்காரவைத்து செருப்படி கொடுப்பது. தேசப்பற்றுமிக்கத் தலைவர்கள் இதுவரை யாரும் இதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இது பொய்யான தகவலாக இருந்தால் இதற்கு மறுப்பு தெரிவித்து இந்த செய்திகளை அந்த அரசாங்கத்தின் இணைய தளங்களிலிருந்து அகற்றியிருக்கவேண்டும். அல்லது உண்மையான தகவலாக இருந்தால் இந்த அவமானத்தைப் போக்க நாட்டில் சீர்திருத்தங்களை செய்திருக்கவேண்டும். இந்த இரண்டும் இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை.

இந்த வெளிநாட்டு அரசாங்க இணைய தளங்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகளால் ஒவ்வொரு இந்தியனுக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்பதை யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிவப்புக்கம்பள பெருமை என்பது ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு மட்டும்தான். ஆனால் இந்த இணைய தளங்களில் சொல்லப்பட்டுள்ள அவமானம் என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் போய் சேரும் விஷயம். யாராவது இதைப்பற்றி கவலைப்பட்டார்களா?

அதனால் இளைஞர்களே, தவறான சட்டப்பயன்பாடுகள் மூலம் நீங்கள் அடையும் துன்பங்களிலிருந்து உங்களைக்காப்பாற்றவேண்டும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள். இனியாவது நீங்கள் விழித்துகொண்டால் தான் பெரிய ஆபத்திலிருந்து நீங்கள் தப்ப முடியும்.

“நாடு உனக்கு என்ன செய்தது என்பதை விட நாட்டிற்கு நீ என்ன செய்தாய்” என்று எண்ணவேண்டும் என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார். ஆனால் இந்தக்காலத்தில் இளைஞர்கள் எப்படி சிந்திக்கவேண்டுமென்றால் “நாட்டிற்கு நீ எதுவும் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை, பெண்கள் ஆதரவுச்சட்டங்கள் என்ற பெயரில் நாடு உனக்கு செய்யப்போகும் தீமைகளிலிருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள். அதுவே நீ நாட்டிற்கும் உனது வீட்டிற்கும் செய்யும் மிகப்பெரிய சேவையாகும். ” அதற்கு ஒரே வழி உங்கள் திருமணத்தைப் பற்றி நீங்கள் எடுக்கப்போகும் முடிவுதான்.
இளைஞர்களே சிந்தியுங்கள். நீங்கள் எந்தவகையான நன்மையை நாட்டிற்கு செய்யப்போகிறீர்கள்.

தவறான வரதட்சணை தடுப்புச் சட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் மூலம் அப்பாவிகள் பலியாக்கப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மையாகிவிட்டது. உள்நாட்டில் வாழும் உங்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லையென்றால் பிறகு உங்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.



Wednesday, October 19, 2011

நீதிமன்றம் பாதுகாப்பான இடமா?

பொது மக்களுக்கே இந்த நிலையென்றால் பொய் வழக்கில் சிக்கும் கணவர்களின் நிலை எப்படி இருக்கும்?

போலீசுக்கு எதிரான போராட்டம் என கூறி வக்கில்கள் நடத்திய மனித சங்கிலியை ஏதோ ஒரு அவசர காரணமாக கடக்க முயன்ற பொதுமக்களை வக்கில்கள் தாக்கினர். (தினமலரில் வந்த செய்தியும் படமும்)
=====

பொதுமக்களே தங்களது குறையை பாதுகாப்பாக தீர்த்துக்கொள்ள முடியாதபோது பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியிருக்கும் அப்பாவிக் கணவர்கள் எப்படி நீதிமன்றத்தில் தங்களுக்கு தீர்வு காணமுடியும்?


சென்னை கோவையில் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு வக்கீல்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பொதுமக்களும், தானும் கடும் பாதிப்பை சந்தித்திருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்த விவசாயி ஒருவரை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து வக்கீல்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் வக்கீல் ஆனந்தீஸ்வரன் என்பவரை போலீஸார் தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக பெண் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களைக் கைது செய்யக் கோரி கடந்த பல நாட்களாக எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் எஸ்.பி. அலுவலகத்திற்குள் அசாதாரணமான நிலை நீடிக்கிறது. பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். வக்கீல்களை வெளியேற்ற போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வக்கீல்களின் முற்றுகையால் எஸ்.பி.அலுவலகத்திற்குள் வர பொதுமக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் எஸ்.பி. அலுவலகத்தின் முக்கியப் பகுதியை போலீஸார் மூடி விட்டனர். இதனால் புகார் தர வருவோர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், கோவையில் எஸ்.பி. அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருவதால், தானும், தன்னைப் போன்ற பொதுமக்கள் பலரும் புகார்களைக் கொடுக்க முடியாமல் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக கூறியிருந்தார்.

இதை அறிந்த வக்கீல்கள் சிலர் கந்தசாமியை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்துத் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து உயர்நீதிமன்ற காவல் நிலையத்தை நாடியுள்ளார் கந்தசாமி. ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்துத் தெரியவில்லை.

வக்கீல்களும் தொடர்ந்து எஸ்.பி. அலுவலகத்தைக் காலி செய்யாமல் போராடி வருகின்றனர். போலீஸாரும் இதுகுறித்து மேல்நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்த செயலால், கோவையில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 21, 2011

காதலிக்கும் இளைஞர்களுக்கான செய்தி!

செய்தியைப் படித்தவுடன் அதனைத் தொடர்ந்து வரும் வீடியோவையும் பாருங்கள்..பிறகு சிந்தியுங்கள். எங்கே தவறு நடக்கிறது என்று புரியும்!

பெண்னை ஏமாற்றிய டாக்டர் கைது

செப்டம்பர் 21,2011, தினமலர்

சென்னை: திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, பெண்ணை ஏமாற்றிய டாக்டர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை துறைமுக அதிகாரிகள் குடியிருப்பில் வசிப்பவர் தரணீஸ்வரன், 27. இவர், துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தற்காலிக டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், கொருக்குபேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த, தன் அண்ணியின் தங்கை விசாலாட்சியை, 25, மூன்று வருடமாக காதலித்து வந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த அவர், விசாலாட்சி வரவழைத்து, திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின், திருமணம் செய்து கொள்ள விசாலாட்சி கேட்டும், தொடர்ந்து மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த அவர், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிவு செய்து, தரணீஸ்வரனை கைது செய்து, ஜார்ஜ் டவுன் கோர்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.



ஆண் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றினால் சிறைத் தண்டனை. ஆனால் பெண் ஒரு ஆணை காதலித்து ஏமாற்றினால் அப்போதும் ஆணுக்குத்தான் மரணதண்டனை. மொத்தத்தில் ஏமாற்றினாலும், ஏமாற்றப்பட்டாலும் ஆணுக்குத்தான் தண்டனை!



Saturday, September 3, 2011

தப்பித்துக்கொள்ளும் தமிழக இளைஞர்கள்

இந்த வாரத்தில் மட்டும் தமிழக இளைஞர்களின் திருமணம் பற்றி செய்தி வந்தவாறு இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. இதுபோலவே அனைத்து இளைஞர்களும் வேறு நாடுகளில் திருமணம் செய்து இந்திய பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி சீரழியாமல் வளமாக வாழவேண்டும்.

ஜப்பானிய மங்கையின் கனவை நனவாக்கிய விருதுநகர் வாலிபர்

பிலிப்பைன்ஸ் மணமகளை கரம் பிடித்தார் தமிழக மணமகன்

பிரான்ஸ் பெண்ணை மணந்த புதுச்சேரி வாலிபர்: இந்து முறைப்படி கோவிலில் திருமணம்
செப்டம்பர் 03,2011 தினமலர்


புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை இந்து முறைப்படி, நேற்று திருமணம் செய்து கொண்டார்.புதுச்சேரி கொசக்கடை வீதியைச் சேர்ந்த பையா கெல்ஸ்வானின் மகன் பையா அந்துவான்,24. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர், மேல் படிப்புக்காக, 2006ல் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார்.அங்கு, மாணவர் விடுதியில் தங்கி, பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், அந்துவானை பார்த்த அதே நாட்டைச் சேர்ந்த எல்சா என்ற ராதா, 22, என்ற பெண் காதலித்து வந்ததோடு, இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். இந்தியா திரும்பிய இவர்கள், உறவினர்கள் சம்மதத்துடன் நேற்று, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், இந்து முறைப்படி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

அந்துவான் கூறியதாவது: பிரான்சில் படிக்கும் போது, குழுவாகச் சேர்ந்து தீபாவளி பண்டிகை கொண்டாடினோம். அவ்விழாவில் கலந்து கொள்ள வந்த எல்சா, என்னை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு, இரண்டு ஆண்டுகளாக என்னைத் தேடிப் பார்த்துள்ளார்.அவரது பார்வைக்கு கிடைக்காத நான், சமீபத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் என்னைச் சந்தித்த எல்சா மகிழ்ச்சியானார். என்னை நேசிப்பதாக மெயில் மூலமாக தெரிவித்தார். நானும் அவர் மீது ஆசைப்பட்டேன். பெற்றோரின் ஒப்புதலுடன், இந்துமுறைப்படி திருமணம் செய்து கொண்டோம்.இவ்வாறு, அந்துவான் கூறினார்.