பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, June 28, 2010

மக்கள் மன்றத்தில் சிரிப்பாய் சிரிக்கும் மகளிர் சட்டங்கள்

பெண்கள் எப்படி சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அதன் மூலம் காவல்துறை எப்படி பணம் சம்பாதிக்கிறது என்றும் திரு. விசு அவர்களின் மக்கள் மன்றத்தில் தெளிவாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கு முத்தாய்ப்பாக திரு. விசு அவர்களும் நச்சென்று ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். வீடியோவைப் பாருங்கள்.





வீடியோவில் வந்த காட்சிகளும் நடைமுறையில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களும் எவ்வளவு உண்மை என்று செய்தித்தாளில் வந்துள்ள செய்திகளையும் பாருங்கள்.


சென்னை: கணவன், மனைவி பிரச்னையில் வழக்குப் பதிவு செய்ய 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., அனிதா; போலீசாக இருந்தவர், 2004ம் ஆண்டு போலீஸ் இட ஒதுக்கீட்டில் எஸ்.ஐ.,யாக தேர்வானார்.

மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அபர்ணா, அழகு கலை நிபுணராக உள்ளார். இவரது கணவர் சதீஷ், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனியாக வாழ்ந்து வந்த அபர்ணாவுக்கு, தொல்லைகள் கொடுத்தார் சதீஷ். "பிரிந்து வாழும் கணவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மயிலாப்பூர் போலீசில் அபர்ணா புகார் கொடுத்தார்.

எஸ்.ஐ., அனிதா விசாரணை நடத்தினார். மனைவி அபர்ணா மீது, மயிலாப்பூர் போலீசில் சதீஷ் புகார் கொடுத்தார். அப்புகாரை பதிவு செய்த எஸ்.ஐ., புகார் மனு ரசீது கொடுத்தார். அபர்ணா கொடுத்த புகாரை கிடப்பில் போட்டார். இவரது புகாரில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்தொகையாக 500 ரூபாய் கொடுத்த அபர்ணா, மீதித் தொகையை பிறகு தருவதாக கூறிச் சென்றார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., லட்சுமியிடம் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ரசாயன கலவை பூசப்பட்ட 500 ரூபாய் லஞ்ச பணத்தை எஸ்.ஐ.,யிடம் அபர்ணா கொடுத்தார். அதை வாங்கிய எஸ்.ஐ., அனிதாவை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர் அப்பாசாமி தெருவில் வாடகை வீட்டில் எஸ்.ஐ., வசித்து வந்தார். தனிப்படை போலீசார், எஸ்.ஐ.,யின் வீட்டில் சோதனை நடத்தினர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


பணம் வசூலித்த டி.எஸ்.பி.,உட்பட ஆறு பேர் சஸ்பெண்ட்
தினமலர்: ஜனவரி 16,2010

நகரி:வரதட்சணை வழக்கில் இருவீட்டாரையும் சமரசம் செய்து வைப்பதாக கூறி, பணம் வசூலித்த டி.எஸ்.பி., இரு இன்ஸ்பெக்டர்கள், ஒரு எஸ்.ஐ., இரு போலீசார் உட்பட, ஆறு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சென்னையைச் சேர்ந்த பத்ரிநாத்துக்கும், சித்தூர் மாவட்டம் புங்கனூர் மசூதித் தெருவைச் சேர்ந்த குருவப்பாவின் மகள் அருணாவிற்கும், 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இத் தம்பதிக்கு இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கணவனும் அவரது பெற்றோரும் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், மேலும் பணம் கொண்டு வரும்படி தொந்தரவு செய்வதாகவும், 2009ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, அருணா புங்கனூர் போலீசில் புகார் செய்தார்.இதன் மீது வழக்கு பதிவு செய்த அப்போதைய புங்கனூர் எஸ்.ஐ., ராமகிருஷ்ணா, பத்ரிநாத் குடும்பத்தினரிடம் ஒரு தொகையை வசூல் செய்து தருவதாகவும், சமாதானம் செய்வதாகவும், அருணாவிடம் கூறி பணம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது. பத்ரிநாத்திடம் இருந்து வாங்கிய பணத்தில், அதிக தொகையை போலீசாரே எடுத்துக் கொண்டனர்.

இந்த வழக்கில், பத்ரிநாத்திடம் இருந்து போலீசார் எவ்வளவு பணம் பெற்றனர் என்பது பற்றி அறிந்து கொள்ள, அருணா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வழக்கு விசாரணையையும் புங்கனூர் போலீசார் துரிதப்படுத்தவில்லை. பத்ரிநாத்திடம் வாங்கிய பணத்தை, போலீசார் அருணாவிடமும் கொடுக்கவில்லை. பத்ரிநாத்திடமும் திருப்பி தரவில்லை.இந்நிலையில், அருணா, பத்ரிநாத் ஆகிய இரு குடும்பத்தினரும், சித்தூர் மாவட்ட எஸ்.பி., லட்சுமிரெட்டியை நேரில் சந்தித்து, நடந்த விவரங்களை கூறினர்.அதன் பேரில், பலமநேர் டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ்பெக்டர்கள், பத்மாகரரெட்டி,சீனிவாசுலு, எஸ்.ஐ., ராமகிருஷ்ணா மற்றும் போலீசார் நாராயணமூர்த்தி, நாகராஜ் ஆகிய ஆறு பேர் மீது விசாரணை நடந்தது. விசாரணையின் அறிக்கைப்படி, மாநில டி.ஜி.பி., கிரிஸ்குமார் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரையும், சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.
===================

வீடியோவைப் பார்த்துவிட்டு பலர் சிரித்திருப்பார்கள். இதுதான் பொதுவாக மக்களின் மனநிலை. ஆனால் எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள்? அதனால் இளைஞர்களே, நீங்கள் பொய் வழக்கில் சிக்கினால் உங்களது அவல நிலையைப் பார்த்து பலர் சிரிப்பார்கள். ஆனால் உங்களுக்கு உதவவேண்டும் என்று அரசாங்கம் உட்பட யாரும் இதுவரை நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதனால் இந்தியப் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கினால் உங்களைக் கடவுள் கூட காப்பாற்ற முடியாது.

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற விஷயம் இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு காமெடியான விஷயம். அவ்வளவுதான். அதன் பின்னால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருக்கின்றன என்ற உண்மையை உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் சொல்லியிருக்கிறது. அதனைக் கண்டுகொள்வார் யாரும் இல்லை.

கீழுள்ள தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பாருங்கள். 2003ம் ஆண்டில் இந்த அவலநிலையைப் பற்றி சொல்லியிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த பொய் வழக்கு அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இளைஞர்களே, நீங்களாவது தப்பித்துக்கொள்ளுங்கள். அதற்கான ஒரே வழி வேறு நாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான். சிந்தியுங்கள்.


IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI, CRL. R 462/2002 DATE OF DECISION: May 19, 2003, Savitri Devi ………….Petitioner. Through Mr. H C Mittal,Adv.
Versus Ramesh Chand and Ors. …………Respondents Through Mr. R P Bhardwaj, Adv.
HON’BLE MR. JUSTICE J.D. KAPOOR

23.These provisions were though made with good intentions but the implementation has left a very bad taste and the move has been counter productive. There is a growing tendency amongst the women which is further perpetuated by their parents and relatives to rope in each and every relative- including minors and even school going kids nearer or distant relatives and in some cases against every person of the family of the husband whether living away or in other town or abroad and married, unmarried sistes, sister-in-laws, unmarried brothers, married uncles and in some cases grand-parents or as many as 10 to 15 or even more relatives of the husband. Once a complaint is lodged under Sections 498A/406 IPC whether there are vague, unspecific or exaggerated allegations or there is no evidence of any physical or mental harm or injury inflicted upon woman that is likely to cause grave injury or danger to life, limb or health, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there and force them to hide at their friends or relatives houses till they get anticipatory bail as the offence has been made cognizable and non-bailable. Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out.

24.These provisions have resulted into large number of divorce cases as when one member of the family is arrested and sent to jail without any immediate reprieve of bail, the chances of salvaging or surviving the marriage recede into background and marriage for all practical purposes becomes dead. Result is that major bulk of the marriages die in their infancy, several others in few years. The marriage ends as soon as a complaint is lodged and the cognizance is taken by the police.




Friday, June 25, 2010

தகனமேடையிலிருந்து தப்பித்தத் தமிழர்

இந்தியத் திருமணம் என்ற தகனமேடையிலிருந்து புத்திசாலித்தனமாகத் தப்பித்து வேறுநாட்டுப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட இந்த இளைஞர் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!

இந்து முறைப்படி திருமணம் செய்த ஈரான் பெண்

தினமலர் ஜூன் 25,2010

மதுரை: ஈரானைச் சேர்ந்த பெண் டாக்டருக்கும், கமுதி டாக்டருக்கும், மதுரையில் இந்து முறைப்படி நேற்று திருமணம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் டாக்டர் சரவணக்குமார் அமெரிக்காவில் பணிபுரிகிறார். இவரும், ஈரானைச் சேர்ந்த கரீம், பெரி தம்பதிகளின் மகள் டாக்டர் சாராவும் காதலர்கள். முஸ்லிம் பெண்ணான சாரா, இந்திய கலாசாரத்தின் மேல் கொண்ட ஈர்ப்பால், இந்து முறைப்படி, காதலரை திருமணம் செய்ய விரும்பினார். முறைப்படி இந்துவாக மாறிய சாராவுக்கும், சரவணக்குமாருக்கும் மதுரையில் அர்ச்சகர் மந்திரம் ஓத, மேளதாளங்கள் முழங்க நேற்று திருமணம் நடந்தது.

======================

இளைஞர்களே,

நீங்களும் இதுபோல வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டால் உங்களது வாழ்வு வளமாகும். இந்தியாவில் பெண் தேடும் முயற்சிகளை விட்டுவிட்டு அந்த முயற்சியைப் பயன்படுத்தி வேறுநாடுகளில் பெண் தேடி திருமணம் செய்து கொள்ளுங்கள். உலகம் மிகப் பெரியது. தவறான, ஒருதலைபட்சமான சட்டங்கள் இல்லாத எத்தனையோ நல்ல நாடுகள் இருக்கின்றன.

பல வெளிநாட்டுப் பெண்களுக்கு இந்தியத் திருமண கலாச்சாரம் பிடித்திருக்கிறது. ஆனால் பல இந்தியப் பெண்களுக்கு இந்தியத் திருமணம் என்ற பெயரில் கணவனையும் அவனது குடும்பத்தையும் துன்புறுத்தும் இந்திய சட்டங்கள் பிடித்திருக்கிறது! பெண்ணுரிமை என்ற பெயரில் முறையற்ற உறவுகளை அங்கீகரிக்க சட்ட மேதைகளுக்கும், தலைவர்களுக்கும் பிடித்திருக்கிறது!

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்வதால் நாட்டிற்கு மிகப்பெரிய தலைவலி.

  • 1961-ல் வரதட்சணைத் தடுப்புச் சட்டம் கொண்டுவந்தார்கள்.
  • 1983-ல் IPC 498A என்ற கணவனைக் கண்டதும் கைது செய்யும் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
  • 2005-ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் கணவனை வீட்டை விட்டே விரட்டும் சட்டத்தையும் இயற்றிவிட்டார்கள்.

ஆனால் இன்னும் வரதட்சணைக் கொடுமை மட்டும் ஒழியவில்லை! என்று அரசாங்கம் மிகவும் வருத்தப்பட்டு இப்போது புதிதாக ஒரு சட்டத்தையும் இயற்றுவதற்கு ஆரம்பித்திருக்கிறார்கள்.

வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் புதிய அம்சங்கள் The Hindu, January 18, 2010

The ministry of women and child development (MWCD) is moving a cabinet note seeking amendment in the existing provisions of DPA, official sources said.

The amendments are expected to be placed before cabinet for its approval this month end and is likely to be tabled in Parliament in the coming budget session, the sources said.

The amendments include having lesser penalty for the dowry givers, allowing a woman to file case where she permanently or temporarily resides, to include parents and relatives of the bride as aggrieved persons and who can complain and link the Protection of Women from Domestic Violence (PWDV) with the dowry laws for quick relief.

இந்திய இளைஞர்களால் அரசாங்கத்திற்கு எத்தனை தொல்லைகள்!

அதனால் நீங்கள் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டால் இந்தியப் பெண்களுக்கு வரதட்சணைக் கொடுமை என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போய்விடும்.பிறகு பெண்கள் நலவாரியமும், பெண்கள் நல அமைச்சகமும், இந்திய அரசாங்கமும் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள் அல்லவா!

அதனால் உங்களது தாய்நாட்டிற்கு உதவ வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். நீங்களும் பொய்வரதட்சணை வழக்குகளில் சிக்கி சிதைந்துபோகாமால் சிறப்பாக வாழலாம்.



Tuesday, June 22, 2010

இந்திய இளைஞர்களுக்கு நற்செய்தி!

இந்திய இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி என்றவுடன் டாஸ்மாக்கில் இலவச சரக்கு என்று நினைத்து விடாதீர்கள். ஏனென்றால் நாட்டில் சிறுவர்களுக்கு பாட புத்தகம், சைக்கிள், டிக்ஷ்னரி என பல அயிட்டங்கள் இருக்கின்றன. அதுபோல பெரியவர்களுக்கு இலவச அரிசி, பருப்பு, தொலைக்காட்சி என ஒரு பட்டியல் இருக்கிறது. இதுவரை இளைஞர்களுக்குத்தான் எதுவும் இல்லை அதனால் இப்படித்தான் யோசிக்கத்தோன்றும்! கவலையே படாதீர்கள்!

இளைஞர்களுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள இலவசங்களில் ஒன்றுதான் பொய்வரதட்சணை வழக்குகள். இந்தியாவில் நீங்கள் திருமணம் செய்துகொண்டால் பொய்வரதட்சணை வழக்குகள் இலவசமாக உங்களின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் ரேஷன் கார்டு இல்லாமல் எந்தவித கட்டுப்பாடுமின்றி இலவசமாகக் கொடுக்கப்படும்.

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையென்றாலும் இந்த பொய் வழக்குகளில் மாட்டிக்கொண்டால் நீங்கள் சிறையிலிருந்தும், வழக்குகளிலிருந்தும் வெளிவருவதற்கான வாய்ப்புகள் 10% மட்டுமே இருக்கிறது. கீழுள்ள செய்தியைப் பாருங்கள் இந்தியாவில் எல்லாத்துறைகளிலும் 90% ஊழல்வாதிகள்தான் இருக்கிறார்கள் என்று ஒரு நேர்மையான மரியாதைக்குரிய நீதிபதி சொல்லியிருக்கிறார்.


Majority of govt officials are corrupt: HC
Indian Express 21 June 2010


The Delhi High Court on Monday said most of the government departments are filled with corrupt officials who are eating away the funds meant for poor people and held that jail should be the place for such persons.

Most of the staff in various departments are corrupt.


Whether you take DDA, police or MCD, 90 per cent of their staff are corrupt," Justice Shiv Narayan Dhingra said adding "the only field in which India excels is corruption."


The court made the remarks while denying bail to a senior officer of a nationalized bank, Gopal Krishna, who is behind bars on corruption charges.


"Bail, and not jail, cannot be the maxim in cases of such corrupt persons who eat away the schemes meant for poor persons floated by the government for their upliftment," he said.


The bank officer was arrested by CBI following a complaint from a girl that she had applied for a loan of Rs two lakhs under the Prime Minister Employment Generation Programme but the deputy manager of the bank had demanded Rs 20,000 from her to issue the cheque.


Denying the bail, Justice Dhingra said "many of the government schemes are not able to help the poor because of widespread corruption prevalent among the persons who have to implement the schemes."


"The most unfortunate fact in this case is that the person who was involved is a deputy manager of the bank. The scheme was floated by the government to help downtrodden and poor. It need not be emphasized as to what is happening to these schemes on ground," the court said.



குறிப்பாக காவல் துறையும், நீதித்துறையும் பாலம் கட்டி ஒன்றாக இணைந்து உங்களை பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைத்து கூத்தாடி மகிழும் இடங்களான கீழ்நிலை நீதிமன்றங்களில் மட்டும் கடந்த ஆண்டில் நடந்த லஞ்ச ஊழலின் மதிப்பு 2,630 கோடி ரூபாய்கள்.

"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)

இந்திய இளைஞர்களே, இதைப் படித்தபிறகும் நீங்கள் இந்தியாவில்தான் திருமணம் செய்வேன். நான் நேர்மையானவன் அதனால் எந்த பொய்வழக்குகள் வந்தாலும் எதிர்கொள்வேன் என்று “10% சத்திய சோதனை” செய்து பார்க்க முயற்சி செய்யாதீர்கள்.

காந்தி வாழ்ந்த காலத்தில் அவர் தைரியமாக சத்திய சோதனை செய்ததன் காரணம் அன்று ஆங்கிலேயர்களின் ஆட்சி நடந்தது. அதனால் இவற்றையெல்லாம் நன்கு யோசித்து உங்களின் திருமணத்தைப் பற்றி ஒரு முடிவு எடுங்கள்.

கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்யமுடியாது.



Monday, June 21, 2010

அப்பா ஒரு இத்துப்போன “டப்பா” !

தந்தையர் தினத்தில் இந்திய சட்டங்கள் மூலம் குழந்தைகள் தெரிந்துகொள்ளும் பாடம் என்னவென்றால் “அப்பா” என்ற சொல்லிற்கு அர்த்தம் மாதந்தோறும் பராமரிப்புத்தொகை கொடுக்கும் ATM Machine, நீதிமன்ற உத்தரவு பெற்று அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லும் ஒரு விருந்தாளி, தனது தாய்க்கு ஒரு "Sperm Donor".

இன்றைய நடைமுறையில் இருக்கும் தவறான பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் (IPC498A) மற்றும் விவாகரத்துச் சட்டங்களின் மூலம் எதிர்காலக் குழந்தைகளின் வாழ்க்கையில்தந்தையின் பங்கு மேலே சொல்லப்பட்டுள்ளது போலத்தான் இருக்கும்.

இதுபோன்ற அவலநிலை வருங்காலக் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது என்று All India Men’s Welfare Association (AIMWA) சென்னையில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி குடும்ப நீதிமன்ற நீதிபதியிடம் மனுக் கொடுத்திருக்கிறார்கள்.

“The Family Court system blatantly discriminates against fathers, heartlessly separates them from and prevents their access to their own biological children”, said the newly formed All India Men’s Welfare Association (AIMWA).

As a sign of protest against the Family Court system, AIMWA organised a protest before the Family Courts on Friday at Chennai. Around fifty of its members were distributing pamphlets and campaigning against the system.

AIMWA is an organization formed to protect the constitutional and human rights of men. It fight against gender discrimination, ‘legal terrorism’ and every other form of abuse suffered by men.

M Antony Francis, coordinator, AIMWA told Law et al. News “Indian Family Courts have declared a war against fathers and are adopting every possible means to create a “Fatherless Society”. We concur with the recent observation of the Supreme Court of India that “the Hindu Marriage Act is breaking more families than uniting”. We would like to add that the worst sufferers of the Indian Family Court system are fathers and children”

He further added “Section 498A, framed to protect women from dowry harassment, has become a hot topic of discussion these days due to misuse. As per National Crime Bureau (NCRB), in the year 2007, 187540 people were arrested under Section 498A, of which, the offense could be proven only for 13247 people. 94% of those arrested were found innocent. As per NCRB, in the last ten years there has been a spurt in the incidence of suicide by married men. A law that was supposed to act instrumental in women empowerment and to enable them to speak against their abuse, looks like has today, become a curse for many a families”

“The modus operandi of the Family Courts includes depriving fathers of the right to love and care for their biological children and forcing fathers to pay huge sums of money to support children they are not allowed to see. The Family court system encouraging false allegations of abuse to paint fathers as unfit parents” S Hariharan, General Manager of a Telecom Company, a divorcee himself in Chennai told Law et al. News.

Multiple legal battles by mothers eliminate biological fathers from their children’s lives, lamented another divorcee MP Kalaichelvan, a Civil Engineer. He said that the present system passes ex-parte orders based solely on the allegations made by a child’s mother..It also allow mothers to brazenly disobey visitation orders without legal repercussions to her. Sometimes biological fathers are labelled “kidnappers” for trying to make contact with their own children. Prolonging custody and visitation matters for years, thereby driving fathers into financial and emotional bankruptcy and forcing them to give up the desire to see their children, are the issues of concern to us,” he said.

In its memorandum to the Principal Sessions Judge VRamalingam, AIMWA has prayed “Special fast-track courts should be set up at the earliest to deal with custody issues. Exclusive, fully functioning Divisional Bench should be set up in all High Courts and Supreme Court to hear appeals in matters of child custody’’.

They also said when a person or couple approaches court for divorce, counseling of the parents by professional counselors should be given first priority and except in extreme cases of violence or unhealthy behavior by either partner, children should be given equal and meaningful access to both parents and grandparents on both sides.

The Memorandum further suggested that both parents should made financially responsible for the upbringing of child in proportion to their earnings and not based on demands made by either partner. If a partner prevents a child from having equal and meaningful contact with the other partner, they should be counseled first to understand the importance of equal parenting and the best interest of a child.

“If either partner repeatedly disobeys orders of equal access and meaningful contact with children, then the children should be placed in the full custody of the partner who will allow equal access to the other parent”, the participants demanded in their memorandum.

அதனால் இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளாதீர்கள். அப்படியே தவறுதலாக திருமணம் செய்துவிட்டால் குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள்.

திருமணம் செய்தால் கண்டிப்பாக ஒரு நாள் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி உங்களது பெற்றோரை இழந்துவிடுவீர்கள். நீங்கள் ஒரு குழந்தைக்குத் தந்தையானால் ஒருதலை பட்சமான திருமண சட்டங்கள் மூலம் உங்களது குழந்தையையும் இழந்துவிடுவீர்கள்.

கடைசியில் உங்களைப் பெற்ற தாய் தந்தையையும் காப்பாற்ற இயலாமல், நீங்கள் பெற்ற குழந்தையையும் காப்பாற்ற முடியாமல் பெற்றோரைக் காக்க இயலாத பிள்ளையாகவும், பெற்ற பிள்ளையைக் காப்பாற்ற இயலாத தந்தையாகவும் ஒரு நடமாடும் பிணமாகத்தான் வாழ்வீர்கள். இதுதான் இந்தியப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் திருமண சட்டங்கள் உங்களின் வாழ்க்கைக்குச் செய்யும் உதவி.

இந்தியத் திருமணத்தின் மூலம் அப்பா என்ற பெயரில் ஒரு நடமாடும் “காலி டப்பாவாகி” விடாதீர்கள்.




தன்வினை தன்னைச் சுடும்!

அப்பாவிகளுக்கு வரதட்சணை வழக்கு எழுதுபவர்களுக்கு ஒரு வழக்கு வந்திருக்கிறது. ரொம்ப காமெடியான புகார்! காவல்துறையில் பணிபுரியும் கணவன் வேலையிலிருந்து தாமதமாக வருவதால் வரதட்சணைக் கொடுமை வழக்குப் போட்டிருக்கும் புரட்சிப்பெண்.

Cop father-son duo booked in dowry case
The Times of India, 17 June 2010

MUMBAI: A father-son duo, employed with the Mumbai police, has been booked in a dowry case along with four other family members. The complaint was filed by Shreya aka Ratnaprabha (26), who is married to Sachin Jadhav (29), a constable.

Sachin’s father Chandrakant (54) is an assistant sub-inspector at the JJ Marg police station. Shreya, in her complaint, has stated that her in-laws were demanding a dowry of Rs 5 lakh. One of her main grouse is that her husband didn’t return home early from work. A sessions court has granted anticipatory bail to all the six accused.

Sachin and Shreya tied the knot in February 2009. They lived with Sachin’s parents, Chandrakant and Sangeeta, at Byculla. Shreya used to work in the IT sector.

In her statement to the Agripada police, Shreya stated that her husband used to return home late from work. She has claimed that Sachin gave her evasive replies every time she asked him about his late arrival. This, Shreya has alleged, forced her to stay up late. She has also said that staying up late upset her routine and made it difficult for her to juggle her job with household chores.

“Shreya has told us that the Jadhavs were putting pressure on her to get her to get money from her parents so that they could buy a new house,’’ a police officer said. “She claims she was taunted and abused verbally. Sachin’s sister Jyoti and cousins—Neelam Vidhate and Anita Bankar— have also been accused of harassment,’’ said the officer. While Vidhate lives in Junnar, Bankar resides in Lonavla.

Sachin’s counsel, MA Khan, said the constable had to rush for emergency as well as bandobast duties at odd hours. “As a result, he had to spend a lot of time away from his family,” said Khan.

The court granted anticipatory bail to all the accused on the grounds that their custody wasn’t required. “The Jadhavs are willing to return all the valuables that Shreya had brought at the time of the marriage,’’ Khan said.

Meanwhile, Shreya has filed for maintenance in a court at Sangamner in Ahmednagar, her hometown. She is currently living with her parents in Vashi.




Saturday, June 19, 2010

பெண்ணை ஏமாற்றினால் வழக்கு, பெண் ஏமாற்றினால் அல்வா!

சமீபத்தில் செய்தித்தாளில் பரபரப்பாக வந்துகொண்டிருக்கும் செய்தி காதல் ஏமாற்றம். காதலன் கைது என பலவாறு செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு அனுபவப் பாடத்தை இளைஞர்கள் நன்கு உண்ர்ந்துகொள்ளவேண்டும். அதற்காக 3 செய்திகள் கீழே தரப்பட்டுள்ளது. கவனமாக படியுங்கள்.

தினமலர், ஜூன் 19,2010

திருவெண்ணெய்நல்லூர் : காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.எடப்பாளையத்தை சேர்ந்தவர்கள் அல்லாபக்ஷி மகள் மும்தாஜ்(21), ஈசா மகன் அல்லாபக்ஷி(25). இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் வெளிநாடு சென்று கடந்த வாரம் அல்லாபக்ஷி சொந்த ஊருக்கு திரும்பினார்.

அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க முற்பட்டதால், மும்தாஜ் தன் உறவினருடன் சென்று அல்லாபக்ஷியிடம் தன்னை திருமணம் செய்யாதது குறித்து நியாயம் கேட்டுள்ளார். அப்போது அல்லாபக்ஷி, அவரது தந்தைய ஈசா, குடுமாபீ, தில்ஷாத், இஸ்மாயில் ஆகியோர் சேர்ந்து மும்தாஜிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மும்தாஜ் கடந்த 3ம் தேதி எஸ்.பி., பகலவனை சந்தித்து புகார் கொடுத்தார்.எஸ்.பி., உத்தரவின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அல்லாபக்ஷி உட்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • இந்த செய்தியில் காதலித்துவிட்டு பிறகு திருமணம் செய்யமுடியாது என்று சொன்னதாக இளைஞர் அவரது குடும்பத்தோடு வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

===================

தினமலர், ஜூன் 18,2010

தியாகதுருகம் : தாலிகட்டும் நேரத்தில் மணமகனை பிடிக்கவில்லை என்று, சினிமா பாணியில் தாலியை தட்டிவிட்டு நடையை கட்டினார் மணப்பெண். அதே மணமேடையில் அத்தை மகளை மணந்தார் மணமகன். இச்சம்பவம் தியாகதுருகத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த சின்னதுரை- அன்னலட்சுமி தம்பதி மகள் சுதா(22). இவரது தாய் மாமன், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தைச்சேர்ந்த அழகுவேல்- பாஞ்சாலை மகன் உத்திராபதி(27). இவர்களுக்கு தியாகதுருகம் ஸ்டார் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணமேடையில் மணமகன் உத்திராபதி, மணமகள் சுதா வந்து அமர்ந்தனர். சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தேறின. முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டிருந்த காலை 7 மணிக்கு சுதா கழுத்தில் உத்திராபதி தாலிகட்டும் வேளையில், சினிமாவில் வரும் காட்சியைப்போல், தாலியை தட்டிவிட்டு மணமேடையில் இருந்து எழுந்தார் மணப்பெண் சுதா. "எனக்கு மாமன் உத்திராபதியை பிடிக்கவில்லை; இன்னொரு மாமன் மகன் பாக்யராஜை காதலிக்கிறேன். அவரையே திருமணம் செய்து கொள்வேன்' என்று கூறிவிட்டு மணமகள் அறைக்கு சென்றுவிட்டார்.

மணமகன் உத்திராபதி கூறுகையில்,"சுதா எனது அக்கா மகள் தான். தன்னை பிடிக்கவில்லை என்று திருமண ஏற்பாடு செய்வதற்கு முன்பே, என்னிடம் கூறியிருந்தால் இப்பிரச்னை ஏற்பட்டிருக்காது என்றார்.

  • இந்த செய்தியில் தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை மறுத்துவிட்டார் மணமகள். ஆனால், ஏமாற்றமடைந்த மணமகனுக்கு அல்வா கொடுத்து வேறு திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். இது உறவுக்காரப் பெண் என்பதால் இத்தோடு முடிந்திருக்கிறது. வேறு பெண்ணாக இருந்திருந்தால் திருமணம் முடிந்தகையோடு கணவன் முதலிரவன்று குடித்துவிட்டு வந்து வரதட்சணை கொடுமை செய்தான் என்று வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளியிருப்பார்கள்.
=================

செய்தி 3. கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்

Dinamalar அக்டோபர் 29,2009

திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. "அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்'' என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார். உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார். அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.

  • இந்த செய்தியில் பார்த்தீர்களா. திருமணம் செய்து பிள்ளையும் பெற்று பிறகு கணவனையும் பிள்ளைகளையும் ஏமாற்றி கள்ளக் காதலனுடன் ஓடிய பெண்ணின் மீது போலிஸ் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
=================



மேற்கண்ட செய்திகளில் உள்ள விஷயத்தைப் புரிந்துகொண்டீர்களா?

பெண்ணை ஆண் ஏமாற்றினால் அவன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்விவிடுவார்கள். ஆனால் ஆணை ஒரு பெண் ஏமாற்றினால் அந்தப்பெண்ணை நன்றாகத் தட்டிக்கொடுத்து சபாஷ் என்று சொல்லிவிட்டு வஞ்சிக்கப்பட்ட ஆணுக்கு வாயில் அல்வாதான் கொடுப்பார்கள். இதுதான் நீண்ட காலமாக இந்திய சமுதாயத்தில் நடந்துகொண்டிருக்கும் வழக்கம்.

இளைஞர்களே,

நீங்கள் தவறு செய்தாலும் சரி, தவறு செய்யாவிட்டாலும் சரி ஒரு பெண் உங்கள் மீது புகார் கொடுத்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். ஆனால் நீங்கள் ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டால் நீங்கள் எந்த வழக்கும் அந்தப் பெண்மீது தொடுக்க முடியாது. ஏனென்றால் தவறு செய்யும் பெண்ணை தண்டிக்க இந்தியாவில் சட்டங்களே இல்லை. அப்படி இருக்கும் ஒன்றிரண்டு சட்டங்களையும் காவல்துறையும் நீதித்துறையும் மதிப்பதில்லை. ஒட்டு மொத்த சமுதயாமும் ஆணைத் தண்டிக்க மட்டுமே தயாராக இருக்கிறது. அவன் தவறு செய்யவில்லை என்றாலும் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள். அதுபோல ஒரு ஆணுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றியும் யாரும் கவலைப்படமாட்டார்கள்.

இந்த அடிப்படை உண்மையை நன்கு உணர்ந்துகொண்ட படித்த நவநாகரீக மங்கைகள் சட்டங்களைப் பயன்படுத்தி எப்படி பொய்வழக்குப்போடுவது என்று நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்கள். திருமணத்திற்கு முன் கற்பழிப்பு வழக்கு, திருமணத்திற்குப் பின் வரதட்சணை வழக்கு. இந்த இரண்டு வித்தைகளை நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக பல அரசாங்கத்துறைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. அதனால் இளைஞர்களே நீங்கள் விழிப்புடன் இருந்தால் பிழைக்கலாம். இல்லையென்றால் உங்கள் ஒட்டுமொத்தக் குடும்பமும் பொய் வழக்கில் சிக்கி சின்னாபின்மாகிவிடும்.

அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் உங்களுக்கு நல்லது.


Friday, June 18, 2010

காதலித்தால் கற்பழிப்பு வழக்கு போடும் காவல்துறை!

கு
New Delhi, Jun 17: In the wake of alarming and growing number of honour killing cases, the Delhi High Court has come down heavily upon the police for failing to protect people.

Referring to a massive hunt launched by the police in Mar 2010 to find Delhi police Commissioner's dog, that went missing, the court remarked, “You can search the entire city if a dog of your boss is lost but you can’t provide protection to the people. This is what you are. What to talk about humanity when you don’t have shame."

Slamming the police's practice of turning the girl's elopment cases into rape cases and putting the boy behind the bar, vacation judge Justice SN Dhingra said, “Its unfortunate that elopement cases are converted into rape cases. Your police is party in all cases of honour killings. You connive with parents and turn your face the other side. You send boys behind bars on rape charges and allow the parents to kill their daughter.

“How can you be so insensitive for a few bucks? In case of elopement, you register the case under section 376 (rape) of Indian Penal Code. You do not register case or take action where you should have done,” the judge said, adding that by putting men behind bars for marrying the woman they love the police were turning "normal citizens to criminals".

These observations came when the court was hearing a case, which was brought up by Delhi High Court Legal Services Aid Authority, about a man was sent to jail for eloping with a girl on a complaint by her parents alleging she has been raped.

The court heard that the girl, who is now pregnant, is all by herself now as her parents have abandoned her while the boy who loves her is in jail.

The High Court's observations on honour killing comes after a gruesome murder of a couple in Delhi was reported on Wednesday, Jun 16. A 19-year-old boy and her male friend were gagged, beaten up with iron roads and killed through electrocution by the girl's family for wanting to marry against the caste norms.

==========
இளைஞர்களே,

ஒரு அடிப்படை உண்மையை நன்கு தெரிந்துகொள்ளுங்கள்.

1. நீங்கள் காதலித்த பெண்ணோ அல்லது அவரது பெற்றோர்களோ நினைத்தால் உங்களை கற்பழிப்பு வழக்கில் சிறையில் தள்ள முடியும். கொஞ்சம் பணம் செலவழித்தால் போதும் எந்தப் பிரிவிலும் வழக்குப் பதிவு செய்ய ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதுவே நீங்கள் உண்மையாகவே காதலித்த பெண்ணால் ஏமாற்றப்பட்டாலும் எந்த வழக்கும் நீங்கள் பதிவு செய்ய முடியாது. ஏனென்றால் ஆண்களை பாதுகாக்க இந்தியாவில் எந்த சட்டமும் கிடையாது.

2. தெரியாமல் நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்துவிட்டால் மனைவியோ அவரது குடும்பத்தாரோ அவர்களது சுயநலத்திற்காக உங்களை பொய்யான வரதட்சணை வழக்கில் எளிதாக சிறையில் தள்ள முடியும். ஆனால், மனைவியும் அவரது குடும்பதாரும் உங்களை பணம் கேட்டு மிரட்டினாலோ, அடித்தாலோ அவர்கள் மீது எந்த வழக்கும் நீங்கள் பதிவு செய்யமுடியாது. ஏனென்றால் மனைவி பணம் கேட்டு மிரட்டினால் அவரை தண்டிக்க எந்த சட்டப்பிரிவும் இந்தியாவில் கிடையாது. அதுபோல குடும்ப வன்முறை சட்டப்படி மனைவி என்பவள் கணவனை எப்படி துன்புறுத்துவது என்று தெரியாத அப்பாவி என்று வரையறை செய்துவைத்திருக்கிறார்கள். அதனால் கணவன் மனைவி மீது இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியாது.

அதனால் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் திருமணமாகாத ஆணாக இருந்தால் கற்பழிப்பு வழக்கும், திருமணமான ஆணாக இருந்தால் வரதட்சணை வழக்கும் உங்களுக்குத் தயாராக காத்திருக்கிறது. அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து எப்போது வேண்டுமானாலும் அது செயல்படத் தொடங்கும்.

அதனால் காதலோ கல்யாணமோ எதுவேண்டுமானாலும் இந்திய எல்லைக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கும் நாட்டிற்கும் நல்லது!





Wednesday, June 16, 2010

காதலிப்பதற்கு முன் இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்


வடமதுரை : வடமதுரை சேர்வை காரன்பட்டியைச் சேர்ந்த சீனி மகள் கவிதா(19). இவரும், இதே ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் தனபாலும்(22) கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்தனர். தனபாலின் தாயார் சின்னசெல்லை "கவிதாவை திருமணம் செய்யக்கூடாது' எனக் கூறியுள்ளார். இதனையடுத்து கவிதாவை திருமணம் செய்யாமல் தனபால் ஏமாற்ற துவக்கினார். வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கவிதா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னக் கிளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தனபாலுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
==========

இதுபோல ஆணைக் காதலித்து ஏமாற்றிய பெண் கைது என்று செய்தியை என்றாவது நீங்கள் பார்த்ததுண்டா? அப்படியென்றால் பெண், ஆணைக் காதலித்து ஏமாற்றுவதே இல்லையா?

உண்மை என்னவென்றால் இந்திய சட்டங்களில் ஒரு பெண், ஒரு ஆணை ஏமாற்றினால் தண்டிக்க எந்தவித சட்டமும் கிடையாது. இந்தியாவில் பெண்கள் எது செய்தாலும் அது சட்டப்படி சரியானது என்று சட்டவல்லுனர்களும் அரசியல்வாதிகளும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் ஆணை தண்டிக்க எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. அது ஏன்?

ஏனென்றால் இந்தியாவில் ஆண்களுக்கு மானமே கிடையாது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

ஏனென்று தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோக்களைப் பாருங்கள்.




படம் : தேவதையைக் கண்டேன்
.








இந்தியநாட்டு சட்டங்கள் நடுநிலையானவை அல்ல. பெண்கள் எவ்வளவு தவறு செய்தாலும் சரி என்று சொல்லும் விதமாக இந்திய சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஆண்களை முடிந்த அளவு எப்படியெல்லாம் தண்டிக்கலாம் என எல்லாவகையிலும் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது.

இதுபோலத்தான் வரதட்சணை தடுப்புச்சட்டங்களும் இந்தியாவில் இயற்றப்பட்டிருக்கிறது. பெண்ணோ அல்லது அவரது குடும்பத்தாரோ வரதட்சணை கொடுத்தோம் என்று புகார் கொடுத்தால் கணவனையும் அவனது குடும்பத்தையும்தான் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். வரதட்சணை கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும் பெண்ணையோ அவரது பெற்றோரையோ ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார்கள்.

அதனால் இந்தியாவில் வரதட்சணை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் பொய் வரதட்சணை வழக்குப்போட்டு உங்களிடம் பணம் பிடுங்குவது மிகவும் எளிது. எந்தவித குற்றமும் செய்யாத உங்களை குடும்பத்தோடு சிறையில் தள்ளுவதும் மிகவும் எளிது.

அதனால் இளைஞர்களே, இந்தியால் திருமணம் செய்து பொய் வழக்குகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்களை எந்த சட்டப்பிரிவில் பொய் வழக்குப்போட்டு சிறையில் அடைத்துப் பணம் கறக்கலாம் என்று நண்பர்கள் காத்துக்கிடக்கிறார்கள் . ஜாக்கிரதை.




Friday, June 11, 2010

லஞ்சம் பெறுவது எப்படி? செயல்முறை விளக்கம்

தினமலர் 11 ஜூன் 2010 (படத்தை கிளிக் செய்து தெளிவாக பார்க்கலாம்)
http://img.dinamalar.com/data/uploads/WR_919140.jpeg

தினமலரில் வந்துள்ள அரிய படம். இதுவே இப்படி என்றால் இந்த நாட்டில் பொய் வழக்கில் சிக்கும் அப்பாவிகளுக்கு நீதி கிடைக்குமா? இளைஞர்களே சிந்தியுங்கள். அப்பாவித்தனமாக இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பொய் வழக்கில் சிக்கி சீரழிந்துவிடாதீர்கள். பிறகு காவல் நீதித்துறைகளுக்கு லஞ்சம் கொடுத்து ஜாமின் வாங்க அலைந்துகொண்டிருக்கவேண்டும்.

Thursday, June 10, 2010

உயிரோடு இருக்கும்போதே சாகவேண்டுமா?

உயிரோடு இருக்கும்போதே சாகவேண்டுமா? கேள்வியே வித்தியாசமாக இருக்கிறதா? குழம்பிவிடாதீர்கள். நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தால் இதுபோன்ற விபரீதமான, வித்தியாசமான அனுவங்களை சந்திக்க நேரிடும். கீழுள்ள செய்தியைப் படியுங்கள்.

==============


18 ஆண்டுகளுக்கு பின் வரதட்சணை கொடுமை : மனைவி போலீசில் புகார்; கணவன் கைது
தினமலர் ஜூன் 10,2010

சென்னை : திருமணமாகி 18 ஆண்டுகளான பின்பும் மனைவியிடம் வரதட்சணை கேட்டு, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, வேளச்சேரி, தண்டீஸ்வரர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (48). இவரது மனைவி சாந்தி (43). ஸ்ரீதர், வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் வாங்கி தரும் ஏஜன்ட்டாக உள்ளார். இவர்களுக்கு, 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபகாலமாக ஸ்ரீதர், தனது மனைவியிடம் 5 லட்ச ரூபாய் வரதட்சணையாக, பெற்றோர் வீட்டிலிருந்து வாங்கி வருமாறு துன்புறுத்தி வருவதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கிண்டி போலீசில் சாந்தி புகார் அளித்தார். புகாரின் மீது வழக்கு பதிந்த போலீசார், ஸ்ரீதரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

==============

மேற்படி சம்பவம் உண்மையா அல்லது பொய்யா என்று தெரியவில்லை. ஆனால்
2008 ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்திலுள்ள மூலை முடுக்குகளில் உள்ள எல்லா காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கும் ஒன்பது கட்டளைகள் அடங்கிய ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. அதில் ஒரு பகுதி என்ன சொல்கிறதென்றால்:

i) Except in cases of Dowry Death/suicide and offences of serious nature, the Station House
Officers of the All Women Police Stations are to register F.I.R. only on approval of the Dowry Prohibition Officer concerned.

ii) Social workers/mediators with experience may be nominated and housed in the same
premises of All Women Police Stations along with Dowry Prohibition Officers.

iii) Arrest in matrimonial disputes, in particular arrest of aged, infirm, sick persons and minors, shall not be made by the Station House Officers of the All Women Police Stations.

iv) If arrest is necessary during investigation, sanction must be obtained from the
Superintendent of Police concerned by forwarding the reasons recorded in writing.

முழு அறிக்கையை இங்கே படிக்கலாம்.

சட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கை
(படித்து முடித்தவுடன் ஒரு பிரிண்ட் எடுத்து கையில் எப்போதும் வைத்திருங்கள்! ஆபத்துக்காலத்திற்கு உதவும்.)

மேலுள்ள உத்தரவுகள் உயர்நீதிமன்றத்தால் சொல்லப்பட்டாலும் வரதட்சணைப் புகார் என்றவுடன் கைது செய்யும் அவலநிலை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அதனால் இளைஞர்களே,

சட்டம், நீதி இவற்றையெல்லாம் காவல்துறையும் மதிக்காது, நீதிமன்றங்களும் மதிக்காது. அதனால் நான் நேர்மையானவன் நீதி என்னை எப்படித் தவறாக தண்டிக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை தவறு செய்பவர்களுக்கு தண்டனை கிடைக்காமல் போனாலும் போகலாம் ஆனால் அப்பாவிகளை பொய்வழக்கில் சிக்கவைத்து அந்த அப்பாவிகளை சட்டத்தின் துணையோடு சீரழிக்காமல் விடப்படுவதில்லை.

உதாரணத்திற்கு மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர் இன்றும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதே சமயம் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பீரங்கி ஊழலில் மாட்டியவரை பிடிக்கமுடியாமல் கடைசியில் அவர் ஒரு “அப்பாவி” என்று சமீபத்தில் இந்திய அரசாங்கம் விடுவித்துவிட்டது.

ஆனால், நீங்கள் நேர்மையாக வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்துவிட்டு நான் நேர்மையாக வாழ்கிறேன் என்று கனவுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது ஒரு பொய் வரதட்சணை வழக்கில் சிக்கினால் உடனடியாக சிறைவாசம்தான். இந்த வழக்கம் இன்றுவரை கொஞ்சம் கூட மாறவில்லை.

பொய் வரதட்சணை வழக்குகள் என்பது திருமணத்தின்போதோ அல்லது திருமணமாகி சில ஆண்டுகளிலோதான் வருகின்ற அபாயம் என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் உயிரோடு இருக்கும்வரை எப்போது வேண்டுமானாலும் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி உங்களைக் கொல்லத் தயாராக இருக்கிறார்கள். ஜாக்கிரதை!

இளைஞர்களே, நீங்கள்தான் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு பொய் வழக்குகள் எப்போது வருமோ என்ற அச்சமின்றி சந்தோஷமாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள்.

அல்லது,

உயிரோடு இருக்கும்போதே நான் சாகவேண்டும் என்ற விபரீதமான யோசனைகள் உங்களுக்கிருந்தால் கண்ணைத் திறந்துகொண்டே இந்தியத் திருமண தகனமேடையில் இறங்குங்கள்.

Tuesday, June 1, 2010

பெண்கள் கொடுக்கும் புகாரால் அப்பாவி ஆண்கள் பாதிப்பு: மாநில மகளிர் கமிஷன் தலைவி

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற பெயரில் அப்பாவிகள் துன்புறுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தான் பதவி வகிக்கும் துறையிலிருந்து இந்த உண்மையை வெளிப்படையாகசொல்லமுடியாமல் அதை மேலோட்டமாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார் தமிழக மகளிர் வாரியத் தலைவி. வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் உண்மை நிலையை உணர்ந்திருக்கும் அவரது நிலையை பாராட்டவேண்டும்.

இளைஞர்களே,

இந்தியாவில் ஆண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்பதை இதைவிட வெளிப்படையாக எப்படிச் சொல்ல முடியும். மகளிர் வாரியத் தலைவியே சொல்லும் அளவிற்கு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற பெயரில் அப்பாவிகளுக்கெதிராக அராஜகம் நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வது தான் உங்களுக்கு பாதுகாப்பானது.



பெண்கள் கொடுக்கும் புகாரால் அப்பாவி ஆண்கள் பாதிப்பு: மாநில மகளிர் கமிஷன் தலைவவி
தினமலர் 31 மே 2010


சென்னை: ""பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதில்லை. இது எனக்கு நெருடலாக இருக்கிறது'' என மாநில மகளிர் மேம்பாட்டு கமிஷன் தலைவர் சற்குண பாண்டியன் பேசினார்.

மாநில மகளிர் மேம்பாட்டு கமிஷனால் பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் உள்ள குடும்ப நல வழக்குகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை கலெக்டர் ஷோபனா, மாநில மகளிர் மேம்பாட்டு கமிஷன் தலைவர் சற்குண பாண்டியன், சமூக நலத்துறை கமிஷனர் நிர்மலா, காயத்ரிதேவி எம்.எல்.ஏ., வக்கீல் சங்கமித்ரா, பல்வேறு மகளிர் போலீஸ் நிலைய அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை கலெக்டர் ஷோபனாபேசுகையில்,"பெற்றோர், உறவினர் உழைப்பை எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதிக்க பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.

மாநில மகளிர் கமிஷன் தலைவர் சற்குண பாண்டியன் பேசுகையில்," குடும்ப வழக்கு தொடர்பான பிரச்னையில் போலீசாரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பெண்கள் புகார் கொடுக்கும்போது அவர்களை, கணவருடன் மீண்டும் சேர்த்து வைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். குடும்ப பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்லும்போது அவர்கள் கொடுத்த புகாரின் மீது உடனடியாக வழக்குப் பதியப்படுவதில்லை. வன்முறை தடுப்பு சட்டம் மூலம் பெண்கள் கொடுக்கும் புகாரால் அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பெண்கள் மீதும் குற்றம் சுமத்த முடியாது' என்றார்.

===================

வாரியத் தலைவி கூறுவது போல் ஒட்டுமொத்த பெண்கள் மீதும் குற்றம் சொல்ல முடியாது. ஆனால் ஒட்டுமொத்த தவறான சட்டங்களும், தவறான சட்டங்களை இயற்றியவர்களும், அதை கண்மூடித்தனமாக காசுக்காக செயல்படுத்துபவர்களும் துணை சேரும் போது ஒட்டுமொத்த பெண்களும் குற்றவாளிகளாகத்தான் மாறுவார்கள்.

சாக்கடையில் ஒரு துளி பாலை சேர்த்துவிட்டு அது இப்போதும் பால் தான். சாக்கடையோடு சேர்த்து எடுத்து அப்படியே பருகலாம் என்று சொல்வது போல்தான் இந்தக் கூற்று இருக்கிறது.

இளைஞர்களே,

ஒட்டுமொத்தப் பெண்களும் நல்லவர்களா? அல்லது ஒரு சில பெண்கள் மட்டும் நல்லவர்களா? பொய் கேசு கொடுக்கும் பெண் நல்லவரா? அல்லது கெட்டவரா? என்ற இந்த வீண் ஆராய்ச்சியெல்லாம் உங்களுக்குத் தேவையில்லை. இந்த ஆராய்ச்சி செய்வதற்குள் உங்களது ஆயுள் முடிந்துவிடும். அதனால் வெளிநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். அது தான் புத்திசாலித்தனம்.

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று!