பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, June 24, 2013

உளுந்தூர்பேட்டை வெங்கடேசனின் வழியை பின்பற்றினால் இந்திய இளைஞர்கள் மானத்தோடு வாழலாம்

இளைஞர்களே,
 உங்களது வாழ்க்கை நல்ல முறையில் அமைந்து உங்களது பெற்றோர் மகிழ்ச்சியுடன் இருக்க உளுந்தூர்பேட்டை வெங்கடேசன் வழியை பின்பற்றி வேறு நாட்டு பெண்ணை திருமணம் செய்துகொள்ளுங்கள்.   இந்தியாவில் திருமணம் செய்தால் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி உங்களை பெற்றவர்கள் சிறைக்குத்தான் செல்வார்கள்.  ஏன் என்று தெரிந்துகொள்ள இந்த குமுதம் ஸ்பெஷல் ரிப்போர்ட்டை  படியுங்கள்.  உங்களது வாழ்க்கை காவல், நீதித்துறையின் கைகளில் சிக்கி சிதைந்துவிடும் (எப்படி என்று தெரிந்து கொள்ள இங்கே சென்று பாருங்கள்:  இந்தியத் திருமணத்தால் சிதைந்துபோன இளைஞர்கள்.   புத்தியுள்ள இளைஞர்கள் பிழைத்துக்கொள்வார்கள்.

உளுந்தூர்பேட்டை:சீன பெண்ணை, இந்து முறைப்படி, தமிழக வாலிபர், தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தொப்பையன்குளத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன்; விவசாயி. இவரது மகன் வெங்கடேசன், 29; கேட்டரிங் படித்தவர். 6 ஆண்டுகளுக்கு முன், சீன நாட்டில், குவைஹவா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மின்ஹால்-குவாயின் மகள் ஷியாகுவ்வா, 28, என்பவரை காதலித்தார். கடந்த ஆண்டு ஏப்., 6ம் தேதி, பதிவுத் திருமணம் செய்து கொண்டு, இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, வெங்கடேசனின் பெற்றோர், இந்து முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என, வேண்டுகோள் வைத்தனர். அதையேற்ற வெங்கடேசன், ஷியாகுவ்வாவுடன், தொப்பையான்குளம் வந்தார்.
நேற்று காலை, 7:15 மணிக்கு, ஷியாகுவ்வா கழுத்தில், வெங்கடேசன் தாலி கட்டினார். மணப்பெண், கீழே உட்கார்ந்து பழக்கமில்லாத மணமகள், மண நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.

வெங்கடேசன் கூறுகையில், "சைனீஸ் மொழி சரளமாகவும், ஆங்கிலம், ஹிந்தி கொஞ்சமாகவும் பேச தெரியும். சீன பெண்ணை மணந்ததால், என் பெற்றோர் வருத்தப்பட்டனர். இருப்பினும், பெருமை தெரிவித்தனர்.
பெண்ணுக்கு, சீன மொழி மட்டுமே தெரியும். அதனால், உறவினர்களுடன் பேச முடியவில்லை. அது தான் வருத்தமாக உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.


Tuesday, June 18, 2013

உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் வேறு நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகும் இந்திய இளைஞர்கள்

இந்திய இளைஞர்கள் தற்போதைய தொழில் நுட்பம் முதல் டாஸ்மாக் சரக்கு ரகசியம் வரை எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.  ஆனால் இந்தியாவில் திருமணம் செய்தால் இந்தியாவிற்குள் நுழைய முடியாமல் வேறு நாட்டில் அகதியாக வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்ற விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

கலப்புத்திருமணம் செய்ததால் தாங்கள் இந்தியாவிற்கு சென்றால் தங்களை அரசியல் செல்வாக்கு மிக்க பெற்றோர்கள் போலிஸ் துணையோடு இந்தியாவில் கொன்றுவிடுவார்கள் என்று ஒரு  இளைஞர் ஆஸ்திரேலிய நாட்டில் முறையீடு செய்து இந்தியாவில் குடிமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆஸ்திரேலிய நாட்டில் அகதியாக மாறிவிட்டார் என்று செய்தி வந்திருக்கிறது.

இந்த செய்தியை படித்ததும் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.  ஆனால் அதைவிட அதிர்ச்சியான செய்தி ஒன்று இருக்கிறது.  இது பலருக்கும் தெரியாது ஆனால் இந்திய அரசாங்கம் உட்பட எல்லா நாடுகளுக்கும் தெரியும்.  அது என்னவென்றால் இந்தியாவில் திருமணம் செய்து வெளிநாடுகளில் தங்கள் திறமை மூலம் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்கள் மீது இந்தியாவில் ஒரு மூலையில் காவல்நிலையத்தில் பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞர்களையும், அவரது குடும்பத்தையும் மிரட்டி பணம் பறிக்கும் இழி செயல் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. 

இதுபோன்ற சிக்கலில் சிக்கும் பல இளைஞர்கள் இந்தியாவிற்குள் நுழைய முடியாமல் அவர்கள் இருக்கும் நாடுகளிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இவர்களால் தங்கள் வீட்டு இன்ப துன்ப நிகழ்ச்சிகளுக்கு இந்தியாவிற்குள் வர முடியாது.  அப்படி இந்தியாவிற்குள் வந்தால் பொய் வரதட்சணை வழக்கை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கும் காவல்துறையும், நீதித்துறையும்  கைகோர்த்துக்கொண்டு இந்த இளைஞர்களின் வாழ்க்கையை சின்னாபின்னம் செய்துவிடுகிறார்கள்.  இவர்களின் எதிர்காலம்  பிறகு மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிடும். 

இந்த விஷயத்தை உங்களால் நம்ப முடியவில்லையென்றால் இந்தியாவில் திருமணம் செய்ததால் வெளிநாடுகளில்  அகதிகளாக வாழும் இளைஞர்களின் மரண ஓலத்தை இந்த இணையதளத்தில் சென்று பாருங்கள்  Forums - 498a ORG



தினமலர் 17 ஜூன் 2013

மெல்போர்ன்:பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, கலப்புத் திருமணம் செய்த தம்பதி, ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க, அந்நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்து உள்ளது.

கலப்பு திருமணம்பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய வாலிபரும், இந்துப் பெண்ணும், 2007ல், காதலித்து, திருமணம் செய்து கொண்டனர்.
தங்கள் காதல் விவகாரத்தை வீட்டில் சொன்னால், பெற்றோர் தங்களை பிரித்து விடலாம் அல்லது கவுரவக் கொலை செய்துவிடலாம் எனக்கருதிய இருவரும், ரகசிய திருமணம் செய்து கொண்ட பின், 2008ல், ஆஸ்திரேலியாவிற்குச் சென்றனர்.

நீட்டிப்பு
இந்நிலையில், அங்கு ஐந்து ஆண்டுகள் வசித்த இருவரது விசா காலம் முடிந்த நிலையில், "இந்தியாவிற்குச் சென்றால், தங்களை கவுரவக் கொலை செய்துவிடுவார்கள் எனவே, விசா காலத்தை நீட்டிக்க வேண்டும்' என, குடியுரிமைத் துறை அதிகாரிகளிடம் மனு செய்தனர்.இருப்பினும், அவர்களது மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

பின், "தங்களை அகதிகளாகக் கருதி, ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி அளிக்க வேண்டும்' என, அகதிகள் மறு ஆய்வு தீர்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், "இந்த தம்பதி, தங்கள் சொந்த மாநிலமான, பஞ்சாபைத் தவிர்த்து, மும்பை, டில்லி போன்ற பெரிய நகரங்களில் வசிக்க வாய்ப்புள்ளது' என, கூறி, மனுவை நிராகரித்தது. ஆனால், "என் தந்தைக்கு அரசியல் மற்றும் போலீசில் செல்வாக்கு உள்ளதால், அதனைப் பயன்படுத்தி, எங்களைப் பிரித்துவிடுவார் அல்லது கொலை கூட செய்துவிடுவார்' என, பஞ்சாப் வாலிபர் வாதாடினார்.

அனுமதி
பின், கேன்பராவில் உள்ள, "பெடரல்' கோர்ட்டில், தீர்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து, இந்த தம்பதி அப்பீல் செய்தனர்.  இந்த மனுவை விசாரித்த பெடரல் கோர்ட், "இந்திய தம்பதி ஆஸ்திரேலியாவில் தாராளமாகத் தங்கலாம், தீர்ப்பாயம், தன் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது. இருப்பினும், பெடரல் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, ஆஸ்திரேலிய அதிகாரிகள், அப்பீல் செய்ய உள்ளனர்.


Monday, June 10, 2013

மனைவியுடன் உறவு கொள்ளாமல் இருப்பது குற்றச் செயலாகும் - கேரள உயர்நீதிமன்றம்

திருமணம்  என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் கூத்துக்களில் இதுவும் ஒரு வகை! 

மனைவி உறவு கொள்ள விரும்பினால் கணவன் கண்டிப்பாக உறவு கொள்ள வேண்டும்.  இதற்கு கணவன் மறுத்தால் அது  சட்டப்படி குற்றமாகும்.  ஆனால் மனைவிக்கு விருப்பமில்லாமல் கணவன் உறவு கொள்ள விரும்பினால் அது  மனைவியை கணவன் பாலியல் பலாத்காரம் செய்த குற்றமாக கருதப்படுகிறது!
பின்வரும் செய்தியில் மனைவி உறவு கொள்ள விரும்பி கணவன் மறுத்துவிட்டது குற்றமாகும் என்று கூறி இதனால் மனைவிக்கு மனம், உடல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறி உறவுக்கு உதவாத கணவன் தேவையில்லை என்று விவாகரத்து வழங்கியிருக்கிறார்கள்.

தற்போது இந்தியாவில் பரவலாக பரவியிருக்கும்  இளம் மனைவியரின் பொய் வரதட்சணை வழக்குகளால் பல திருமணங்கள் சிதைந்து கணவனும் மனைவியும் விவாகரத்து இல்லாமல் தனியே பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

இந்த பிரிந்து வாழும் ஜோடிகளில் கணவன் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து வேண்டும் நான் வேறு திருமணம் செய்து கொண்டு முறையாக உறவினை அனுபவிக்கவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தால் விவாகரத்து வழங்கப்படுவதில்லை.  அதே சமயம் தனியே வாழும் மனைவிக்கு  பராமரிப்பு என்ற பெயரில் கணவன் மாதந்தோறும் பணம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 

ஆனால் வாங்கும் பணத்திற்கு கணவன் விரும்பும் உறவு மனைவியிடமிருந்து கிடைப்பதில்லை.  அதாவது மனைவியாக நடந்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு மனைவி என்ற பெயரில் கணவன் பணம் கொடுக்க வேண்டும், தனது சொத்துக்களில் பங்கு கொடுக்க வேண்டும்.  ஆனால் கணவன் விரும்பும் இல்லற சுகம் மட்டும் கிடைக்காது!!!

சட்டப்படி குற்றம் என்பதால் விலைமாதர்களை நாடமுடியாமலும், விவாகரத்து கிடைக்காததால் வேறு திருமணம் செய்ய முடியாமல் நேர் வழியிலும் இல்லற சுகத்தை அனுபவிக்க முடியாமலும் இருக்கும் கணவர்கள்  இல்லற சுகத்தை கொடுக்காத மனைவிக்கு நீதிமன்ற உத்தரவினால் மாதந்தோறும் பணம்  கொடுக்கவேண்டியிருக்கிறது.  இப்படி பணம் கொடுத்துக் கொண்டிருக்கிற கணவர்களுக்கு தங்கள் மனைவியிடமிருந்து தங்களுக்கு முறைப்படி கிடைக்கவேண்டிய உறவு கிடைக்காதபோது மனநல மற்றும் உடல் நல  பாதிப்புகள் ஏற்படாதா??? 

மனைவியுடன் உறவு கொள்ளாத கணவன் விவாகரத்தை உறுதி செய்தது ஐகோர்ட்
                                                             ஜூன் 10,2013 தினமலர்

கொச்சி:திருமணம் முடிந்து, மூன்றாண்டுகளாக, "செக்ஸ்' உறவு வைத்துக் கொள்ளாத கணவரிடம் இருந்து மனைவி பெற்ற விவாகரத்தை, கேரள ஐகோர்ட் உறுதி செய்தது.

கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்தவர், சஞ்ஜன். நான்கு ஆண்டுகளுக்கு முன், முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்தார். சஞ்ஜனின் மனைவி, கணவர் தன்னுடன், செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில்லை எனக் கூறி, குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி, வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வழங்கினார். இதை எதிர்த்து, அந்த நபர், கேரள ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

முஸ்லிம் திருமண சட்டப்படி, கோர்ட்டில் விவாகரத்து பெற்றது செல்லாது எனக் கூறி, மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த, நீதிபதி, பி.டி.ராஜன் தலைமையிலான பெஞ்ச், சஞ்ஜனின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, குடும்ப நல கோர்ட்டின் தீர்ப்பையும் உறுதி செய்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:  திருமணத்திற்குப் பின், மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்யாமல், குடும்ப பொறுப்புகளை ஏற்காமல் இருந்தால், அந்த திருமணத்தை ரத்து செய்யலாம் என, முஸ்லிம் திருமணச் சட்டம் தெரிவிக்கிறது. மனைவியின் விருப்பத்திற்குப் பிறகும், செக்ஸ் வைத்துக் கொள்ளாதது, குற்றச்செயலாகும். இதனால், அந்த பெண்ணுக்கு, உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சஞ்ஜனின் மனுவை தள்ளுபடி செய்வதோடு, குடும்ப நல கோர்ட் கொடுத்த தீர்ப்பை, உறுதி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

Sunday, June 9, 2013

தனிக் குடித்தனம் வர மறுக்கும் கணவனுக்கு குடும்பத்தோடு ஓராண்டு சிறை! சம்மதமா?

இந்தியத் திருமணத்தில் இருக்கும் பல ஆபத்துக்களில் இதுவும் ஒரு வகை!


இளம் பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினருக்கு சிறை
 
ஜூன் 09,2013 தினமலர்

கோவை: இளம்பெண் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கணவர், அவரது தம்பிகள் உள்ளிட்ட மூவருக்கு, தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், மாமியாருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் வழங்கி, கோவை மகளிர் கேர்ட் தீர்ப்பளித்தது.

சேலம், ஆத்தூரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 26. இவருக்கும், கோவை ரத்தினபுரியில் மளிகை கடை நடத்தும் செல்வகுமாருக்கும், கடந்த 2003ல் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. சில ஆண்டுகளில், தனி குடித்தனம் செல்ல வேண்டும் என, கணவரிடம் உமா கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த கணவர் குடும்பத்தினர், "தனி குடித்தனம் செல்ல வேண்டுமென்றால், பெற்றோரிடம் நகை மற்றும் ரொக்கம் வாங்கி வர வேண்டும்' என்று வற்புறுத்தினர். மனமுடைந்த உமா மகேஸ்வரி, 2007, ஆக., 23ம் தேதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவரது சாவில் சந்தேகம் அடைந்த இவரது சகோதரர் வெள்ளை விநாயகம், கோவை போலீசில் புகார் செய்தார். ரத்தினபுரி போலீசார் விசாரித்து, இளம் பெண் சாவுக்கு காரணம் என, குற்றம் சாட்டப்பட்ட கணவர் செல்வகுமார், மாமியார் பார்வதி, கணவரின் சகோதரர்கள் செல்வராஜ், ஜெயராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சரோஜினி ஆஜரானார். 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், குற்றம் சாட்டப்பட்ட கணவர் மற்றும் அவரது தம்பிகள் இருவருக்கும், தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மாமியார் பார்வதிக்கு ஆறு மாதம் சிறையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பு கூறினார்.