பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, September 1, 2014

திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?

இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல அப்பாவி குடும்பங்கள் சிதைக்கப்படுகின்றன.  பல அப்பாவி இளைஞர்களின் எதிர்காலம் இருளில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

இதனை சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றமும் சுட்டிக் காட்டியிருக்கிறது.  இந்த ஆபத்தான் சூழலில் தமிழக இளைஞர்  ஒருவர் சரியான முடிவெடுத்து வேறு நாட்டு பெண்ணை திருமணம் செய்து தனது வாழ்க்கையை செம்மையாக்கிக் கொண்டு இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தையும் பொய் வழக்குகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.  அவரை பாராட்டி வாழ்த்துவோம். 

செப்டம்பர் 01,2014
திருக்கோவிலுார்:அர்மேனிய பெண்ணை, தமிழக வாலிபர், இந்துமத சடங்குபடி, திருமணம் செய்தார்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மணிவண்ணன்; பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். ரஷ்யாவில் இருந்து பிரிந்த அர்மேனியாவைச் சேர்ந்தவர் மேனி. இவர் அமெரிக்காவில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழி வல்லுனராக உள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். நேற்று காலை, திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், இந்து முறைப்படி தாலி கட்டி, திருமணம் நடந்தது. விழாவில், மணப்பெண்ணின் பெற்றோரும் பங்கேற்றனர்.


Saturday, August 30, 2014

திருமணம் செய்ய இந்திய ஆண்கள் தகுதியானவர்களா?

தினமலர்  28.8.2014

மதுரை: ஆண்மைக் குறைபாடு, மலட்டுத் தன்மையால் பல திருமணங்கள் தால்வியடைகின்றன. இதுபோன்ற திருமணங்களை தடுக்க திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியமா? இல்லையா? இக்கடுமையான பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் எத்தகைய நடவடிக்கை எடுக்க உள்ளன? என கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட் கிளை, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

போடியைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும், திருச்சியைச் சேர்ந்த எம்.எஸ்.சி., படித்த பெண்ணிற்கும் 2013 ஜூன் 19 ல் திருமணம் நடந்தது. கணவருக்கு ஆண்மைக் குறைபாடு இருந்ததால், அவரால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு காட்ட முடியவில்லை. இதனால், விவாகரத்துக் கோரி திருச்சி கோர்ட்டில், மனைவி மனு தாக்கல் செய்தார்; வழக்கு நிலுவையில் உள்ளது.  குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ், அப்பெண் மாவட்ட சமூகநலத்துறை அலுவலரிடம் புகார் செய்தார். அந்த விசாரணை நடைமுறைகளுக்கு தடைகோரி, கணவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவு

இன்றும் கூட பெண் குழந்தைகளை சுமையாக, சமுதாயம் கருதுகிறது. இதனால்தான் மணமகன் பற்றி சரியாக விசாரிக்காமல், பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். இது தீவிரத் தன்மை கொண்ட வழக்கு. இவ்வழக்கில் உள்ள விஷயம், சமுதாயப் பிரச்னை சார்ந்தது.
தற்போது, பல்வேறு விவாகரத்து வழக்குகளில் ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை முக்கிய பிரச்னையாக உள்ளது. இதைக் கருதியே, கோர்ட் தீவிர கவனம் செலுத்துகிறது.

சமுதாயத்தில் குடும்ப அமைப்பு மிக முக்கியம். அது சரியாக இல்லையெனில், சமுதாயத்திற்கே ஆபத்து. குடும்ப அமைப்பிற்கு ஆபத்தாக அமைவது ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை. பெற்றோர் உண்மைகளை மறைத்து, திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணம் முடிந்த பின் சம்பந்தப்பட் ஆணும், பெண்ணும் சமுதாயத்திற்குப் பயந்து வெளியில் சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முறையாமல் தவிக்கின்றனர்.

இவ்வழக்கில், பிரச்னையே ஆண்மைக் குறைபாடுதான். அது மறைக்கப்பட்டுள்ளது. சென்னை குடும்பநல கோர்ட் புள்ளிவிபரப்படி 2009 ல் 88, 2010 ல் 272, 2011 ல் 388, 2012 ல் 557, 2013 ல் 715 என ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை காரணமாக விவாகரத்து பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருமணம் ஆனபின் ஒருவரின் இயலாமையால், மற்றொருவர் பாதிக்கப்படுகிறார். அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. இதுபோன்ற துன்பங்களை தவிர்க்கலாம். ஆண்மைக் குறைபாடு உள்ளதை யாரும் வெளிப்படுத்துவதில்லை. இப்பிரச்னையை மேலும் வளரவிடாமல் தடுப்பது அவசியம். இல்லையெனில், பெண்களின் வாழ்க்கை பாழாகும். பலர் மனமுடைந்து தற்கொலை செய்கின்றனர். இதை அவசர கதியில் தடுக்க சிறந்த வழியாக, திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யலாம். ஆண்மைக் குறைபாடு, எய்ட்ஸ், எச்.ஐ.வி., உள்ளதை கண்டறிந்து, திருமணத்தை தடுக்கலாம். இப்பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஆண்மைக் குறைபாடு, மலட்டுத் தன்மையால் பல திருமணங்கள் தோல்வியடைகின்றன. இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் வகையில், பிரச்னையின் தன்மையை மத்திய, மாநில அரசுகள் அறிந்துள்ளனவா? இதுபோன்ற திருமணங்களை தடுக்க திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியமா? இல்லையா?

ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை சம்பந்தமான வழக்குகளுக்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டிற்குள் தீர்வுகாணும் வகையில், திருமண சட்டங்களில் மத்திய அரசு ஏன் திருத்தம் செய்யக்கூடாது? பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, உண்மையை மறைப்பவர்
களுக்கு தண்டனை ஏன் வழங்கக் கூடாது?

இக்கடுமையான பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் எத்தகைய நடவடிக்கை எடுக்க உள்ளன? மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர், மத்திய சட்டக் கமிஷன் செயலாளர், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளரை எதிர்மனுதாரர்களாக இணைத்துக்கொள்ள, ஐகோர்ட் தானாக முன்வந்துஉத்தரவிடுகிறது. அவர்கள் செப்.,5 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

சன் டிவியின் விவாத மேடை


Tuesday, June 24, 2014

கேட்க ஆளில்லாமல் கேவலப்படும் இந்திய ஆண்கள்

இந்தியாவில் பெண்களின் நலனை பாதுகாக்க தேசிய மகளிர் வாரியம், மத்திய பெண்கள் நல அமைச்சகம், மாநில பெண்கள் நல வாரியம், மற்றும் பல NGO அமைப்புகள் இருக்கின்றன.  ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் பெண்களுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளையும் செய்து தருகின்றன அரசாங்கங்கள்.  ஆண்களைப் பற்றி கவலைப்பட யாருமே இல்லை.  அதனால் இந்தியாவில் ஆண்களுக்க எதிராக சட்ட துஷ்பிரயோகம் எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கின்றன.  இன்று நான், நாளை நீ.......இது ஒவ்வொரு இந்திய ஆணுக்குமான எச்சரிக்கை.

ஜூன் 24,2014 தினமலர்
போபால்: மத்திய பிரதேசத்தில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தில், 'என் மனைவி என்னை கொடுமைப்படுத்துகிறாள்; என்னை காப்பாற்றுங்கள்' என, ஏராளமான ஆண்கள் புகார் அளிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக, மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்பின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை, பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், கடந்த வாரம் துவக்கி வைத்தார். பலாத்காரங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவையான மருத்துவ வசதி, போலீஸ் உதவி, சட்ட உதவி ஆகிய அனைத்து வசதிகளும், இந்த மையத்தில் கிடைக்கும்.
பாதிக்கப்படும் பெண்கள், சிகிச்சை பெறுவதற்கும், புகார் அளிப்பதற்கும், சட்ட உதவி பெறுவதற்கும், அங்கும் இங்கும் அலைந்து திரிவதைத் தடுப்பதற்காக, இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்த மையத்தில் டாக்டர்கள், போலீசார், வழக்கறிஞர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். பல பெண்கள், இந்த உதவி மையத்தை தொடர்பு கொண்டு, பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, ஆண்களிடமிருந்தும், உதவி கோரி இந்த மையத்துக்கு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் பேசும் ஆண்கள், 'என் மனைவி கொடுமைப்படுத்துகிறாள்; அவளிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்; விவாகரத்து வாங்கித் தாருங்கள்' என்கின்றனர். இதனால், உதவி மையத்தில் உள்ளவர்கள், தர்மசங்கடத்துக்கு ஆளாகியுள்ளனர்.


Saturday, April 12, 2014

இந்திய ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தொலைபேசி எண்


இந்தியாவில் அப்பாவி ஆண்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் எதிராக நடந்து கொண்டிருக்கும் “சட்ட தீவிரவாதம்” என்னும்  பொய் வரதட்சணை வழக்குகள், பொய் குடும்ப வன்முறை வழக்குகள், பொய் கற்பழிப்பு வழக்குகள் போன்றவற்றில் சிக்கி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கும்போது பிணந்திண்ணும் கழுகு போல காவல் நண்பர்கள், சட்ட நண்பர்கள்  எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்று பல ஆயிரங்கள், லட்சங்கள்  என பணம் பறிக்க முயற்சி செய்வார்கள்.

இது போன்று இந்திய சட்ட தீவிரவாதத்தால் திக்குத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவி செய்ய Save Indian Family Foundation – SIFF என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலவச உதவி தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்திருக்கிறது.  குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.  கண்டிப்பாக உங்கள் வாழ்நாளில் தேவைப்படும்.  ஏனென்றால் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு ஆணின் தலைமேலும் பொய் வழக்கு என்ற கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.  இது என்று தலையில் விழும் என்று தெரியாது.  அதுவரை ஏதோ சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றும். ஆனால் கண்டிப்பாக ஒருநாள் அந்த கத்தி உங்கள் தலையை பதம் பார்த்துவிடும் என்பது உறுதி.




Monday, March 3, 2014

ஆண்களை தற்கொலை செய்துகொள்ள கட்டாயப்படுத்தும் நாடு!

இளைஞர்களே,

இந்தியத் திருமணம் என்பது  ஊழல்மிக்க காவல்துறை, நீதித்துறை, ஒருதலைபட்சமாக செயல்படும் அரசாங்கம் என்ற கழுகுகளும், ஓநாய்களும், குள்ள நரிகளும் வட்டமிடும ஒரு பாழுங்கிணறு என்று உணர்ந்துகொள்ளுங்கள்.  நீங்கள் இந்தியத் திருமணம் என்ற விபத்தின் மூலம் அந்தக்கிணற்றுக்குள் விழும்போது பொய் வரதட்சணை வழக்கு என்ற ஆயுதங்கள் மூலம் உங்களை தாக்கி உங்களது ரத்தத்தை உறிஞ்சி நடைபிணமாக மாற்றிவிடுவார்கள்.