பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, February 25, 2011

கர்ப்பிணியின் கருவறுத்த காவல்துறை - இந்திய வரதட்சணை வழக்குகளின் உச்சகட்டம்

பொய் வரதட்சணை வழக்குகளில்அதிகாரத்தைப் பயன்படுத்தி அப்பாவிகளுக்கெதிராக குற்றங்களை இழைப்பது என்பது சர்வசாதாரணமாக நாட்டில் நடந்துகொண்டிருக்கின்ற விஷயம். இதுபோன்ற இன்னல்களில் நீங்கள் சிக்கிக்கொள்வதற்கு நீங்களே உங்களுக்குப் போட்டுக்கொள்ளும் தூண்டில்தான் தகனமேடை என்று சொல்லப்படும் “இந்தியத் திருமணங்கள்”.

இந்தியாவில் திருமணம் செய்து நீங்கள் பொய் வழக்குகளில் சிக்கிக்கொள்வதே மிகவும் கொடுமையாகும். இந்தக்கொடுமைகளில் உங்கள் குடும்பத்திலுள்ள பெண்கள், வயதான பெற்றோர்கள், குழந்தைகள் என அனைவரையும் சிக்கவைத்துவிடாதீர்கள்.

இதுபோன்ற அட்டூழியங்களில் அதிகபட்சமாக 2 மாத பெண் குழந்தையை பொய் வரதட்சணை வழக்கில் சிறைப்பிடித்தது மும்பை காவல் துறை. அந்தக் குழந்தைக்கு ஜாமின் கொடுத்து தன்னை பெருமைப் படுத்திக்கொண்டது மும்பை நீதிமன்றம் அதை இந்த வீடியோவில் பாருங்கள்.



இப்போது ஆந்திர மாநில காவல்துறை தமிழ்நாட்டிற்குள் புகுந்து பொய் வரதட்சணை வழக்கிற்காக கர்ப்பிணிப் பெண்ணை கைது செய்து இரண்டு மாத கருவை அழித்து காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. கருவிலேயே கொல்லப்பட்ட சிசுவிற்கு நீதி வழங்கப்போவது யார்?


Click and Read

மேலுள்ள செய்தியைப் படித்த பிறகு பின்வரும் செய்தியையும் படியுங்கள். இந்திய உச்ச நீதிமன்றக் கட்டளைகள் எப்படி காற்றில் பறக்கிறதென்று தெரியும்.



தினமலர் டிசம்பர் 21,2009

மதுரை : ஒருவரை போலீசார் கைது செய்யும்போது, 11 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காததால், போலீசார் தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்குகின்றனர்.

1. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.
- ஆனால் மதுரையில் எந்தஅதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்ததாக தெரியவில்லை.


2. கைது செய்தவுடன், அங்கேயே "கைது குறிப்பு' தயாரிக்க வேண்டும்.
- சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வது இல்லை. லஞ்ச வழக்கில் மட்டும் சம்பவ இடத்தில் கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.


3. கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக் கின்றனர்.


4. கைது செய்த விபரத்தை 12 மணி நேரத்திற்குள் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
-"விசாரணை' என்ற பெயரில், போலீசார் தகவல் தெரிவிப்பதில்லை. இதனால் ஐகோர்ட்டில், போலீசிற்கு எதிராக "ஆட்கொணர்வு மனுக்கள்' தாக்கல் செய்வது அதிகரிக்கிறது.


5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு, என்பதை கைதானவருக்கு தெரிவிக்க வேண்டும்.
- இந்த நடைமுறை போலீசிற்கு தெரிந்தாலும், "கைது செய்த விபரம் வெளியே தெரிந்துவிடும்' என்பதற்காக, கைதானவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படுவதில்லை.


6. காவலில் உள்ள இடத்தில், கைது விபரம், கைது குறித்த தகவல், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பதை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
- பல ஸ்டேஷன்களில் இதை பின்பற்றுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிவிக்கின்றனர்.


7. கைதானவரின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும்.
- போலீசாரின் "கவனிப்பில்' காயம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மற்றபடி, கைதானவருக்கு ஸ்டேஷனே கதி.


8. கைதானவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
- இந்த நடைமுறையை பின்பற்றாததால்தான் "லாக்கப் மரணம்' நிகழ்கிறது.


9. கைது குறித்த ஆவணங்களை குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.
- கோர்ட் கண்டிப்பிற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக இந்நடைமுறையை மட்டும் போலீசார் பின்பற்றுகின்றனர்.


10. கைதானவரை விசாரிக்கும்போது வக்கீல் உடன் இருக்க வேண்டும்.
-பிரச்னைக்குரிய வழக்குகளில் மட்டும் வக்கீல்களைஉடன்இருக்க அனுமதிக்கின்றனர்.


11. கைது பற்றிய தகவலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
- இதை போலீசார் எப்போதும் பின்பற்றுவதே கிடையாது. இந்த உத்தரவுகளை அனைத்து ஸ்டேஷன்களிலும் வைக்க வேண்டும், என்றும் உத்தரவிடப்பட்டது. கோர்ட் உத்தரவை பின்பற்றாமல் இருந்தால், "கோர்ட்டை அவமதிப்பதற்கு சமம்' என்று தெரிந்தும் உத்தரவுகளை மீறுகின்றனர்.


இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்தால் உங்கள் உயிருக்கோ, உங்களின் குடும்பத்திலுள்ளவர்களின் உயிருக்கோ உத்திரவாதம் கிடையாது. எந்த காரணத்திற்காகவும் எப்போது வேண்டுமானாலும் பொய் வரதட்சணை வழக்குகள் உங்கள் மீது ஏவிவிடப்படலாம். எல்லாம் சட்டப்படிதான் நடக்கும் என்று பகல் கனவு காணாதீர்கள். இந்த செய்திகளைப் படித்தபிறகாவது இந்தியத் திருமணத்தில் இருக்கும் ஆபத்துக்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி பெறுங்கள்.
=======


Tuesday, February 15, 2011

“டார்ச்சர்” செய்யும் இந்திய மனைவியிடம் சிக்கியிருக்கும் ஆண்கள்!

நாட்டு நடப்புத் தெரியாமல் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு பல ஆண்கள் “இந்தியத் திருமணம்” என்ற இரும்புப் பெட்டிக்குள் அடைபட்டு ஒருதலைபட்சமான மனைவியர் பாதுகாப்பு சட்டங்கள், பொய் வரதட்சணை வழக்குகள் என்ற சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆண்களைப் பொறுத்தவரை இந்தியத் திருமணத்திற்குள் நுழைவதும் தகனமேடைக்குள் நுழைவதும் ஒன்றுதான். இரண்டுமே ஒருவழிப்பாதைபோன்றது. உள்ளே சென்றபிறகு மீண்டுவரவே முடியாது. இதுபோன்ற சிக்கல்களில் சிக்கிக்கொண்டால் எப்படி அவதிப்படநேரிடும் என்று பின்வரும் செய்தியைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மனைவி "டார்ச்சர்'' தாங்க முடியவில்லை: கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயற்சி
தினமலர் பிப்ரவரி 15,2011

ஈரோடு: "மனைவியின், "டார்ச்சர்' தாங்க முடியவில்லை' என, கூறி, கலெக்டர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சவுண்டையா தலைமையில் நடந்தது. மதியம் 12.45 மணிக்கு, பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (40), கலெக்டர் அலுவலகம் வந்தார். பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் கூச்சலிட்டனர். போலீசார் ஓடிவந்து, செல்வராஜிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். அவரது தலையில் தண்ணீர் ஊற்றி, கைது செய்தனர்.

நிருபர்களிடம் அவர் அழுதுகொண்டே கூறியதாவது: பவானியில் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்க்கிறேன். 1995ல் எனக்கும், பொம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கும் திருமணம் நடந்தது. எங்களது ஒரே பெண் குழந்தை ஆறாவது படிக்கிறாள். திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை; மற்றொருவருடன் தொடர்பு வைத்திருந்தார். இது தொடர்பாக கேட்டால், என்னை, "டார்ச்சர்' செய்வார்.

சமீபகாலமாக, என் மனைவியும், மகளும் என்னுடன் இல்லை. என்னிடம் ஜீவனாம்சம் கேட்டு, என் மனைவி ஸ்ரீதேவி துன்புறுத்துகிறார். ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். என்னை விசாரித்த போலீசார், சரமாரியாக தாக்கினர். ஜீவனாம்சம் தருவதற்கு என்னிடம் ஏதுமில்லை; எதற்காக என்னை பல ஆண்டுகளாக, "டார்ச்சர்' செய்கின்றனர் என்றே தெரியவில்லை. அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என, அலைகிறேன். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக தெரியவில்லை. இதனால்தான் மன உளைச்சல் அடைந்தேன்; கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ளலாம் என வந்தேன். அதற்குள் போலீசார் பிடித்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இச்சம்பவம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

====

இளைஞர்களே,

மேலுள்ள செய்தியிலிருப்பதுபோல உங்கள் வாழ்வு திசைதெரியாமல் தொலைந்து போகாமலிருக்கவேண்டுமானால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். இந்தியத் திருமணச் சட்டங்கள் ஒருபோதும் ஆண்களை ஒரு உயிரியாகவே பொருட்படுத்தியதில்லை.

மனைவி தவறிழைத்தாலும் அவளுக்குச் சாதகமாக கணவனை தண்டிக்கும் விதத்தில் பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் மனைவி கணவனுக்கெதிராக குற்றம் இழைத்தால் தவறிழைக்கும் மனைவியை தண்டிப்பதற்கோ அல்லது குறைந்தபட்சம் கணவனை பாதுகாப்பதற்கோ இதுவரை எந்த சட்டமும் இந்தியாவில் இயற்றப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொண்டால் இந்தியத் திருமணம் எவ்வளவு ஆபத்தானது என்று புரியும்.



இதுபோன்ற இந்தியத் திருமணம் என்ற தகனமேடையில் சிக்கி மனதிற்குள்ளேயே அழுதுகொண்டிருக்கும் பல அப்பாவி இளைஞர்களின் மனக்குமுறல்களை வெளியுலகத்திற்குக் காட்டுவதற்காக திரைப்படத்துறை முன்வந்திருக்கிறது. இந்திய சட்டங்கள் இதுவரை அப்பாவி ஆண்களை கண்டுகொள்ளவில்லை. இந்த திரைப்படத்திற்குப் பிறகாவது விழிப்புணர்ச்சி ஏற்படுகிறதா என்று பார்ப்போம். எது நடந்தாலும் நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்யலாம் என்ற தவறான எண்ணத்தை மட்டும் வளர்த்துக்கொள்ளாதீர்கள்!

The Times of India

Shooting begins for '498A - The Misuse'

Sameer Sinha will begin shooting his bilingual, '498A — The Misuse' , with Romit Raj, Kanchana Moitra, Moubani Sorcar and Sania Chaudhury

In recent times, some online forums had debated the need of a film that speaks about the misuse of IPC-498 A. The latest news is that a bilingual film on this subject is being made out of Kolkata. Titled "498A — The Misuse", the film will highlight the way some women in urban India are taking refuge in the law to harass men. The film will be made in Hindi and English and will be shot in Kolkata and Pune. Starring Romit Raj in the lead, the film also marks the non-Bengali language film debut of Kanchana Moitra and Moubani Sorcar.

Incidentally, the Supreme Court, reacting to a writ filed in 2005 (Sushilkumar Sharma v/s Union of India), had termed misuse of 498A as legal terrorism. It is this menace that director Sameer Sinha wants to highlight through the film.

While the laws were formulated to actually help oppressed women of rural India, today there is a large section of men who are harassed by the misuse of the laws by women in urban India. What does a man do if he is falsely implicated by 498A? What happens to a man if he is trapped in a bad marriage? While doing the research, I found that there are thousands of victims who have never been addressed. It's an academic subject and has hardly been addressed by anyone. Our film is about what a man or his family ought to do if he finds himself in such a situation," Sameer says.

Incidentally, the story is about a young couple (Romit and Sania Chaudhury) who fall in love. But once the marriage turns bitter, Romit wants to come out of the marriage . But Sania misuses 498A to trap Romit. The film is about how Romit tries to come out of the mess. "I wanted someone who is fresh but has worked in the industry. In this film, Moubani is playing Romit's saviour. While I had auditioned a lot of girls in Kolkata, it was only Moubani who fit the bill at the screen test. Sania, who is from Kolkata and is now working in Telugu film industry, plays Romit's wife. I liked Kanchana's work in "Bye Bye Bangkok" and, hence, cast her. Through the film, I want to tell the youth that it's good to know the person well before taking the plunge. Otherwise, the legal system is such that it might unnecessarily make one pay a heavy price for it." Says Kanchana, who plays a psychopath in the film, "Some of my friends from the film industry have been victims of the misuse of this law. I have seen how they've suffered silently. Since this film will convey a very serious message, I was more than eager to be a part of this venture. In the movie, I play a loner, who has a negative influence on her sister and helps her to legally plot against her brother-in-law. I am comfortable speaking Hindi and with a language coach on board, I see no problems doing this bilingual movie."

Shooting for the film will begin in Kolkata on April 17.





Sunday, February 13, 2011

விவாகரத்து கோரும் கணவன்களுக்கு எச்சரிக்கை!

இந்தியாவில் திருமணம் செய்வதே ஆபத்து! விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்வது அதைவிட ஆபத்து!

கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி
தினமலர் 13/2/2011

சிவகாசி: சாத்தூரை அடுத்துள்ள வடமலாபுரத்தில் கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொலை செய்ய முயன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். வடமலாபுரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி கோகுல கிருஷ்ணம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள். கந்தசாமிக்கும் கோகுலகிருஷ்ணம்மாளுக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு, கந்தசாமி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்ய கோகுலகிருஷ்ணம்மாள் முயற்சி செய்தார். கோகுலகிருஷ்ணம்மாளை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். கந்தசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



Friday, February 4, 2011

அமாவாசை இருட்டில் வேலையைத் தொலைத்த போலிஸ்காரர்கள்

இருட்டு நேரத்தில் எதை எதையோ பலர் தொலைத்திருக்கிறார்கள். ஆனால் அமாவாசை இருட்டால் வேலையை தொலைத்த போலிஸ்காரர்கள் பற்றிய செய்தி செய்தித்தாளில் வந்திருக்கிறது பாருங்கள்.


திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் போலீஸ் ஸ்டேஷன் எதிரிலேயே வீடு ஒன்றில் முகமூடி கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக, ஒரு இன்ஸ்பெக்டர், 3 எஸ்.ஐ.,க்கள், 8 சிறப்பு எஸ்.ஐ.,க்களுக்கு மெமோ கொடுக்க, எஸ்.பி., தினகரன் உத்தரவிட்டுள்ளார்.நத்தம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 150 அடி தூரத்தில் உள்ள ஒரு வீட்டில், 80 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாயை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இச்சம்பவத்தை ஆய்வு செய்த திண்டுக்கல் எஸ்.பி., தினகரன் கூறியதாவது:நத்தத்தில், நேற்று முன்தினம், போலீஸ் ஸ்டேஷன் எதிரே, இச்சம்பவம் நடந்துள்ளது. கிராமப்புறத்தில் நடந்தால் கூட போலீசாருக்கு தெரியாமல் நடந்து விட்டது என நினைத்துக் கொள்ளலாம். நேற்று முன்தினம் அமாவாசை என தெரிந்தும், போலீசார் ரோந்து செல்லாதது ஏன்?நத்தத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 எஸ்.ஐ.,க்கள், 8 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் இருந்தும், திருட்டு நடக்க விட்டது ஏன் என விளக்கம் கேட்டு அனைவருக்கும் மெமோ கொடுக்கப்படும்.இவ்வாறு எஸ்.பி., கூறினார்.
========

உள்ளூரில் இந்தக் கூத்து நடந்துகொண்டிருக்கும்போது இந்திய போலிஸ் பெருமை சர்வதேச அளவில் எப்படி கொடிகட்டிப் பறக்கிறது என்று செய்தித்தாளில் வந்திருக்கிறது. இந்திய போலிஸ் திறமையாக சர்வதேச போலிஸ் அமைப்பை (InterPol) புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி குற்றவாளிகளைப் பிடிப்பதாக பாராட்டுக்கள் வந்திருக்கிறது. அதை பின்வரும் செய்திகள் தெளிவாகக் காட்டுக்கின்றன. திருமணத்திற்குத் தயாராகும் இளைஞர்கள் கவனமாகப் படித்துக்கொள்ளவும்.


பாரிஸ் : ""குற்றவாளிகளைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீசை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது,'' என, சர்வதேச போலீசின் செகரட்டரி ஜெனரல் ரொனால்டு கே.நோபிள் கூறியுள்ளார். [...]

====

“ரெட் கார்னர் நோட்டிஸ்” என்பதை எப்படித் திறமையாகப் பயன்படுத்திவருகிறார்கள் என்பதையும் செய்தித்தாளில் வந்துள்ள பின்வரும் செய்திகளிலேயே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

===

இந்தியாவில் திருமணம் செய்யும் வெளிநாட்டுவாழ் இந்திய இளைஞர்களுக்கு எதிராக "ரெட் கார்னர் நோட்டீஸ்'’

தினமலர் 19 ஜூலை 2010

புதுடில்லி : திருமணம் செய்து வெளிநாடுகளுக்கு ஓடிய 600 கணவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில், "ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள்.

போதை மருத்து கடத்துவோர், பயங்கரவாதிகள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு எதிராகவே வழக்கமாக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்படும். ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டால், இதுகுறித்த தகவல் இன்டர்போல் போலீசாருக்கு தெரிவிக்கப்படும். குற்றவாளி பதுங்கியிருப்பதாக கருதப்படும் நாட்டில், அவரை தேடும் பணி முடுக்கி விடப்படும். மேலும், விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும். சம்பந்தபட்ட நபர், விமான நிலையத்தில் தனது பாஸ்போர்ட்டை சோதனைக்காக கொடுக்கும்போது, அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகி விடும். உடனடியாக, அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அந்த நபரை அவர்களிடம் ஒப்படைப்பர். பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்துவோர் மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு வந்து திருமணம் செய்யும் கணவர்களும் தற்போது இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர். இதுபோல் 600 பேருக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது
: ஒட்டுமொத்தமாக ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், இதுபோல் திருமணம் செய்து விட்டு ஓடியவர்களாக உள்ளனர். இவ்வாறு ஏமாற்றி விட்டு ஓடுவோரில் பெரும்பாலானோர் படித்தவர்களாகவும், நல்ல வேலையில் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர் என்பது தான், அதிர்ச்சியான தகவல். இவ்வாறு திருமணம் செய்து விட்டு, ஓடுவோர் மீதும் வரதட்சணை கொடுமைக்கு சமமான வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.
===

இந்திய மக்களின் பல கோடி வரிப்பணத்தை மீட்பதற்கு இந்த “ரெட் கார்னர் நோட்டீஸ்” கொஞ்சமும் பயன்படவில்லை. பின்வரும் செய்தியையும் பாருங்கள். எது எப்படியோ ஏதாவது ஒரு வகையில் பெருமை கிடைத்தால் சரிதான்!

NEW DELHI: CBI on Saturday filed an application before a Delhi court seeking closure of the Bofors pay off case against Italian businessman Ottavio Quattrocchi.

In the plea filed before Chief Metropolitan Magistrate Kaveri Baweja, the probe agency said all efforts to extradite Quattrocchi for facing the trial here has failed.
எது எப்படியோ அமாவாசை இருட்டில் உள்ளூர் திருடனை விட்டுவிட்டார்கள். சர்வதேச போலிஸைப் பயன்படுத்தி இந்திய மக்களின் பணத்தைக் கோடி கோடியாய் அடித்தவனை பிடிக்கமுடியாமல் விட்டு விட்டு இந்தியாவில் திருமணம் செய்த “மாப்பிள்ளைகளை” ரெட் கார்னர் நோட்டிஸ் போட்டு பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு வகையில் சர்வதேச அளவில் பெருமை கிடைத்தால் சரிதான்.


மாவட்டத்தில் திருட்டு வழக்குகள் பல கண்டுபிடிக்கப்படாத நிலையில்,குறிப்பட்ட வழக்கில் சாதனை படைத்ததாக பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி கொள்ளும் போலீசார், இதுபோன்று கடமை உணர்வுடன் பணியாற்றும் போலீசாரையும் பாராட்டி வெகுமதி வழங்கலாமே ... இடம்: ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி . (தினமலர் படம் 3 பிப்ரவரி 2011)