பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, August 30, 2010

அபாயமான பாதையில் செல்லும் நீதித்துறை

நடுநிலை தவறாமல் நீதி வழங்கிய மனுநீதிச் சோழனும், சிபிச் சக்ரவர்த்தியும் வாழ்ந்த நாட்டில் இப்போது நீதித்துறை எந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கீழுள்ள செய்திகளில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். இது ஒரு சிறு துளி மட்டுமே (Tip of the Iceberg).

செய்தியைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் நீங்கள் பொய் வழக்கில் சிக்கினால் உங்களுக்கு வழங்கப்படும் நீதி எப்படி இருக்கும் என்பதையும் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். இவை எல்லாவற்றையும் விட சரியான நீதி கிடைக்குமா என்று நீங்களே சிந்தித்து முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் வேறுநாடுகளில் திருமணம் செய்து கொண்டால் பொய் வரதட்சணை வழக்குகளிலும் சிக்கும் நிலையும் ஏற்படாது, இதுபோன்ற அற்பத்தனமா விஷயங்களுக்காக உங்கள் நேரத்தை செலவு செய்து நீதி கிடைக்குமா? என்று நீங்கள் மூளையை குழப்பிக்கொள்ளவும் வேண்டாம்.


படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள் நீதிக்காக ஆராய்ச்சி மணியடிக்கும் பசுவும் அதற்கு நீதி வழங்கிய மனுநீதிச் சோழ மன்னர் தன் மகனை தேர்ச்சக்கரத்தில் இட்டுக் கொன்ற காட்சியும் தெளிவாகத் தெரியும்.
(இது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலை - சிலையிலாவது சரியான நீதிகிடைக்கும் காட்சி இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுங்கள்!)


தேர்வில் காப்பியடித்த மேலும் இரண்டு நீதிபதிகள் சஸ்பெண்ட்
ஆகஸ்ட் 30,2010, தினமலர்

ஐதராபாத்:ஆந்திராவில் வாரங்கல் காந்திய பல்கலைக் கழகத்தில் முதுகலை சட்டப் படிப்பு (மாஸ்டர் ஆப் லா) தேர்வில் காப்பியடித்த புகாரின் பேரில், மேலும் இரு நீதிபதிகள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இதே போன்று தேர்வில் காப்பியடித்த குற்றத்தின் பேரில், கடந்த 25ம் தேதி ஐந்து நீதிபதிகளை மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி நிஷார் அகமது சுக்ரூ, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.தற்போது இதே புகாரின் பேரில் வாரங்கல் சீனியர் சிவில் ஜட்ஜ் ரஜாக் உஜ்மா மற்றும் அவரது மனைவி, வாரங்கல் மாவட்ட லீகல் சர்வீஸ் அத்தாரிடி செயலர் பிரேமா ராஜேஸ்வரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் மீது கிளிக் செய்து நீதிபதிகள் கையும் களவுமாக பிடிபட்ட வீடியோவைக் காணலாம்


லஞ்ச குற்றச்சாட்டின்படிபெண் மாஜிஸ்திரேட் பணி நீக்கம்

ஆகஸ்ட் 08,2010 தினமலர்

சென்னை; லஞ்ச குற்றச்சாட்டின் பேரில், பெண் மாஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய்தது சரிதான் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலில் முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆக கலாராணி என்பவர் நியமிக்கப்பட்டார்.ப்போது வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்றை விசாரித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்தார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிப்பதற்காக, புகார் கொடுத்தவரின் தந்தையிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக மாஜிஸ்திரேட் கலாராணிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது.

பணியில் இருந்து கலாராணி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எட்டு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய "மெமோ' அவருக்கு வழங்கப்பட்டது.

"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

நீதித்துறையில் மனுதாரர் அங்கம் வகிக்கிறார். நீதி அமைப்பின் முதுகெலும்பு, கீழ் கோர்ட்டுகள் தான். இந்த அடிப்படையில் ஆட்டம் கண்டால், அது நீதித்துறையின் கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களுக்கும் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இழப்பு ஏற்படும். நீதித்துறை சுத்தமாக, திறமையாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதிபதிகளுக்கு மக்களிடம் மரியாதை உள்ளது. நீதிபதிகளின் பொது வாழ்க்கை, அவர்களது பணியில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். மக்களுக்கு நீதித்துறை தான் கடைசி வழி. பணிகளை செய்வதற்காக நீதிபதிகள் லஞ்சம் வாங்க வேண்டும் என நினைத்தால், நீதித்துறை அமைப்பே சிதைந்து விடும். நீதித்துறையில் உள்ள ஊழல் சக்திகளை களையெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஐகோர்ட்டுக்கு உள்ளது.

விசாரணை அதிகாரி முன் வைக்கப்பட்ட சாட்சியம், புகைப்படத்தை பரிசீலித்தால், மனுதாரருக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை அதிகாரியின் கண்டுபிடிப்பு, மனுதாரரை பணியில் இருந்து நீக்குவது போதுமானது. அனைத்து அம்சங்களையும் விசாரணை அதிகாரியும், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியும் முறையாக பரிசீலித்துள்ளனர். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

மேலுள்ள செய்தி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை இங்கே காணலாம்.

In the High Court of Judicature at Madras

Dated: 30.07.2010
Coram:
The Honourable Mr.Justice ELIPE DHARMA RAO
AND
The Honourable Mr.Justice K.K.SASIDHARAN
WRIT PETITION NO.15983 OF 2007
R. Kalarani ... Petitioner
Versus
1. Madras High Court
rep.by its Registrar General
Chennai-60104.
2. The State of Tamil Nadu
rep.by the Secretary to Government
Law Department
Fort St.George
Chennai-60 009. ... Respondents



பெரியகுளம் சப்-கோர்ட் : நீதிபதி "சஸ்பெண்ட்'
ஆகஸ்ட் 05,2010 தினமலர்

பெரியகுளம் : பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதியாக பணிபுரிந்த மோகன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட நீதிபதி சிவானந்த ஜோதி வழங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி மோகன், முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குற்றவியல் நடுவராக பணியாற்றியுள்ளார். அங்கு கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட் விசாரித்து வந்தது. இந்நிலையில், நிர்வாக நடவடிக்கையாக அவரை சஸ்பெண்ட் செய்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் விமலா உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை நீதிபதி சிவானந்த ஜோதி மூலம் இதற்கான உத்தரவு மோகனுக்கு நேரில் வழங்கப்பட்டது. நீதிபதி மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், பெரியகுளம் சப்-கோர்ட் நீதிபதி பொறுப்பை தேனி சப்-கோர்ட் நீதிபதி முத்து சாரதா கவனிக்கவுள்ளார்.

ரௌடிக்கு மாவட்ட நீதிபதி பதவி: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
19 Jul 2010 தினமணி

புது தில்லி, ஜூலை 18: போலீஸ் பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

நீதிபதிகள் பணிநியமனத்தின்போது அவர்களின் நன்னடத்தை குறித்த போலீஸ் சான்றிதழ் அவசியம் என்று அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1996-ல் காஷியா முகம்மது முஜாமில் என்பவரை கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த அவரை, குற்றச்சாட்டுகளின்பேரில் உயர் நீதிமன்றம் பணி நீக்கம் செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், காஷியா குறித்த ஆவணங்களை நீதிபதிகள் ஆய்வு செய்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மஜ்லிஸ்-இஸô-ஓ-தான்ஜிம் என்ற அமைப்பின் பொதுச்செயலராக செயல்பட்ட காஷியா, அப் பகுதி போலீஸ் நிலைய பதிவேட்டில் ரௌடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

1993-ல் பத்கல் பகுதியில் ஏற்பட்ட மதக் கலவரத்துக்கு காரணமானவர் என்பது உள்பட அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆனால், அவரது குற்றப் பின்னணி குறித்து விசாரிக்காமல் கர்நாடக உயர் நீதிமன்ற நிர்வாகம் அவரை நீதிபதியாக நியமனம் செய்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய தகவல்கள் தெரியவந்து, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காஷியாவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் நியமனத்தின்போது, அவர்களின் நன்னடத்தை குறித்த உள்ளூர் போலீஸôரின் சான்றிதழ் அவசியம் என்றும், நீதிபதிகள் குறித்த ரகசிய ஆய்வறிக்கையை ஆண்டுதோறும் தயார் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

=================
தலைமறைவுக் குற்றவாளி நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த அதிசயம்!
Indian Express Fri May 21 2010

Bhopal : A man who was declared an absconder by a court in Indore worked as a judge in a superior court in the same city for years before his past caught up with him.

The Madhya Pradesh High Court has suspended Additional District and Sessions Judge Narendra Kumar Jain for concealing the matter.

As a student of Christian College in Indore, Jain, along with four friends, was involved in a brawl with a hotel owner and his son in 1983. The owner, whose nasal bone was broken, lodged a police complaint that led to the arrest of Jain and his friends.

Jain was released on bail and appeared in court once in 1985. He was declared an absconder by the court when he did not appear later despite repeated summons.

Jain cleared an examination meant for judicial officers in 1994 but suppressed the fact that he was involved in a criminal case and was facing trial.

Registrar General of Madhya Pradesh High Court T K Kaushal told The Indian Express that Jain was suspended after a vigilance inquiry. He said an inquiry had been initiated against him.

Two months ago, the High Court suspended G P Agarwal, another Additional District Judge posted in Indore. His suspension followed the seizure of his laptop after a complaint. The laptop contained two orders, one of acquittal and another conviction, in one case of chain snatching.

Agarwal alleged that a secretary he had fired, in collusion with another judge, conspired against him.

பெண் ஊழியரை புரோக்கராக நீதிபதி வைத்திருந்தாரா?

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED: 5.1.2010


M.Mohamed Essath Ali ... Petitioner

Vs.

1.The Registrar General,

High Court,

Chennai-600104.

2.The Registrar,

Vigilance,

High Court, Chennai-600104.

... Respondents

* * *

Writ Petition filed under Article 226 of the Constitution of India, praying to issue a Writ of Certiorari to call for the entire records ending with order No.C No.39/2006/VC (in Roc.No.363/2005/VC), dated 25.6.2009, passed by the 1st respondent and quash the same.

* * *


Based on the complaint, dated 19.4.2005, sent by one T.Chandran of Tirunelveli to the Registry of the High Court, to the effect that the petitioner, while working as I Additional Sub Judge, Tirunelveli had some intimacy with Tmt.Jayanthi, Head Clerk, Fast Track Court No.I, Tirunelveli, thus facilitating her to collect money from the parties in respect of the proceedings pending before the petitioner assuring favourable judgments, a discreet enquiry was conducted by the Registrar (Vigilance) High Court, Madras against the petitioner, then I Additional Sub Judge, Tirunelveli and now a District Judge, working as Sessions Judge, Mahila Court, Chengalpattu and others.


18. However, since the time of 15 days granted in the impugned communication to the petitioner to submit his written statement of defence has already lapsed, we grant two more weeks time, from the date of receipt of a copy of this order, to the petitioner to submit his explanation to the said memo. and the disciplinary authority is directed to complete the disciplinary proceedings in accordance with law within a period of six weeks from the date of receipt of written statement of defence from the petitioner. Consequently, M.P.Nos.1 and 2 of 2009 are also dismissed. No costs.

ஆகஸ்ட் 08,2010 தினமலர்

புதுடில்லி: வட மாநில நீதிபதிகள் மூன்று பேர், ஊழியர்களின் பி.எப்., பணத்திலிருந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவித்திருப்பது, சமீபத்திய சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்துள்ளது.


உச்ச நீதிமன்றம் நீதித்துறை பற்றி தானே விமர்சனம் செய்திருக்கிறது!
NEW DELHI: Supreme Court on Thursday sounded the grim warning that the criminal justice system had been subverted, with witnesses being manipulated and trials being hijacked with judges and lawyers remaining "handicapped witnesses".

Making the chilling observation, which to many only confirmed the widely held perception of the erosion of the system, a Bench comprising Justices B N Agrawal, G S Singhvi and Aftab Alam also said that the lower judiciary had decayed.

"The courts of magistrate and munsif have ceased to be an option for the common man," the Bench said and compared the lower courts to ill-equipped and ill-staffed public health centres (PHCs) in rural areas.

"Only those people go there who have no other option," said the Bench as an apparent indicator of the low measure of public faith in these courts, which are the first points of dispute settlement for the masses.

The comment, perhaps the sharpest-ever from the apex court on the health of the country's judicial administration system.......


இவ்வளவு அதிர்ச்சியான செய்திகளுக்குப்பிறகு ஒரு காமெடி பீஸ். சிரித்துவிட்டுப் போங்கள்.



நீங்கள் நம்பினால் நம்புங்கள்


புதுடில்லி : "நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது இன்னும் பெரிய அளவுக்கு உயரவில்லை' என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அளித்த பேட்டி:நீதித் துறையில் லஞ்ச நடவடிக்கைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை உண்மை இல்லை என முற்றிலும் மறுத்து விட முடியாது. அதற்காக, இதை மிகைப்படுத்தியும் கூறக் கூடாது. நீதித் துறையில் பெரிய அளவுக்கு, கவலைப்படும் அளவுக்கு லஞ்ச நடவடிக்கைகள் இல்லை.மற்ற துறைகளை பார்க்கும் போது இதில் லஞ்சம் குறைவு . இதை என்னால் உறுதியாக கூற முடியும். நீதித் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் இருந்தால், அதைச் சீராக்க இனி கொண்டு வரப்படும் நீதிபதிகள் கண்ணியம் மற்றும் பொறுப்பு குறித்த மசோதா சரி செய்ய உதவிடும் .இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.

==================

நீதித்துறையில் லஞ்சம் கொஞ்சமாகத்தான் இருக்கிறது. பெரிதாக சொல்லும் அளவிற்கு இல்லை என்று அமைச்சர் பெருமைப் படுகிறார். கொஞ்சம் தானே ஊழல் நடக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொள்வதற்கு நீதித்துறை என்ன ரேஷன் கடையா?

அவர் பெருமைப்படும் அந்த கொஞ்சம் என்பதன் அளவு என்ன என்பதை கீழுள்ள இந்த அறிக்கையில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த நீதிமன்றங்களில் தான் உங்கள் மீதுபோடப்படும் பொய் வரதட்சணை கேசுகள் கையாளப்படுக்கின்றன. பொய் கேசில் சிக்கினால் உங்களது வாழ்க்கை என்னவாகும் என்று கற்பனை செய்து பார்க்க இந்தத் தகவல் உதவியாக இருக்கும்.

"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV) "

Report from 2005 Report from the Transparency International India

The former Chief Justice of Supreme Court Sam Piroj Bharucha had observed that “up to 20 per cent of judges in India were corrupt.”

Is Judiciary Corrupt?

More than three-fourths (79%) of the respondents, who had been interacting with the judiciary, admitted that corruption was prevalent in the Department. Surprisingly, only 8% of those respondents felt that there was ‘no corruption’ in Judiciary. However, not much difference is seen in perception of corruption in judiciary for states having different strength of judiciary.

Experience of Corruption in Judiciary

While 38% of the respondents had experienced corruption every time they had interacted with judiciary, 53% had experienced it some time or the other. On the other hand, only 5% never experienced corruption.

Modus operandi for Bribing

During the last one year, three-fifths (59%) of respondents had paid money to lawyer, whereas 30% had paid money to court officials, and 14% to middle men to get their work done. There were higher number of respondents claiming to have paid bribe to court officials in states having low judicial strength compared to respondents from states having high judicial strength.

Table 9.10: Money Paid

Judicial Strength Wise
(Figures in per cent)

Money Recipient

High

Medium

Low

Total

Judge

05

06

04

04

Lawyer

55

64

53

59

Court officials

17

26

44

30

Public Prosecutor

17

05

08

08

Middlemen

17

12

16

14


Lawyers, who are supposed to uphold law, have ended being conduit for corruption as if there is no monitoring or initiatives on the part of bodies like bar associations. They could put up notice boards to file complaints or give telephone number for passing on information against corrupt lawyers. There is not a single case of a lawyer being suspended for practice on account of such complaints or any effort made to get such corrupt practices enquired into independently. Although cases about delays and even prevalence of corruption in judiciary have been reported, media has never reported giving specific examples of corruption by lawyers.



Friday, August 27, 2010

இந்தியாவில் நீதியின் தரம் எப்படி இருக்கும்?

பலபேரின் வழக்குகளை விசாரித்து பலரின் வாழ்க்கையின் தலைவிதியைத் தீர்ப்பாக எழுதும் நீதிபதிகளின் தரம் எப்படி இருக்கிறது என்று இந்த செய்தியில் பாருங்கள்.



ஐதராபாத் : முதுகலை சட்டப்படிப்பு முதலாமாண்டு தேர்வில் காப்பியடித்த ஐந்து நீதிபதிகள் உள்ளிட்ட ஏழு வக்கீல்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களை தேர்வு எழுத கல்வித்துறை அலுவலர்கள் அனுமதிக்கவில்லை. அதே சமயம் நீதித்துறைக்கே களங்கம் ஏற்படுத்தியதாக கூறி ஆந்திர ஐகோர்ட், ஐந்து நீதிபதிகளை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

அந்தக் கண்கொள்ளா வீடியோக் காட்சியை இங்கே கண்டு ஒவ்வொருவரும் பெருமைப்படுங்கள்

இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: முதுகலை சட்டப்படிப்பின் முதலாமாண்டு (எல்.எல்.எம்.,) தேர்வுகள், ஆந்திரா, வாரங்கலில் உள்ள காகதியா பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், அடிலாபாத் சார்பு நீதிபதி கிஷ்டப்பா, ரங்காரெட்டி மற்றும் நிஜாமாபாத் மாவட்ட கோர்ட் நீதிபதிகள் அஜித் சிம்மாராவ் மற்றும் விஜந்தர் ரெட்டி , சீனிவாசாச்சாரி, அனுமந்தாராவ் மற்றும் ஏழு வக்கீல்கள், சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் வரலாறு என்ற பாடத்திற்கான தேர்வை எழுதினர். இந்நிலையில், இவர்கள் அனைவரும் காப்பியடித்து எழுதுவதாக கூடுதல் தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் மனோகரனுக்கு தகவல் கிடைத்தது. தேர்வு மையத்துக்கு சென்ற அலுவலர்கள், அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது மூன்று நீதிபதிகள் உட்பட ஏழு வக்கீல்கள் சட்டப்புத்தகங்களைப் பார்த்து காப்பியடித்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கல்வித்துறை அலுவலர்கள் கையும் களவுமாக பிடித்து, தேர்வு அறையிலிருந்து வெளியேற்றினர். இது குறித்து மனோகரன் கூறுகையில், "தேர்வில் காப்பியடித்த நீதிபதிகளின் வினாத்தாள்கள் திருத்தப்படமாட்டாது' என்றார். அதே சமயம் இத்தகவல் ஆந்திர ஐகோர்ட் தலைமை நீதிபதி முகமது கக்ரூவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, காப்பியடித்த ஐந்து நீதிபதிகளையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

==================

================================================================
================================================================
"Transparency International, in its Global Corruption Report 2007 has revealed recently that an amount of Rs 2,630 crores was paid in bribes to the lower judiciary in India during 2006! " - Report from Tamilnadu police journal "Criminal Investigation Review. 2007. Volume V (IV)
================================================================
================================================================


இந்த நீதிபதிகள் இதுவரை கொடுத்த தீர்ப்புகள் எப்படி இருந்திருக்கும். எத்தனைபேர் தங்களது வாழ்வை இழந்தார்களோ! இந்தியர்களை இதுபோன்ற நீதிபதிகளிடமிருந்து யார் காப்பாற்றப் போகிறார்களோ?

இந்தியாவில் திருமணம் செய்து பொய்வரதட்சணை வழக்கில் சிக்கினால் காவல்துறையும், நீதித்துறையும் நேர்மையாக இருந்து உங்களைக் காப்பாற்றும் என்று தவறாக எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு பாடம்.

இந்தியாவில் கீழ்நிலை நீதிமன்றங்கள் எப்படி இருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றமே ஒருமுறை சொல்லிவிட்டது. அந்த செய்தியை உறுதிப் படுத்தும்விதமாகத்தான் மேலுள்ள செய்தி வந்திருக்கிறது. காப்பியடிக்கும் நீதிபதிகள் கீழ்நிலை நீதிமன்றங்களை எப்படி செயல்படுத்துவார்கள் என்பது இப்போது உறுதியாகிவிட்டதல்லவா.

NEW DELHI: Supreme Court on Thursday sounded the grim warning that the criminal justice system had been subverted, with witnesses being manipulated and trials being hijacked with judges and lawyers remaining "handicapped witnesses".

Making the chilling observation, which to many only confirmed the widely held perception of the erosion of the system, a Bench comprising Justices B N Agrawal, G S Singhvi and Aftab Alam also said that the lower judiciary had decayed.

"The courts of magistrate and munsif have ceased to be an option for the common man," the Bench said and compared the lower courts to ill-equipped and ill-staffed public health centres (PHCs) in rural areas.

"Only those people go there who have no other option," said the Bench as an apparent indicator of the low measure of public faith in these courts, which are the first points of dispute settlement for the masses.

The comment, perhaps the sharpest-ever from the apex court on the health of the country's judicial administration system..........

Wednesday, August 25, 2010

கணவனுக்கு சாவு மணி அடிக்கும் மனைவியர்!

தனக்கு ஏற்றவாறு குடும்பப் பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் உடனே மனைவி அரசாங்கம் கொடுத்திருக்கும் IPC498A (வரதட்சணை சட்டங்கள்) என்ற சாவு மணியை அடித்து கணவனை மேலுலகத்திற்கு அனுப்பிவைத்துவிடுவார். இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடைக்குச் செல்லும் ஒவ்வொரு ஆணுக்கும் வரப்போகும் ஆபத்து இதுதான்.

அதானால்தான் இளைஞர்களுக்கு இந்தியத் திருமணமேடையும் தகனமேடையும் ஒன்றுதான். உங்களுக்கு தகமேடைக்குச் செல்லவேண்டும் என்று ஆசையாக இருந்தால் இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள். காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் என்ற சாவு மேளங்களுடன் சேர்ந்து உங்களது மனைவியே உங்களுக்கு பொய் வரதட்சனை வழக்கு என்ற சாவு மணி அடித்து வழி அனுப்பி வைப்பார். இதற்குப் பெயர்தான் “Women Empowerment” என்று ஆங்கிலத்தில் பெண்ணடிமைவாதிகள் கூறி மகிழ்கிறார்கள்.

Man accused of demanding dowry commits suicide
Times of India



VADODARA: A 33-year-old man committed suicide on Tuesday night after his wife registered a police complaint against him for demanding dowry. Dinesh Helaiya, who worked with a private company in Ahmedabad, consumed poison in a hotel room.

Dinesh was taken to Bhailal Amin General Hospital where he died during treatment. Cops have also registered a complaint against Manisha and her relatives for abetment to suicide. According to police, Dinesh and Manisha got married about seven years back and their marriage was in trouble. "They were at loggerheads for many years and used to fight a lot. Manisha had filed a police complaint against him on Tuesday night, accusing him of demanding dowry. She alleged that her family had already paid lakhs of rupees in dowry and now he was demanding a car," police officials said.

"Manisha lodged a complaint on Tuesday night and he consumed suicide immediately after that. They have a two-year-old daughter," assistant sub-inspector Prabhudas Purshottam said. Police said the deceased had come down to meet Manisha and also take away his daughter who was staying with her. However, a fight ensued between them following which she approached the cops.

"Five people, including Manisha and her relatives, have been named in the complaint. But no one has been arrested as of yet," police officials said. (இதுவே மனைவி கொடுக்கும் பொய் வரதட்சணை வழக்காக இருந்தால் விடிந்ததும் விடியாததுமாக அதிகாலையிலேயே கணவனுடைய வீட்டின் கதவைத்தட்டி குடும்பத்தோடு அனைவரையும் இழுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் காவல்துறை நண்பர்கள்)

Read more: Man accused of demanding dowry commits suicide - Vadodara - City - The Times of India http://timesofindia.indiatimes.com/city/vadodara/Man-accused-of-demanding-dowry-commits-suicide-/articleshow/6340997.cms#ixzz0xafzrBVn



மூளையைப் பயன்படுத்தாத காவல்துறை!

பணம் கிடைக்கிறது என்பதற்காக இந்தியாவில் பல அப்பாவிக் குடும்பங்கள் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கப்பட்டு காவல்துறையாலும் நீதித்துறையாலும் பாந்தாடப்படுகிறார்கள் என்பது உலகறிந்த மானக்கேடு என்று அனைவருக்கும் தெரியும்.

இதை மீண்டும் ஒருமுறை கர்நாடக நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. கொடுக்கப்படும் புகாரில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறதா என்றுகூட பார்க்கமாட்டார்கள். அப்படியே புகார் பதிவு செய்யப்பட்டாலும் தங்களுக்கு மூளை என்று ஒன்று இருக்கிறது என்பதையே மறந்துவிட்டு எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் அப்படியே பள்ளிக்கூட ஞாபகத்தில் முதல் தகவல் அறிக்கையில் உள்ளதை அப்படியே “காப்பி” அடித்து இதுதான் விசாரணை அறிக்கை என்று நீதிமன்றத்திற்கு அனுப்பிவிடுவார்கள். இதைத்தான் கீழுள்ள செய்தியில் நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. கீழ்நிலை நீதிமன்றத்தில் இருக்கும் அதிபுத்திசாலி இந்த காகிதங்களை எடுத்து படித்துக்கூட பார்க்கமாட்டார். உடனே அனைவருக்கும் சம்மன் அனுப்பி வழக்கை ஆரம்பித்து பல ஆண்டுகள் இழுத்துக்கொண்டிருப்பார்.

இதில் பணம் சம்பாதிப்பது காவல்துறை, நீதித்துறை, மற்றும் வழக்கறிஞர்கள். வாழ்க்கையைத் தொலைப்பது உங்களைப் போன்ற பல அப்பாவிகள். கடைசியில் இதுபோன்ற அப்பாவிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும். அதனால் இளைஞர்களே, இந்தியாவில் திருமணம் செய்து படுகுழியில் குடும்பத்தோடு வீழ்ந்து உங்களது எதிர்காலத்தை அழித்துக்கொள்ளாதீர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று உங்களது குடும்பமானத்தையும் உயிரையும் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

HC accepts that Dowry Act is being misused
Indian Express Last Updated : 22 Aug 2010

BANGALORE: The High Court has strongly condemned the investigating officers for blindly registering cases of dowry harassment, without looking into the provisions under section 498A of Indian Penal Code (IPC).

While quashing the criminal proceedings initiated against the petitioners under 498A of IPC at the court of the chief metropolitan magistrate, Bangalore, Justice Subhash B Adi observed that the police had not taken into consideration section 498A of IPC to know whether the allegation amounted to cruelty, the court observed.

To prevent unscrupulous persons from misusing the law, a scrutiny of the complaint at the inception stage is advisable, the court told the investigating officers.

"Before proceeding with the criminal complaint, the investigating officer or the court must look into the allegation to find out whether it makes out a prima facie case to proceed.

"In most of the cases, the police use 498A of IPC more for harassment rather than it's real purpose. The police must use its authority to subserve the purpose for which the provision is made instead of misusing it," the HC told the investigating officers.

It is a common feeling that irrespective of the involvement or nexus to the alleged offence, even friends and distant relatives are implicated. This happens, because of non-application of mind by the police to the contents of the complaint and the offence alleged, which results in harassment of a person who is unconnected with the alleged offence.

Scrutiny of the complaint is necessary at least to know what offence is alleged. Particularly in the case of offence under section 498A of IPC and offence connected with matrimonial disputes, due care is necessary. In some cases, without even allegation, entire family, relatives and friends are made parties, the court observed.

PO Raju, Susamma, Joman Raju and Jolly Raju, all residents of Pathanamthitta in Kerala, filed a criminal petition challenging criminal proceedings initiated against them by Yelahanka New Town police station in a dowry harassment case filed by Raju's wife Jayashree.

Jayashree had alleged that her in-laws, residing in Kerala, threatened her not to come to Kerala after her husband had left the house in Bangalore.

She alleged that her in-laws instigated her husband to leave her company. Jayashree filed a complaint in jurisdictional police station against her in-laws. However, the petitioner's counsel stated that the allegations in the complaint did not constitute cruelty within the meaning of section 498A of IPC. The court upheld the contention and quashed the proceedings.

=======================

எல்லாம் நன்றாக பேசியிருக்கும் நீதிமன்றம் கடமையை ஒழுங்காகச் செய்யாத காவல் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? அல்லது பொய் வழக்குப்போட்ட பெண்ணிற்கு என்ன தண்டனை கொடுத்தது? பல காலமாக பல நீதிமன்றங்கள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன.

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் என்பது உங்களைப் போன்ற இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து காவல்துறையும், நீதித்துறையும், அரசாங்கமும் விளையாடும் ஒரு சூதாட்டம். இடையிடையே இதுபோன்ற தீர்ப்பு சொல்வதுபோல உங்களுக்கு வாயில் “லாலிபாப்” கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த சூதாட்டத்தில் யார் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் இந்த மூவரில் ஒருவருக்கு லாபம்தான். ஆனால் யார் வெற்றி பெற்றாலும் அல்லது தோற்றாலும் தவறாமல் தோற்றுக்கொண்டிருப்பது நீங்களும் உங்களது வாழ்க்கையும்தான். அதனால் இதுபோன்ற சூதாட்டக் களத்தில் உங்களது வாழ்வை தொலைத்துவிடாமல் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு வெற்றிப் பாதையில் செல்லுங்கள்.




Tuesday, August 24, 2010

காவல்துறை யாருக்குத்தான் நண்பன்?

மாற்றுத்திறன் படைத்த சாதனை வீரர்களை வருத்திய போலீசார்
ஆகஸ்ட் 23,2010 தினமலர்

சென்னை :அரசு வேலை கேட்டு உண்ணாவிரதம் துவங்கிய மாற்றுத் திறன் படைத்த விளையாட்டு வீரர்களை, மனிதாபிமானமே இல்லாமல் போலீசார், குற்றவாளிகள் போல் தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம் சென்னையில் நடந்தது.







காவல்துறை உங்கள் நண்பனா?

யாருக்குத்தான் இவர்கள் நண்பர்களோ?
பொய்வரதட்சணை வழக்குக் கிடைத்தால் மனிதாபிமானமே இல்லாமல் அப்பாவிகளை கைதுசெய்வதும் இவர்கள்தான். பொய்வழக்குகள் வந்தாலும் விசாரணையே செய்யாமல் பொய்யான குற்றப்பத்திரிக்கை தயார் செய்து அப்பாவிகளை துன்புறுத்துவதும் இவர்கள்தான். யாருக்குத்தான் இவர்கள் நண்பர்கள்?

Monday, August 23, 2010

மணமகள் போட்ட கட்டளை!

இளைஞர்களே,

இந்திய தகனமேடையில் இருக்கும் ஆபத்தை வெளிக்காட்டும் விதமாக ஒரு செய்தி வந்திருக்கிறது. படித்துப் பாருங்கள். நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தால் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் விரும்புவதையெல்லாம் செய்யவேண்டும் இல்லையென்றால் வரதட்சணை வழக்கில் உங்களை குடும்பத்தோடு சிறையில் தள்ளிவிடுவார்கள்.



திண்டுக்கல் : திண்டுக்கலில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் பிடிக்கவில்லை என்று மணமகள் கூறியதால், திருமணம் நின்றது. இருவரும் பிரிய மொபைல் போன் காரணமாக அமைந்தது.

திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த மரியலூயிஸ் மகன் டோமினிக் லாரன்ஸ்(27). எலக்ட்ரீஷியன். இவருக்கும், பெரியகுளம் தாமரைக்குளத்தை சேர்ந்த ஹென்றி மகள் சூரியாவிற்கும்(20) மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திண்டுக்கல் புனித வளனார் சர்ச்சில் நேற்று காலை 11 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது. அப்போது பங்கு தந்தை மணமகன் விருப்பத்தை கேட்டார். அவர் இந்த திருமணத்திற்கு சம்மதம் என்றார். மணமகள் விருப்பத்தை கேட்ட போது, அவர் இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றார். இதையடுத்து திருமணம் நின்றது. உறவினர்கள் மணமகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை சம்மதிக்க வைத்தனர்.

ஆனால் மணமகனோ, "என்னை பிடிக்கவில்லை என்று கூறிய பெண்ணுடன் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும். பெண் பார்க்கும் போதே பிடிக்கவில்லை என்று கூறியிருக்கலாம். நிச்சயதார்த்தம் நடந்த போதும், திருமண உடைகளை அணியும் போது கூட கூறியிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி திருமணம் நடக்கும் நேரத்தில் என்னை வேண்டாம் என்று கூறி அவமானப்படுத்தி விட்டார்' என்றார். திருமணம் நின்று போனதால் திருமணத்திற்கான செலவுத் தொகையை தருமாறு மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் கேட்டனர். இரு வீட்டார் உறவினர்களும் மாறி, மாறி ஆலோசனை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டார் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இருதரப்பினரையும் அழைத்து நகர் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவு ஏற்படாததால், இருதரப்பினரும் திருமணம் முடிக்காமல் பிரிந்து செல்ல விருப்பம் தெரிவித்து போலீசார் முன்னிலையில் பிரிந்து சென்றனர்.

மொபைல் போன் காரணம்:போலீசார் கூறியதாவது: மணமகன் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மணமகளுக்கு ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். இதில் இருவரும் பேசும் போதே, திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் வரவேண்டும் என்று மணமகள் வற்புறுத்தியுள்ளார். இதற்கு மணமகன் மறுத்துள்ளார். இதில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெண் அழைப்புக்கு வேன் அனுப்பாமல், பஸ்சில் ஏறி மணமகளை வரச் சொல்லியுள்ளனர். இதையெல்லாம் மனதில் வைத்து தான் மணமகனை பிடிக்கவில்லை என்று மணமகள் தெரிவித்துள்ளார்.திருமண செலவுத்தொகை 25 ஆயிரம் ரூபாய் தருவதாக மணமகள் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரும் பிரிந்து செல்ல ஏற்பாடு செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
==================


இளைஞர்களே,

மேலுள்ள செய்தியில் உள்ள சம்பவம் அப்படியே தலைகீழாக நடந்திருந்து மணமகன் திருமணத்தை நிறுத்தியிருந்தால் உடனே மணமகன் மீது கற்பழிப்பு வழக்கு, வரதட்சணைக்கொடுமை என்று பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பார்கள்.

பல இந்திய மனைவிகள் வரதட்சணை தடுப்புச்சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி கணவரையும் அவரது குடும்பத்தாரையும் மிரட்டுவதற்காகவும், பழிவாங்குவதற்காகவும், பணம் பிடுங்குவதற்காகவும் பயன்படுத்திவருகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

சட்டத்தில் வரதட்சணை என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறை செய்துவைத்திருக்கிறார்கள். ஆனால் அவற்றையெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு பல மனைவியர் வரதட்சணை என்பதற்கு தங்களுக்கேற்றவாறு ஒரு விளக்கத்தை வைத்துக்கொண்டு பொய்யான புகார்களை கொடுத்து வருகிறார்கள். இந்த இழிசெயலுக்குப் பல சட்டம்படித்த மாமேதைகளும், காவல் நண்பர்களும் உதவிவேறு செய்து வருகிறார்கள்.

இந்தக் கூட்டத்தினர் வைத்திருக்கும் அகராதியில் "வரதட்சணைக் கொடுமை" என்றால் கணவனால் செய்யப்படும் பின்வரும் செயல்கள் அனைத்தும் வரதட்சணைக் கொடுமை என்ற சட்டப்பிரிவின் கீழ் வருகிறது.

  • வயதான மாமனார் மாமியாரை வீட்டை விட்டு விரட்ட மறுத்தல்
  • தனிக்குடித்தனம் வர மறுத்தல்
  • ஆடம்பரச் செலவு செய்ய மறுத்தல்
  • மனைவியின் குடும்பத்திற்கு பெருந்தொகையை கொடுக்க மறுத்தல்
  • கணவனின் உடன்பிறந்தோருக்கு உதவி செய்தல்
  • மனைவி கள்ளக்காதலனுடன் சல்லாபம் செய்வதை கையும் ‘கலவுமாக’ பார்த்துவிடுதல்
  • கள்ளக்காதலை தடுக்க முயலுதல்
  • குழந்தைகளை பராமரிக்கும்படி மனைவிக்கு அறிவுரை கூறுதல்
  • மனைவி கணவனிடம் தன்னுடைய குடும்பத்திற்கு பணம் வேண்டும் என்று கணவனை மிரட்டினால் கணவன் அதற்கு அடிபணிய மறுத்தல்.

இது போன்ற "வரதட்சணைகொடுமைகளை" செய்யும் ஆணாக நீங்கள் இருந்தால் தயவு செய்து இந்தியாவில் திருமணம் செய்து "அப்பாவிப் பெண்களுக்கு" வரதட்சணைக் கொடுமை செய்யாதீர்கள். வேறுநாடுகளில் நீங்கள் திருமணம் செய்துகொண்டு இந்தியப் பெண்களை வரதட்சணைக்கொடுமை இல்லாமல் நிம்மதியாக வாழவிடுங்கள்.

இந்தியாவில் திருமணம் செய்தால் மனைவியின் கட்டளைக்கு அடிபணிந்து ஆண்கள் பெற்றவர்களை தெருவில்தான் விடவேண்டும். இல்லையென்றால் மனைவி கொடுக்கும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியதுதான். அதுதான் இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் பெண்களுக்குக் கொடுக்கும் பெண்விடுதலை என்ற அதிகாரம்! அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.




Sunday, August 22, 2010

படித்தவர்கள் இந்தியாவில் நாளை செய்யப்போவது இதுதானோ?

காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் நன்கு படித்த இளைஞர்கள் என்று இன்றைய செய்தித்தாளில் செய்தி வந்துள்ளது.



ஜம்மு : காஷ்மீரில், வன்முறையில் ஈடுபடும் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் மற்றும் படித்த, நல்ல வேலையில் உள்ள இளைஞர்கள் என, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பாலானோர், கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என, ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது. இவர்களில் பலர், எந்த அரசியல் பின்னணியும் இல்லாதவர்கள்.

காஷ்மீரில் நடந்த 80 முதல் 90 கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட பல்கலைக் கழக ஆசிரியர் ரியாஸ் கூறியதாவது: "" சவூதி அரேபியா மற்றும் மத்திய ஆசியாவில் கல்வி பயின்றேன். சில ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீநகர் திரும்பினேன். அப்போது எனக்கு 17 வயது. அப்போது நான் மாயமான உலகில் வாழ்வது போன்று உணர்ந்தேன். நாங்கள் துப்பாக்கி முனையில் வாழ்வதை தெரிந்து கொண்டேன். எங்களை அடிக்கடி சந்தேக கண்ணோடு சோதனை நடத்தினர். இது என்னை அதிர்ச்சியடைய வைத்தது. எங்களுக்கு சுதந்திரம் இல்லை,'' என்று கூறினார்.

================

இவர்கள் படித்தது வன்முறை செய்வதற்காகவா? கண்டிப்பாக இல்லை. இதுபோலத்தான் இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் நன்கு படித்த டாக்டர்கள், இன்ஜினியர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்களை காவல்துறை, நீதித்துறை, அரசாங்கம் போன்றவை கூட்டாக சேர்ந்து துன்புறுத்தி வருகின்றன. இதைப் பலமுறை உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும், ஜனாதிபதியும், தலைமை நீதிபதியும் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டிவிட்டார்கள். ஆனால் இதுவரை அரசாங்கம் இந்த அப்பாவிகளைப் பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடைசியில் இந்த அப்பாவி இளைஞர்களும், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களும் அகிம்சை வழியில் அரசாங்கத்திற்கு மனுக்கள் எழுதியும், அமைதிவழிப் போராட்டங்கள் நடத்தியும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பலமுறை முறையிட்டுவிட்டார்கள். ஆனால் அதற்குப்பிறகும் அரசாங்கம் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

இது இப்படி ஒருபுறமிருக்க மாவோக்கள், நக்சல்கள் போன்றவர்களின் காலில் விழாத குறையாக உள்துறை அமைச்சரும், பிரதமரும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.
நன்கு படித்த புத்திசாலி இளைஞர்களை சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை வழக்குகளிலிருந்து அரசாங்கம் காப்பாற்றத்தவறினால் அவர்களும் இப்படி காஷ்மீரத்து இளைஞர்களின் வழியைப் பின்பற்ற ஆரம்பித்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்த இளைஞர்கள் அரசாங்கத்திடம் கேட்பது தங்களுக்கும் தங்கள் குடும்பத்திலுள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு மட்டுமே. இதை அரசாங்கம் கொடுக்கத்தவறினால் இவர்கள் வேறெங்கு போவார்கள், வேறு என்ன செய்வார்கள் என்று அரசாங்கம் சிந்திக்கவேண்டும்.

வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறவேண்டும் என்று நன்கு படித்து பல்துறையிலும் முன்னேறும் இந்த திறமையான இளைஞர்கள் யாரும் தீவிரவாதத்தில் இறங்கவேண்டும் என்று தங்களது வாழ்க்கையை ஆரம்பிப்பதில்லை. இவர்கள் திசை திரும்பாமல் நேர்வழியில் செல்வதும், வேறுவழியில்லாமல் மாற்றுவழியில் செல்லப்போவதும் அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது. அரசாங்கம் படித்த இளைஞர்களை எப்படி திசை திருப்புகிறது என்று இங்கே சென்று பாருங்கள்--> வீரர்களை கோழைகளாக்கும் கோமாளிகள்


தங்கள் மீது அநியாயமாக போடப்படும் பொய்வழக்குகளை படித்த இளைஞர்கள் எத்தனை ஆண்டுகள் பொறுத்துக்கொண்டிருப்பார்கள்?







Friday, August 20, 2010

இளைஞர்களுக்கு நாலாவது மாமியார் வீடு தயார்

இந்தியாவில் திருமணம் செய்யும் இளைஞர்கள் ஒன்று பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி காவல்நிலையத்தில் குடும்பத்தோடு அலையவேண்டும். அல்லது விவாகரத்து வழக்கில் சிக்கி குடும்ப நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்கவேண்டும். இந்த இரண்டு இடங்களிலும் அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா என்பதை அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவுடன் உங்களது வாழ்க்கைக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிடவேண்டியதுதான். அதன்பிறகு உங்களுக்கு எதிர்காலம் என்று ஒன்று இருந்தால் அது இருண்டதாகத்தான் இருக்கும். அதனால் இவற்றிலெல்லாம் சிக்காமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.

சென்னையில் கூடுதலாக ஒரு குடும்ப கோர்ட்
தினமலர் ஆகஸ்ட் 20,2010

சென்னை: சென்னையில் கூடுதலாக ஒரு குடும்ப நல கோர்ட் அமைப்பதற்கான பரிந்துரையை, தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

சென்னை ஐகோர்ட் வளாகத்தில், மூன்று குடும்ப நல கோர்ட்டுகள் உள்ளன. குடும்ப நல கோர்ட்டுகளில் பெருகி வரும் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கோர்ட்டுகள் இயங்குவதற்கு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, சனி, ஞாயிறு கிழமைகளில் குடும்ப நல கோர்ட்டுகள் இயங்கி வருகின்றன. இதற்கு, வழக்கு தொடுப்பவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த வாரம் சென்னை வந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், தல்வீர் பண்டாரி, சதாசிவம், குடும்ப நல கோர்ட்டுக்கு வந்து பார்வையிட்டனர். மற்ற மாநிலங்களிலும் விடுமுறை தினங்களில் குடும்ப நல கோர்ட்டுகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, நீதிபதி அல்டமாஸ் கபீர் தெரிவித்தார். சென்னையில் மேலும் ஒரு குடும்ப நல கோர்ட் அமைப்பதற்கான பரிந்துரையை, தமிழக அரசுக்கு ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் அனுப்பியிருந்தார். இதை தமிழக அரசு பரிசீலித்தது. இந்த பரிந்துரையை ஏற்பது என அரசு முடிவெடுத்துள்ளது. புதிய கோர்ட்டில் மாவட்ட நீதிபதி மற்றும் தற்காலிக ஊழியர்களை நியமிக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதிய குடும்ப நல கோர்ட், ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சிவில் கோர்ட் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இயங்கும். இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Thursday, August 19, 2010

கலெக்டரை கல்யாணத் தரகராக்கும் இளம் பெண்கள்!

இளம்பெண்கள் கையில் விஷ பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று காதலன் ஏமாற்றிவிட்டான் அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று புகார் கொடுக்கச்செல்வதாக சமீபத்தில் செய்தித்தாள்களில் செய்திகள் வந்தவாறு இருக்கின்றன. கலக்டர் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தை கவனிப்பதற்கா அல்லது கல்யாணத் தரகர் வேலை பார்ப்பதற்கா? சட்டங்களையும் அரசாங்கத்தையும் தங்களுக்கேற்றவாறு பயன்படுத்திக்கொள்வதில் கலியுகத்து யுவதிகள் ரொம்ப புத்திசாலிகள்.

இதுபோன்ற செய்திகளில் உடனே காதலன் மீது கற்பழிப்பு வழக்கு, தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல்துறை தங்கள் கடமையைக் கண்ணை மூடிக்கொண்டு செய்துவிடுவார்கள்.

இதுபோல ஒரு ஆணை காதலித்துவிட்டு ஒரு பெண் ஏமாற்றிவிட்டார் என்று எப்போதாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? அல்லது இதுவரை ஆண்கள் ஏமாற்றப்பட்டது கிடையாதா?

சட்டங்களில் ஏன் இந்த பாரபட்சம்? தவறு செய்வது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சமமாக தண்டிக்கவேண்டும். நடுநிலையற்ற சட்டங்கள் உள்ள இந்திய நாட்டில் காதலித்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ அந்த ஆண் தனக்குத்தானே சமாதி கட்டிக்கொள்வதாகத்தான் அது மாறும். குறிப்பாக இந்தியாவில் திருமணம் செய்தவன் அன்றே தனது நல்வாழ்க்கையை மறந்துவிடவேண்டியதுதான். ஒருதலைபட்சமான மிகவும் ஆபத்தான பெண்கள் ஆதரவு சட்டங்கள் அப்படி உங்கள் வாழ்க்கையைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டுவிடும்.

கீழுள்ள வீடியோவைப் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு கீழுள்ள செய்தியைப் படித்து ஒப்பிட்டுப் பாருங்கள். உண்மை புரியும்.






திருச்சி: திருச்சியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண், "காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என் று கோரிக்கை விடுத்ததால், போ லீஸார் "அப்செட்' ஆகியுள்ளனர்.

திருச்சி, உறையூர், சாலை ரோட்டைச் சேர்ந்த மாரிமுத்து மகள் ராஜேஸ்வரி (23). எம்.பி. ஏ., பட்டதாரி இவர், மண்ணச்சநல்லூர், பகுதியைச் சேர்ந்த குணசேகரனை காதலித்து வந்தார். இவர்களது காதலில் திடீரென விரிசல் விழுந்தது.குணா பேச மறுத்ததால், விரக்தியடைந்த ராஜேஸ்வரி சென்ற 16ம் தேதி திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். கையில் வைத்திருந்த விஷத்தைக் குடித்தார்.
அருகிலிருந்த மகளிர் போலீஸார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கலெக்டர் சவுண்டையா தலையிட்டதால், "காதலன் குணசேகரன் மீது இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும்' கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.






காதலனை கைது செய்து விசாரிக்க சென்னை செல்ல போலீஸார் முடிவு செய்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி, திடீரென , "காதலன் குணசேகரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்; காதலனுடன் என்னை எப்படியாவது சேர்த்து வையுங்கள்' என்று போலீஸாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.தகவலறிந்த போலீஸார் இவ்வழக்கு தொடர்பாக அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.


திருச்சி: காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகக் கூறி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள, எம்.பி.ஏ., பட்டதாரி பெண் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி சாலை ரோட்டைச் சேர்ந்த மாரிமுத்து மகள் ராஜேஸ்வரி (23); எம்.பி.ஏ., பட்டதாரி. மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர். காதலில் விரிசல் ஏற்பட்டது.திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை ராஜேஸ்வரி வந்தார். கலெக்டர் கார் நிற்கும் இடத்துக்கு சென்று, கையில் வைத்திருந்த மனுவை தூக்கிப் பிடித்தார், இன்னொரு கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை, "மள மள'வென குடிக்கத் துவங்கினார்.அருகிலிருந்தவர்கள் சத்தம் போட்டவுடன், மகளிர் போலீசார், உடனே அவரைப் பிடித்து, விஷத்தை வெளியே எடுக்க வைத்தனர். ராஜேஸ்வரியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ராஜேஸ்வரி இரண்டு கடிதங்கள் எழுதி இருந்தார். காதலன் குணசேகரனுக்காக எழுதிய கடிதத்தில், "குணா, நான் உன்னை ஒரு சதவீதம் கூட சந்தேகப்படவில்லை உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன். நீ முத்தமிட்ட உதடுகளை வேறு யாரும் முத்தமிடக் கூடாது. உன் கைப்பட்ட என் உடலில், வேறு யார் கையும் படக் கூடாது' என, உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

கலெக்டருக்கு எழுதிய கடிதத்தில், "என் பெயர் ராஜேஸ்வரி. நானும், குணசேகரும் காதலித்து வந்தோம். திடீரென என்னுடன் பேசுவதை குணசேகர் குறைத்துக் கொண்டார்; பழகுவதை நிறுத்தி விட்டார். காரணம் கேட்டபோது, "அப்போது பிடித்தது பழகினேன்; இப்போது பிடிக்கவில்லை' என்கிறார். நம்பிக்கை துரோகத்துக்கு ஆளாகிய நான், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன். இது என்னைப் போல் படித்து, ஏமாறும் பெண்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். நான் இறந்தால், என் காதலனிடமிருந்து மூன்று லட்ச ரூபாய் வாங்கி, என் பெற்றோருக்கு கொடுக்க வேண்டும்' என, எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவத்தால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.





Wednesday, August 18, 2010

ஏற்காட்டில் வெடித்த எரிமலை

சமீபத்தில் ஏற்காட்டில் இந்திய ஆண்கள் நலச் சங்கம் சார்பாக அகில இந்திய மாநாடு நடந்தது. இந்தியாவில் உள்ள எல்லா செய்தித்தாள்களிலும் அதைப்பற்றிய செய்திகள் வந்திருந்தது. அவற்றின் தொகுப்பு கீழே உள்ளது.


திருமணம் செய்வதற்குத் தயாராகும் இந்திய இளைஞர்கள் இந்த செய்தித் தொகுப்பிலிருந்து ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால் இந்தியாவில் திருமணம் செய்தால் உங்கள் வாழ்க்கை இருண்டுவிடும் என்பதுதான். அதுவும் சட்டப்பூர்வமாக இந்திய அரசின் தவறான வரதட்சணை சட்டங்களால்தான் உங்கள் வாழ்க்கை நாசமாக்கப்படும். இந்தியாவில் திருமணம் செய்துகொண்டால் பொய்வரதட்சணை வழக்கில் சிக்கி காவல்நிலையத்தில்தான் நீங்கள் தேனிலவிற்கு செல்லவேண்டியிருக்கும். அதனால் வேறுநாடுகளில் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக ஏற்காட்டில் தேனிலவு கொண்டாடுங்கள்!



பத்திரிக்கையாளர்களுடன் இந்திய ஆண்கள் நலச் சங்க தேசியத் தலைவர்களின் சந்திப்பு



ஏற்காட்டு மாநாட்டில் மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் குமுறல்
தமிழ் குறிஞ்சி Monday, 16th August 2010

ஏற்காட்டில் நடந்த மாநாட்டில், மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் தங்களின் மனக்குமுறல்களை கூறி, சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

மனைவியால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் ஒருங்கிணைந்து `இந்திய குடும்ப பாதுகாப்பு` என்ற அமைப்பை கடந்த 2005-ம் ஆண்டு ஏற்படுத்தினார்கள்.

இந்த அமைப்பின் 3-வது மாநாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, அசாம், சத்தீஸ்கார், மேற்கு வங்காளம், புதுடெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

மாநாட்டில் கலந்து கொண்டு பேசியவர்கள், மனைவிகளால் தாங்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டோம் என்ற மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார்கள். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை சில பெண்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்தி ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள் என வேதனையுடன் குறிப்பிட்டார்கள்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* அரசின் சட்டங்களில் எங்கெல்லாம் ஆண் மற்றும் பெண் என்று வருகிறதோ அதை நபர் என்றும், எங்கெல்லாம் கணவன் மற்றும் மனைவி என்று வருகிறதோ அதை துணை என்றும் மாற்ற வேண்டும்.

* ஆண்கள் பல வழிகளில் புறக்கணிக்கப்படுவதால் அரசியல் நோக்கம் கருதி ஆண் ஆதரவு ஓட்டு வங்கி உருவாக்க முடிவெடுப்பது.

* குடும்ப நல வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் அமைத்து 2 வருடங்களுக்குள் முடிக்க வேண்டும்.

* ஆண்கள் நலம், பிரச்சினைகள், உரிமைகளுக்கு தீர்வு காண ஆண்கள் நல அமைச்சகம், ஆண்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்.

* குழந்தை வளர்ப்பில் ஆண், பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டிற்கு பிறகு அகில இந்திய ஆண்கள் நல சங்கத்தின் தேசிய உறுப்பினர் சுரேஷ்ராம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்களின் அமைப்பு குடும்ப அமைப்பை காப்பாற்றவும், ஆண்கள் நலனை பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஏற்காட்டில் நடந்த 2 நாள் மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஆண்கள் நலனில் அக்கறை கொண்ட 22 அமைப்புகள் பங்கேற்றன. எங்களின் அமைப்பில் வெளி நாட்டு வாழ் இந்தியர்களும், சாப்ட்வேர் என்ஜினீயர்களும் அதிகமாக உள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 498 ஏ என்ற பிரிவை பெண்கள் சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தின் கீழ் மன ரீதியில் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறி கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள். அதே போல குடும்ப வன்முறை சட்டத்தையும் சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமண விழாவில் தாலி கட்டுவதற்கு முன்பு மணப்பெண் திருமணத்தை நிறுத்தி விட்டால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதே வேளையில் மாப்பிள்ளை சென்று விட்டால் அவர் கைது செய்யப்படுகிறார்.

அதே போல குழந்தை பிறந்த பிறகு கணவன் - மனைவி பிரிந்தால் குழந்தை தாயிடம் வளர சட்டமும், தந்தை ஒரு மணி நேரமே பார்க்க அனுமதியும் வழங்கப்படுகிறது. சம உரிமை என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் அனைத்து விஷயங்களிலும் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஆண்டில் ஆண்களில் 60 ஆயிரம் பேரும், பெண்களில் 32 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் இருந்தே ஆண்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிய வரும்.

இவ்வாறு சுரேஷ்ராம் கூறினார்.

=================


தட்ஸ் தமிழ் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 16, 2010

ஏற்காடு: மனைவி உள்ளிட்ட பெண்களால் பாதிக்கப்படும் ஆண்கள் நலனுக்கென தனி துறையை உருவாக்கி அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று ஆண்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

மனைவியால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் ஒருங்கிணைந்து இந்திய குடும்ப பாதுகாப்பு என்ற அமைப்பை கடந்த 2005-ம் ஆண்டு ஏற்படுத்தினார்கள்.

இந்த அமைப்பின் 3-வது மாநாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு , பஞ்சாப், அரியானா, அசாம், சத்தீஸ்கார், மேற்கு வங்காளம், டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டார்கள்.

மாநாட்டில் கலந்து கொண்டு பேசியவர்கள், மனைவிகளால் தாங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம், சிரமத்திற்குள்ளானோம் என்பதை குமுறலுடன் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

- அரசின் சட்டங்களில் எங்கெல்லாம் ஆண் மற்றும் பெண் என்று வருகிறதோ அதை நபர் என்றும், எங்கெல்லாம் கணவன் மற்றும் மனைவி என்று வருகிறதோ அதை துணை என்றும் மாற்ற வேண்டும்.

- ஆண்கள் பல வழிகளில் புறக்கணிக்கப்படுவதால் அரசியல் நோக்கம் கருதி ஆண் ஆதரவு ஓட்டு வங்கி உருவாக்க முடிவெடுப்பது.

- குடும்ப நல வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் அமைத்து 2 வருடங்களுக்குள் முடிக்க வேண்டும்.

- ஆண்கள் நலம், பிரச்சினைகள், உரிமைகளுக்கு தீர்வு காண ஆண்கள் நல அமைச்சகம், ஆண்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்.

- குழந்தை வளர்ப்பில் ஆண், பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

பின்னர் அகில இந்திய ஆண்கள் நல சங்கத்தின் தேசிய உறுப்பினர் சுரேஷ்ராம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

எங்களின் அமைப்பு குடும்ப அமைப்பை காப்பாற்றவும், ஆண்கள் நலனை பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஏற்காட்டில் நடந்த 2 நாள் மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஆண்கள் நலனில் அக்கறை கொண்ட 22 அமைப்புகள் பங்கேற்றன. எங்களின் அமைப்பில் வெளி நாட்டு வாழ் இந்தியர்களும், சாப்ட்வேர் என்ஜினீயர்களும் அதிகமாக உள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 498 ஏ என்ற பிரிவை பெண்கள் சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தின் கீழ் மன ரீதியில் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறி கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள்.

அதே போல குடும்ப வன்முறை சட்டத்தையும் சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமண விழாவில் தாலி கட்டுவதற்கு முன்பு மணப்பெண் திருமணத்தை நிறுத்தி விட்டால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதே வேளையில் மாப்பிள்ளை சென்று விட்டால் அவர் கைது செய்யப்படுகிறார்.

அதே போல குழந்தை பிறந்த பிறகு கணவன் - மனைவி பிரிந்தால் குழந்தை தாயிடம் வளர சட்டமும், தந்தை ஒரு மணி நேரமே பார்க்க அனுமதியும் வழங்கப்படுகிறது. சம உரிமை என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் அனைத்து விஷயங்களிலும் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஆண்டில் ஆண்களில் 60 ஆயிரம் பேரும், பெண்களில் 32 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் இருந்தே ஆண்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிய வரும் என்றார்.

=================


சேலம், ஆக. 16-2010 தமிழ் கூடல்

ஏற்காட்டில் நடந்த மாநாட்டில், மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் தங்களின் மனக்குமுறல்களை கூறி, சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

மனைவியால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் ஒருங்கிணைந்து "இந்திய குடும்ப பாதுகாப்பு" என்ற அமைப்பை கடந்த 2005-ம் ஆண்டு ஏற்படுத்தினார்கள். இந்த அமைப்பின் 3-வது மாநாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா, அசாம், சட்டீஸ்கர், மேற்கு வங்காளம், புதுடெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

மாநாட்டில் கலந்து கொண்டு பேசியவர்கள், மனைவிகளால் தாங்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டோம் என்ற மனக்குமுறல்களை வெளிப்படுத்தினார்கள். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை சில பெண்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்தி ஆதாயம் தேடிக் கொள்கிறார்கள் என வேதனையுடன் குறிப்பிட்டார்கள்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* அரசின் சட்டங்களில் எங்கெல்லாம் ஆண் மற்றும் பெண் என்று வருகிறதோ அதை நபர் என்றும், எங்கெல்லாம் கணவன் மற்றும் மனைவி என்று வருகிறதோ அதை துணை என்றும் மாற்ற வேண்டும்.

* ஆண்கள் பல வழிகளில் புறக்கணிக்கப்படுவதால் அரசியல் நோக்கம் கருதி ஆண் ஆதரவு ஓட்டு வங்கி உருவாக்க முடிவெடுப்பது.

* குடும்ப நல வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் அமைத்து 2 வருடங்களுக்குள் முடிக்க வேண்டும்.

* ஆண்கள் நலம், பிரச்சினைகள், உரிமைகளுக்கு தீர்வு காண ஆண்கள் நல அமைச்சகம், ஆண்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்.

* குழந்தை வளர்ப்பில் ஆண், பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டிற்கு பிறகு அகில இந்திய ஆண்கள் நல சங்கத்தின் தேசிய உறுப்பினர் சுரேஷ்ராம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்களின் அமைப்பு குடும்ப அமைப்பை காப்பாற்றவும், ஆண்கள் நலனை பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஏற்காட்டில் நடந்த 2 நாள் மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஆண்கள் நலனில் அக்கறை கொண்ட 22 அமைப்புகள் பங்கேற்றன. எங்களின் அமைப்பில் வெளி நாட்டு வாழ் இந்தியர்களும், சாப்ட்வேர் என்ஜினீயர்களும் அதிகமாக உள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 498 ஏ என்ற பிரிவை பெண்கள் சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தின் கீழ் மன ரீதியில் தங்களை கொடுமைப்படுத்துவதாக கூறி கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சிறை தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள். அதே போல குடும்ப வன்முறை சட்டத்தையும் சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். சட்டங்களை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமண விழாவில் தாலி கட்டுவதற்கு முன்பு மணப்பெண் திருமணத்தை நிறுத்தி விட்டால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதே வேளையில் மாப்பிள்ளை சென்று விட்டால் அவர் கைது செய்யப்படுகிறார். அதே போல குழந்தை பிறந்த பிறகு கணவன் - மனைவி பிரிந்தால் குழந்தை தாயிடம் வளர சட்டமும், தந்தை ஒரு மணி நேரமே பார்க்க அனுமதியும் வழங்கப்படுகிறது. சம உரிமை என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் அனைத்து விசயங்களிலும் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஆண்டில் ஆண்களில் 60 ஆயிரம் பேரும், பெண்களில் 32 ஆயிரம் பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதில் இருந்தே ஆண்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிய வரும். இவ்வாறு சுரேஷ்ராம் கூறினார்.

=================

சேலம் : இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்க சார்பு அமைப்புகளின் 3வது அகில இந்திய ஆண்கள் நல உரிமை மாநாடு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட அகில இந்திய ஆண்கள் நலசங்க தேசிய உறுப்பினர் சுரேஷ்ராம் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 1984ம் ஆண்டில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடும்ப வன்முறை சட்டம் முற்றிலும் ஆண்களுக்கு எதிராக உள்ளது.

ஆண்களுக்கு எதிரான சட்டங்கள், ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, சமுதாய புறக்கணிப்பு, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்டவற்றை எதிர்த்து, ஆண்களுக்காக கடந்த 2005ல் ‘இந்திய குடும்ப பாதுகாப்பு’ என்ற அமைப்பை உருவாக்கினோம். இதில், நாடு முழுவதும் 4,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் 3 மாநாடுகளை நடத்தியுள்ளோம்.

நம்நாட்டில் பெண்களை பாதுகாக்க 82 சட்டங்கள் உள்ளன. ஆனால், ஆண்களை பாதுகாக்க தனியாக சட்டம் இல்லை. ஒரு ஆணை, பெண் பாலியல் தொந்தரவு செய்தால் அந்த பெண்ணை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை. எனவே, ஆண்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஆண்கள் நல அமைச்சகம் மற்றும் ஆண்கள் நல வாரியம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு சுரேஷ்ராம் கூறினார்.

=================

SALEM: A national-level coordination forum of men has called for protection from wives and live-in partners whom they charged with exploiting women's welfare legislation that arm them with ‘unbridled' power to act against men.

The men, who claim to be ‘victims' of such legislation from all over the country, spent three days in a resort at the hill station of Yercaud near here to deliberate on how to protect themselves and their kith and kin from harassment and to kick-start a campaign to impress upon policy-makers to think about their plight before enacting such lop-sided laws.

The forum said that many women were abusing these laws for nefarious gains by filing charges against their husbands and partners.

The provisions in these statutes, they called, were ‘anti-men' leading to suicide of nearly 60,000 men as against 32,000 women annually.

Between 2004 and 2008, seven lakh men and family members were arrested including 500 minors and 5000 aged people, they claimed.

They pointed out that, for instance, laws such as the Dowry Prohibition Act, Protection of Women from Domestic Violence Act, Sec 125 of Cr. PC and above all Section 498A of Indian Penal Code were too stringent and non-bailable.

Women's lobbies

“Though a debate is going on in legal circles on whether to amend or not especially Sec 498A to prevent its abuse, a few powerful women's lobbies are blocking it,” said Suresh Ram, National Collegium member, All India Men's Welfare Association, which organised the 3 {+r} {+d} Men's Rights Conference of the Delhi-based Save Indian Family Foundation at Yercaud in Salem district.

Delegates from Maharashtra, Assam, West Bengal, Uttar Pradesh, Karnataka, Andhra Pradesh, Chattisgarh, Madhya Pradesh and from the U.S. attended the deliberations.

A majority of them were from Karnataka, mainly young Information Technology professionals. They said that they would urge the government to replace the words ‘Husband and Wife' with ‘Person' in the said acts. They said that cases before Family Courts should be expedited and settled within two years.

The government would be approached to form National Commission for Men, they add.

=================


Monday, 16 August 2010 YERKAUD(Tamil Nadu):

As many as 22 national NGOs participated in the 3rd Men’s Rights Conference held at Yercaud in Tamil Nadu on the 14th and the 15th of August, 2010.

The organizations marked a “sugarless” Independence Day this year as a symbol of the bitter life they have been handed out by women who harass them and even deny them parenting rights.
“SIFF and its allied NGOs, under the aegis of the Save Indian Family movement, called for a “Sugarless Independence Day”, this year. Men’s rights activists who attended the conference decided to have sugarless tea/coffee on the 15th of August, 2010 and also did not had any other sweets. This was an epitome of the bitterness in the lives of men who are living in a society where there are only expectations from them and no acceptance for them”, said Mandeep Puri, coordinator of the Chandigarh Chapter.

“This men’s rights conference was conducted to discuss and intensify the awareness campaign of the various problems being faced by men in India as sons, brothers, husbands and fathers including skyrocketing suicide rates by men, especially married men. As per National Crime Records Bureau (NCRB)”, said Gaurav Saini, coordinator, Chandigarh Chapter.

“The organization plans to intensify the movement and aim to establish a Men’s Welfare Ministry. Further, the movement plans to expand to another 50 cities with Help line and create Massive Awareness Campaign among the people to reject in political arena (MLA, MP) who neglect ‘men welfare/interest’ by creating a SIF vote bank”, said Arun Kumar.

“Intensify the need of ‘Men’s Welfare Ministry’ through awareness and advocacy with executives and stop Multiple Maintenance litigation were some other demanded which were discussed during the national conference at Yerkaurt”, added Mandeep Puri

“The Chandigarh chapter will soon be announcing the launch of the Chandigarh Chapter of All India Mother-in-Law Protection Forum and Child Rights in Shared Parenting”, said the organization.


The NGOs which were a part of the conference were:
  1. Save Family Foundation, New Delhi
  2. Gender Human Rights Society, New Delhi
  3. Save Indian Family, Nagpur, Maharastra
  4. Hridya, Kolkata, West Bengal
  5. Save Indian Family, Guwahati, Assam
  6. Pati Pariwar Kalyan Samathi, Lucknow, Uttar Pradesh
  7. All India Mother-in-Law Protection Forum, Bangalore, Karnataka
  8. Save Indian Family,Chandigarh
  9. Save Indian Family, Bangalore , Karnataka
  10. Save Indian Family Movement, Chennai, Tamil Nadu
  11. Save Family Harmony, Visakapatinam, A.P
  12. Save Indian Family, Hyderabad, Andhra Pradesh
  13. National Litigant Bench, Bangalore, Karnataka
  14. AIMWA ( All India Men’s Welfare Association), Hyderabad, Andra Pradesh
  15. National Family Harmony Society, Bangalore, Karnataka
  16. Save Indian Family, Pune, Maharastra
  17. Save Indian Family, Jabalpur, Madhra Pradesh
  18. PURE ( People’s Urge for Rights & Equity), Mysore, Karantaka
  19. Child Rights in Shared Parenting, Bangalore, Karnataka
  20. SAMSEVA, Bangalore, Karnataka
  21. Men’s Seek Justice, USA/Delhi and
  22. Save Indian Family, Raipur, Chastigarh

======================

ஏற்காட்டில் கொந்தளித்த கணவர்கள்...!
ஜூனியர் விகடன் கட்டுரை

முடியவில்லை. நாங்கள் சிக்கிச் சீரழிந்துகிடக்கிறோம்.'' - இப்படிச் சொல்வது பாலஸ்தீனம் அல்லது இலங்கை அகதிகள் அல்ல. மனைவியால் பாதிக்கப்பட்டு 'வாழ்க்கை இழந்தவர்கள்'! இவர்கள் 'அகில இந்திய ஆண்கள் நல சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூன்றாம் ஆண்டு மாநாட்டை கடந்த சுதந்திர தினத்தன்று ஏற்காட்டில் நடத்தி இருக்கிறார்கள்!

''எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்களால்

2005-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஸோரூப் சம்ஹார் என்பவரால் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு. மனைவிமார்களால் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு ரிலாக்ஸ் தேடவோ.... ஹனிமூன் ஜோடிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றோ... சுற்றுலாத் தலங்களாகப் பார்த்து மாநாடுகளை நடத்தி வருகிறார்கள். முதல் மாநாட்டை சிம்லாவிலும், இரண்டாம் மாநாட்டை கோவாவிலும் நடத்தி முடித்தவர்கள், இம்முறை அந்த மாநாடு ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில்!

மாநாட்டில் சோகமே உருவாக இருந்த கேரளாவின் கோகுலிடம் பேசினோம். ''எனக்கு சொந்த ஊர் திருச்சூர். வசதியான குடும்பத்தில் நான் ஒரே பையன். எனக்கும் ஆலப்புழாவைச் சேர்ந்த கிருஷ்ணகலாவுக்கும் 2001-ம் வருஷம் கல்யாணம் நடந்துச்சு. நாங்க மும்பையில் குடும்பம் நடத்தினோம். கல்யாணம் ஆனதில் இருந்தே எங்களுக்குள் சின்னச்சின்னப் பிரச்னைகள் முளைச்சது.

அடிக்கடி அவங்க வீட்டு பெருமையைப் பேசுற மாதிரி என்னைக் குத்திக்காட்டுவா. நான் யார்கிட்ட பேசினாலும் அவளுக்கு சந்தேகம்தான். அடிக்கடி ஆபீஸுக்கே வந்து என்னைப்பத்தி விசாரிச்சு அசிங்கப்படுத்தினா. வீட்டுக்கு வந்த உடனே என் மொபைல் போனைப் பிடுங்கி சோதனை செய்றது வழக்கமாப்போச்சு.

ஒருநாள், 'நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்'னு கேரளாவுக்குப் போயிட்டா. 10 நாளுக்கு மேலாகியும் வரலை. நான் போன் செய்து கூப்பிட்டா, 'எங்க வீட்டுல உங்களை வீட்டோட மாப்பிள்ளையா இருக்கச் சொல் றாங்க. இஷ்டம் இருந்தா வாங்க...'ன்னு சொல்லிட்டா. நான் வரலைன்னு சொன்னதும், எங்க குடும்பத்துல இருக்குற அத்தனை பேர் மேலயும் வரதட்சணை வழக்கு போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் நீதிமன்றத்துக்கும் அலையவிட்டாள். சமீபத்தில்தான், இந்த அமைப்புபத்தி கேள்விப்பட்டு அதில் சேர்ந்தேன். இவங்க சட்டரீதியாக எனக்குத் துணையா இருக்காங்க...'' என்றார்.

சுரேஷ் ராம் என்பவர், ''நான் சென்னையில் வியாபாரம் பண்றேன். என் மனைவியின் குடும்பத்தினர் பொய்யாக என் மேல் வரதட்சணை வழக்கு போட்டு அலையவெச்சாங்க. நானும் இந்த அமைப்பில் சேர்ந்தேன். இவங்கதான், 'என் மேல் தவறு எதுவும் இல்லை. நான் வரதட்சணை கேட்கவும் இல்லை'ன்னு சட்டரீதியாக நிரூபிச்சாங்க. இந்த அமைப்பு மட்டும் இல்லைன்னா, நான் ஜெயிலுக்குப் போய் இருப்பேன்.'' என்றவர் தொடர்ந்து,

''நம் நாட்டில் ஆண்களுக்கு எதிராக பல சட்டங்கள் இருக்கின்றன. அதுவும் ஒரு பெண், கணவனால் தனது மனநலனுக்கு ஆபத்து ஏற்படும் என்று புகார் தெரிவித்தாலே, கணவனையும் அவரது உறவினர்களையும் விசாரணை இன்றி மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம் என்று சட்டம் இருக்கிறது. ஒரு பெண் திருமணமாகி ஏழு ஆண்டுக்குள் தற்கொலை செய்துகொண்டாலோ, வேறு வகையில் இறந்தாலோ, சந்தேகத்தின் பேரில் விசாரணை இன்றி, உடனடியாகக் கணவரையும் உறவினர்களையும் கைது செய்ய முடியும். ஆனால் அதேபோல, ஏழு வருடங்களுக்குள் கணவன் இறந்துவிட்டால், மனைவிக்கும் அவளது உறவினர்களுக்கும் எந்த விசாரணையோ தண்டனையோ கிடையாது. இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டங்களில் திருத்தங்கள் தேவை.'' என்றார் ஆதங்கத்துடன்.

இந்த அமைப்பின் தமிழக மாநிலத் தலைவர் பிரான்ஸிஸ், ''எனது மனைவி இன்னொருவனுடன் படுக்கையில் இருந்ததைப் பார்த்துவிட்டேன். ஆனால், என் மீது வரதட்சணை வழக்குப் போட்டு 500 பவுன் நகையும், 75 லட்சம் பணமும் கேட்டு மிரட்டினார்கள். நானும் என் பெற்றோரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். உலகத்தில் அரபு நாடுகளில்கூட இங்கு இருப்பது போல் கணவர்களுக்கு எதிரான சட்டங்கள் இல்லை. இங்கு ஆண்களுக்கு எதிராக சுமார் 30 கிரிமினல் சட்டங்கள் இருக்கின்றன. ஆண்கள் சார்பாக ஒரு சட்டமும் இல்லாத நிலையில், பெண்கள் சார்பாக 84 சட்டங்கள் இருக்கின்றன. திருமணமான ஆண் இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தால், தண்டனை உண்டு. ஆனால், பெண் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தால் தண்டனை எதுவும் கிடையாது!

ஓர் இளைஞர் ஒரு பெண்ணைக் காதலித்துவிட்டு ஏமாற்றினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ஒரு பெண் வாலிபனைக் காதலித்துவிட்டுக் கை கழுவிவிட்டுச் சென்றால் நடவடிக்கை கிடையாது. இதுபோன்ற சட்டங்கள் இருப்பதால்தான் பெண்கள் துணிச்சலுடன் தவறு செய்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற சட்டங்களால் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 512 ஆண்கள் தண்டனை பெற்று இருக்கிறார்கள். நம் நாட்டின் ஜனாதிபதியான பிரதீபா பாட்டீலின் சகோதரர் தொடங்கி, அர்ஜுன்சிங், செம்மலை, எஸ்.எஸ்.சந்திரன், பிரசாந்த் எனப் பிரபலமான குடும்பங்கள்கூட பெண்களால் இதுபோல் பழிவாங்கப்பட்டு இருக்கிறார்கள்...'' என்று ஒரு வி.ஐ.பி. பட்டியலைப் போட்டார்.

அகில இந்தியத் தேசியத் தலைவர் ஸோரூப் சம்ஹாரி, ''நான் டெல்லியில் வசிக்கிறேன். என் அனுமதி இல்லாமல் என் மனைவி கருக்கலைப்பு செய்தார். இதனால், மனரீதியாகப் பாதிக்கப்பட்டேன். அப்போதுதான் வலைத்தளம் மூலம் மனைவியால் பாதிக்கப் பட்டவர்களை ஒருங்கிணைத்து இந்த அமைப்பை ஏற்படுத்தினேன். இதில் சேர சந்தா எதுவும் கிடையாது. இலவசம்தான். இப்போது 84 ஆயிரம் பேர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் சட்டம் சமமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

சமீபத்தில் நடத்தப்பட்ட தேசியக் குற்றப் புள்ளியியல் ஆய்வில் ஒரு வருடத்துக்கு மனைவியால் பாதிக்கப்பட்டு 58 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். 32 ஆயிரம் பெண்கள் மட்டுமே ஆண்களால் பாதிக்கப்பட்டுத் தற்கொலைக்குத் தள்ளப் படுகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. கால்நடைகளைப் பாதுகாக்கக்கூட இங்கு அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், ஆண்களைப் பாதுகாக்க அமைப்புகள் இல்லை. அதனால், பாதிக்கப்பட்ட ஆண்கள் எங்களை www.498a.org, www.aimwa.in என்ற வலைத் தளத்தில் தொடர்புகொண்டால் கட்டாயம் உதவுவோம்!'' என்றார் நம்பிக்கையுடன்.

=======================


சேலம் : "குடும்ப பிரச்னையில் பல சட்டங்களின் கீழ் பல பிரிவுகளில் ஆண்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதைத் தடுக்க புதிய சட்டம் ஏற்படுத்த வேண்டும்,'' என ஏற்காட்டில் நடந்த ஆண்கள் நல உரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்க சார்பு அமைப்புகள் சார்பில், ஏற்காட்டில் மூன்றாவது ஆண்கள் நல உரிமை மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:மத்திய, மாநில அரசுகளின் சட்டங்களில் எங்கெல்லாம் ஆண்/பெண் என்று வருகிறதோ அவற்றை நபர் என்றும், எங்கெல்லாம் கணவன்/மனைவி என வருகிறதோ அவற்றை துணை என்றும் மாற்றம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது மாநகர மற்றும் நகர அளவில் 60 இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்க அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகளை கிராம அளவிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.ஆண்கள் பல வழிகளில் புறக்கணிக்கப்படுவதால், அரசியல் நோக்கம் கருதி ஆண் ஆதரவு ஓட்டு வங்கி உருவாக்க வேண்டும். குடும்ப பிரச்னையில் பெண்களுக்கு வேண்டிய ஒரு தீர்வுக்கு, பல சட்டங்களின் கீழ் பல பிரிவுகளில் ஆண்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதை தடுக்க புதிய சட்டம் ஏற்படுத்த வேண்டும்.தற்போது ஐந்து ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை இழுத்தடிக்கப்படும் குடும்ப நல வழக்குகளை விரைவு நீதிமன்றம் அமைத்து இரண்டு ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் ஆண்கள் நலம், பிரச்னைகள் மற்றும் உரிமைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆண்கள் நல அமைச்சகம், ஆண்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்.இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 15 (3) பாதுகாப்பில் பெண்களை தண்டனைகளில் இருந்து காப்பாற்றும் வகையில் சட்டங்கள் இயற்றுவதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த மாநாட்டில் அகில இந்திய அளவில் பஞ்சாப், அரியானா, அசாம், சத்திஸ்கர், மேற்கு வங்கம், புதுடில்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 22 ஆண்கள் நல தன்னார்வ அமைப்புகள் மற்றும் அதன் பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெண்கள் ஆதரவு சட்டத்தில் ஏழு லட்சம் பேர் கைது : "குடும்ப வன்முறை சட்டம், பெண்கள் ஆதரவு சட்டத்தின் கீழ், நான்கு ஆண்டில் 500 குழந்தைகள் உட்பட ஏழு லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,'' என, அகில இந்திய ஆண்கள் நலச் சங்க தேசிய உறுப்பினர் சுரேஷ் தெரிவித்தார்.இது குறித்து அவர் நேற்று சேலத்தில் கூறியதாவது:மனைவியை தற்கொலைக்கு தூண்டும் வகையிலும், மனரீதியில் ஆபத்தை விளைவிக்கும் விதமாகவும் செயல்படும் கணவன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இந்திய தண்டனை சட்டம் 498(ஏ) படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்த சட்டங்கள் போலீசாரும், வக்கீல்களும் பணம் பறிக்கும் சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. கணவனுக்கு மனைவியால் இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து ஆண்களை காப்பாற்றிக் கொள்ள எந்த வகையிலும் சட்டங்கள் இல்லை. பெண்கள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் விசாரணை நடத்தாமலே ஆண்களும், அவர்களின் குடும்பத்தாரும் கைது செய்யப்படுகின்றனர். இந்த சட்டத்தால் அதிக அளவில் கவுரவமான பொறுப்பில் இருக்கும் டாக்டர்கள், இன்ஜினியர்கள், சாப்ட்வேர் துறையில் பணி செய்யக்கூடியவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். விவாகரத்து சட்டங்கள், குடும்ப வன்முறை சட்டங்கள் இந்திய குடும்ப அமைப்பை தகர்க்கும் வகையில் உள்ளது. இந்த சட்டங்களின் மூலம் 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை 7 லட்சம் ஆண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 500 குழந்தைகளும், 5,000 முதியவர்களும் அடங்குவர். பெண்கள் 1.6 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

==================================================

இளைஞர்களே,

அகில இந்திய அளவில் எல்லாப் பத்திரிக்கைகளும் இந்தியத் திருமணத்தால் வரப்போகும் ஆபத்தைப்பற்றி உங்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிட்டன. இந்தியத் திருமண தகனமேடையிலிருந்து இனி உங்களைக் காப்பாற்றிக் கொள்வது உங்களது திறமை.