பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, December 31, 2010

இளம் மனைவியின் “ரகசியத் தவிப்பு” - ஆண்களுக்கு மட்டும்

இந்தியாவில் திருமணத்திற்குத் தயாராகும் இளம் பெண்களின் மனதில் பல ஆயிரக்கணக்கில் இன்பக் கனவுகள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒரு கனவையாவது இளைஞர்களால் புரிந்துகொள்ளமுடியுமா என்பது மிகவும் சந்தேகமே. இதுவரை புரிந்துகொள்ளவில்லையென்றால் பரவாயில்லை பின்வரும் வீடியோவிலிருந்து இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள்.

தற்காலத்து நவநாகரீக மங்கைகளின் திருமணக் கனவில் சிக்கும் இந்திய இளைஞர்களின் வாழ்வு கண்டிப்பாக நாசமாகிப் போய்விடும் என்பது உறுதி. இளைஞர்களின் வாழ்வையே அழிக்கும்அளவிற்கு இளமங்கையர் போடும் அந்தத் திட்டம் என்ன என்று தெரிந்துகொள்ள பின்வரும் வீடியோவைப் பாருங்கள்.





இந்தியாவில் பல திருமணங்கள் இப்படி ஒரு “கணக்கோடுதான்” ஆரம்பிக்கிறது. பிறகு அந்தக் “கணக்கை” நிறைவு செய்யப் பயன்படும் ஒரு சூத்திரம்தான் (Formula) அரசாங்கம் கொடுத்திருக்கும் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் எனப்படும் மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் (IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act, etc.).

கைதேர்ந்த மருமகள்கள் தாங்களாகவே இந்த ஃபார்முலாக்களில் ஒன்றைப் பயன்படுத்தி தங்களது கணக்கை நன்றாக முடித்துக்கொள்கிறார்கள். வேறுசில மருமகள்கள் கணக்கிற்கு தனிப்பயிற்சி எடுத்துக்கொள்வதுபோல வழக்கறிஞர்களை நாடினால் அந்த வழக்கறிஞர்கள் இந்தக் “கணக்கிற்கு” ஏற்ற ஃபார்முலாவாக இருக்கும் சட்டப்பிரிவை பரிந்துரை செய்து “கணக்கை” நன்றாக முடித்துத் தருகிறார்கள்.

இந்தியாவில் நடக்கும் திருமணம் மற்றும் அதற்குப் பிறகு வரும் பிரச்சனைகளை சற்று கூர்ந்துநோக்கினால் இந்தக் கணக்கு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்று தெளிவாகப் புரியும். கணவனின் சொத்துக்களை எப்படி தன்வசப்படுத்துவது என்ற திட்டத்துடன் மணமுடிக்கும் பெண்கள் திருமணஉறவை ஒரு வியாபார ஒப்பந்தம் போல செயல்படுத்திக்கொண்டு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள். அது சரியாக செயல்படாமல் போகும்பட்சத்தில் தங்களது ஆயுதமான “வரதட்சணை தடுப்புச் சட்டங்களை” கையில் எடுப்பார்கள். கணவன் மற்றும் அவனது குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் “வரதட்சணைக் கொடுமை” செய்ததாக புகார் கொடுத்துவிட்டு போலிஸை கொஞ்சம் “கவனித்தால்”போதும் உடனடியாக கணவன் அவனது குடும்பத்தோடு சிறையில் அடைக்கப்படுவான்.

கணவன் குடும்பத்தோடு சிறையில் அடைபட்டிருக்கும் காலகட்டம்தான் பேரம் பேசுவதற்கான ஏற்ற தருணம். இந்த சமயத்தில் மருமகளின் தரப்பிலிருந்து ஒற்றர்கள் சென்று கணவனிடம் பேரம் பேசுவார்கள். “இந்த” அளவிற்கு பணம் கொடுத்தால் வழக்கை முடித்துக்கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்வார்கள். இந்தக்கட்டத்தில் பல கணவன்கள் பயந்துகொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு தப்பித்தால் போதும் என்று தலைதெறிக்க ஓடிவிடுவார்கள். இதற்கு அஞ்சாத கணவன்கள் அடுத்த கட்டத்தில் சிக்கிக்கொள்வார்கள்.

ஒருவழியாக சிறையிலிருந்து ஜாமின் பெற்று வெளியே வந்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கும்போது மீண்டும் ஒரு முறை மருமகள் தரப்பிலிருந்து ஒற்றர்கள் தூதுசெல்வார்கள். விவாகரத்து கொடுத்து, வரதட்சணை வழக்கை திரும்பப் பெறுவதற்கு “இந்த” அளவு ஒரு தொகை கொடுக்கவேண்டும் என்று பேரம் பேசுவார்கள்.

பொய் வழக்கில் சிக்கி குடும்பத்தோடு சிறையில் சில நாட்கள் இருந்த அனுபவமும், நீதிக்காக நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் நாயாக அலைந்து நீதி கிடைக்குமா, கிடைக்காதா என்ற ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் அனுபவமும் எந்த ஒரு வைராக்கியக்காரக் கணவனையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடும். இந்த தக்க தருணத்தைப் பயன்படுத்தி மருமகள் தரப்பு தங்களது “கணக்கை” சரியாக முடித்துக்கொண்டு உல்லாசமாக தங்களது “திருமணக் கனவு” நிறைவேறிய முழுத்திருப்தியுடன் தனது அடுத்தக் “கனவினை” நிறைவேற்றிக்கொள்வதற்காக “கணவனால் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளான அபலை” என்ற பெயருடன் புதிய ஆளைத் தேடி புறப்பட்டுவிடுவார்கள்.

இதுதான் திருமணம் என்ற பெயரில் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக பல திருமணங்களில் நடந்துகொண்டிருக்கும் சட்டத்தின் துணையோடு நடக்கும் விபச்சாரம். அதைப் பற்றி டில்லி உயர்நீதிமன்றம் அப்பட்டமாக வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.

DATE OF DECISION: 1 November, 2007

Crl.Appeal No. 696/2004 (Citations: I (2008) DLT 337 )
Narender Kumar And Anr. vs State (Govt. Of Nct Of Delhi)

HON'BLE MR. JUSTICE SHIV NARAYAN DHINGRA

Every marriage that fails does not fail due to dowry demand or cruelties. The marriages do fail for several other reasons including the reason of incompatibility of the persons. A failed marriage is not a crime however, the provisions of Section 498A are being used to convert failed marriages into a crime and the people are using this as tool to extract as much monetary benefit as possible. In many cases, where FIRs are filed under Section 498A IPC are quashed after settlements between the parties and the allegations made of cruelties etc. are withdrawn the moment a lump sum payment is received. Involving each of the family members of the husband is another arm in the armory of the complainants of failed marriages. Not only close relatives but distant relatives and even neighbours are being implicated under Section 498A and other provisions of IPC in cases of failed marriages.




மேலே டில்லி உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள உண்மை எப்படி நன்றாக செயல்படுத்தப்படுகிறது என்பதை செயல்விளக்கத்துடன் கீழுள்ள சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விளக்குகிறது.

கீழுள்ள வழக்கில் என்ன நடந்திருக்கிறது என்றால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2005ல் கணவன் விவாகரத்திற்கு விண்ணப்பத்திருக்கிறார். இதைப் பார்த்த மனைவி மூன்றாண்டுகளுக்குப் பிறகு 2008ல் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கெதிராக வரதட்சணை வழக்கு பதிவு செய்திருக்கிறார். பிறகு பேச்சுவார்த்தையில் 6 லட்ச ரூபாய் கொடுப்பதாக கணவன் சொன்னவுடன் மனைவி வரதட்சணை வழக்கைத் திரும்பப் பெற சம்மதித்திருக்கிறார். அதை உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுவிட்டது.

இதில் அதிசயம் என்னவென்றால் வரதட்சணைக் கொடுமை என்பது இந்திய சமுதாயத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றமாக சட்டம் சித்தரிக்கிறது. அதனால்தான் புகார் கொடுத்தவுடனேயே கணவனைக் குடும்பத்தோடு கூட்டமாக கைது செய்து சிறையில் தள்ளுகிறார்கள். அதோடுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்ணுக்காக அரசாங்கமே இலவசமாக இந்த வழக்கை எடுத்து நடத்துகிறது. அப்படியிருக்கும்போது பணம் கொடுத்தவுடன் எப்படி ஒரு அபலைப் பெண்ணுக்கும், மற்றும் சமுதாயத்திற்கும் எதிராக இழைக்கப்பட்ட ஒரு கொடிய குற்றம் அடிச்சுவடே இல்லாமல் மறைந்துபோகும்? உண்மையாகவே வரதட்சணைக் கொடுமையால் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த வேதனை மறைந்துவிடுமா?

அப்படியென்றால் இதுபோன்ற வழக்குகள் பணத்திற்காக போடப்படுகிறதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழுகிறதா? அப்படியென்றால் இப்போது மேலே உள்ள வீடியோவை மற்றொருமுறை பார்த்துவிட்டு சிந்தித்துப் பாருங்கள்.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 26.06.2009
CORAM: THE HONOURABLE MRS. JUSTICE ARUNA JAGADEESAN

CRL.O.P.No.25831 of 2006

This petition is filed to call for the records pertaining to the FIR in crime No.3 of 2005 on the file of the Inspector of Police, All Woman Police Station, Teynampet, Chennai and quash the same.

2. The petitioner is the husband of the second respondent and they were married on 02.06.2004. Due to difference of opinion and temporamental incompatibility they were separated on 28.03.2005. The petitioner has moved the Family Court for divorce and the second respondent herein appeared before the court and filed her counter. In the mean while, the second respondent lodged a criminal complaint on 20.04.2008 against the petitioner, his father, mother, Maternal uncle , Sister Amudha and sister's husband for offences punishable under sections 498 A, 406 and 506(ii) I.P.C. R/w 4 and 6 of Dowry Prohibition Act .

In the faimly court, settlement was arrived at, whereby the second respondent has received a sum of Rs.6,00,000/- (Rupees Six lakhs only) towards permanent alimony before the family court. She had agreed to withdraw the case initiated by her in crime no.3 of 2005 on the file of the first respondent. Mutual agreement for separation was filed before the family Court, which is as follows:

The First Party Arun has agreed to pay Rupees 6,00,000/-(Six Lakhs only) towards one time settlement of permanent alimony and maintanance to the second party, Radhika. The said amount of Rs.6,00,000/- (Rupees Six Lakhs only) shall be given by way of demand draft at the time of enquiry in the mutual consent O.P. Demand Draft No.471597 dated 27.07.2006 drawn on Bank of Baroda, Alwarpet Branch, Chennai. The Second party Radhika shall receive the demand draft at the time of recording evidence before the family Court.
The Second party Radhika has agreed to withdraw the police complaint and not to proceed with any other complaint against the first party or his family members.

10. In this case, in view of the settlement arrived at between the parties to the matrimonial dispute in the Family Court to secure the ends of justice quashing of the F.I.R becomes necessary. Accordingly the FIR in Cr.No.31 of 2005 is quashed.






இளைஞர்களே,

மேலுள்ள தகவல்களைப் படித்தபிறகு உங்களுக்குள் இந்தியத்திருமணங்களைப் பற்றி ஒரு சரியான தெளிவு பிறந்திருக்கும். அந்தத் தெளிவிற்கு புத்தொளியூட்டுவதற்காக மற்றொரு துணுக்குச் செய்தி.

டைவர்ஸ்க்காக ரூ. 30 கோடி: பிரபுதேவா தாராளம்
30/12/2010 தினகரன்

சென்னை: நடிகரும் இயக்குனருமான பிரபு தேவா, அவரது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்வதற்காக ரூ. 30 கோடி சொத்தை அவருக்கு வழங்க உள்ளார். நட்சத்திரங்களின் விவாகரத்துகளிலேயே இதுதான் 'காஸ்ட்லி' விவாகரத்து என கூறப்படுகிறது.

பிரபுதேவாவின் மனைவி ரமலத், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், நயன்தாராவிடமிருந்து பிரித்து, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென விவாகரத்துக்கு ரமலத் சம்மதித்தார். பிரபுதேவா, ரமலத் இருவரும் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்காக ரமலத்துக்கு 2 கார்கள், அண்ணாநகரில் உள்ள 3,440 சதுர அடி நிலம், கோயம்பேட்டில் வீட்டுடன் சேர்த்து ஆயிரம் சதுர அடி நிலம், ஐதராபாத்தில் வீடு, மேலும் ரூ. 10 லட்சம் பணம் தர பிரபு தேவா சம்மதித்தார். ஈஞ்சம்பாக்கத்திலுள்ள வீட்டை இரு மகன்களுக்கு வழங்குகிறேன் என¢றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

கோயம்பேடு, ஐதராபாத் வீடுகள், அண்ணாநகர் மற்றும் கோயம்பேட்டில் நிலம், 2 கார்கள் என ரமலத்துக்கு பிரபு தேவா வழங்கும் சொத்தின் மொத்த மதிப்பு ரூ. 30 கோடி என தெரியவந்துள்ளது. பெரிய தொகையை கொடுத்து மனைவியை பிரபு தேவா விவாகரத்து செய்வது கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






Monday, December 27, 2010

மனைவியால் இப்படியும் ஆபத்து வருமா!

இந்தியாவில் பிறந்த ஆண்களுக்கு ஆபத்துக்கள் பல வடிவங்களில் வரலாம். அவற்றில் முக்கியமாக திருமணம் என்ற பெயரில் வரும் ஆபத்துதான் மிகவும் அபாயகரமானது.

திருமணத்திற்குப் பின் மனைவிக்கு கள்ளக்காமம் ஏற்பட்டு அதற்குக் கணவன் தடையாக இருப்பதாக மனைவி கருதினால் உடனடியாக சட்டத்தின் துணையோடு அந்தத் தடையை தகர்த்தெறிய பெரும்பாலான மனைவியர் பயன்படுத்தும் ஆயுதம்தான் “வரதட்சணை கொடுமை” என்ற பெயரில் ஏவிவிடப்படும் பொய் வரதட்சணை வழக்குகள் - IPC498A.

இந்த வழிமுறையில் தனியாக கூலிப்படை வைத்துக் கணவனைக் கொல்லவேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக காவல்துறையும், நீதித்துறையும் இதுபோன்ற மனைவியருக்கு செலவில்லாமல் இலவச “சர்வீஸ்” செய்து தருவார்கள். இந்த பொய் வரதட்சணை வழக்குகள் கள்ளக்காமம் தவிர தனிக்குடித்தனம் போவதற்கு, மாமனார் மாமியாரை வீட்டை விட்டு விரட்டுவதற்கு, கணவன் வீட்டு சொத்துக்களை பிடுங்குவதற்கு என்று வேறு பல உயரிய நோக்கங்களுக்காகவும் பல மனைவியரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது பலருக்கும் தெரிந்த உலகறிந்த உண்மை!

பொய் வழக்கில் குடும்பத்தோடு சிக்கும் கணவனுக்கு காவல்நிலையம், நீதிமன்றம் என்று அலைந்துகொண்டிருக்கும்போது மனைவி கள்ளக்காமத் துணைவனுடன் சல்லாபமாக ஊர் சுற்றித் திரிந்தாலும் அதைத் தட்டிக்கேட்க முடியாது. அதே சமயம் பார்க்கின்ற ஊரார்கள் கணவன் வரதட்சணை கொடுமை செய்துவிட்டான், பாவம் இந்தப் பெண் என்று அமோகமான ஆதரவு தருவார்கள். இந்த முறையில் ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் - ஒரே ஒரு பொய் வரதட்சணை வழக்கு மூலம்: 1. கள்ளத்துணைவனையும் அடையலாம், 2. தடையாக இருக்கும் கணவனையும் சட்டத்தின் துணையோடு அடக்கலாம், 3. அதே சமயம் தனக்கு எந்த களங்கமும் ஏற்படாமல் ஊராரின் அனுதாபத்தையும் பெறலாம். அதனால்தான் இந்த “வரதட்சணைக் கொடுமை” வழிமுறை பல படித்த நகரத்து மாதர்களால் பெரும்பாலும் பின்பற்றப்படும் நாகரீகமான முறையாக இருக்கிறது. இதற்கு மற்றொரு பெயரும் உண்டு. அதுதான் “பெண் சுதந்திரம்”.

இரண்டாவது வகையில் கள்ளக்காமத்திற்கு தடையாக இருக்கும் கணவனை கள்ளத் துணைவனுடன் சேர்ந்து போட்டுத்தள்ளுவது. இந்த முறையை பெரும்பாலும் கீழ்மட்டத்தில் இருக்கும் பெண்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கான செய்திதான் கீழே கொடுக்கப்ட்டுள்ளது.

மொத்தத்தில் இளைஞர்களுக்கு இந்தியாவில் திருமணம் செய்வதால் வரப்போகும் ஆபத்து இந்தவகையில்தான் இருக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது. அவரவர் தலைவிதியைப் பொறுத்து பொய் வழக்கில் சிக்குவது முதல் உயிரே பறிபோகும் அளவிற்கு எந்த வகையிலாவது இருக்கும். அது எந்த வடிவத்திலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனால் நீங்கள்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.


இந்தியாவில் திருமணம் செய்தால்தானே இந்த ஆபத்து உங்களுக்கு ஏற்படும் என்று நீங்கள் குறைத்து மதிப்பீடு செய்துவிடாதீர்கள். இந்தியாவில் தவறான பெண்ணை திருமணம் செய்தவனுக்கு நீங்கள் நண்பனாகவோ, பக்கத்து வீட்டுக்காரனாகவோ, அல்லது தூரத்து உறவினராக இருந்தாலும் இந்த ஆபத்து உங்களை ஒருகை பார்க்காமல் விட்டுவிடாது. இந்திய சட்டம் அப்படித்தான் சொல்கிறது. அதனால்தான் இன்றும் தினம் தினம் பல குடும்பங்கள் எவனோ ஒருவனின் மனைவி கொடுத்த பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சுற்றமும் நட்பும் சூழ புழல் சிறைக்கு விசாரணைக் கைதி என்ற பெயரில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

IPC498A. HUSBAND OR RELATIVE OF HUSBAND OF A WOMAN SUBJECTING HER TO CRUELTY: Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable to fine. Section 498A of the Indian Penal Code, is a criminal offense. It is a cognizable, non-bailable, and non-compoundable offense.


தவறான சில போதனைகளால் இப்படி ஒரு ஒருதலைபட்சமான சட்டத்தை உணர்ச்சிவசப்பட்டு சிந்திக்காமல் அவசரப்பட்டு எழுதிவிட்டோமே என்று கொல்லிக்கட்டையால் தலையை சொறிந்துகொண்டதுபோல இப்போது இந்திய அரசாங்கமே இந்த சட்டத்தை எப்படி திருத்தி அமைக்கலாம் என்று திண்டாடிக்கொண்டிருக்கிறது. அந்த உண்மையை இங்கே சென்று பாருங்கள் “
Rajya Sabha Invites Public Suggestions to Amend Section 498A of IPC

மொத்தத்தில் இந்தியத் திருமணமேடை ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் தனகமேடைதான். இந்தியாவில் பிறந்தவர்களின் தலையெழுத்து அவ்வளவுதான்! மேலுள்ள இந்தக் கூற்றுக்களை உங்களால் நம்பமுடியவில்லையென்றால் 498a.org என்ற இந்த இணைய தளத்திற்குச் சென்று பாருங்கள்.



கள்ளக்காதலனை ஏவிவிட்டு கணவனை கொன்ற மனைவி

தினகரன் 24/12/2010

புதுடெல்லி : டெல்லி முகந்த்பூரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ரேணு(28). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டு ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் சங்கர் வேலைபார்த்தார். இந்நிலையில், கடந்த 21ம் தேதியன்று போலீஸ் நிலையத்தில் ரேணு ஒரு புகார் அளித்தார். அதில், “20ம் தேதி ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு சென்ற சங்கர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, சங்கருக்கும், ரேணுவுக்கும் அடிக்கடி தகராறு நடந்தது தெரிந்தது. உடனே சங்கரின் தந்தை போலா ஷாவிடம் விசாரித்தபோது, “சங்கருடன் வேலை பார்த்த ராஜு(23) என்பவருக்கும், ரேணுவுக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது. அதுதொடர்பாகத்தான் ரேணுவுக்கும் சங்கருக்கும் தகராறு வரும்’’ என்று போட்டு உடைத்தார்.

அதைத் தொடர்ந்து ரேணுவை போலீசார் விசாரித்தனர். முதலில் ஒன்றுமே தெரியாது என்று அப்பாவி போல ரேணு அழுது சாதித்தார். ‘உரிய’ முறையில் விசாரித்தபோது கள்ளக்காதலன் ராஜுவுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதைத் தொடர்ந்து, ரேணு, ராஜு இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது வெளிவந்த தகவல்கள் வருமாறு:

சங்கர் & ரேணு தம்பதி முதலில் வாசிர்பூர் தொழிற்பேட்டை பகுதியில் குடியிருந்தனர். பக்கத்து வீட்டில் வசித்த ராஜுவுடன் ரேணுவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கணவன் இல்லாத சமயத்தில் உல்லாசமாக பொழுதை கழித்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானதும், வேறு இடத்துக்கு குடியேற சங்கர் முடிவு செய்தார். அதன்படி, 3 மாதங்களுக்கு முன் முகந்த்பூருக்கு வந்தனர். அங்கு வந்தபிறகும் ரேணு & ராஜு கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனால் சங்கருக்கும் ரேணுவுக்கும் கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டு வந்தது.

சங்கரை தீர்த்துக்கட்டி விட்டால் ராஜுவுடன் சந்தோஷமாக வாழலாம் என்று ரேணு முடிவு செய்தார். அதை ராஜுவும் ஏற்றுக் கொண்டார். இருவரும் சேர்ந்து சதித்திட்டத்தை தீட்டினர். இந்நிலையில், சம்பவத்தன்று தனது டெம்போவில் வாசிர்பூரில் உள்ள ராஜு வீட்டுக்கு சங்கர் சென்றார். ராஜுவின் தாயைச் சந்தித்து, “ரேணுவை பார்க்க முகந்த்பூருக்கு ராஜு வருகிறான். கண்டித்து வையுங்கள்“ என்று கூறிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

அதற்குள் சங்கரின் டெம்போவினுள் ராஜு ஏறி, பின்பக்கத்தில் ஒளிந்து கொண்டார். பாய் பர்மானந்த் சவுக்கில் டெம்போ சென்று கொண்டிருந்தபோது, வண்டியை நிறுத்துமாறு ராஜு சத்தம் போட்டார். திடுக்கிட்ட சங்கர் உடனே டெம்போவை நிறுத்தினார். வண்டியைவிட்டு இறங்கும்படி ராஜுவிடம் கூறியதற்கு, “வண்டியில் ஒரு நட் லூசாக இருக்கிறது. அதை டைட் பண்ணிக்கோ’’ என்று கூறினார். ராஜு கூறிய இடத்தில் ஒரு நட் லூசாக தொங்குவதைக் கண்ட சங்கர், உடனே ஸ்பேனரைக் கொண்டு வந்து அந்த நட்டை டைட் செய்வதற்காக குனிந்தார். அப்போது, சங்கரின் பின்கழுத்தில் துப்பாக்கியால் ராஜு சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சங்கர் இறந்தார். பிறகு, சடலத்தை டெம்போவில் ஏற்றிச் சென்று, சோனேபட் அடுத்துள்ள பரோட்டா அக்பர்பூரிலுள்ள நிலத்தில் வீசியுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.




Thursday, December 23, 2010

நீதிபதிகள் செய்த தில்லுமுல்லு?



6 முன்னாள் நீதிபதிகளுக்கு சி.பி.ஐ. கோர்ட் சம்மன்
தினகரன் 23/12/2010

காசியாபாத் : பிராவிடன்ட் பண்ட்(பி.எப்.) நிதிமோசடி வழக்கில் 6 முன்னாள் நீதிபதிகளுக்குசிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

உ.பி.மாநிலம், காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பிராவிடன்ட் பண்ட் நிதியில் பல ஆண்டுகளாக ஊழல் நடந்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ராம ஜெயின் என்பவர் இதை கண்டுபிடித்து, கவிநகர் போலீசில் புகார் செய்தார்.


மொத்தம் ரூ. 7 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஊழலுக்கு முக்கிய காரணமாக இருந்த அசுதோஷ் அஸ்தானா என்பவர் சிறையில் உள்ள போது இறந்தார். இவர் கொடுத்த வாக்குமூலத்தில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று பரபரப்பு ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து,

முன்னாள் நீதிபதிகள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்பின், சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கு காசியபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி ஏ.கே.சிங் விசாரித்தார். முன்னாள் நீதிபதிகள் ஆர்.பி.யாதவ், ஆர்.பி.மிஸ்ரா, ஆர்.என்.மிஸ்ரா, ஆர்.எஸ்.சவுபே, அருண்குமார், சிங் ஆகியோர் உள்பட மொத்தம் 70 பேருக்கு சம்மன் அனுப்பி, ஜனவரி 30ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.

அப்படியென்றால் இவர்களின் பதவிக்காலத்தில் கொடுத்த தீர்ப்புகளின் நிலை என்ன? எத்தனை அப்பாவிகள் தண்டிக்கப்பட்டார்களோ?

நாட்டில் நடக்கும் அநீதியையும், லஞ்ச ஊழல்களையும் தக்கமுறையில் தடுத்து அப்பாவி மக்களை ஏமாற்றுபவர்களை தண்டிக்கவேண்டிய பொறுப்பு காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் உள்ளது. இவர்களே இப்படியிருந்தால் அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை யார் தட்டிக்கேட்கமுடியும்? இந்த வெளிப்பாடுதான் இப்போது செய்தித்தாள்களில் தினம்தினம் வரும் கோடிக்கணக்கான ஊழல் செய்திகள். அப்பாவி மக்களை யார் காப்பாற்றப்போகிறார்களோ?

இந்தியாவில் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கும் அப்பாவிகள் நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபித்து நீதியைப் பெறலாம் என்று நினைத்தால் அங்கே அவர்களுக்கு நீதி கிடைக்குமா?



Sunday, December 19, 2010

பிள்ளையப் பெத்தவர்களுக்கு கண்ணீரு!

பின்வரும் இரண்டு செய்திகளையும் மனதை திடப்படுத்திக்கொண்டு படியுங்கள்.

THE DOWRY PROHIBITION ACT, 1961

(Act No. 28 of 1961)

3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more:

இந்த வரதட்சணை தடுப்புச் சட்டம் பின்வரும் செய்தியில் ஒழுங்காக பின்பற்றப்பட்டிருக்கிறதா?


வடமதுரை : நத்தம் முல்லைநகரைச் சேர்ந்த ஜெய்லானிக்கும் திண்டுக்கல் மேட்டுப்பட்டி நஸ்ரீன்பானுவிற்கும் 99ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் வரதட்சணை தரப்பட்டது. தம்பதியருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் மேலும் 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு நஸ்ரீன்பானுவை கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். திண்டுக்கல் ஜே.எம்.3 கோர்ட் உத்தரவின் பேரில் வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து நஸ்ரீன்பானுவின் கணவர் ஜெய்லானி(38), மாமனார் அப்துல்ரகுமான்(55), மாமியார் அபீதாபீவி(50) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

1999ல் நடந்த திருமணத்தில் பெண் தரப்பிலிருந்து கொஞ்சமும் கூசாமல் வரதட்சணை கொடுத்து குற்றம் இழைத்திருக்கிறார்கள். ஆனால் 2010ல்தான் வரதட்சணை என்பது குற்றம் என்று தெரிந்ததா? அதிலும் கணவன் மற்றும் அவனது பெற்றோர் மட்டுமே குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்களே அது ஏன்?

உண்மையாகவே வரதட்சணையை ஒழிக்கவேண்டுமென்றால் வரதட்சணை கொடுப்பவர், வாங்குபவர் இரண்டு பேரையுமே தண்டிக்கவேண்டுமல்லவா? அப்படியில்லாமல் சட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தாமல் ஐயோ வரதட்சணை கொடுமை இருக்கிறது என்று கூப்பாடு போடுவது எந்தவகையில் நியாயம்? இப்படி சட்டங்களை ஒழுங்காக செயல்படுத்தாமல் ஒருதலைபட்சமாக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதுதான் இந்திய சட்டங்களின் சிறப்பம்சம். இந்தியத் திருமண தகனமேடைகளில் இருக்கும் ஆபத்தும் இதுதான்.

===========

அடுத்த செய்தியைப் படிப்பதற்கு முன் இந்த நீதிமன்ற உத்தரவையும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நடைமுறையில் இருக்கும் அவலங்களும் ஆபத்துக்களும் உங்களுக்குப் புரியும்.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED: 04.08.2008

CORAM
THE HON'BLE MR. JUSTICE R.REGUPATHI


iii) Arrest in matrimonial disputes, in particular arrest of aged, infirm, sick persons and minors, shall not be made by the Station House Officers of the All Women Police Stations.

As could be
seen, though suitable directions have been given to the police, in particular to the Station House Officers, still there may be scope for misuse of power. The directions/instructions are only illustrative and not exhaustive. When the investigating officers seek for remand of the accused, the Magistrates must examine the necessity for the same and only where there are valid grounds for believing that the accusation or information is well- founded and it appears that the investigation cannot be completed within a period of 24 hours, remand may be ordered.

Violation of human rights and infringement of personal liberties must be viewed

seriously. remand should not be ordered mechanically, for, remand of an accused by a Magistrate is not automatic one on the mere request of the investigating officer and sufficient grounds must exist for the Magistrate to exercise the power of remand.

Though the law is
manifestly clear, plain and patent, in many cases, it is witnessed that, on the mere request of the investigating officers, remand is ordered mechanically without application of mind and such illegal practice must be avoided. Our experience shows that, apart from the husband, all family members are implicated and dragged to the police stations. Though arrest of those persons is not at all necessary, in a number of cases, such harassment is made simply to satisfy the ego and anger of the
complainant.


7. Registry is directed to immediately circulate copy of this order as well as the earlier
order dated 07.07.2008 to the Director General of Police, Tamil Nadu, and all the Judicial
Magistrates for compliance.

இந்த சென்னை உயர்நீதிமன்ற 2008ம் ஆண்டு உத்தரவு இன்றுவரை 2010ல் கூட எப்படி மதிக்கப்பட்டிருக்கிறது என்று பின்வரும் செய்தியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Incarcerated prisoner dies in prison

New Kerala.com

Tirunelveli, Tamil Nadu, Dec 17 : A old prisoner, who was arrested on the charges of dowry harassment, died at Palayamkottai Central Prison, here today.

Police said Ravindran Barnard (64), hailing from Madurai, was arrested by Tuticorin Police on December 5 last on a dowry harassment complaint from his daughter-in-law Dr Agnus Latha (34), a medical practitioner.

He was lodged in Central Prison at Palayamkottai here. Since then the health condition of Barnard had been deteriorating. He was admitted to the hospital inside the prison complex. He suffered a cardiac arrest and died this morning.

An investigation was underway, police added.

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்து திருமண தகனமேடையில் உங்களது பெற்றோரை பலியாக்கிவிடாதீர்கள்! இந்தியாவில் பொய் சொல்பவர்களை தண்டிக்க எந்தவித சட்டங்களும் கிடையாது. கடைமையை ஒழுங்காகச் செய்யாத அதிகாரிகளை தண்டிக்கவும் எந்த சட்டங்களும் கிடையாது. அதனால் நீங்கள்தான் உங்களையும் உங்களது பெற்றோரையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.




Monday, December 13, 2010

மனைவி இறந்தால் கணவனுக்கு சங்கு!

மனைவி தீக்குளிப்பு கணவன் கைது
தினகரன் 13/12/10

தண்டையார்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. 2 நாட்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வி தீக்குளித்து இறந்தார். வரதட்சணை கொடுமையால் மகள் இறந்துள்ளதாக பெற்றோர் புகார் செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஆர்.டி.ஓ.வும் விசாரித்தார். இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

=============


இந்தியாவில் திருமணம் செய்தால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்குவதோடு மட்டுமல்லாமல் மற்றொரு துன்பமும் உங்களுக்குக் காத்திருக்கிறது. அதுதான் IPC 304B என்று சொல்லப்படும் வரதட்சணைக் கொலை.


IPC Section 304-B "dowry death"

  1. The death of a woman must have been caused by burn or bodily injury or otherwise than under normal circumstance;
  2. Such death must have occurred within seven years of her marriage;
  3. Soon before her death, the woman must have been subjected to cruelty or harassment by her husband or by relatives of her husband;
  4. Such cruelty or harassment must be for or in connection with demand for dowry;
  5. Such cruelty or harassment is when to have been meted out to the woman soon before her death.

இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மேற்கண்ட நிகழ்வுகள் நடந்திருக்கவேண்டும் என்பது சட்டப்புத்தகத்தில் சொல்லப்பட்ட சட்டம். ஆனால் நடைமுறை சட்டத்தில் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்திருந்தால் உடனடியாக கணவன் கைது செய்யப்படுவான்.

இதுபோன்ற அநியாய கைது நடவடிக்கைக்கு துணைபோவது யார் தெரியுமா. பெண்ணின் பெற்றோர்கள். தங்களது பெண்ணின் காதல் விஷயத்தை மறைத்து திருமணம் செய்ததை மறைப்பதற்காக அப்பாவிக் கணவன் மீது வரதட்சணைக் கொலை என்று பழிபோட்டுவிடுவார்கள். அல்லது பெண்ணிற்கு வேறு ஏதாவது வியாதி அல்லது வேறு காரணங்கள் இவற்றை மறைக்க பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே கணவன் மீது வரதட்சணைக் கொலை வழக்குப் பதிவு செய்யப்படும்.

இது தான் அப்பாவிக் கணவர்களுக்கெதிராக இந்தியாவில் நடைமுறையில் நடந்துவரும் சட்டரீதியான கொடுமை. இதை நீதிமன்றங்கள் பலமுறை எடுத்துக்காட்டியிருக்கிறது.

திருமணம் முடிந்து 7 ஆண்டுகளுக்குள் மனைவி இயற்கையாக இறந்துவிட்டால்கூட அது கணவனும் அவனது குடும்பமும் சேர்ந்து செய்த வரதட்சணைக் கொலை என்று கருதப்படும். உடனே RDO விசாரணை செய்து அறிக்கை கொடுக்கவேண்டும். அதுவே திருமணமாகி அடுத்த நாளே கணவன் கொலை செய்யப்பட்டால்கூட அது இயற்கையான மரணமாகக் கருதப்படும். யாரும் கேட்கக்கூட மாட்டார்கள். இதுதான் கணவனுக்கு இந்த சமுதாயத்தில் உள்ள மரியாதை.

இப்படித்தான் நடைமுறையில் சட்டங்கள் கையாளப்படுகிறது. மனைவி இறந்தவுடன் அவரது பெற்றோர்கள் உடனடியாக கணவன் மற்றும் அவனது குடும்பத்தார் வரதட்சணைக் கேட்டு தங்களது மகளை கொலை செய்துவிட்டதாகப் புகார் கொடுத்துவிடுவார்கள். காவல்துறையும் உடனடியாக உங்கள் மீது IPC- 498A, 304B போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். 304Bயில் சிக்கினால் ஜாமின் கிடைப்பது மிகவும் கடினம். காவல்துறை புலன் விசாரணை செய்யமாட்டார்களா? என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படி ஒன்று நடக்கிறதா?


==========

மனைவி தீக்குளிப்பு கணவன் கைது
தினகரன் 13/12/10

தண்டையார்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. 2 நாட்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வி தீக்குளித்து இறந்தார். வரதட்சணை கொடுமையால் மகள் இறந்துள்ளதாக பெற்றோர் புகார் செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஆர்.டி.ஓ.வும் விசாரித்தார். இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

=============

பெண் இறந்துவிட்டால் அதற்குக் கணவன்தான் காரணம் என்று இந்தியாவில் ஒரு மனப்பான்மை இருக்கிறது. இதற்கு தூபம் போடுவதுதான் ஒழுங்குமுறையற்ற சட்டங்களும் நேர்மையற்ற விசாரணைகளும். இதை டில்லி உயர்தீநிமன்றம் படம் பிடித்துக்காட்டியுள்ளது. நீதிமன்றங்கள் உங்களுக்கு இந்த உண்மையை சொல்லமுடியுமே தவிர நீங்கள் இதில் சிக்குவதிலிருந்து உங்களைக் காப்பாற்ற முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


Crl. Rev. P. No.555/2003 Narender Singh Arora v State (Govt. of NCT of Delhi) & Ors.
Date of Order: September 01 , 2010
Crl. Revision Petition No.555/2003 01.09.2010
Narender Singh Arora ...Petitioner
Versus

State (Govt. of NCT Delhi) & Ors. ...Respondents

JUSTICE SHIV NARAYAN DHINGRA


5. This case is a reflection of mentality which is now taking grip of parents of a deceased wife in the criminal cases. Whenever a woman dies an unnatural death within seven years of her marriage at in-laws’ house, whatever be the cause of death, the in-laws must be hanged. This case also shows how truth is losing significance because of the ego of the litigants to see that in-laws should be hanged.

6. Suicide is a known phenomenon of human nature. Suicides are committed by living human beings for various reasons, some are not able to bear the normal stresses which are common in life. Some are not able to cope up with the circumstances in which they are placed. Some commit suicide because of frustration of not achieving the desired goals. There are many cases where students commit suicide because they failed to achieve certain percentage of marks. Some commit suicide because they are not able to retain top position, some commit suicide because they are not able to cope with the demands of life. Some commit suicide because they suffer sudden loss, some commit suicide out of fear of being caught. There are various reasons for which suicides are committed by men and women. All suicides are unnatural deaths. Suicide is a complex phenomenon. One, who commits suicide, is not alive to disclose as to what was going on in his or her mind when he or she committed suicide. There is no presumption that every suicide committed by a married woman in her in-laws’ house or at her parents’ house has to be because she was suffering harassment at the hands of her husband or her in-laws.

7. Normally in-laws are convicted on the testimonies of parents of the girl who, in a fit of anger or because they had lost their daughter, are not prepared to believe that their daughter could commit suicide for any other reason.

இளைஞர்களே,

இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கண்மூடித்தனமான சட்ட நடைமுறைகள் கிடையாது. அதனால் இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடைக்குள் நுழைந்து பொய் வரதட்சணை வழக்குகள் என்ற தீயில் உங்கள் குடும்பத்தாரை உயிரோடு பொசுக்கிவிடாதீர்கள்.





Saturday, December 11, 2010

உங்கள் பிள்ளைகளுக்காக ஒரு அருமையான காதல் கடிதம்

ஆண் பிள்ளைகளை பெற்றிருக்கும் பெற்றோர்களே, எதிர்காலத்தில் ஆண் பிள்ளைக்கு பெற்றோர் ஆகப்போகும் குடிமக்களே உங்களது பிள்ளையின் திருமணம் இந்தியாவில் நடக்கவேண்டுமென்றால் நீங்கள் இப்போது டிசம்பர் 31ற்குள் ஒரு காதல் கடிதம் எழுதவேண்டும். இது மிகவும் அவசியமானது. நீங்கள் எழுதும் இந்தக் காதல் கடிதத்தை இந்திய ராஜ்ய சபா விசாரணைக் குழுவிற்கு அனுப்பவேண்டும். நீங்கள் இப்போது இதைச் செய்தால்தான் உங்கள் மகன் எதிர்காலத்தில் இந்தியாவில் காதல், திருமணம் என்பது போன்ற வாழ்க்கையின் ஒரு பகுதியை அனுபவிக்கமுடியும்.

தற்போது இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தவறான வரதட்சணை தடுப்புச் சட்டங்களை பல கொடிய பெண்கள் தவறாகப் பயன்படுத்தி பல அப்பாவி இளைஞர்களின் வாழ்வை சிதைப்பதோடு மட்டுமல்லாமல் பல அப்பாவி குழந்தைகள் மற்றும் வயதானவர்களையும் துன்புறுத்திவருகிறார்கள். இந்த உண்மை இப்போதுதான் அரசாங்கத்தின் பார்வைக்கு வந்திருக்கிறது. அதனால் இந்த தவறான சட்டங்களை திருத்துவதற்காக இந்திய அரசாங்கம் பல ஆண்டுகளுக்குப்பிறகு முன்வந்திருக்கிறது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கருத்துக்களை கேட்க ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறது.

இந்த விசாரணைக் குழுவிற்கு நீங்கள் உங்களது கருத்துக்களை எழுதி அனுப்பினால்தான் இந்த சட்டத்தில் தக்க திருத்தங்கள் கொண்டுவருவார்கள். இந்த திருத்தங்கள் ஏற்படவில்லையென்றால் எதிர்காலத்தில் உங்களது மகன், மகள் ஆகியோரின் திருமண வாழ்க்கை தவறான இந்திய சட்டங்கள் மூலம் சிதைக்கப்பட்டுவிடும். இந்த தவறான சட்டங்களால் தற்போது பல குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருக்கின்றது. இந்த உண்மையை தெரிந்துகொள்ள இங்கே சென்று பாருங்கள் www.498a.org. இதுபோன்ற இழிநிலை உங்களது பிள்ளைகளுக்கு ஏற்படாமல் இருக்கவேண்டுமென்றால் நீங்கள் கீழ்கண்ட கோரிக்கை மனுவை இரண்டு நகல்கள் எடுத்து மனுவின் கடைசிப் பகுதியில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு இன்றே அனுப்பிவையுங்கள். உங்களது பிள்ளைகள் தங்களது இளைமைப் பருவத்தில் சுகமான காதலை அனுபவிக்க வேண்டுமென்றால் இன்று நீங்கள் இந்தக் கடிதத்தை காதல் கடிதமாக நினைத்து இந்திய ராஜ்ய சபா குழுவிற்கு அனுப்பவேண்டும்!


இந்திய ராஜ்ய சபா சட்டதிருத்தம் கொண்டுவருவதற்காக பொது மக்களிடம் கருத்து கேட்டு வெளியிட்டுள்ள அறிக்கை.


The Committee on Petitions of the Rajya Sabha, under the Chairmanship of Shri Bhagat Singh Koshyari, Member, Rajya Sabha, is considering a petition praying for amendments in Section 498A of Indian Penal Code, 1860. The petitioner in his petition has pointed out the extensive abuse and misuse of this provision of the Penal Code. According to the petitioner, the abused population undergoes tremendous harassment and torture. As these provisions of the penal code presently go, a complaint without much authenticity or any weight of evidence is enough to arrest the husband or the in-laws or anyone else named in the complaint, irrespective of whether any crime has taken place or not. The petitioner, accordingly, has prayed for suitable modification in section 498A of Penal Code so as to check its abuse and protect the interest of innocent persons.

2. The petition is available on the Rajya Sabha's website (www.rajyasabha.nic.in) under the link: Committees → Standing Committees → Committee on Petitions → Petitions with the Committee.

3. The Committee has decided to undertake consultations with a wide cross-section of the society and invites written memoranda thereon. Those desirous of submitting memoranda to the Committee may send two copies (each in English and Hindi) thereof to Shri Rakesh Naithani, Joint Director, Rajya Sabha Secretariat, Parliament House Annexe, New Delhi – 110 001 (Tel: 011-23035433(O), 23794328 (Telefax) and E-mail: rsc2pet@sansad.nic.in) latest by 30th December, 2010.

4. Comments/suggestions, etc. submitted to the Committee would form part of its record and would be treated as confidential. Any violation in this regard may attract breach of privilege of the Committee.

5. Those who are willing to appear before the Committee besides submitting written comments/suggestions may indicate so. However, the Committee’s decision in this regard shall be final.


நீங்கள் அனுப்பவேண்டிய கோரிக்கை மனுவின் நகல் பின்வரும் இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இரண்டு நகல்கள் எடுத்து பின்வரும் முகவரிக்கு இன்றே அனுப்பிவிடுங்கள்.

Shri Rakesh Naithani,
Joint Director
Rajya Sabha Secretariat, Parliament House Annexe
New Delhi – 110 001
E-mail: rsc2pet@sansad.nic.in


எதிர்கால இந்திய சமுதாயத்தின் நலன் கருதி உங்களது நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் இந்த கோரிக்கை மனுவை அனுப்பச் சொல்லுங்கள்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த இணைப்பிலிருந்து NRI Template MS-Word வடிவத்தில் மனுவின் நகலை பெற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவில் வசிப்பவர்கள் இந்த இணைப்பிலிருந்து General Template MS-Word வடிவத்தில் மனுவின் நகலை பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் வசதிக்கேற்ப இந்த மனுவை மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் அனுப்பும் மனு மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று ராஜ்ய சபா குழு உறுதியளித்திருக்கிறது.

4. Comments/suggestions, etc. submitted to the Committee would form part of its record and would be treated as confidential. Any violation in this regard may attract breach of privilege of the Committee.




Thursday, December 2, 2010

அறியாத வயதில் ஆண்கள் செய்யும் தவறு



ஒரு இந்திய இளைஞனின் அனுபவப் பாடங்கள்

(தத்துவங்களை அனுப்பியவர் இந்திய இளைய மேதை ராசுக்குட்டி)


அறியாத வயதில் பாம்பைப் பிடித்தேன்.................

(தினமலர் படம்)



இளமைப் பருவத்தில் இந்தியத் திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணைப் பிடித்தேன்.......................



இரண்டுமே நஞ்சு கொண்டவை என்று இப்போது உணர்ந்தேன்..........

அதனால் வருங்கால இந்தியத் திருமணங்கள் எப்படி இருக்கும் என்று இளைஞர்களுக்கு என் அனுபத்தைச் சொல்கிறேன்...............

இந்தியத் திருமணம் நேற்று, இன்று, நாளை...............