பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, December 13, 2010

மனைவி இறந்தால் கணவனுக்கு சங்கு!

மனைவி தீக்குளிப்பு கணவன் கைது
தினகரன் 13/12/10

தண்டையார்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. 2 நாட்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வி தீக்குளித்து இறந்தார். வரதட்சணை கொடுமையால் மகள் இறந்துள்ளதாக பெற்றோர் புகார் செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஆர்.டி.ஓ.வும் விசாரித்தார். இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

=============


இந்தியாவில் திருமணம் செய்தால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்குவதோடு மட்டுமல்லாமல் மற்றொரு துன்பமும் உங்களுக்குக் காத்திருக்கிறது. அதுதான் IPC 304B என்று சொல்லப்படும் வரதட்சணைக் கொலை.


IPC Section 304-B "dowry death"

  1. The death of a woman must have been caused by burn or bodily injury or otherwise than under normal circumstance;
  2. Such death must have occurred within seven years of her marriage;
  3. Soon before her death, the woman must have been subjected to cruelty or harassment by her husband or by relatives of her husband;
  4. Such cruelty or harassment must be for or in connection with demand for dowry;
  5. Such cruelty or harassment is when to have been meted out to the woman soon before her death.

இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மேற்கண்ட நிகழ்வுகள் நடந்திருக்கவேண்டும் என்பது சட்டப்புத்தகத்தில் சொல்லப்பட்ட சட்டம். ஆனால் நடைமுறை சட்டத்தில் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்திருந்தால் உடனடியாக கணவன் கைது செய்யப்படுவான்.

இதுபோன்ற அநியாய கைது நடவடிக்கைக்கு துணைபோவது யார் தெரியுமா. பெண்ணின் பெற்றோர்கள். தங்களது பெண்ணின் காதல் விஷயத்தை மறைத்து திருமணம் செய்ததை மறைப்பதற்காக அப்பாவிக் கணவன் மீது வரதட்சணைக் கொலை என்று பழிபோட்டுவிடுவார்கள். அல்லது பெண்ணிற்கு வேறு ஏதாவது வியாதி அல்லது வேறு காரணங்கள் இவற்றை மறைக்க பெண் தற்கொலை செய்துகொண்டால் உடனே கணவன் மீது வரதட்சணைக் கொலை வழக்குப் பதிவு செய்யப்படும்.

இது தான் அப்பாவிக் கணவர்களுக்கெதிராக இந்தியாவில் நடைமுறையில் நடந்துவரும் சட்டரீதியான கொடுமை. இதை நீதிமன்றங்கள் பலமுறை எடுத்துக்காட்டியிருக்கிறது.

திருமணம் முடிந்து 7 ஆண்டுகளுக்குள் மனைவி இயற்கையாக இறந்துவிட்டால்கூட அது கணவனும் அவனது குடும்பமும் சேர்ந்து செய்த வரதட்சணைக் கொலை என்று கருதப்படும். உடனே RDO விசாரணை செய்து அறிக்கை கொடுக்கவேண்டும். அதுவே திருமணமாகி அடுத்த நாளே கணவன் கொலை செய்யப்பட்டால்கூட அது இயற்கையான மரணமாகக் கருதப்படும். யாரும் கேட்கக்கூட மாட்டார்கள். இதுதான் கணவனுக்கு இந்த சமுதாயத்தில் உள்ள மரியாதை.

இப்படித்தான் நடைமுறையில் சட்டங்கள் கையாளப்படுகிறது. மனைவி இறந்தவுடன் அவரது பெற்றோர்கள் உடனடியாக கணவன் மற்றும் அவனது குடும்பத்தார் வரதட்சணைக் கேட்டு தங்களது மகளை கொலை செய்துவிட்டதாகப் புகார் கொடுத்துவிடுவார்கள். காவல்துறையும் உடனடியாக உங்கள் மீது IPC- 498A, 304B போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவார்கள். 304Bயில் சிக்கினால் ஜாமின் கிடைப்பது மிகவும் கடினம். காவல்துறை புலன் விசாரணை செய்யமாட்டார்களா? என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படி ஒன்று நடக்கிறதா?


==========

மனைவி தீக்குளிப்பு கணவன் கைது
தினகரன் 13/12/10

தண்டையார்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (24). திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது. 2 நாட்களுக்கு முன்பு தமிழ்ச்செல்வி தீக்குளித்து இறந்தார். வரதட்சணை கொடுமையால் மகள் இறந்துள்ளதாக பெற்றோர் புகார் செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஆர்.டி.ஓ.வும் விசாரித்தார். இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

=============

பெண் இறந்துவிட்டால் அதற்குக் கணவன்தான் காரணம் என்று இந்தியாவில் ஒரு மனப்பான்மை இருக்கிறது. இதற்கு தூபம் போடுவதுதான் ஒழுங்குமுறையற்ற சட்டங்களும் நேர்மையற்ற விசாரணைகளும். இதை டில்லி உயர்தீநிமன்றம் படம் பிடித்துக்காட்டியுள்ளது. நீதிமன்றங்கள் உங்களுக்கு இந்த உண்மையை சொல்லமுடியுமே தவிர நீங்கள் இதில் சிக்குவதிலிருந்து உங்களைக் காப்பாற்ற முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


Crl. Rev. P. No.555/2003 Narender Singh Arora v State (Govt. of NCT of Delhi) & Ors.
Date of Order: September 01 , 2010
Crl. Revision Petition No.555/2003 01.09.2010
Narender Singh Arora ...Petitioner
Versus

State (Govt. of NCT Delhi) & Ors. ...Respondents

JUSTICE SHIV NARAYAN DHINGRA


5. This case is a reflection of mentality which is now taking grip of parents of a deceased wife in the criminal cases. Whenever a woman dies an unnatural death within seven years of her marriage at in-laws’ house, whatever be the cause of death, the in-laws must be hanged. This case also shows how truth is losing significance because of the ego of the litigants to see that in-laws should be hanged.

6. Suicide is a known phenomenon of human nature. Suicides are committed by living human beings for various reasons, some are not able to bear the normal stresses which are common in life. Some are not able to cope up with the circumstances in which they are placed. Some commit suicide because of frustration of not achieving the desired goals. There are many cases where students commit suicide because they failed to achieve certain percentage of marks. Some commit suicide because they are not able to retain top position, some commit suicide because they are not able to cope with the demands of life. Some commit suicide because they suffer sudden loss, some commit suicide out of fear of being caught. There are various reasons for which suicides are committed by men and women. All suicides are unnatural deaths. Suicide is a complex phenomenon. One, who commits suicide, is not alive to disclose as to what was going on in his or her mind when he or she committed suicide. There is no presumption that every suicide committed by a married woman in her in-laws’ house or at her parents’ house has to be because she was suffering harassment at the hands of her husband or her in-laws.

7. Normally in-laws are convicted on the testimonies of parents of the girl who, in a fit of anger or because they had lost their daughter, are not prepared to believe that their daughter could commit suicide for any other reason.

இளைஞர்களே,

இதுபோன்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கண்மூடித்தனமான சட்ட நடைமுறைகள் கிடையாது. அதனால் இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடைக்குள் நுழைந்து பொய் வரதட்சணை வழக்குகள் என்ற தீயில் உங்கள் குடும்பத்தாரை உயிரோடு பொசுக்கிவிடாதீர்கள்.





No comments: