பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, September 1, 2011

புத்திசாலி இளைஞர்கள் எடுக்கும் சரியான முடிவு

தர்ம சாத்திரம்

ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.

தர்ம சாத்திரத்தில் எவையெல்லாம் பிறருக்குத் தெரியக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவையெல்லாம் இன்று இந்தியக் குடும்பங்களில் ஊரறிய காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், செய்தித்தாள்களிலும் பொய் வரதட்சணை வழக்குப்போடும் மனைவியரால் பிரகடனப்படுத்தப்படுகிறது. அதனால் இந்தியத் திருமணத்திலிருந்து வெளியேறி வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்வதுதான் நல்வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் எடுக்க வேண்டிய சரியான முடிவு.


இந்தியாவில் திருமணம் செய்து மனைவி, காவல்துறை, நீதித்துறை மூன்றின் கூட்டணியில் உருவாகும் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சின்னாபின்னமாவதைவிட வேறு நாடுகளில் திருமணம் செய்துகொண்டு வளமாக வாழ்வதுதான் புத்திசாலி இளைஞர்கள் எடுக்கும் சரியான முடிவு.

இதுபோன்ற புத்திசாலித்தனமாக முடிவை எடுத்து நல்வாழ்க்கையில் காலடி எடுத்துவைக்கும் இந்த தூத்துக்குடி இளைஞருக்கு வாழ்த்துக்கள்.


பிலிப்பைன்ஸ் மணமகளை கரம் பிடித்தார் தமிழக மணமகன்
செப்டம்பர் 01,2011 தினமலர்


தூத்துக்குடி : தூத்துக்குடியில் நேற்று, இந்து பாரம்பரிய முறைப்படி பிலிப்பைன்ஸ் நாட்டு மணமகளுக்கும், தமிழக மணமகனுக்கும் திருமணம் நடந்தது.

தூத்துக்குடி, சுந்தர ராமபுரம் ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் சந்திரசேகரன். இவரது மகன் செந்தில்குமார், 26; ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் படித்த இவர், பக்ரைன் நாட்டிலுள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவர், அதே ஓட்டலில் பணிபுரியும், பிலிப்பைன்ஸ் நாட்டின் டார்லக் சிட்டியைச் சேர்ந்த மைக்கேல் லாசன் ஒரெபல் - எரிலிண்டா கேபிரியல் கேம்பாய் தம்பதியரின் மகள் கிறிஸ்ட்டினா மைல்ஸ், 21, என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இருவருக்கும், இவர்களது பெற்றோர் சம்மதம் கிடைத்தது. இதையடுத்து, தூத்துக்குடியிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று காலை, இந்து மற்றும் தமிழ் பாரம்பரிய முறைப்படி, இவர்களது திருமணம் நடந்தது. முன்னதாக, மணமகள் கிறிஸ்ட்டினா மைல்சின் பெயர், சுவேதா என மாற்றப்பட்டு, அவர் பட்டுச் சேலை உடுத்தி மணமேடைக்கு வந்தார். மணமகன் செந்தில்குமார், மேளதாளம் முழங்க, மணமகள் சுவேதா கழுத்தில் தாலி கட்டினார்.

திருமணத்திற்கு வந்திருந்த ஏராளமானோர் அட்சதை தூவி, அவர்களை வாழ்த்தினர்.தொடர்ந்து சடங்குகள் நடந்தன. இந்த திருமணத்தில் மணமகன் குடும்பத்தினர், மணமகளின் தாயார், அவர்களது உறவினர்கள் 15 பேர் கலந்து கொண்டனர். புதுமணத் தம்பதிகள் செப்., 25ல் பக்ரைன் செல்கின்றனர்.



No comments: