பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, August 11, 2011

விவாகரத்து வேண்டுமா?

இந்தியாவில் திருமணம் செய்வதற்குமுன் இளைஞர்கள் தெரிந்துள்ள வேண்டிய பல முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக இந்தியத் திருமணச் சட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஆகஸ்ட் 11,2011 தினமலர்

புதுடில்லி : மனைவியை விட்டு, 25 ஆண்டுகள் பிரிந்திருந்த கணவருக்கு, விவாகரத்து வழங்க, டில்லி ஐகோர்ட் மறுத்து விட்டது. டில்லியைச் சேர்ந்தவர் அமர்லாலா அரோரா; இவரது மனைவி சசிபாலா. இருவருக்கும், 1987ல் திருமணம் நடந்தது. 88ல் பெண் குழந்தை பிறந்தது. கணவரின் முரட்டு குணத்தாலும், மாமியார் மற்றும் நாத்தனார்களின் இம்சையாலும், சசிபாலா தன் தாய் வீட்டுக்கு சென்றார். "அதன் பின், தான் சென்று அழைத்தும் சசிபாலா வர மறுத்து விட்டதாகவும், தன்னை அவர் புறக்கணித்து விட்டதால், கோர்ட் விவாகரத்து அளிக்க வேண்டும்' என, அரோரா, டில்லி கோர்ட்டில் மனு செய்திருந்தார். கீழ் கோர்ட் இவருக்கு விவாகரத்து அளிக்க மறுத்து விட்டதால், ஐகோர்ட்டில் அரோரா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி கைலாஷ் காம்பிர் விசாரித்தார்.

"பட்டு கூட்டிலிருந்து வெளியே வரும் புழுவை போல, பெண்ணானவள் தன் பிறந்தகத்தை விட்டு கணவன் வீட்டுக்கு வரும் போது அவளுக்கு அந்த வீடு புதிய சூழலாக உள்ளது. அப்படிப்பட்ட புதிய சூழலை, பழக்கப்படுத்தி கொள்வதற்கு ஏற்ப கணவன் வீட்டார் அவளை அன்பாகவும், சிநேகமாகவும் நடத்த வேண்டும். அதை விட்டு வேற்று மனிதராக அந்த பெண்ணை பார்க்கும் போது பிரச்னைகள் ஏற்படுகின்றன' எனக்கூறி, அரோராவின் மனுவை நீதிபதி நிராகரித்து விட்டார்.

No comments: