பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, June 21, 2011

தப்பித்துவிட்டார் மற்றொரு தமிழக இளைஞர்

தவறான திருமணச் சட்ட நடைமுறைகள் உள்ள இந்தியாவில் திருமணம் செய்து பொய் வழக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் புத்திசாலித்தனமாக சீனத்து நாட்டுப் பெண்ணை திருமணம் செய்துள்ள இந்த இளைஞர் வளமாக வாழ வாழ்த்துக்கள்!

ஆத்தூர் வாலிபருக்கு இந்து முறைப்படி சீன பெண்ணுடன் திருமணம்
ஜூன் 21,2011 தினமலர்



ஆத்தூர் : ஆத்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், சீன நாட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து,பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம், ஆரியர் தெருவை சேர்ந்த, அரசு பஸ் கண்டக்டர் நடராஜன். அவரது மகன் செந்தில்ராஜா, 28, நாமக்கல் குமாரபாளையத்திலுள்ள தனியார் கல்லூரியில் பி.டெக்., படித்து முடித்து சீனாவிலுள்ள கே.ஜே.கே., குரூப் கம்பெனியின், என்டெக் ஜுவல்லரியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சீன நாட்டின் ஜுயாங்ஷு மாநிலத்தை சேர்ந்த ஆத்திங் என்கிற ஹுசென்திங், 22, என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இருவரது காதல் திருமணத்துக்கு, இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். சில வாரங்களுக்கு முன், காதலியை தன் சொந்த ஊரான பெத்தநாயக்கன்பாளையத்துக்கு அழைத்து வந்தார். அதையடுத்து நேற்று முன்தினம், செந்தில் ராஜா பட்டு வேட்டியும், காதலியான சீன நாட்டு பெண் ஆத்திங் (எ) ஹுசென்திங் பட்டுபுடவை அணிந்த படி இருவரும் இந்து முறைப்படி,மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். மணமக்களை, பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்தனர். திருமண விழாவில், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

============

வரதட்சணை கொடுமை வழக்கில் சென்னை டாக்டர் கைது

ஜூன் 21,2011
தினமலர்

வித்யா தம்பிராஜா, 29. திண்டிவனத்தில் தந்தையின் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். வித்யா மறுமணத்திற்காக,விளம்பரம் செய்யப்பட்டது.

சென்னை திருநின்றவூர் பிரகாஷ் நகரில் வசிக்கும் ராமையா மகன் டாக்டர் தேவஜன பிரகாசம், 41 என்பவருக்கும், வித்யாவிற்கும் கடந்தாண்டு ஜூலை 15ம்தேதி,சென்னை வடபழனி கோவிலில் திருமணம் நடந்தது.

கடந்த 7ம் தேதி வித்யா, திண்டிவனம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: கடந்தாண்டு செப்., 15ம்தேதி படுக்கையில் இருந்த போது தலையணையால் என் முகத்தில் வைத்து அழுத்தி "நீ செத்து விட்டால் உடனடியாக சொத்து என் கைக்கு வந்து விடும்' எனக் கூறி கொலை செய்ய முயற்சித்தார். நான் அவரை தள்ளிவிட்டு என் அம்மாவின் அறைக்கு ஓடி விட்டேன். அதே மாதம் 20ம் தேதி எனது வீட்டிலிருந்த 28 சவரன் நகைகள் மற்றும் அவருடைய பொருட்களையும் எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் எனது மொபைல் போன், பெற்றோர் மொபைல் போன்கள் மற்றும் மருத்துவமனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி மிரட்டி வருகிறார். மருத்துவமனை ஊழியர்களிடம் தரக்குறைவாக பேசி வருகிறார். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். திண்டிவனம் மகளிர் போலீசார், சென்னையில் தங்கியிருந்த, டாக்டர் தேவஜன பிரகாசத்தை நேற்று முன்தினம் கைது செய்து திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சந்தோஷ் உத்தரவின்பேரில், டாக்டர் தேவஜன பிரகாசம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


No comments: