பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, February 3, 2013

மனைவியை பிரிந்த கணவன்களுக்கு நற்செய்தி!!

இந்தியாவில் திருமணம் செய்வதே மிகப் பெரிய குற்றம்.  இது தெரியாமல் இந்தியாவில் திருமணம் செய்து “மருமகள் பாதுகாப்பு சட்டங்கள்” என்ற கூட்டு மோசடியில் சிக்கி  பொய் வரதட்சணை வழக்குகளில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மை அனைவருக்கும் தெரியும்.

இப்படி பொய் வழக்குகளில் சிக்கிய சிலர் பிறகு பஞ்சாயத்து மூலமாகவோ அல்லது காவல்துறையின் கட்டாயத்தாலோ மற்றொரு வாய்ப்பளித்து பார்க்கலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்வார்கள்.  இதுபோன்ற “சப்பாணி” ஆண்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை காத்துக்கொண்டிருக்கிறது!!!!

பொய் வழக்குப் போட்டு கணவனின் சொத்துக்களை அபகரிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுக்க பல அமைப்புகள் அரசாங்க ஆதரவுடன் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  அப்படி ஒரு முறை பொய் வழக்குப் போட்டு சுகம் கண்ட மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ நினைத்தால் அவள் எந்த நேரத்திலும் உங்கள் மீது “கற்பழிப்பு” வழக்குப் போட வாய்ப்பிருக்கிறது.  இப்போதைய சட்ட திருத்தத்தின் படி ஒரு பெண் யாரையாவது ஒருவரைக் காட்டி அவன் தன்னை கற்பழித்துவிட்டான் என்று கூறினால் போதும் உடனடியாக அந்த ஆணுக்கு தண்டனை வழங்க கூட்டம் கூட்டமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் பிரிந்த மனைவியுடன் சேர்ந்து வாழும்போது படுக்கையறையில் கணவன் தன் விருப்பம் இல்லாமல் உறவு கொண்டு தன்னை கற்பழித்துவிட்டான் என்று புகார் கூறினால் இதை நம்புவதற்கு கோடிக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு எந்தவித ஆதாரமும் தேவைப்படாது. ஏழு ஆண்டு சிறை உறுதி!!! 

சேர்ந்து வாழ நினைக்கும்போது மனைவி இப்படி பொய் கற்பழிப்பு வழக்குப் போடுவாளா? என்று எண்ணத்தோன்றும்.  சொறி பிடித்த கை சும்மா இருக்குமா? சொறிந்துகொண்டேதான் இருக்கும்.   அதுபோல ஒரு முறை பொய் வழக்குப் போட்டு குறுக்கு வழிகளை கற்ற மனைவி அடுத்த முறை பக்குவமாக திட்டமிட்டு வழக்கு போடமாட்டாளா?

பிரிந்து வாழும் மனைவியுடன் "செக்ஸ்' கணவனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

பிப்ரவரி 02,2013 தினமலர்

புதுடில்லி: "பிரிந்து வாழும் மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல் கணவன் உடலுறவு கொண்டால், அதற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்' என, மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்த, அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: "பிரிந்து வாழும் மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல், கணவன் உடலுறவு கொண்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்' என, தற்போது அமலில் உள்ள, இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 376 ஏ-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டப் பிரிவை நீக்கும்படி, நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

"மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல், உடலுறவு கொண்டாலும், அதை பாலியல் பலாத்காரமாகவே கருதி, கூடுதல் தண்டனை வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளது.


இருந்தாலும், தற்போதைய சட்டப் பிரிவு தொடர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், தற்போதுள்ள, 2 ஆண்டு தண்டனை என்பதை, 7 ஆண்டாக உயர்த்த தீர்மானித்துள்ளது. பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு அளிக்கும் வகையில், சட்டப் பிரிவு, 376ஏ - தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 376ஏ-ன் கீழான குற்றம், இதுவரை, ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்படுவதில்லை. ஆனால், இனி அது கிரிமினல் குற்றமாக கருதப்படும். இவ்வாறு உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.


No comments: