பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, January 21, 2013

இந்திய ஆண்களுக்கான கவர்ச்சியான திருமணப் பரிசுகள்

திருமணம் செய்யப் போகும் இளைஞர்களுக்கான பரிசு
இந்தியாவில் திருமணம் செய்யப் போகும் இளைஞர்களுக்கு நீங்கள் பரிசு கொடுக்க நினைத்தால் பின்வரும் எளிய புத்தகத்தை பரிசாகக் கொடுக்கலாம்இதைவிட சிறந்த பரிசு வேறெதுவும் இருக்க முடியாது.   

புத்தகம் கிடைக்கும் இடம்
 இந்தியாவில் திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு நாள் கண்டிப்பாக பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படும்.  அதிலும் குறிப்பாக தற்போதைய நாட்டு நிலவரப்படி இளம் பெண் சொல்வது மட்டும்தான் உண்மை என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. 

இதுபோன்ற சூழலில் ஆண்களுக்கு பாதுகாப்பு அளிக்க எந்த ஒரு சட்டமும் இல்லை என்று காவல் நிலையத்திலேயே உங்களுக்கு அறிவுரை சொல்லி மனைவியின் விருப்பப்படி சிறைக்குள் சென்று ஒரு வாரம் இருந்துவிட்டு ஜாமினில் வெளியே சென்று பிறகு வழக்கை நடத்திக் கொள்ளுங்கள், வழக்கு பொய் என்று தெரிந்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று காவல்துறை கண்ணியமாக உங்களுக்கு அறிவுரை சொல்லி சிறைக்கு அனுப்பி வைப்பார்கள்.  அப்போது ஜாமினில் வெளியே வருவது எப்படி என்று அலைந்து திரியாமல் முன்னேற்பாடாக இந்த புத்தகத்தை படித்துவைத்திருந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.


திருமணம் ஆன ஆண்களுக்கான பரிசு

திருமணம் ஆன ஆண்களுக்கு பரிசு கொடுக்க  வேண்டுமென்றால் பின்வரும்  இரு புத்தகங்களையும் பரிசாகக் கொடுக்கலாம்.     
திருமணம் முடிந்து சில மாதங்களில் மருமகள் தனிக்குடித்தனம் போக வற்புறுத்தும்போதோ அல்லது புது மனைவியின் கள்ளக்காதல் கணவனின் குடும்பத்திற்கு தெரிய வரும்போதோ “பெண்கள் பாதுகாப்பு” என்ற பெயரில் உடனடியாக கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் பொய் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் அரசாங்கத்தின் துணையோடு தொடுக்கப்படும்.  

 அதுபோன்ற சமயத்தில் “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பது போல குடும்பத்தில் பிரச்சனை என்றால் காவல்துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.  கைது, ஜாமின், வழக்கு என்று தினம் தினம் உங்கள் பணத்தில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்று எல்லாவற்றையும் கொண்டாடிவிடுவார்கள்.  அப்போது பின்வரும் இரண்டு புத்தகங்களும் உங்களுக்கு புனித நூல் போல உதவி செய்யும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை என்பது இன்னும் சில மாதங்களிலோ அல்லது ஆண்டுகளிலோ நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

இந்த அனைத்து பரிசுப் புத்தகங்களும் கிடைக்கும் இடம் கற்பகம் புத்தகாலயம்.  இந்தத் தகவல் எந்தவித வியாபார உள்நோக்கமும் இன்றி உங்களுக்கு அளிக்கப்படுகிறது.  மேலே உள்ள தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று அறிந்துகொள்ள இந்திய நீதிமன்றங்கள் கூறியுள்ள தீர்ப்புகளிலிருந்து சிறு உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Delhi High Court
(Savitri Devi Vs. Ramesh Chand
CRL. R 462/2002, Dt:19 May 2003)

Once a complaint is lodged under Sections 498AIPC whether there are exaggerated allegations or there is no evidence, it comes as an easy tool in the hands of Police and agencies like Crime Against Women Cell to hound them with the threat of arrest making them run here and there … … … …Thousands of such complaints and cases are pending and are being lodged day in and day out”

IN THE COURT OF Dr. KAMINI LAU: ADDL. SESSIONS
JUDGE-II (NORTH-WEST): ROHINI COURTS: DELHI
Criminal Revision No. 377/2010
Man Mohan Sharma    Vs    State of NCT of Delhi
Dated: 25.2.2011

Lastly, I am compelled to observe that Section 498A IPC in the recent years has become

consummate embodiment of gross human rights violation, extortion and corruption and even the Apex Court of our country had acknowledged this abuse and termed it as Legal Terrorism. The provisions of Section 498 A IPC are not a law to take revenge, seek recovery of dowry or to force a divorce but a penal provision to punish the wrong doers. The victims are often misguided into exaggerating the facts by adding those persons as accused who are un-connected with the harassment under a mistaken belief that by doing so they are making a strong case. Courts cannot be a party to any kind of exploitative situation and it is necessary for every complainant to remember that it is only an honest complaint which succeeds in law where contents are supported by facts on the ground and persons, who are not connected with the harassment, should never be arrayed as accused. The platform of the courts cannot be permitted to be used to wreck personal vendetta or unleash harassment and the tendency of the complainants to come out with inflated and exaggerated allegations by roping in each and every relation of the husband is required to be deprecated.








No comments: