பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, June 24, 2014

கேட்க ஆளில்லாமல் கேவலப்படும் இந்திய ஆண்கள்

இந்தியாவில் பெண்களின் நலனை பாதுகாக்க தேசிய மகளிர் வாரியம், மத்திய பெண்கள் நல அமைச்சகம், மாநில பெண்கள் நல வாரியம், மற்றும் பல NGO அமைப்புகள் இருக்கின்றன.  ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் பெண்களுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளையும் செய்து தருகின்றன அரசாங்கங்கள்.  ஆண்களைப் பற்றி கவலைப்பட யாருமே இல்லை.  அதனால் இந்தியாவில் ஆண்களுக்க எதிராக சட்ட துஷ்பிரயோகம் எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கின்றன.  இன்று நான், நாளை நீ.......இது ஒவ்வொரு இந்திய ஆணுக்குமான எச்சரிக்கை.

ஜூன் 24,2014 தினமலர்
போபால்: மத்திய பிரதேசத்தில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தில், 'என் மனைவி என்னை கொடுமைப்படுத்துகிறாள்; என்னை காப்பாற்றுங்கள்' என, ஏராளமான ஆண்கள் புகார் அளிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக, மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்பின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை, பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், கடந்த வாரம் துவக்கி வைத்தார். பலாத்காரங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவையான மருத்துவ வசதி, போலீஸ் உதவி, சட்ட உதவி ஆகிய அனைத்து வசதிகளும், இந்த மையத்தில் கிடைக்கும்.
பாதிக்கப்படும் பெண்கள், சிகிச்சை பெறுவதற்கும், புகார் அளிப்பதற்கும், சட்ட உதவி பெறுவதற்கும், அங்கும் இங்கும் அலைந்து திரிவதைத் தடுப்பதற்காக, இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, இந்த மையத்தில் டாக்டர்கள், போலீசார், வழக்கறிஞர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். பல பெண்கள், இந்த உதவி மையத்தை தொடர்பு கொண்டு, பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, ஆண்களிடமிருந்தும், உதவி கோரி இந்த மையத்துக்கு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் பேசும் ஆண்கள், 'என் மனைவி கொடுமைப்படுத்துகிறாள்; அவளிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்; விவாகரத்து வாங்கித் தாருங்கள்' என்கின்றனர். இதனால், உதவி மையத்தில் உள்ளவர்கள், தர்மசங்கடத்துக்கு ஆளாகியுள்ளனர்.


1 comment:

Anonymous said...

yeppa ivalavu solringaley pengalal pathikapatta ovvoru aangalaiyum aalaithu vanthu oru thaniya tv show aarambika vendiyathu thana,kooda mamiyaraiyum alaithu kolla vendiyathu thana pa.