பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Sunday, September 26, 2010

நீதித்துறை உயிர் பிழைக்குமா?


சென்னை: சென்னை ஜுடிசியல் அகடமியில் ‘சமரசம் மற்றும் மத்தியஸ்தம் ஆகியவற்றின் அடுத்த கட்டம்’ என்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் தலைமை வகித்தார். இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் பேசியதாவது:


சமரசம் மற்றும் மத்தியஸ்தம் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பந்தங்களில் பேசி விட்டோம். இந்த நடைமுறைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவையாக உள்ளது. இதற்காக நீதிபதிகள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். உரிமை யியல் நடைமுறைச் சட்டம் (சிவில் சட்டம்) மக்களுக்கு எவ்வளவு தூரம் பயன் தருகிறது என்பதை பார்க்க வேண்டும்.

பொதுமக்களுக்கு நீதித்துறை மீது பல தவறான எண்ணங்கள் ஏற்பட்டுள்ளன. வழக்கு விசாரணையில் தாமதம், வளைந்து கொடுக்க முடியாத நிலை, எதிர்பாராத தீர்வு, அதிகமான வழக்குச் செலவு, உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம், அசாதாரணமான சூழ்நிலை இவைகள் தான் நீதித்துறை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை குறைத்து வருகிறது.
குற்ற வழக்குகளில் மேல்முறையீடு விசாரணை முடிவதற்கு அதிக காலதாமதமாகிறது. ஒரு மேல்முறையீட்டு வழக்கு முடிவதற்கு அலகாபாத்தில் 20 முதல் 22 ஆண்டுகளும், பஞ்சாப்பில் 18 ஆண்டுகளும் ஆகின்றன. ஒரு வழக்கு வெற்றி பெற்றால்கூட அதற்கு தடைபெறும் நிலை உள் ளது.

இதுபோன்ற நிலை இருந்தால், மக்களுக்கு நீதிமன்றங்களின் மேல் எப்படி நம்பிக்கை ஏற்படும். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் பல பிரச்னைகள். வழக்கு தொடர்ந்தவர் வக்கீல்களிடமும், அவர்களின் குமாஸ்தாக்களிடமும் சிக்கி தவிக்கிறார். நட்பு ரீதியான அணுகுமுறை நீதிபதிகளிடமும் இல்லை; வக்கீல்களிடமும் இல்லை.

குற்றவியல் வக்கீலிடம் சிவில் வழக்கு சென்றால். அந்த வழக்கு எப்படியாவது குற்ற வழக்காக மாற்றப்படும் நிலை உள்ளது. தேர்தல் வழக்கு கள், மோசடி, நிர்வாக சீரழிவு மற்றும் கொடிய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை மட்டுமே நீதிமன்றத்தில் விசாரிக்கலாம். இதர வழக்குகளுக்கு மாற்று முறை தீர்வையே நாட வேண்டும்.

மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), சமரசம் மற்றும் மத்தியஸ்த மையங்களை அணுகலாம். குடும்பநல வழக்குகள், செக் மோசடி வழக்குகள், கடன் உறுதி பத்திரம் வழக்குகள் ஆகிய வழக்குகளை நீதிபதிகள் விசாரிக்கக் கூடாது. நீதிபதிகள் அறுவைச் சிகிச்சை தெரிந்தவர்களை போன்றவர் கள். அவர்கள் அறுவைச் சிகிச்சைதான் செய்ய வேண்டுமே தவிர, மருந்து சீட்டு எழுதித் தரும் வேலையை செய்யக் கூடாது.

தற்போது, உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் 95 சதவீத வழக்குகள், முன்சீப் நீதிமன்றங்களில் கூட விசாரிக்க லாயக்கற்றவை. அதேபோல், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் பெரும்பாலான வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கக்கூட லாயக்கில்லாத வழக்குகளாக உள்ளன. எதை நாம் செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும். மக்கள் தொகை பெருகி வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் பிரச்னைகளும் அதிகரி த்து வருகின்றன. அடித்தட்டில் உள்ள மக்களெல் லாம் தற்போது அதிகாரம் பெற்று வருகிறார்கள். உரிமைகளுக்காக போராடுகிறார்கள். இதனால், நீதிமன்றங்களுக்கு மேலும் சுமை ஏற்படுகிறது. அதனால், தேவையற்ற வழக்குகளை விசாரிப்பதை தவிர்த்துவிட்டு, தரமான வழக்கு களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு நீதிபதி ரவீந்திரன் பேசினார். இந்த கருத்தரங்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நீதிபதி நாகப்பன் வரவேற்றார். முடிவில், நீதிபதி தனபாலன் நன்றி கூறினார்.

========

பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி கணவனின் குடும்பத்தை பழிவாங்கும் ஆயுதமாக சட்டங்களையும், நீதித்துறையையும் பல பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்விளைவாகத்தான் இப்படி நீதிமன்றங்கள் தரமற்ற வழக்குகளால் குப்பைத்தொட்டி போல நாற்றமடித்துக் கொண்டிருக்கின்றன. இது ஒரு மிகப்பெரிய காரணம்.

=============

“வழக்கு தொடர்ந்தவர் வக்கீல்களிடமும், அவர்களின் குமாஸ்தாக்களிடமும் சிக்கி தவிக்கிறார்.”

மேலுள்ள செய்தியிலுள்ள இந்த வாக்கியத்திற்கு கீழுள்ள செய்திகள்தான் நல்ல உதாரணம்.

இந்த செய்தியைப் பாருங்கள்..... வழக்கில் சிக்கிய ஒரு அப்பாவிப் பெண்ணின் நிலை.....

தினமலர் ஜூலை 18,2010,

மேட்டூர்: வழக்கு தொடர்பாக கொடுத்த ஆவணங்கள் திரும்ப கேட்டதால் ஆத்திரத்தில் பெண்ணை தாக்கிய வக்கீல்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேட்டூர் தாலுகா, கருங்கல்லூரை சேர்ந்த குப்புசாமி மனைவி குஞ்சம்மாள் (45). மேச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் வக்கீல்கள் அருணாசலம், வேலு. கருங்கல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ், குமார் ஆகியோருக்கும், குஞ்சம்மாளுக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்துள்ளது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு போட முடிவு செய்த குஞ்சம்மாள் வக்கீல் அருணாசலம் உதவியை நாடியுள்ளார். மேலும் வழக்கிற்கு தேவைப்படும் என்பதால் பிரச்னைக்குறிய நிலம் சம்பந்தபட்ட ஆவணங்களையும் கொடுத்துள்ளார். கடந்த 15ம் தேதி மேட்டூர் சப்-கோர்ட் முன் வக்கீல்கள் அருணாசலம், வேலு நின்று கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த குஞ்சம்மாள் வழக்கு சம்பந்தமாக கொடுத்த நிலம் சம்பந்தமான ஆவணங்களை திரும்ப தருமாறு வக்கீல்களிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக வக்கீல்களுக்கும், அவரது கட்சிக்காரரான குஞ்சம்மாளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வக்கீல் அருணாசலம் திடீரென குஞ்சம்மாளை விறகு கட்டையால் தாக்கியதாக தெரிகிறது.நெற்றியில் தாக்கியதால் காயம் அடைந்த குஞ்சம்மாள் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேட்டூர் இன்ஸ்பெக்டர் சக்ரபாணி, அருணாசலம், வேலு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நவம்பர் 9, 2008 அன்று தினமலர்-வாரமலரில் வந்த கட்டுரை

"கோர்ட்டுகளுக்கு ஏன் தான் கோடை விடுமுறை விடுகிறார்களோ... லட்சக்கணக்கான கேசுகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் கிடக்க, லீவு என்ன லீவு... வெள்ளைக்காரன் நீதிபதி, வக்கீல்களாக இங்கே இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கம் இன்னும் தொடரணுமா? அவனுகளுக்குத்தான் கோடை வெப்பம் தாங்காதுன்னு, லீவு போட்டுட்டு அவன் ஊருக்கு ஓடினான்... இங்கேயே பொறந்து, இந்த வெயிலிலேயே வளந்த நம்ம ஆளுங்களுக்கு எதுக்கய்யா கோடைவிடுமுறை...' எனப் புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தார் நடுத்தெரு நாராயணன் சார்.

சொத்து சம்பந்தமான அவரது வழக்கு ஒன்று, நீதி மன்றத்துக்குச் சென்று 18 வருடமாகிறதாம்... இன்னும் தீர்ப்பு வந்தபாடில்லையாம்... இதுதான் புலம்பலுக்குக் காரணம். அத்துடன், "பாதிக்கப்பட்டோர் கழகம்' என்ற அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட 16 பக்க இலவச வெளியீடு ஒன்றையும், என்னிடம் கொடுத்து, "படித்துப்பார்...' என்றார். புத்தகத்தில் இருந்த சில குறிப்புகள்...

"ஒரு முட்டையை மீட்க நினைத்து கோர்ட்டுக்குப் போகிற வன் ஒரு கோழியை இழப்பான்!' என்று ஒரு பழமொழி இருக்கிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை; இந்தக் கொடுமைக்கு யார் காரணம்?

பஸ்சில் கண்டக்டர் 25 காசு சில்லரை குறைவாகக் கொடுத்தால் அவரோடு மல்லுக்கட்டுகிறவர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு எத்தனை ஆயிரம் பீஸ் கொடுத்தாலும் ஒரு ரசீது வேண்டும் என்று கேட்டுப் பெறத் திராணியில்லை.

சிலர் ரசீது வேண்டும் என்று கேட்டால், "ரசீது தருகிற வழக்கமெல்லாம் கிடையாது!' என்று துணிந்து சொல்லி விடுகின்றனர். இத்தகைய வழக்கறிஞர்கள் இன்றைய சிவில் சட்ட திருத்தங்களை எதிர்த்துப் போராடுகின்றனர். "பொது மக்களுக்காகத் தான் போராடுகிறோம்!' என்று வேறு சொல்லிக் கொள்கின்றனர். பொதுமக்கள் மீது திடீரென்று வழக்கறிஞர்களுக்குக் கரிசனம் ஏற்பட்டது எப்படி?

"ஒரு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் போது, முழு அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்தே ஆக வேண்டும். பிரதிவாதி பதில் அறிக்கை தாக்கல் செய்யும் போது, அவரும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து விட வேண்டும்...' என சட்ட திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...

"இந்த சட்ட திருத்தத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்!' என்று வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். இதில் பொதுமக்களுக்கு அதிகமான நன்மை தானே இருக்கிறது!


வழக்கறிஞர்கள், எந்த ஒரு வழக்கையும் நீட்டித்துக் கொண்டே போகத்தான் விரும்புகின்றனர். வழக்கறிஞர் என்றாலே வாய்தா வாங்குபவர் என்று பொருள் கொள்ளும்படி கோர்ட்டில் இவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

ஆவணங்களை மொத்தமாகத் தாக்கல் செய்து விடுவதால், எந்த ஒரு வழக்கும் இரண்டு விசாரணைகளில் முடிந்து விடும். ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்து பத்து வருடம், பதினைந்து வருடம் அலைந்து திரியும் பொதுமக்களுக்கு, இரண்டே விசாரணையில் முடிந்து விட்டால் எத்தனை பெரிய ஆதாயம்! ஆனால், வழக்கு உடனடியாக முடிந்து விட்டால் வழக்கறிஞர்கள் தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். எனவேதான், இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்தால் இன்னொரு பெரிய நன்மையும் இருக்கிறது. போலி ஆவணங்களைத் தயார் செய்வது முழுக்க, முழுக்க தடுக்கப்பட்டு விடும்.

"ரிட் மனு தீர்ப்பின் மீது மேல் முறையீடு, உயர்நீதி மன்றத்தில் கிடையாது. மேல்முறையீடு செய்வதென்றால் இனி சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும்!' என திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...

உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால், ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதற்கே எட்டு வருடம், பத்து வருடம் ஆகிறது. இதன் பிறகு தீர்ப்பாகி, நகல் எடுத்து அப்பீல் தொடர்ந்து முடிய மேலும் பல வருடங்கள் ஆகின்றன.

இந்தச் சட்டத்தால் உயர்நீதி மன்றத்தில் உள்ள பாதி வழக்கறிஞர்களுக்கு வருமானம் போய் விடும். எனவே தான் எதிர்க்கின்றனர். வழக்கறிஞராகத் தொழில் செய்து வருபவர் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ரூபாய் ஆயிரம் செலுத்தி தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...

வெறுங்கையில் முழம் போடுகிற கதை முன்பு நடந்ததோ, இல்லையோ - இப்போது நடக்கிறது. எந்த முதலுமே போடாமல் லட்சம், லட்சமாக சம்பாதிப்பவர்கள் வழக்கறிஞர்கள் மட்டுமே! வருமான வரித் துறை இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இதனால், வழக்கறிஞர் தொழிலில் போலிகள் நிறைய புகுந்து விட்டனர். இதைக் கட்டுப் படுத்தும் ஒரு சிறு முயற்சி தான் இந்த சட்டம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பதை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்.

இந்தியாவை பொறுத்தமட்டில் சிவில் கோர்ட் நடவடிக்கைகள் வெறும் கேலிக் கூத்தாகத்தான் இருக்கின்றன. எனவே, பொதுமக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், வழக்கறிஞர்கள் தங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்பதற்காக இந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்க்கின்றனர். உண்மையில் இந்தச் சட்டத் திருத்தங்கள் பொதுமக்களைப் பாதிப்பதாக இருந்தால் மேடை போட்டுப் பிரச்சாரம் செய்து, பொதுமக்களைக் களத்தில் இறக்க வேண்டியதுதானே!

வழக்கறிஞர்களிடம் இருந்து எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மத்திய அரசு இந்தச் சட்டத் திருத்தங்களை அமல் செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும். பொதுமக்களின் நலம் காக்க வழக்கறிஞர்கள் போராட்டம் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து ஒரு விளம்பர நோட்டீஸ் அச்சடித்து பல்லாயிரக்கணக்கில் விநியோகம் செய்தனர். இந்த நோட்டீஸில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளும், கருத்துப் பிழைகளும் உள்ளன. எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில், மத்திய அரசு சிவில் நடைமுறை சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்களை சென்னை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது என உள்ளது.

சென்னையில் செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம் நூற்றுக் கணக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. தனித்தமிழ் ஆர்வலர்கள் இவர்கள். இவர்கள் முதலில், இப்படி எழுத்துப் பிழைகளோடு வெளியிட்டு தமிழைப் பாழடித்ததற்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்தால் நல்லது. பாராளுமன்றம் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாத இவர்கள் கோர்ட்டில் எப்படி வாதாடி ஜெயிப்பார்கள் என்று பாமரன் கூட சிரிக்க மாட்டானா?

வழக்கறிஞர்களே, உங்கள் நலனுக்காக நீங்கள் போராடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதில் கொஞ்சமாவது பொதுநலம் கலந்திருக்க வேண்டாமா?


பொதுவாக வழக்கறிஞர்களைப் பற்றி மக்களிடம் நல்ல அபிப்பிராயம் கிடையாது. இந்தப் போராட்டத்தால் மேலும் பொதுமக்களிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டுமா? சிந்திப்பீர்!

இப்படிக்கு, பாதிக்கப்பட்டோர் கழகம், சென்னை.

— இவ்வாறு அந்த வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது; சட்டத் திருத்தங்களால் வழக்குகள் சீக்கிரம் முடியுமென்றால் நல்லது தானே!

அபாயகரமான பாதையில் சென்றுகொண்டிருக்கும் நீதித்துறை சரியான பாதைக்குத் திருப்பப்படவில்லையென்றால் வருங்காலத்தில் “நீதியை” மனுநீதிச் சோழன் போன்ற சிலைகளின் வடிவத்தில் அருங்காட்சியகங்களில்தான் பார்த்து இப்படித்தான் நீதி என்பது இருக்கும் என்று எதிர்காலத் தலைமுறைக்கு நீதியைப் பற்றிச் சொல்லவேண்டியிருக்கும். அந்த துர்பாக்கிய சூழ்நிலை ஏற்படக்கூடாது என்ற உயரிய நோக்கத்திற்காக National Litigant Bench என்ற புதிய அமைப்பு உருவெடுத்து அப்பாவிகளின் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறது.


National Litigant Bench

470, 19 th Main, 36 th Cross, 4 th T Block, Jayanagar, Bangalore – 560041

Phone: Manoj David ( 098403-24551); Ajay Pandey ( 096204-39797 )

PRO Contact: Gokul ( 096334-09355)

Date: 11.09.2010

PRESS RELEASE

National Litigant Bench (NLB), is a novel initiative promoted by concerned and knowledgeable youth to represent the cause of hapless litigants who approach Judiciary to mitigate their problems as last resort, but are drawn into the system unwittingly. Activists from across the country deliberated on the core issues concerning about more than 5 crore litigants who loiter around the corridors of Courts wasting precious time and energy, some at the peak of their productive age.

NLB's mission is to:

· Create Awareness and Awakening of the General Litigant on the problems faced at Court room

· Transparent Judicial Appointments on merit and moral values

· Redefine the input source to Judiciary like Indian Judicial System (IJS) similar to IAS,IPS etc.

· Bring about Litigant friendly procedures and process resulting in self service

· Address Imperialist attitude of intimidation by the Bar & Bench on all Litigants especially economical weaker section.

The objective of this conference is to identify the Judicial reforms from a Litigant's perspective to create awareness about Litigant's choices and options and expose the challenges/pitfalls in the system. Deliberation of this Conference is on National Judicial Commission to include:

· Appointment of Judges through Indian Judicial Services

· Litigant grievances/ compliant on Judges ( from the current impeachment)

· Redefine the procedure code

· Reforms in the legal education

· Research on interpretation of law

· Deployment of Technology to enable ‘Information on Demand' to stakeholders.

Resolution passed and demand sought from the Government on Judicial Reforms

1. NLB to constitute five regional bench's in North, South, East, West & Central.

2. To establish National judicial Commission in line with Election Commission for regulating Judicial dispensation, appointment, Infrastructure, Procedure, disciplinary . Proceedings in the country

a. Emulate code of conduct, ethics and professional standards for legal profession

b. Redefine litigant friendly forms and procedure for Criminal ; Civil & Tax Code

c. Judges Accountability – Litigant Grievance Redressal.

3. Establish Indian Judicial Services inline with IAS,IFS, IPS etc to improve the quality of judicial dispensation.

4. Demand entry age at 26 and retirement exit at 55 years and permit the judges to practice so as to attract youth who are connected with the society.

5. Make budgetary allocation of min of 2% of both central and state budget to and enhance adq. Infra and improve work condition of Judiciary.

6. Implement Grama Nayalaya Act a brainchild of “NAC – National Advisory Council”.

7. Redefine litigant friendly forms and procedure for Crimal & Civil & Tax Coded

8. Stop Tribunalization of Judiciary which ensures govt. cases are conducted in fast track to collect taxes and common man is discriminated.

9. Stop Appointment of retired Judges to Commission and other agencies.

10. Implement technology to enable transparency and information –on-demand.

11. Amend Bar Council of India Act to improve the professional ethics and conduct & lawyer appearing at police station.

12. Amend laws to make to encourage ‘Party-in-person' to represent/plead their cases.

13. Implement Perjury & Contempt of Court to resist misuse of law by courts.

14. Implement of ‘Limitation Act' in true letter and sprits.

15. Implement ‘Basic Law' in School Education.

16. Conduct sensitization program for Judges towards litigants needs and to be receptive and sensitive to the litigants.

17. Stop Judiciary's control over Alternate Dispute Resolution Forums.

18. Stop Misuse of provisions by Judiciary in matters relating to

a. Maintainability

b. Adjournments

c. Check bounce case;

d. Dalit atrocities cases;

e. Insurance Claims Fraud (MCOP);

f. IPC 506 (ii);

g. Matrimonial disputes

h. Bail proceedings converted into Recovery proceedings.

We request the media to give adequate publicity and to create awareness to the general public on the current status of the Judiciary.

Representative from following Chapter including Delhi, Punjab & Chandigarh, Andhra Pradesh, Karnataka, Tamil Nadu, Kerala , Singapore and Europe were presented for the Conference.

Copy of this Resolution is sent to concerned law minister of state and Union Law Minister.



No comments: