பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, February 25, 2012

காதலிக்க மறுக்கும் இந்திய ஆண்களுக்கு சிறைத் தண்டனை

இந்தியாவில் வாழும் வயது வந்த இளம் பெண் தன் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம், யாருடன் வேண்டுமானாலும் திருமணம் செய்யாமல் கூடி வாழலாம் அது சட்டப்படி குற்றம் கிடையாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது.

IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]

S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents

21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம்)

இதுபோன்று ஆனந்த சுதந்திரம் அடைந்து காதலில் ஈடுபடும் ஒரு பெண் விருப்பப்பட்டால் தான் காதலித்த ஆணை எப்போது வேண்டுமானாலும் கைவிடலாம் அல்லது திருமணம் செய்யாமல் கூடிவாழும் ஆண் துணைவனை கைகழுவி விட்டுவிடலாம். இதற்கு காதலன் எதிர்ப்பு தெரிவித்தால் பாலியல் பலாத்காரம் செய்வதாக வழக்கு பதிவு செய்யப்படும். அதுபோலவே கூடிவாழும் துணைவன் தன்னை பிரிந்து செல்லக்கூடாது என்று கூறினால் குடும்ப வன்முறை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவான்.

அப்படியே இந்த சம்பவங்கள் வேறுவிதமாக நடந்து அதில் ஒரு ஆண் தனது காதலியை பிரிந்து செல்ல நினைத்தால் அவன் மீது “ஆசை வார்த்தை கூறி பெண்ணை கற்பழித்ததாக” வழக்கு பதிவு செய்யப்படும். அதுபோலவே திருமணம் செய்யாமல் கூடி வாழும் ஆண் தனது பெண் துணைவியை பிரிந்து செல்ல நினைத்தால் வரதட்சணைக் கொடுமை வழக்கு, குடும்ப வன்முறை வழக்கு, கற்பழிப்பு வழக்கு போன்றவை பதிவு செய்யப்படும்.

அதனால் இந்தியாவில் இளைஞர்கள் பெண்ணின் விருப்பப்படி நடந்துகொண்டால்தான் உயிரோடும், மானத்தோடும் வாழ முடியும். இல்லையென்றால் ஆயுள் முழுதும் குற்றவாளி என்ற முத்திரையுடன் வாழ்க்கையை தொலைத்துவிட்டுத்தான் நிற்கவேண்டும். இந்தியாவில் ஆண்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. குறிப்பாக இளைஞர்கள் ஒரு உயிரினமாகவே கருதப்படுவதில்லை. அதனால் இந்திய இளைஞர்கள் புத்திசாலித்தனமாக இருந்து தங்களது திறமையின் மூலம் வேறு நாடுகளுக்குச் சென்று அங்கு தனது வாழ்க்கைத் துணையைத் தேடி சந்தோஷமாகவும், மானத்துடனும் வாழ்வதுதான் புத்திசாலித்தனம். இதை புரிந்து கொள்ள பின்வரும் செய்தியையும், வீடியோவையும் பாருங்கள்.

காதலியை திருமணம் செய்யமறுத்த வாலிபர் கைது
பிப்ரவரி 25,2012,தினமலர்

சிதம்பரம்:காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கிள்ளை சிங்காரத்தோப்பு சுனாமி நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 32. இவர் புவனகிரி அருகே ஆதிவராகநல்லூரைச் சேர்ந்த பஞ்சநாதன் மகள் சீதாவை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கீதா கேட்டபோது, விஸ்வநாதன் மறுத்தார்.இதுகுறித்து சீதா கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விஸ்வநாதனை கைது செய்தனர்.

பொம்பள செத்தா போவது உயிர், ஆம்பிள செத்தா போவது என்ன சார்?




இந்திய இளைஞனுக்கு மானமே கிடையாதா?



மனைவியின் வன்முறையில் சிக்கும் இந்தியக் கணவனுக்கு பாதுகாப்பு கிடைக்காது. அதற்கு பதிலாக அவமானத்தை மட்டும்தான் அரசாங்கத்தால் கொடுக்க முடியும்



No comments: