பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்குக் கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Thursday, January 13, 2011

நீதிபதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் நீதி


காசியாபாத்:உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் கோர்ட்டில், 23 கோடி ரூபாய் அளவுக்கு, பி.எப்., நிதி மோசடி நடந்த வழக்கில், ஆறு நீதிபதிகளுக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கும் படி, சி.பி.ஐ., கோரியுள்ளது.

காசியாபாத் கோர்ட்டில் பணியாற்றியவர் அஷுதோஸ் அஸ்தானா. இவர், கோர்ட் ஊழியர்களின் பி.எப்., பணத்தில், 23 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, கடந்தாண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டார்.கடந்த 2008ல் நடந்த இந்த மோசடியில், நீதிபதிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக, இவர், தன் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபரில் இவர் மர்மமான முறையில் இறந்து விட்டார்.


காசியாபாத் நிர்வாகம் மற்றும் போலீசார், இந்த வழக்கு தொடர்பாக ஒத்துழைக்க மறுப்பதால், இவ்வழக்கை டில்லிக்கு மாற்றும் படி சி.பி.ஐ., கோரியிருந்தது.இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக, 78 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் மூன்று பேர், அலகாபாத் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதிகள், மேலும் மூன்று பேர், மாவட்ட நீதிபதிகள்.விசாரணைக்கு ஆஜராகும் படி நீதிபதிகளுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாததால், அவர்களுக்கு, பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கும் படி, காசியாபாத் சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ., கோரியுள்ளது.

===========

மனைவி என்ற பெயரில் ஒரு பெண் கொடுக்கும் பொய் வரதட்சணை வழக்குகளில் எந்தவித தேவையுமின்றி உண்மையைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் கண்ணை மூடிக்கொண்டு அப்பாவிகளை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிடுவது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு அவர் மீது இருக்கும் புகார் பற்றி சரியான தகவலைக் கொடுக்காமலேயே ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் போடுவது, சிபிஐ மூலம் இண்டர் போல் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி அப்பாவிக் கணவர்களை சர்வதேச குற்றவாளிகளைப்போல சித்தரிப்பது போன்ற அடுக்கடுக்கான பலவித அபாயகராமான சட்டசிக்கல்களை உருவாக்கி பல அப்பாவி இளைஞர்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கும் இதுபோன்ற சட்டமேதைகளுக்கே இப்போது சட்டநடைமுறையை எப்படி மதிப்பது என்று தெரியவில்லையோ?



0 விவாதக் கருத்துக்கள்:

Facebook Share