பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, January 24, 2011

சீனப்பெண்ணின் காதலால் தப்பித்த தமிழக இளைஞர்


முறையற்ற திருமண (வரதட்சணை) சட்டங்கள் உள்ள இந்தியாவில் திருமணம் செய்து சிக்கிக்கொள்ளும் பல அப்பாவி இளைஞர்களுக்கு நடுவே புத்திசாலித்தனமாக தப்பித்துக்கொண்ட இந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள்!

சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் விருத்தாசலம் மாப்பிள்ளை தாலி கட்டினார்
தினமலர் ஜனவரி 24,2011

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கண்மணி நகரைச் சேர்ந்தவர் ராஜவேல் - மலர்கொடி தம்பதியினர். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் செந்தில்குமார் டிப்ளமா எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்து விட்டு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் சீன நாட்டின் ஷாங்ஷான் லிலி வாண் மாவட்டத்தைச் சேர்ந்த லியூ ஹாங்க்யூ - யாங் யூன்யிங் தம்பதியின் ஒரே மகளான லியூயிங், விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் நிறுவனத்தின் பணி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சீனா சென்ற போது ஒருவரை ஒருவர் காதலிக்கத் துவங்கினர்.தங்கள் காதலை பெற்றார்களிடம் கூறி சம்மதம் பெற்றனர். அதைத் தொடர்ந்து இரு வீட்டார் விருப்பத்துடன் விருத்தாசலம் ராஜா மகால் திருமண மண்டபத்தில் இந்து ஐதீக முறைப்படி மந்திரம், மேளதாளம் முழங்க நேற்று திருமணம் நடந்தது. மணமகள் லியூயிங் கழுத்தில் மணமகன் செந்தில்குமார் தாலி கட்டினார். திருமண விழாவில், லியூயிங் பெற்றோர் வேட்டி, சேலை அணிந்து திருமண சடங்குகளை ஆர்வமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்தது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மணமகள் லியூயிங் கூறுகையில், "முதலில் செந்தில்குமார் தான் காதலை வெளிப்படுத்தினார். என் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மொழி மட்டும் தடையாக இருக்கிறது. விரைவில் தமிழ் கற்றுக் கொள்வேன்' என்றார். மணமகளின் தந்தை லியூ ஹாங்க்யூ கூறுகையில், "எனக்கு எனது மகள் முக்கியம். அவளின் ஆசையை நிறைவேற்றி வைப்பது எனது கடமை. என் மகளுக்கு நல்ல தமிழ்க் குடும்பம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

===========

இதுபோன்ற புத்திசாலி இளைஞர்களுக்கு நடுவே இப்படியும் சிலர் இந்தியாவில் காதலித்து வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்கிறார்கள்.

மதம் மாற காதலன் மறுப்பு காதலி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தினகரன் 22.1.2011

சென்னை : புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜுபைரியா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: நான் குழந்தையாக இருந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு காலில் குறைபாடு ஏற்பட்டதால் தாங்கித் தாங்கியே நடப்பேன். இந்நிலையில், எனது பள்ளி தோழியின் அண்ணன் விஜயகுமாருடன் எனக்கு காதல் ஏற்பட்டது. நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவள்.

என்னை திருமணம் செய்வதற்காக அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற சம்மதித்தார். அதன்படி அவரது பெயரை நியாஸ் என்று மாற்றினார். இஸ்லாம் முறைப்படி திருமணம் செய்ய விஜயகுமார் வீட்டில் சம்மதிக்கவில்லை. இதையடுத்து, முதலில் பதிவுத் திருமணம், பின்னர் இஸ்லாம் முறைப்படி திருமணம் என்று விஜயகுமார் தெரிவிக்கவே, 2009 மே 22ல் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். ஜூன் 7ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வதற்காக பத்திரிகை அடித்தோம். ஆனால், அதற்கு விஜயகுமார் வீட்டில் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், பதிவுத் திருமணமே போதும், எங்களுடன் வந்துவிடு என்று விஜயகுமார் வீட்டில் என்னை வற்புறுத்துகிறார்கள். இந்த பிரச்னை போலீஸ் வரை சென்றது. போலீசாரும் விஜயகுமாருக்கு அறிவுரை கூறினர். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் வேறு திருமணம் செய்ய முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. எனவே, என்னை திருமணம் செய்துவிட்டு வாழ மறுக்கும் விஜயகுமார் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு தொடர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அருகில் உள்ள மகளிர் போலீசில் புதிய புகார் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.

=======

அப்படியே தவறுதலாக இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடைக்குள் வீழ்ந்தவர்கள் அதிலிருந்து அவ்வளவு எளிதாக தப்பவும் முடியாது. ஏனென்றால் இந்தியத் திருமண சட்டங்கள் பெண்களை பாதுகாக்கிறேன் என்று ஆண்களை திருமணத் தகனமேடைக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

பாடாய் படுத்தும் பாடகி படாதபாடு படும் பாடகர்
தினகரன் 10.1.2011

சென்னை : தி.நகரை சேர்ந்தவர் பாடகர் பாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். மனைவியிடம் விவாகரத்து கோருவதற்கு அவர் கூறியுள்ள காரணம் புதுமையானது. பாடகரான அவர், தனது மனைவியிடம் படும் பாடு பற்றி அந்த மனுவில் பட்டியலிட்டுள்ளார். மனு வருமாறு:

கர்நாடக இசைப் பாடகி ஒருவரை காதலித்தேன். இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் அவரது கொடுமை தாங்க முடியவில்லை. நான் பாடகர் என்பதால், இசை நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். திரும்பி வரும்போதெல்லாம் என் நடத்தையில் மனைவி சந்தேகப்படுவார். ‘எத்தனை பெண்களுடன் உனக்கு தொடர்பிருக்கிறது?’ என்று கேட்டு பாடாய் படுத்துவார். கோபம் வந்தால் செல்போனை எடுத்து என் மேல் வீசி தாக்குவார். ஒரு முறை செல்போனை எறிந்ததில் எனது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் கண்டுகொள்ளவில்லை. நானும் பொறுத்துக் கொண்டேன்.

இசைக் கச்சேரியில் நான் மேடையில் பாடும்போது முன்சீட்டில் வந்து அமர்ந்து கொள்வார். ‘என்னை மட்டும் பார்த்து பாடுங்கள். வேறு யாரையும் பார்க்கக் கூடாது’ என்று பிரச்னை செய்வார். என்னால் மனைவியின் கொடுமைகளை தாங்க முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு குடும்ப நல கோர்ட்டில், நீதிபதி மீனாட்சிசுந்தரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை அவர் அடுத்த வாரம் தள்ளி வைத்தார்.


‘‘அவருடன் சேர்ந்து வாழவும் விருப்பமில்லை. அவர் இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வார் என்பதால், சமாதானமாகவும் போகமாட்டேன்’’ என்று பாடகி பிடிவாதமாக இருப்பதாக, பாடகரின் வக்கீல் தெரிவித்தார்.




No comments: