பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, January 17, 2011

பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது எப்படி



லண்டன் : பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனில் பணியாற்றும் இந்திய உயரதிகாரி ஒருவரின் மனைவி, கணவரின் அச்சுறுத்தலுக்குப் பயந்து தன் ஐந்து வயது மகனுடன் தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு அனுமதியளிக்கும்படியும், தனக்கு பாதுகாப்பு கோரியும் அந்நாட்டு அரசுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனில் வர்மா. இவர், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனில் பொருளாதாரத் துறை உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்திய ஹை கமிஷனர், துணை கமிஷனர் ஆகியோரை அடுத்து மூன்றாவது இடத்தில் அனில் வர்மா உள்ளார். இவரது மனைவி பரோமித வர்மா. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

கடந்தாண்டு டிசம்பர் 11ம் தேதி, வடமேற்கு லண்டனில், "கோல்டர்ஸ் கிரீன்' பகுதியில் உள்ள வர்மாவின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரத்தைப் பிடுங்கி எறிய முயன்றார். அம்மரம், பரோமிதாவின் உறவினர்களால் கொடுக்கப்பட்டது என்பது தான் அவரது கோபத்துக்கு காரணம். அதைத் தடுக்க முயன்ற பரோமிதாவின் முகத்தில் வர்மா ஓங்கிக் குத்து விட்டார். அதனால் மூக்குடைந்து ரத்தம் வழிய, பரோமிதா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டார். அண்டை வீட்டார்கள், அவரை அழைத்து சிகிச்சை அளித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

வர்மாவின் பதவியின் காரணமாக அவரிடம் போலீசார் அதிகளவில் விசாரணை நடத்த முடியவில்லை. இதையடுத்து, வர்மா, தனது பதவியை காரணம் காட்டி, போலீசால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும், பரோமிதாவையும், அவரது குடும்பத்தையும் ஒழித்துக் கட்டி விடுவதாகவும், அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விடுவதாகவும் மிரட்டினார். இதனால் பயந்து போன பரோமிதா, தனது ஐந்து வயது குழந்தையுடன் தலைமறைவானார்.

பிரிட்டன் அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், தன் விருப்பத்துக்கு மாறாக கணவர் இந்தியாவுக்கு அனுப்ப முயற்சிப்பதால், தான் பிரிட்டனில் இருக்கும்படி மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விவகாரத்தை அமைச்சகமும், இந்திய ஹை கமிஷனும் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

====

ஐயோ பாவம் இந்தப் பெண். பிரிட்டன் அரசாங்கத்திடம் பாதுகாப்பு கேட்டிருக்கிறார். இந்திய தேசிய பெண்கள் வாரியம் மற்றும் பெண்கள் நல்வாழ்வு அமைச்சகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையீடு செய்து இந்த இந்தியப் பெண்ணுக்கு நீதி வாங்கித் தருவார்களா? குடும்பவன்முறை தடுப்புச் ட்டம், IPC498A, வரதட்சணைக் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துவிட்டார்களா? InterPol மூலம் தேடப்படும் சர்வதேச குற்றவாளி என்று பிரகடனம் செய்துவிட்டார்களா?

இந்தியாவில் சாதாரணமான குடும்பப்பிரச்சனைக்கு ஒரு மருமகள் வர்ணம் பூசி பொய் வரதட்சணை வழக்குப் போட்டாலே போதும் கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் முதலில் குடும்பவன்முறை தடுப்புச் சட்டம், IPC498A, வரதட்சணைக் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துவிட்டுப் பிறகுதான் விசாரணை என்ற பெயரில் எதையோ செய்வார்கள். இதுதான் ஒவ்வொரு சராசரி இந்தியனுக்கும் இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சட்ட நடைமுறை.

இதே போன்ற நடைமுறைகள் வெளிநாட்டில் இருக்கும் இந்தியாவின் கௌரவத்தை பாதுகாக்கும் இந்த உயரதிகாரிக்கும் செயல்படுத்தப்படுமா?

எப்படியோ இந்தப் பொங்கல் நன்னாளில் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது எப்படி என்று தெரிந்துகொண்டீர்கள்!



No comments: