பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, January 31, 2011

“டம்மி பீஸ்” ஆண்களுக்கு பிடித்த வீடியோ!


சமீபகாலமாக இந்திய செய்தித்தாள்களில் மனைவியின் கள்ளக்காமத்திற்கு பலியாகும் பல அப்பாவிக் கணவன்களைப் பற்றி செய்திகள் தினம் தினம் வந்துகொண்டிருக்கின்றன.


அதே சமம் தனது கள்ளக்காதலை மறைக்க கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் பொய் வரதட்சணை வழக்குகள் பதிவுசெய்யப்படுவதும் அதிகரித்து அதன் உச்சவரம்பை அடைந்துவிட்டது என்று எல்லோருக்கும் தெரியும்.

இதற்கு உதாரணமாக ஜனவரி 29ல் ஒரே நாளில் தினமலர் என்ற ஒரு செய்தித்தாளில் மட்டும் வந்துள்ள செய்திகளைப் பாருங்கள்.


கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் : தப்பிய ஓடிய போது கார் மோதியதில் படுகாயம் ஜனவரி 29,2011
தர்மபுரி : தர்மபுரி அருகே, மது அருந்தி விட்டு, கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை, போலீசார் எனக் கூறி மர்ம நபர்கள் துரத்திய போது, கார் மோதி படுகாயம் அடைந்தார். தர்மபுரி அடுத்த [...]

கள்ளக் காதலை தட்டிக் கேட்ட மனைவி கொலை : கணவருக்கு வலை; கள்ளக்காதலி கைது ஜனவரி 29,2011
திருவள்ளூர் : அடுத்தவர் மனைவியுடன் ஏற்பட்ட தொடர்பை, தட்டிக் கேட்ட மனைவியை கொலை செய்த கணவரை ,போலீசார் தேடுகின்றனர். கள்ளக் காதலியை கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த ராமாபுரம் [...]

திருமணத்திற்கு பின்னும் கள்ளத்தொடர்பு : தங்கையை வெட்டிக் கொன்ற சகோதரர்கள் ஜனவரி 29,2011
திருநெல்வேலி: திருமணத்திற்குப் பின்னர் வேறொருவருடன் வாழ்க்கை நடத்திய தங்கையை, அண்ணன்களே வெட்டி கொலை செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள கட்டுடையார்புரத்தைச் [...]

பழநி : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தாயுடன் கள்ளக்காதல் வைத்திருந்தவரை, அடித்துக்கொன்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னிவாடி அருகே உள்ள சுரக்காபட்டியை சேர்ந்தவர் [...]

கடலூர் : கடலூரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர், காதல் விவகாரத்தால் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கடலூர் மஞ்சக்குப்பம் [...]


கள்ளக்காதல் மற்றும் பொய் வரதட்சணை வழக்குகள் என்ற இந்த இரண்டு பிரச்சனைகளும் நாட்டில் நிலவும் ஊழல் பிரச்சனைகளைவிட மிகவும் ஆபத்தானவை. இந்த கள்ளக்காதல் மற்றும் பொய் வரதட்சணை வழக்குகளிலிருந்து அப்பாவிக் கணவன்கள் தப்பித்துக்கொள்ள எளிய வழி ஒன்று இருக்கிறது. அதுதான் காந்தி காட்டிய வழியான "சகிப்புத்தன்மை."

இந்த சகிப்புத்தன்மை இல்லாத கணவன்கள்தான் அநீதியைக் கண்டு கொதித்தெழுந்து பொய் வரதட்சணை வழக்குகளில் மாட்டிக்கொள்கிறார்கள், அல்லது மனைவியும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து போடும் கொலைத்திட்டத்தில் உயிரை விடுகிறார்கள், அல்லது பின்வரும் செய்தியில் இருப்பதுபோல் தங்களது வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்கிறார்கள்.


ஆலந்தூர், ஜன. 14-
ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகர் 20-வது தெருவை சேர்ந்தவர் காசிவிசுவநாதன். இவரது மனைவி சாந்தகுமாரி (29). இவர்களுக்கு அரி, விஷ்ணு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அரி எல்.கே.ஜியும், விஷ்ணு 1-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். கணவர் கடைக்கு போன பிறகு கள்ளக்காதலனை வரவழைத்து சாந்தகுமாரி உல்லாசமாக இருந்து வந்தார்.


இதுபோன்ற சிக்கலில் இருந்து விடுபட சில அப்பாவிக் கணவன்கள் சட்டத்தின் உதவியை நாடி விவாகரத்து கோரும்போது புத்திசாலி மனைவியர் அதேசட்டத்தைப் பக்குவமாக பயன்படுத்தி கணவனை பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைத்துவிடுகின்றனர். பிறகு இந்த பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கும் கணவன்கள் ஆயுள் முழுதும் நீதிமன்றத்திற்கு அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் பல கணவன்கள் மனைவியின் கள்ளக்காமத்திற்காக கொலையே செய்யப்படுகிறார்கள். இவை அனைத்தையும் நீங்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.


மனைவியிடம் “விட்டுக்கொடுத்து” வாழ்க்கையை நடத்தத் தெரியாமல் இதுபோன்று பிரச்சனைகளில் சிக்கி உயிரையும், மானத்தையும் விட்டுக்கொண்டிருக்கும் “டம்மி பீஸ்” கணவனாக இல்லாமல் இந்தியாவில் புத்திசாலியாக திருமண வாழ்க்கையை நடத்துவது எப்படி என்று சமீபத்தில் “மைனா” என்ற திரைப்படத்தில் நாட்டு நடப்பை பக்குவமாக படம்பிடித்துக்காட்டியிருக்கிறார்கள். அதை பின்வரும் வீடியோவில் பார்த்து இந்தியாவில் தெரியாமல் திருமணம் செய்து பொய் வரதட்சணை வழக்குகளில் மாட்டிக்கொண்டிருக்கும் “டம்மி பீஸ்” கணவன்கள் பாடம் படித்துக்கொள்ளவேண்டும்.






No comments: