பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Tuesday, April 26, 2011

ஆண்பால் காதலும் பெண்பால் காதலும்

அனைத்து உயிரினங்களையும் ஆண்பால், பெண்பால் என்று இலக்கணத்தில் பாலினப்பாகுபாடு (Gender) செய்து வைத்திருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.

ஆனால் எந்த நாட்டிலும் இல்லாத
இந்தியாவில் மட்டுமே இருக்கின்ற காதல் பாலினப் பாகுபாடு பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்தியக் காதலில் மட்டும்தான் ஆண்பால் காதல், பெண்பால் காதல் என்று இரண்டு வகை இருக்கிறது.

இந்த இரண்டுவகை காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ள பின்வரும் செய்தியையும் அதனூடே வரும் வீடியோக்களையும் பாருங்கள். உங்களுக்கே தானாகப் புரியும்.

திருமணத்துக்கு மறுத்த இன்ஜினியருக்கு சிறை
தினகரன் 26 ஏப்ரல் 2011

பூந்தமல்லி : காதலித்து ஏமாற்றி விட்டதாக காதலன் மீது காதலி புகார் செய்தார். இதையடுத்து, காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.




போரூர் அடுத்த முகலிவாக்கம் ராஜசேகரன் நகர், 1வது தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (25). பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரபு (25). இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.

கல்லூரியில் ஒன்றாக படித்த போதிருந்தே இருவரும் காதலர்கள். கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிருஷ்ணபிரபுவிடம் கூறியுள்ளார். ஆனால் கிருஷ்ண பிரபு, நாட்களை கடத்தி வந்தார். மேலும் கடந்த 3 மாதங்களாக விஜயலட்சுமியை சந்திப்பதை தவிர்த்துள்ளார்.

இதுகுறித்து விஜயலட்சுமி, கிருஷ்ணபிரபுவின் அலுவலகத்துக்கு சென்று, கேட்டபோது, ‘உன்னை திருமணம் செய்தால் எனது பெற்றோர் இறந்துவிடுவதாக கூறுகின்றனர். எனவே, உன்னை திருமணம் செய்ய முடியாது’ என்று கூறியுள்ளார்.




இதனால் மனவேதனை அடைந்த விஜயலட்சுமி, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராணி, கிருஷ்ணபிரபுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் கிருஷ்ணபிரபு, விஜயலட்சுமியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். எனவே, போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணபிரபுவை கைது செய்தனர். பிறகு, பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



ஆரல்வாய்மொழி : நாகர்கோவில் அருகே திருமணத்துக்கு முதல்நாள் இரவில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் பாலநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுப்பிரமணியன் (24). செங்கல் சூளை தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மகள் அழகுமதிக்கும் (23) கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்தை நேற்று (12&ம்தேதி) பணகுடியில் உள்ள மணமகள் இல்லத்தில் நடத்தி ஆரல்வாய்மொழியில் உள்ள மண்டபத்தில் மாலையில் மணமக்கள் வரவேற்பு வைத்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

நேற்று முன் தினம் இரவு இரு வீட்டு சார்பில் ஊர் அழைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. திருமண ஏற்பட்டால் மணமக்களின் வீடு களை கட்டியது. நேற்று (12&ம்தேதி) காலையில் மணமகன் அழைப்புக்கு முன், சுப்பிரமணியன் வீட்டில் இருந்து மணப்பெண்ணுக்கு பூ கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆரல்வாய்மொழியில் இருந்து மணமகனின் உறவினர்கள் நேற்று காலை காரில் பணகுடி சென்றனர். பூக்களை கொடுத்து விட்டு மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்யும்படி கூறி விட்டு வந்து விட்டனர். காலை 8 மணியளவில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி ஆரல்வாய்மொழியில் தொடங்கியது. சுப்பிரமணியன் பட்டு, வேட்டியுடன் மாப்பிள்ளை தோரணைக்கு வந்தார்.

மணமகனின் கார் புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வீட்டில் இருந்து போன் வந்தது. அதில் மாப்பிள்ளை இங்கு கிளம்பி வர வேண்டாம். மணப்பெண்ணை காணவில்லை. திருமணத்தை நிறுத்தி விடுவோம் என கூறி விட்டு போனை துண்டித்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக பணகுடிக்கு விரைந்தனர். அப்போது தான் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் ஊர் அழைப்புக்கு சென்ற போது, மணமகள் மாயமாகி விட்டார் என்பது தெரிய வந்தது. இதனால் திருமண வீடே சோகமயமானது.

மணமக்களின் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊர் பெரியவர்கள் கூடி பேசி பணகுடி காவல் நிலையத்துக்கு விவகாரம் சென்றது. மணப்பெண்ணின் தந்தை தர்மலிங்கம், மகளை காணவில்லை என புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரித்த போது மணப்பெண் அழகுமதி, தனது அத்தை மகனை காதலித்து வந்ததும், அவருடன் தற்போது தலைமறைவாகி விட்டதும் தெரிய வந்தது. எனவே இரு தரப்பினரும் பேசி இனி உறவை முறித்து கொள்வது என முடிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments: