பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Friday, January 29, 2010

இந்தியத்தம்பதிகளுக்கு காவல்நிலையத்தில் தேனிலவு!

உலகளவில் கலாச்சாரத்தில் பெருமையாகப் பேசப்பட்டுவந்த இந்தியத் திருமணங்களின் தற்போதைய நிலை இரு கிரிமினல் கூட்டத்திற்கிடையே நடக்கும் தொழில் முறை ஒப்பந்தம் போன்ற இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் செய்தித்தாளில் வந்துள்ள செய்தியின்படி இந்தியத் திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டு காவல் நிலையத்தில் தேனிலவு கொண்டாடும் இழிநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

1961 ம் ஆண்டு முதல் வரதட்சணை தடுப்புச் சட்டம் என்று ஒன்று இருக்கிறது . உண்மையாகவே அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தங்களுக்குச் சாதகமாக ஒரு கூட்டம் அதை பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களை பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு பலர் இந்த சட்டங்களைப் பயன்படுத்தி வேறு விதமாகத் தான் தொழில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சட்டப்படி வரதட்சணை கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் தண்டனைக்குட்படுத்தப்படவேண்டும். ஆனால் 1961 முதல் இன்று வரை வரதட்சணை கொடுப்பவர் யாரும் குற்றவாளியாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதில்லை.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த நகரத்தில் வாழும் நவ நாகரீகப் பெண்கள் என்று சொல்லப்படும் ஒரு கிரிமினல் கூட்டம்
காலப்போக்கில் இந்த சட்டத்தை எப்படி தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தலாம் என நன்கு யோசித்து அதற்குப் பெண்ணுரிமை என்ற சாயத்தைப் பூசி தங்களின் சொல்லுக்கு அடிபணியாத அப்பாவி ஆண்களை துன்புறுத்த ஆரம்பித்துவிட்டனர்.

பல படித்த இளைஞர்கள் மத்தியில் வரதட்சணை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு பல வருடங்களாக இளைஞர்கள் வரதட்சணையற்ற திருமணம் செய்துவருகிறார்கள்.

ஆனால் வரதட்சணை சட்டத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட கைதேர்ந்த கிரிமினலாக மாறிவிட்ட பல படித்த மனைவியர் தங்களது தவறான நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள இந்த வரதட்சணை சட்டங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். பொய் வரதட்சணைப் புகார் கொடுக்கும் போது தாங்கள் பெருந்தொகையை வரதட்சணையாகக் கொடுத்து திருமணம் செய்ததாகவும் மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்படுவதாகவும் கணவர் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் பொய் வழக்குகள் போட ஆரம்பித்துவிட்டனர்.

இவர்கள் இதுபோன்று வரதட்சணை கொடுத்ததாகத் தைரியமாகப் புகாரில் எழுதினாலோ, செய்தித்தாளில் செய்தியாக வெளியிட்டாலோ, நீதிமன்றத்தில் நீதிபதிக்கு முன்னால் சொன்னால் கூட அவர்களுக்கு எந்தவித தண்டனையும் கிடையாது என்ற ஒரு நம்பிக்கையை இந்த சட்டங்களும் நீதிமன்றங்களும் அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டன. மேலும் கணக்கில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் வரதட்சணை கொடுத்ததாகப் பொய் சொல்லாம் என்ற தைரியத்தையும் இந்த வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் பெண்களுக்கு கொடுத்திருக்கிறது. இதுபோன்ற தவறான சட்ட, நீதிமன்ற நடைமுறைகள் தான் இந்தப் பெண்கள் கிரிமினலாக மாறக் காரணமாக அமைந்துவிட்டது.

அதனால் வரதட்சணை கேட்கும் ஆண்களை தண்டிப்பதற்காக வந்த சட்டம் நாளடைவில் பல இந்திய மனைவிகளை கிரிமினலாகவே மாற்றிவிட்டது. பெண்களைப் பாதுகாக்க வந்த சட்டங்கள் இப்போது பெண்களில் ஒரு பிரிவினரை கிரிமினலாகவே மாற்றும் அளவிற்கு தவறான சட்டமாக மாற்றப்பட்டுவிட்டது.

இதன் விளைவாக இந்தியாவில் திருமணம் என்ற உறவுமுறையே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதைப் பல தன்னார்வ அமைப்புகள் அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டியதும் இதுவரை வரதட்சணை கொடுமை நாட்டில் இன்னும் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த பெண்கள் நல்வாழ்வு அமைச்சகம் இந்திய மனைவிகள் கிரிமினலாகிக்கொண்டிருக்கும் அவலநிலையை உணரத்தொடங்கியிருக்கிறது.

அதன்விளைவாக வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த புதிய மாற்றங்களின் படி திருமணம் ஆனதும் கணவர், மனைவி மற்றும் இரு குடும்பத்தாரும் காவல் நிலையத்திற்கு சென்று திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்கள் அனைத்தையும் பட்டியலிட்டு சான்றிதழ் பெறவேண்டும் என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்திருக்கிறது.

இந்த சட்டதிருத்தத்திற்கு முக்கிய காரணம் கணவர்களோ, வரதட்சணை கொடுமையோ அல்ல.

திருமணத்திற்குப் பிறகு தனக்கு அடிபணியாத கணவரையும் அவரது குடும்பத்தையும் தன் காலடியில் கொண்டுவருவதற்காக பல கிரிமினல் மனைவிகள் தனக்குத் திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசுப்பொருட்களையும், தனது பெற்றோர் தானாக விருப்பப்பட்டு கொடுத்த சீர்வரிசைப் பொருட்களையும் கணவர் வீட்டார் கட்டாயப்படுத்தி பெற்ற வரதட்சணையாக சித்தரித்து பொய் வழக்குகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கிரிமினல் மனைவிகளை சட்டப்படி தண்டிக்கவோ அல்லது தடுக்கவோ இயலாத அளவிற்கு நிலைமை எல்லை மீறிபோய்விட்டது. அதனால் இந்த புதிய சட்ட திருத்தம் மூலம் பொய் வழக்குகள் போடப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று பெண்கள் அமைச்சகம் நினைக்கிறது.

இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. இதனால் பல அப்பாவி ஆண்களும் பல குடும்பங்களும் பொய் வழக்குகளிலிருந்து தப்பமுடியும்.

ஆனால் இனி இந்தியாவில் திருமணங்கள் என்பது அன்பின் அடிப்படையிலும் ஒருவரையொருவர் நம்பிக்கையுடன் புரிந்துகொண்டு துவங்கும் ஒரு இனிய வாழ்க்கையாக இல்லாமல் நம்பிக்கையற்ற ஏதோ ஒரு ஒப்பந்தம் போலத்தான் மாறப்போகிறது. ஏற்கெனவே பாதி திருமணங்கள் இப்படித்தான் மாறிவிட்டது.

இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம் சட்டங்களை சரியாக செயல்படுத்தாமல் போன சுயநலவாதிகள் தான் காரணம். இருக்கின்ற ஒரு சட்டத்தையும் ஒழுங்காக செயல்படுத்தாமல் பல சட்டங்களை இயற்றி கடைசியில் மனைவிகளையே கிரிமினல்களாக்கிவிட்டார்கள் இந்த சட்டமேதைகளும் சமூகக்காவலர்களும்!

திருமணம் முடிந்த கையோடு பெரியோர்களிடம் ஆசி பெற்று நல்வாழ்க்கையை ஆரம்பிக்கவேண்டிய தம்பதிகள் காவல்நிலையத்திற்கு சென்று பிற்காலத்தில் பொய்வழக்குகள் வரக்கூடாது என்பதற்காக பரிசுகளை பட்டியலிட்டு சான்றிதழ் பெறும் அவலநிலையுடன் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையில்லாமல் வாழ்க்கையின் முதல் படியில் காலடிவைக்கப்போகிறார்கள்.

இந்தியத் திருமணங்களின் அவலநிலையை அரசாங்கமே உங்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. இது நாட்டில் திருமணங்கள் எப்படி தரம் தாழ்ந்து போய்விட்டது என்பதைக் காட்டுகின்றன.

அரசாங்கம் நினைத்திருந்தால் 1961ல் இயற்றிய வரதட்சணை தடுப்புச் சட்டத்தை ஒழுங்ககாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. அதனால் நீங்கள் இப்போதாவது உண்மையை உணர்ந்து தப்பித்துக்கொள்ளுங்கள். இன்னும் இந்த நிலைமை மேலும் மோசமடைவதற்குத் தான் அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றுவார்களே தவிர எந்தவிதத்திலும் திருமணங்களின் புனிதத்தைக் காப்பாற்ற முன்வரப்போவதில்லை. இந்தியாவில் திருமணம் என்பது உங்களுக்கு ஒரு சாபமாகத்தான் இருக்கும்.

அதனால் இளைஞர்களே சிந்தியுங்கள். இதுபோன்ற கிரிமினல் ஒப்பந்தங்கள் தான் உங்களது திருமண வாழ்க்கையா? இதுபோன்ற கேவலமான உறவுகளில் சிக்குவதை விட இதுபோன்ற கீழ்த்தரமான நடைமுறைகளும் பொய்கேசுகளும் இல்லாத நாடுகளில் திருமணம் செய்து திருமணம் என்ற புனிதமான உறவின் உண்மையான சுகத்தை அனுபவியுங்கள். உங்களது பெற்றோர்களையும் காப்பாற்றுங்கள்.

இதோ இந்த செய்தியில் இந்திய சட்டங்கள் மூலம் கிரிமினலாகிவிட்ட மனைவியரின் நிலையைப் பாருங்கள்:


All wedding gifts may now have to be listed

January 15, 2010

Marriages may be made in heaven but the government is going to keep a close watch on what goes on in the ground.

The ministry of women and child development (MWCD) is planning to make it mandatory for the families of the bride and the groom to maintain a list of gifts and other exchanges made at the time of marriage. The Dowry Prohibition Act (DPA), 1961, will be amended to provide it with more teeth while plugging loopholes that allow women to misuse the act.

The list, in the form of a sworn affidavit, has to be notarised and signed by a protection officer or a dowry prohibition officer. Both the parties will have a copy of the list. The punishment for lapse is heavy, including a three-year jail term, not only for the bride and the groom but also their parents.

The ministry will move a cabinet note seeking amendment to the existing provisions of the DPA. It is expected to be placed before the cabinet for approval by the end of this month.

The amendments include lesser penalty for dowry givers; allowing a woman to file a case where she resides permanently or temporarily; including parents and relatives of the bride as aggrieved persons who can complain; and linking the Protection of Women from Domestic Violence (PWDV) with the dowry laws for quick relief.

The definition of dowry is also being widened by changing the phrase “in connection with marriage” to “given before the marriage, at the time and at any time after the marriage.” In case of a woman’s death, all property obtained as dowry would need to be returned to the parents of the woman or her children.

The ministry wants a clear distinction between `gifts’ given voluntarily from those given under duress or compulsion. It also wants the expression `presents’ used in Section 3 (2) of the DPA to be substituted with `gifts’ to indicate the voluntary intent behind the exchange. The expression `gifts’ finds definition in law under the Gift-Tax Act 1958.

“The maintenance of lists of gifts is crucial for the effective implementation of the law,” the National Commission for Women (NCW), which had prepared the amendments, explained.

Senior Supreme Court advocate KTS Tulsi termed the amendments as a positive move. “Mandatory registration of lists would not only facilitate having a proof but also eliminate the possibility of abuse of law by making false allegations,’’ he said.

These changes are in the right balance as they not only protect the women but also safeguard the men, he added. “These changes would ensure speedy disposal of cases. Linking it to the PWDV Act would avoid multiplicity of cases in courts,’’ Tulsi said.

For a change, this amendment has also been welcomed by the men’s organisations. “This saves even the man from getting caught in false dowry cases,” said Virag Dhulia, of Save Indian Family Foundation, an organisation of harassed husbands.

முழுச் செய்தியை இங்கே காண்க: All wedding gifts may now have to be listed







No comments: