பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Saturday, January 9, 2010

இந்திய ஆண்களே ஜாக்கிரதை - உங்களுக்கு தகனமேடை தயார்

இதுவரை சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறை செய்து வந்த மனைவிகள் இப்போது அடியாட்களை வைத்து ஆளையே கொலைசெய்யும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுவிட்டார்கள்.

இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை இன்றே குழிதோண்டி புதைத்து விடுங்கள். இன்னும் நீங்கள் விழித்துக்கொள்ளவில்லையென்றால் உங்களுக்கு உங்கள் குடும்பத்தோடு சேர்த்து இறுதியாத்திரைக்கான சங்குதான் ஊதப்படும்.

சமீபத்தில் ஒரு மனைவி தன் கணவருக்கு எதிராக கொடுத்த வரதட்சணைப் புகாரை கணவர் உயர்நீதிமன்றத்தின் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டார் என்பதைத் தாங்கிகொள்ள முடியாமல் ஆத்திரம் அடைந்து அந்தக் கணவரை கொலை செய்ய கூலிப்படை ஏற்பாடு செய்து தவறுதலாக அந்தக் கூலிப்படை வேறு ஒரு ஆளை கொலை செய்துவிட்டது. கூலிப்படையின் கொடுந்தாக்குதலுக்கு ஆளான அவர் துடிதுடிக்கும் காட்சியை சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தது ஒரு பெரிய மனுஷக் கூட்டம். இது தான் ஆண்களின் உயிருக்கு அரசாங்கமும் சக இந்தியர்களும் கொடுக்கும் மரியாதை.


அந்தக் கொடுமையை பார்க்கும் தைரிய மனம் படைத்தவர்கள் மட்டும் இங்கே சென்று பாருங்கள்: வீடியோக் காட்சி

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இது நடந்ததெல்லாம் போலிஸின் குடும்பத்தில். தவறுதலாக கொலை செய்யப்பட்டதும் ஒரு போலிஸ் தான்.


தினமலரில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள்

ஜனவரி 09,2010

திருநெல்வேலி: நெல்லை எஸ்.ஐ., வெற்றிவேல் கொலையில் தேடப்படும் இன்னொரு எஸ்.ஐ.,யின் மனைவி, மாமியார் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்றுமுன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் வெட்டிக்கொலைசெய்யப்பட்டார். நெல்லை டி.ஐ.ஜி., கண்ணப்பன், எஸ்.பி., ஆஸ்ரா கார்க் தலைமையில் போலீசார் தனிப்படைகளாக விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் தேடிவருகின்றனர்.

ஆழ்வார்குறிச்சியை அடுத்துள்ள கடையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக இருப்பவர் சிவசுப்பிரமணியன்(34). நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர்.

இவருக்கும், ஸ்ரீவைகுண்டத்தை அருகே வெள்ளூரை சேர்ந்த ஆறுமுகம் மகள் சிவகாமிக்கும் திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு முன் சிவகாமி, சிவசுப்பிரமணியன் மீது போலீசில் வரதட்சணை புகார் கொடுத்தார். இதனால், சிவசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஐகோர்ட் மூலம் உத்தரவு பெற்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.அவர் மீது கோபம்கொண்ட சிவகாமியின் சகோதரர்கள் இந்த கொலையை முன்னின்று செய்துள்ளனர். ஆழ்வார்குறிச்சி, கடையம் இரண்டுமே அருகருகே உள்ள ஸ்டேஷன்கள். சிவசுப்பிரமணியனும் அதே வழியில்தான் அடிக்கடி வந்துசெல்வார். தற்போது சிவசுப்பிரமணியன் விடுமுறையில் வெளியூர் சென்றுள்ளார். சம்பவத்தின் போது வெற்றிவேல், ஹெல்மெட் அணிந்திருந்ததால் சிவசுப்பிரமணியன் என நினைத்து கொலை கும்பல் எஸ்.ஐ., வெற்றிவேலை கொலை செய்தது.

கொலை குறித்து கேள்விப்பட்டதுமே சிவசுப்பிரமணியத்தின் மனைவி சிவகாமி, அவரது தாயார், வெள்ளூரிலிருந்து தலைமறைவாகிவிட்டனர். தனிப்படையினர் சிவகாமியின் தந்தை ஆறுமுகம், அண்ணன் கந்தசாமி, தம்பி முருகன் உள்ளிட்ட ஏழு பேரை தேடிவருகின்றனர். கொலை நடந்த இடத்தில் கந்தசாமியின் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதால் போலீசார் இதை உறுதிப்படுத்தினர். நேற்று மாலை வரை எஸ்.ஐ., கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

=========================

ஆகவே ஆண்களே இந்தியாவில் திருமணம் செய்வதை தவிர்த்து விடுங்கள். உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. ஒன்று சட்ட தீவிரவாதத்தால் தாக்கப்படுவீர்கள் அல்லது மனைவியின் கூலிப்படையால் தாக்கப்படுவீர்கள்.

வழக்கம் போல் ஒரு கூட்டம் ஐயோ பாவம் பொம்பளை தெரியாம செஞ்சிட்டா என்று சாதகமாக பேசி கொலைகாரிகளுக்கும் சட்ட தீவிரவாதிகளுக்கும் ஆதரவு தந்து கொண்டிருக்கிறது. இது வரை அரசாங்கம் கூட இது போன்ற கொலைகாரிகளுக்குத்தான் சாதகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் தவறான பெண்களை தவறான சட்டங்கள் மூலம் ஊக்கப்படுத்தியதின் ஒரு வெளிப்பாடு தான் மேலே நீங்கள் படித்த கொலை செய்தி.

வரதட்சணை கொடுமை என்ற பெயரில் பெண்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலைக்கு மாறும் அளவிற்கு தவறான சட்டங்களை கொடுத்து அரசாங்கம் அவர்களை வளர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடையில் காலடி வைத்தவுடனே உங்களின் மானத்திற்கும் உயிருக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லை. இது எச்சரிக்கை. பல வல்லரசு நாடுகளுக்கு இது எப்போதோ புரிந்து விட்டது. உங்களுக்கு எப்போது புரியப்போகிறதோ!



4 comments:

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஏங்க இப்புடி நாக்குல நரம்பு இல்லாமப் பேசறீங்க.ஊர்ல எல்லாப்பெண்களுமா இப்படி பண்றாங்க.எத்தனையோ ஆண்கள் தவறு செய்ற மாதிரி சில பெண்கள்.ஒட்டுமொத்தமா பெண்குலத்த தப்பு சொல்லாதீங்க.நீங்க திருமணம் செய்யாதவரா?

அன்புடன்,
க.நா.சாந்தி லெட்சுமணன்

மதார் said...

//இந்தியாவில் திருமணம் என்ற தகனமேடையில் காலடி வைத்தவுடனே உங்களின் மானத்திற்கும் உயிருக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லை.//

உங்க வீட்ல பெண்கள் உண்டா சார் ? உங்க ப்ளாக் படிக்கும் பொழுது மட்டும் எனக்கு BP கூடுது , உங்களுடைய பல பதிவுகள் படிச்சுருக்கேன் இப்போதான் கொஞ்ச நாளா, தொடர்ந்து படிக்கும்போதுதான் நீங்க ஒரேமாதிரி செய்திகளை போடுறது புரிஞ்சது . உங்க கண்ணுக்கு ஆண்கள் பெண்களுக்கு செய்யும் கொடுமைகளும் அதை பற்றிய செய்திகளும் தெரியாதா? இல்ல அந்த செய்தி படிக்கும் போது மட்டும் உங்களுக்கு short time memory ஆய்டுமா? உங்களுடைய செய்திகள் ஒட்டுமொத்த பெண்களுமே தப்பானவர்கள்னு சொல்ற மாதிரி இருக்கு . தப்பான செய்திகள பிறர் அறியச் செய்ங்க , ஆனா ஒருசாரா செயல்படாதீங்க , இது என்னோட வேண்டுகோள் .உங்கள் மனதை என் வார்த்தைகள் புண்படுத்தினால் மன்னிக்கவும் .

தகனமேடை said...

க.நா. சாந்தி லெட்சுமணன் அவர்களுக்கும், மதார் அவர்களுக்கும் என்னுடைய விளக்கத்தை ஒரு பதிவாகவே எழுதிவிட்டேன். அவ்வளவு விஷயங்களை எழுதும் அளவிற்கு நீங்கள் இருவரும் ஒரு கேள்வியை கேட்டுவிட்டீர்கள். மிக்க நன்றி!

தமிழ். சரவணன் said...

//ஏங்க இப்புடி நாக்குல நரம்பு இல்லாமப் பேசறீங்க.ஊர்ல எல்லாப்பெண்களுமா இப்படி பண்றாங்க.எத்தனையோ ஆண்கள் தவறு செய்ற மாதிரி சில பெண்கள்.ஒட்டுமொத்தமா பெண்குலத்த தப்பு சொல்லாதீங்க.நீங்க திருமணம் செய்யாதவரா?
அன்புடன்,
க.நா.சாந்தி லெட்சுமணன்//


அன்புச் சகோதரிக்கு,

தஙகள் பதிவை என்ற வலைபூ பக்ததில் படித்தென். எத்தனையோ பெண்கள் நம் நாட்டில் பல முன்னெற்றங்களுக்குப் பிறகும் இன்னம் வரத்சணை கொடுமையிலும் மற்றும் கணவன் வீட்டில் அடிமைகளைப்போலவும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நான் அறிவென்.. ஆனால் தற்பொழுது.. இதுபோல் பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்கா இயற்றப்பட்ட வரதட்சணை கொடுமை சட்டத்தை தங்களுடைய பலிவாங்கள் நோக்கத்திற்காகவும், கணவன் மனைவி பேசிதீர்த்துக்கொள்ளவேண்டிய விசயங்களை காவல்நிலையம் கொண்டுசெல்வதும், கணவன் வீட்டாரினை அற்ப புழுவாக நினைப்பதும் நடந்தேறிவருகின்றது. இதுபோல் சட்டங்களை புரட்சி என்ற பெயரில் தவறாகப்பயன்படுத்தி பல குடும்பங்கள் கோர்ட்டு கேஸ் என்று அழைந்து வாழ்கையை தொலைத்துகொண்டு வாழ்கின்றனர்...

நானும் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவன்... இத்துடன் தங்கள் பார்வைக்கு எங்கள் மீது சுமத்தப்பட்ட "ஆபாச வக்கிர குற்றச்சாட்டை" இணைத்துள்ளேன் பார்கவும்.. இந்த மஞ்சள் பத்திரிக்கயைின் மூலம் எனது தம்பி நண்பருடைய தாயர், எனது தாயர் எனது தம்பி ஆகியோர் சென்னையில் உள்ள புழல் சிறையில் விசரனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்..

சிறு தகவல்கள் தங்களுக்கு

இதுவரைக்கும் சுமார் 1,50,000 பெண்கள் இதுபோல் புகாரினால் விசாரனை கைதிகளாகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்,

ஆண்டொன்றுக்கு 20,000 ஆயிரம் குழந்தைகள் தந்தை யார் என்று தெரியாமலும், தந்தையின் அரவனைப்பில்லாமலும் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட)

//ஒட்டுமொத்தமா பெண்குலத்த தப்பு சொல்லாதீங்க//
//உங்க வீட்ல பெண்கள் உண்டா சார் ?//

பெண்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள் - காரணம் எனது தாயர் எங்கள் ஊரில் டீக்கடை நடத்தி எங்களை வறுமையிலும் செம்மையாக வளர்த்து படிக்க வைத்தார் ஆனால் தற்பொழுது எங்கள் குடும்பமே சீர்குலைந்து போலீஸ் கோர்ட்டு கேஸ் என்று அழைந்துகொண்டிருக்கின்றோம்...

அன்புடன்,

தமிழ். சரவணன்