பொய் வரதட்சணை வழக்குகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள
ஒரு அப்பாவி இளைஞரின்
498A-அனுபவக் காயங்கள்

பொய் வழக்குப் போடும் மனைவியரை இனம் பிரித்துக் காட்டும் கருத்துப்பதிவுத் தளம்

"பொய் வழக்குப் போடும் இளம் மனைவிகள் "

இந்திய சட்ட வன்முறைகளிலிருந்து அப்பாவிப் பெண்களைக் காக்கப் போராடும் பதிவுகள்
"பெண்கள் நாட்டின் கண்கள்!!"


இந்தியாவில் திருமணம் செய்யப்போகும் அப்பாவி இளைஞர்கள் தங்களிடம் வைத்திருக்கவேண்டிய புனிதநூல்
ஆபத்துக்கால கையேடு - அப்பாவிகளின் வழிகாட்டி

New Blog தர்மயுத்தம்

New Blog
போலியான பெண்ணியவாதமும் இந்தியாவின் பேரழிவும்

==============================================

நீங்கள் இந்தியாவில் திருமணம் செய்தவரா?

நீங்கள் முதன் முறையாக இந்தத் தளத்திற்கு பார்வையிட வந்திருந்தால் மறக்காமல் உங்களது “புக்மார்க்கில்” இந்தத் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தளத்திலுள்ள விஷயங்கள் என்றாவது ஒருநாள் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும்.

==============================================

=====================================================================

Monday, May 31, 2010

அரசாங்கம் தூங்கினால் மக்கள் இப்படித்தான் செய்வார்களோ?

இதுவரை பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற பெயரில் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அவலங்களைப் பற்றி பலர் பலமுறை அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறியும் இதுவரை அரசாங்கம் அதை கண்டுகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசாங்கம் கடமை தவறி தூங்கிக்கொண்டிருந்தால் நாட்டில் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று உணர்ந்த ஒரு கணவர் பொய் வரதட்சணை வழக்கிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள தானே நடவடிக்கை எடுத்துவிட்டார். அந்த செய்தியைப் பாருங்கள்.

The Siasat Daily, 30 May 2010

Hyderabad, May 30: In a gruesome incident here, four members of a family were murdered by their son-in-law and his relatives early Sunday, police said.

Six assailants hacked to death four people in a house at Premnagar in Amberpet neighbourhood. Another person sustained serious injuries and is battling for life in hospital, police said.

Qamruddin, his wife Sajida Begum and two other family members Abdullah Begani and Abdullah Kirmani were killed in the attack. Qamruddin's daughter Afreen, wife of the main accused, is in critical condition.

Police said while one person died on the spot, three others succumbed to the their injuries in hospital.

After the murders, Jehangir, son-in-law of Qamruddin, and his brother went to the police station where they surrendered. Police also arrested their four other relatives who helped them in committing the crime.

Jehangir, who separated from his wife following a marital dispute, said he committed the crime to take revenge for a dowry harassment case filed by Afreen against him.

Police are investigating.




இவர் காட்டியிருக்கும் இந்த வழிமுறை பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியிருக்கும் பல அப்பாவிகளுக்கு முன்னுதாரணமாக அமைவதற்கு முன் அரசாங்கம் இப்போதாவது விழித்துக் கொள்ளவேண்டும். இந்த முன்னுதாரணத்தை தானும் ஏன் பின்பற்றக்கூடாது என்று அனைவரும் எண்ணுவதற்கு பல காரணங்களை இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கிறது.

மனைவி கணவனுக்கெதிராகவும் அவனது குடும்பத்திற்கெதிராகவும் பொய் வரதட்சணை வழக்குக் தொடுத்தால்:

  • கணவனும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் IPC498A, Dowry Prohibition Act பிரிவுகள் படி எந்தவித ஆதாரமும், விசாரணையும் இன்றி உடனடியாக கைது செய்யப்படுவார்கள். மேலும் எத்தனை விதமான IPC பிரிவுகளையும் தயங்காமல் சேர்க்க நம் காவல்துறை நண்பர்கள் கொஞ்சமும் அஞ்சமாட்டார்கள்.
  • அதன்பிறகு காவல் நிலையத்தில் கணவனும் அவனது குடும்பமும் கீழ்த்தரமாக மூன்றாம் தர குற்றவாளி போல அவமானப்படுத்தப்பட்டு ஜாமின் வாங்குவதற்குள் பல அவமானங்களை சந்திக்கவேண்டும்.
  • பிறகு இந்த பொய் வழக்கிலிருந்து வெளிவர பெருமைமிக்க இந்திய நீதிமன்றங்களில் பல ஆண்டுகள் அலைய வேண்டும்.
  • இதற்குள் கணவனின் வயதான பெற்றோர்கள் குற்றவாளி என்ற அவப்பெயருடன் தாங்கள் இந்த பொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டோம் என் ற நற்செய்தியை கேட்கமுடியாமலே இறைவனடி சேர்ந்து விடுவார்கள்.
  • கணவனின் திருமணமாகாத சகோதரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
  • அப்பாவி இளைஞரின் வாழ்க்கை ஒரு பொய் வழக்கால் சிதைந்துவிடும்.
  • இவை அனைத்தும் குற்றம் செய்யாமலேயே மனைவியின் ஒரு பொய்ப் புகார் மூலம் இந்திய காவல், நீதித் துறைகளும், அரசாங்கமும் சேர்ந்து அப்பாவிகளுக்குக் கொடுக்கும் அன்புப் பரிசு.

இவைகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது கொலை வழக்கு என்பது பொய் சொல்லும் எதிரிகளை அடியோடு ஒழிக்கும் புதிய முறையாக அனைவரையும் சிந்திக்க வைத்து விடும். கொலை வழக்கு வரதட்சணை வழக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.

  • பொய் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்ய ஆதாரங்கள் தேவையில்லை. ஆனால் கொலை வழக்குப் பதிவு செய்ய தகுந்த ஆதாரங்கள் தேவை.
  • கொலை வழக்கில் வரதட்சணை வழக்கு போல அவ்வளவு எளிதாக வழக்குப் பதிவு செய்து குடும்பத்தோடு எல்லோரையும் கைது செய்ய முடியாது.
  • நூற்றுக்கும் மேற்பட்டோரை கொலை செய்த அஜ்மல் கசாப் கூட தனியாகத்தான் வழக்கை சந்தித்து தண்டணை அடைந்திருக்கிறான். ஆனால் வரதட்சணை வழக்கில் ஒரு பொய் புகார் மூலம் கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் எளிதாக சிறையில் அடைத்து, அவமானப்படுத்தி துன்புறுத்தலாம்.
  • கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மட்டும்தான் வழக்குகளை சந்திக்க நேரிடும். குடும்பத்திலுள்ள மற்றவர்களின் வாழ்க்கை எந்தவிதத்திலும் பாழாகாது.
  • அதுமட்டுமல்ல, கொலை செய்த குற்றவாளி என்றால் காவல் நிலையத்தில் கூட அனைவரும் சலாம் அடித்து பயப்படுவார்கள். ஆனால் பொய் வரதட்சணை வழக்கில் சிக்கியவரை கீழ்த்தரமாக நடத்தி முடிந்தவரை பணம் பறிக்கத்தான் அனைவரும் முயற்சி செய்வார்கள்.
  • பொய் வழக்கில் சிக்கி சின்னாபின்னமாவதை விட, தூங்கும் அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்த்து ஏமாறுவதை விட பொய் வழக்குப் போடுபவரை கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்று பிறகு என்றாவது ஏதோ ஒரு தலைவருக்கு பிறந்தநாள் என்று விடுதலை செய்துவிடுவார்கள் என்று எண்ண வைத்துவிட்டது இந்த அரசாங்கம்.
அப்பாவியாக பொய் வழக்கில் சிக்கி அவமானப்பட்டு துன்புறுவதை விட கொலை செய்துவிட்டால் போலிஸை கூட அஞ்சி நடுங்க வைக்கலாம் என்ற இந்திய நாட்டு நடைமுறையை சமீபத்திய திரைப்படத்தில் கூட சொல்லிவிட்டார்கள்.


கொலை வழக்கு, பொய் வரதட்சணை வழக்கு என்ற இந்த இரண்டு இந்திய சட்ட நடைமுறைகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது அப்பாவிகள் பொய் வழக்குகளிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள எந்த முடிவை எடுப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் தனது கடமையிலிருந்து தவறும்போது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தகுந்த வழியைத் தேடிச் செல்வது இயற்கை. இந்த வழிமுறையை காட்டியிருப்பது அரசாங்கம். அதன் வெளிப்பாடு மேலே வந்துள்ள செய்தி. இதற்கு மற்றொரு உதாரணம்தான் நக்ஸலைட், மாவோயிஸ்ட் என்று புதிது புதிதாக வரும் பிரச்சனைகள். அதைப் பற்றி இங்கே படியுங்கள்: வீரர்களை கோழைகளாக்கும் கோமாளிகள்

இளைஞர்களே,

இந்தியாவில் திருமணம் செய்வதால் உங்களது வாழ்க்கையும் பாழாகி உங்களது ஒழுக்க நெறியும் சீரழிக்கப்பட்டு கடைசியில் கொலைகூட செய்யலாமா என்று யோசிக்க வைத்துவிடுவார்கள் இந்த பாழாய்ப்போன கயவர்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது இந்தியத் திருமணமும் அதனைத் தொடர்ந்து வரும் குடும்ப அழிப்பு சட்ட நடைமுறைகளும், இந்த அநீதிகளை கண்டும் காணாததுபோல் தூங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கமும் ஆகும். அதனால் புத்திசாலித்தனமாக வேறுநாடுகளில் திருமணம் செய்துகொள்ளுங்கள். நல்ல மனிதர்களாக சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நில்லுங்கள்.




2 comments:

498ஏ அப்பாவி said...

//அப்பாவியாக பொய் வழக்கில் சிக்கி அவமானப்பட்டு துன்புறுவதை விட கொலை செய்துவிட்டால் போலிஸை கூட அஞ்சி நடுங்க வைக்கலாம் என்ற இந்திய நாட்டு நடைமுறையை சமீபத்திய திரைப்படத்தில் கூட சொல்லிவிட்டார்கள்.//

எனக்கும் இது​போல் தான் ​​தோனியது என் வயதான தா​யை ஒரு மிருகம் த​லைமுடி​யை பிடித்து இழுத்து அடித்து ​வாகனத்தில் ஏற்றிய​​பொழுது... இ​தைவிட ​கொடு​மை எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பரின் தாய​ரை விசார​னை என்று அ​ழைத்துச்​சென்று புழல் சி​றையில் அ​டைக்கம் ​பொழுதும்... ​பொய்வழக்கில் எனது தம்பி​யையும் புதிதாக ​பெயர் ​​சேர்த்து ​கைது ​செய்த ​பொழுது... என்ன ​செய்யவது பாவம், புண்ணியம் மயிறு மட்​டை என்று வளர்ந்த எனக்கு ​யோசிச்த பிறகு அருவருப்பாயிற்று

498ஏ அப்பாவி said...

காவல் து​றை ​கடவுள்க​ளே! (ஆமாம் நீங்கள் எல்லாம் கடவுள்கள்தான்... நீங்கள் நி​னைத்தான் என்ன ​வேண்டுமானாலும் ​செய்யலாம்) ​தங்க​ளைப் பார்த்து ஊர் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து ​செய்து பி​ழைக்கம் ​பொறுக்கிகள் தான் பயப்பட ​வேண்டும். எங்க​ளை ​​போல் அப்பாவிகள் அல்ல... மனிதம் என்ற உணர்​வை சற்று மதியுங்கள்...