இந்த செய்தியைப் பற்றி என்ன சொல்வது? மனைவி ஒரு பொய் வரதட்சணைப் புகார் கொடுத்தால் கணவன் கைது செய்யப்படுவான். மனைவி முறையற்ற கள்ளக்காதல் கொண்டு அதில் பிரச்சனை ஏற்பட்டாலும் அதிலும் கள்ளக்காதலன் கைதுசெய்யப்படுவான். அடிப்படைக்காரணம் “ஆண்” என்றால் எப்போதும் குற்றவாளி!
திருமணத்திற்கு மறுத்த கள்ளக்காதலன் கைதுதினமலர் பிப்ரவரி 23,2010
நாகப்பட்டினம் : நாகை அருகே திருமணத்திற்கு மறுத்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். நாகை அடுத்த வங்காரமாவடியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் மனைவி ராணி(20). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவரும், பழையனூர் எலக்ட்ரீஷியன் பாலு(25) என்பவரும் நெருங்கி பழகினர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராணி வற்புறுத்தியுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது தன்னை பாலு மானபங்கப்படுத்தியதாக, போலீசில் ராணி புகார் அளித்தார். கீவளூர் போலீசார் பாலுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

No comments:
Post a Comment